ரபியுல் அவ்வல் மாதம் ஊர் எல்லாம் ஒரே விழாக்கோலம் தான்! தெருவெங்கும் மீலாது விழா! (இறை) இல்லங்களில் மவ்லீதுகள்….. கொண்டாட்டங்களுக்கு குறையே இருக்காது. மீலாதுகளையும் மவ்லீதுகளையும் செயல்படுத்தினால் இறை திருப்தியும், இறைத்தூதர்(ஸல்) அவர்களின் பரிந்துரையும் கிட்டும் என்பது இன்றைய பல முஸ்லிம்களின் நம்பிக்கை. இவை இஸ்லாமிய மார்க்கம் கற்றுத்தராத புதிய கலாச்சாரம், (பித்அத்) இறைத்தூதரும், அவர் தம் தோழர்களும் நடைமுறைப் படுத்தாத இந்த மீலாது – மவ்லீது ஹிஜ்ரி 600-ல் எகிப்து அரசன் இர்பல்’ என்பவரால் சில மூட முஸ்லிம்களின் கோரிக்கை மூலம் உருவானது.
இயேசு நாதருக்கு பிறந்த நாள் கொண்டாடும் போது, நமது இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு ஏன் பிறந்த நாள் கொண்டாடக் கூடாது? என்ற எண்ணத்தில் பிறந்ததே இந்த மீலாத் விழா! மவ்லீது பாடல்கள்!!!
நாம் உமது புகழை உயர்த்தி விட்டோம்! திருக்குர்ஆன் 94:4
இப்னு மர்யம் (இயேசு)வை கிறித்தவர்கள் மிகைபடப் புகழ்ந்தது போல் நீங்கள் என்னை மிகைப்பட புகழாதீர்கள்! எனினும் (என்னை) இறைவனுடைய அடியார் என்றும் இறைவனின் தூதர் என்றும் கூறுங்கள்! என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியதை உமர்(ர) அவர்கள் கேட்டதாக கூறியதை நான் கேட்டேன்! அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ்(ரலி) நூல் : ரஜீன்
தோழர்கள் : “இறைத்தூதரே! தங்களுக்கு நாங்கள் எவ்வாறு சலவாத் கூறுவது?”
இறைத்தூதர்(ஸல்) : “அல்லாஹும்ம ஸல் அலா முஹம்மதிவ்வ அலா ஆ முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா இப்ராஹீம இன்னக ஹமீதுன் மஜீத், அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதிவ்வ அலா ஆ முஹம்மதின் கமா பாரக்த அலா இப்ராஹீம இன்னக ஹமீதும் மஜீத் என்று கூறுங்கள்.
அறிவிப்பவர் : கஃபு இப்னு உஜ்ரா(ரலி) நூல்கள் : புகாரி, முஸ்ம், அபூதாவூத், திர்மிதி, நஸயீ
இறைத்தூதர்(ஸல்) அவர்களின் புகழை இறைவன் எந்த அளவுக்கு உயர்த்த வேண்டுமோ, அந்த அளவு உயர்த்தி விட்டான். இதற்கும், மேலாக இறைத்தூதர்(ஸல்) அவர்களின் புகழை யாராலும் உயர்த்திட இயலாது. இறைத்தூதரின் தோழர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு இறைத்தூதர்(ஸல்) அவர்களைப் புகழ்ந்திட தடை செய்தார்கள். இன்றைய முஸ்லிம்கள் இறைத்தூதரைப் புகழ்வதாகக் கருதி, மீலாத், மவ்லூத் என்று பாடி கேவலப்படுத்தும் பணியில் தீவிரமாக இறங்கி விட்டனர். அரபியில் மவ்லீது என்ற பெயரில் கவிதைகளைப் பாடி விட்டால், பரக்கத் இறையரும் வளம் கொட்டோ கொட்டு என்று கொட்டும் என்று நம்புகின்றனர். ஆண்டாண்டு காலமாக பெரும்பாலும் முஸ்லிம்கள் மீலாத் மவ்லீத், ஓதுவதால் இன்று உலகப் பணக்காரர்களில் ஒருவராகத் திகழ்ந்து விட வில்லை.
இது வழிபாடு அல்ல, வழிகேடு! என்று முஸ்லிம்கள் உணர வில்லை, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கற்றுத்தராத சலவாத்தோ, புகழ்கவிதைகளோ, இறைவனால் நிராகரிக்கப்பட்டு விடும். யூதர்களும், கிறித்தவர்களும் தங்கள் இறைத்தூதர்களை அளவுக்கு மீறி புகழ்ந்து அழிந்து விட்டனர். முஸ்லிம்களும் அதே குற்றத்தையே செய்து வருகின்றனர்.
