கடமைகள் அனைத்திலும் முதன்மையான கடமை தொழுகையாகும். தொழுகை என்பது என்ன? எதன் மீது நாம் நம்பிக்கை (ஈமான்) கொண்டிருக்கிறோமோ அதனை, நாள் தோறும் ஐந்து முறை திரும்பத் திரும்பச் சொல்லாலும், செயலாலும் நிறைவு செய்து புதுப்பிக்கின்ற நிரந்தர வழிபாட்டு முறைகளே தொழுகையாகும். அதிகாலையில் எழுந்து அனைத்திற்கும் முதலாவதாக சுத்தமாகி இறைவன் முன் வருகிறீர்கள். அவன் முன்னிலையில் நின்றும், குனிந்தும், சிரம் தாழ்த்தியும் உங்களை அடிமை என்று ஒப்புக் கொள்கிறீர்கள். இறைவனிடம் உதவி கோருகிறீர்கள். அவனிடம் போதனை கேட்கிறீர்கள். […]

{ 2 comments }

https://www.youtube.com/@HijriCalendarMoonCalendar/videos

{ 0 comments }

எஸ்.ஹலரத் அலி, திருச்சி-7 (+91 98 653 61068) மக்காவில் உள்ள காபத்துல்லாஹ்வை நோக்கி ஒவ்வொரு தொழுகையிலும், உலகிலுள்ள அனைத்து திசை வாழ் முஸ்லிம்களும் கிப்லாவாக முன்னோக்க வேண்டும் என்பது அல்லாஹ்வின் கட்டளை. கிப்லாவை மையப்படுத்தியே முஸ்லிம்கள் தொழ வேண்டும். ஆகவே நீர் இப்போது (மக்காவின்) மஸ்ஜிதுல் ஹராம் பக்கம் உம் முகத்தை திருப்பிக் கொள்ளும்.( முஸ்லிம்களே!) இன்னும் நீங்கள் எங்கிருந்தாலும் (தொழுகையின்போது) உங்கள் முகங்களை அந்த (கிப்லாவின்) பக்கமே திருப்பிக் கொள்ளுங்கள்.   அல் குர்ஆன். 2:144 […]

{ 1 comment }

ரமழானில் அல்லாஹ்வுக்காக, அவனது கூலியை நாடி, உள்ளச்சத்துடன் நோன்பு வைத்தவரின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன: அவ்விரவுகளில் தொழுதவரின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. அம்மாதத்தின் சிறப்பான “லைலத்துல் கத்ர்” இரவை பெற்றவரின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என நபி(ஸல்) நவின்றார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) நூல்:புகாரி, முஸ்லிம்     நோன்பாளி செய்யக் கூடாதவை     எவன் பொய்யான சொற்களையும், தீய நடத்தையையும், விடவில்லையோ அவன் உண்ணாமல்  பருகாமலிருப்பதில் அல்லாஹ்வுக்கு எந்த தேவையும் இல்லை. என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) புகாரி     நீங்கள் […]

{ 2 comments }

வசந்தம் என்றாலே மனம் இனிக்கும். ஏனெனில் அது பூமி பூக்கும் காலம். ஒவ்வொரு நாட்டிற்கும், ஒவ்வொரு இடத்திற்கும் ஒரு வசந்தக் காலம் உண்டு. ஒட்டு மொத்த பூமிக்கும் சேர்த்து ஒரு வசந்தம் உண்டா… ஆம் உண்டு. ஆசியாவும், ஆப்ரிக்காவும், அமெரிக்காவும், ஐரோப்பாவும், உலகின் மேல் பகுதியும் கீழ் பகுதியும் ஒன்று சேர்ந்து எதிர்பார்க்கும் வசந்தம். … அந்த வசந்தம் வருவதற்கு முன்பே அந்த வசந்தம் பற்றிய திருவிழாக்கள் ஒவ்வொருவரின் மனதிலும். இதோ நமக்கு எதிரில், அருகில் வந்து […]

{ 0 comments }

மனிதனைப் படைத்த இறைவன் ஆதம்(அலை) அவர்களிலிருந்து மனிதனுக்கு கொடுத்தது இஸ்லாம்| என்ற சாந்தி, நேர்வழி மார்க்கத்தையே. அந்த இஸ்லாம் மார்க்கம் 1432 ஆண்டுகளுக்கு முன்னர் அல்லாஹ்வால்  சம்பூரணமாக நிறைவு பெற்றுவிட்டது. அதன் பின்னர் இஸ்லாம் என்ற சாந்தி மார்க்கத்தில் மேல் அதிகமாகச் சேர்ப்பதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை. இந்த  உண்மையை அல்குர்ஆன் 5:3, 3:19,85, 33:36, 59:7 இறைவாக்குகளை விளங்குகிறவர்கள் சந்தேகத்திற்கிடமின்றி ஒப்புக் கொள்வார்கள். இறைவனால் நாளை மறுமையில் மார்க்கமாக ஒப்புக் கொள்ளப்படும்  இஸ்லாம்  என்ற சாந்தி-நேர்வழி […]