(தூதராகிய) அவருக்கு நாம் கவிதை (இயற்றக்) கற்றுக் கொடுக்கவில்லை. அது அவருக்குத் தகுமானது அல்ல. திருக்குர்ஆன் 36:69
கவிஞர்களை வீணர்களே (வழிகேடர்களே) பின்பற்றுவார்கள். நிச்சயமாக அவர்கள் பள்ளத்தாக்குகளில் அலைந்து திரிவதை நீர் பார்க்கவில்லையா? அவர்கள் செய்யாததைச் சொல்வார்கள்.
திருக்குர்ஆன் 26:224, 225, 226
பள்ளியில் பழிக்குப்பழி கொலை செய்வதையும், அதில் கவிஞர் பாடுவதையும் (இறைவனுடைய) தண்டனைகளை நிறை வேற்றுவதையும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தடை செய்தனர்.
அறிவிப்பவர் : ஹகீமுப்னு ஹிஸாம்(ரலி) நூல் : அபூதாவூத்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பள்ளியில் விற்பதையும், வாங்குவதையும் தவறி விட்டதைத் தேடுவதையும், கவிபாடுவதையும், வெள்ளிக் கிழமை ஜும்ஆவுக்கு முன்னர் அங்கு கூட்டமாகக் கூடுவதையும் தடை செய்தனர். அறிவிப்பவர் : அம்ரு இப்னு ஷுஐப்(ரலி) நூல் : ஸுனன்
கவிகள் பாட இஸ்லாத்தில் எள்ளளவும் இடமில்லை, இறைத்தூதர்(ஸல்) அவர்களும் அவர்தம் தோழர்களும் யுத்தக்களத்தில் சிரமத்தை மறந்து உற்சாகமாக இருக்க கவிதை பாடப்பட்டது. பாரம் சுமக்கும் ஒட்டகம் சுமையை மறந்து வேகமாகப் பாலைவனத்தில் செல்லவும் கவிகள் பாடப்பட்டது.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் காட்டித் தராத செயல்கள் யாவும் பித்அத் ஆகும். பித்அத் அனைத்தும் வழிகேடுகள், வழிகேடுகள் யாவும் நரகத்திற்கு அழைத்துச் செல்லும் என்ற நபிமொழியை சிந்தியுங்கள்.
முஹம்மது(ஸல்) ஆகிய என்னை மூஸா(அலை) அவர்களுக்கு மேல் மேன்மைப் படுத்தாதீர்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா(ரலி) நூல்கள் : புகாரி, முஸ்ம், அபூதாவூத், திர்மிதி
“யூனுஸ்(அலை) அவர்களை விட முஹம்மது(ஸல்) அவர்கள் மிகவும் மேலானவர்” என்று எந்த அடியானும் கூறுவது தகாது. அறிவிப்பவர் : அபூஹுரைரா(ரலி) நூல்கள் : புகாரி, முஸ்ம், அபூதாவூத்
(எல்லா) இறைத்தூதர்களையும் விட என்னை மேலானவர்’ என்று கருதாதீர்கள்.
அறிவிப்பவர் : அபூஸயீத(ரலி) நூல் : அபூதாவூத்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மீது நம் அன்பை, பிரியத்தை எப்படித்தான் வெளிப்படுத்துவது?
(இறைத்தூதரே!) கூறும் நீங்கள் இறைவனை நேசிப்பீர்களானால், என்னைப் பின் பற்றுங்கள், இறைவன் உங்களை நேசிப்பான். உங்கள் பாவங்களையும் பன்னிப்பான். இறைத்தூதர்(ஸல்) அவர்களைப் பின்பற்றுவோர்கள். அவர்கள் காட்டிய திசையில் தான் பயனிக்க வேண்டுமேயன்றி, சுயமாய் பயணத்தைத் தொடரக் கூடாது.
JAQH
{ 3 comments }
இப்னு மர்யம் (இயேசு)வை கிறித்தவர்கள் மிகைபடப் புகழ்ந்தது போல் நீங்கள் என்னை மிகைப்பட புகழாதீர்கள்! எனினும் (என்னை) இறைவனுடைய அடியார் என்றும் இறைவனின் தூதர் என்றும் கூறுங்கள்! என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியதை உமர்(ர) அவர்கள் கேட்டதாக கூறியதை நான் கேட்டேன்! அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ்(ரலி) நூல் : ரஜீன்
naanga yaarum mohamed (PBUH) kadavullnu sollalaiye
assalamu alaikkum sagotharargale !
nam nabiyai eppadi azhaikkanum endrum, eppadi salavath kooranum endrum thelivagave sollivittu sendruvittaargal nabiyin vishayathil. jaakkiradhaiyagave nam seyalgalai kaiyalanum.
maa salam.
abdul azeez
nam muslim makkal tham kulanthigalukum nabigal nayagam sal avargalin valkaiyai patrium avargalin varalatrai patrium solli valarthale pothum pin varum samuthayam seeraga amaum avargal eppadi mathikanum enbathi sandrudan vilaguvargal.salam.
Comments on this entry are closed.