{ 13 comments }

“உர்ஜூனில் கதீம்” என்றால் என்ன ?”  படித்துப் பட்டம் பெற்றவர்களிலிருந்து, பாமரர்களான எழுத, வாசிக்க, தெரியாத, சாதாரண, அடிமட்ட, கைநாட்டுப் பேர்வழிகளும் கூட  மிக இலகுவாக, எளிய முறையில், ஹிஜ்ரி மாதங்களின் ஆரம்பத்தை இரண்டு நாட்களுக்கு முன்னரே; மிகச் சரியாக அறிந்து திடமாக முடிவு செய்துகொள்ளத் தக்கதாக; ஏக இறைவனால் மாதந்தோறும், உலகம் படைக்கப்பட்ட நாளிலிருந்து இறுதி யுக முடிவுவரை ஏற்படுத்தப் பட்டுள்ள பிறையின் ஒரு நாளைய தோற்றமே “உர்ஜூனில் கதீம்” என்பதாகும். இது குறித்து உயர்ந்தோனும் […]

{ 0 comments }

இஸ்லாம் மட்டும்தான் விஞ்ஞானத்திற்கு முரண்படாத மார்க்கம் என்று சொல்லிக் கொண்டே முஸ்லிம்களில் மிக அதிகமானோர் விஞ்ஞானம் கூறும் மிகத் துல்லியமான சந்திரக் கணக்கீட்டை மறுத்துக் கொண்டு, பிறையைப் புறக்கண்களால் பார்த்துத்தான் மாதத்தைத் தீர்மானிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். ஆனால் இவர்கள் சூரியனை மட்டும் கணக்கிட்டு அதன் அடிப்படையில் தங்களது வணக்க வழிபாடுகளை அமைத்துக் கொள்கின்றனர். சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையில் பாரபட்சம் காட்டும் இத்தகையவர்களின் நட வடிக்கை சரிதானா என்பதை குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் பார்ப்போம். “”சூரியனும், சந்திரனும் […]

{ 0 comments }

பிஸ்மில்லாஹ்ஹிர்ரஹ்மானிர்ரஹீம் எஸ்.ஹலரத் அலி, திருச்சி-7. மாதத்தை துவக்குவதற்கான பிறை பார்த்தல், இன்று முஸ்லிம்களிடையே பல்வேறு குழப்பங்களை நிகழ்த்திக்கொண்டிருப்பதை பார்க்கிறோம். இதன் காரணம் என்னவென்று சிந்திக்கும்போது ஒரு ஹதிஸின் நோக்கத்தை எப்படி விளங்கி செயல்படுத்த வேண்டும் என்ற அடிப்படையை அறியாததே ஆகும்.பிறை பார்த்தலுக்கான ஹதீஸை பார்ப்போம். நீங்கள் பிறை கண்டதும் நோன்பு வையுங்கள்; (மறு) பிறை கண்டதும் நோன்பை விடுங்கள். மறைக்கப்பட்டால் நாள்களை எண்ணிக்கொள்ளுங்கள். அறிவிப்பவர்: இப்னு உமர்  (ரலி)    புஹாரி. 1900,1906. முஸ்லிம்.1958. இது போன்ற சொற்களுடன் […]

{ 0 comments }

“எரிகற்களால் (METEOR) அழிக்கப்பட்ட மானக்கேடான சமுதாயம்” . -அல் குர்ஆனை நிரூபிக்கும் அறிவியல் சான்று! – எஸ்.ஹலரத் அலி, திருச்சி-7.(Mob: +91 99653 61068) நமக்குமுன் வாழ்ந்த எத்தனையோ மக்கள் சமுதாயங்களை, அவர்களின் அக்கிரமத்தின் காரணமாக அல்லாஹ் அழித்திருக்கிறான்.அவர்களின் அழிவுக்கான காரணங்களை நமக்கு படிப்பினையாக அல் குர்ஆனில் சொல்லிக்காட்டுகின்றான். அப்படி அழிக்கப்பட்ட ஒரு சமுதாயமே லூத் நபி அவர்களின் சமுதாயம். நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் சம காலத்தில் வாழ்ந்தவர்தான் லூத் (அலை) அவர்கள். இன்றைய ஜோர்டான் […]

{ 0 comments }