புரோகித தந்திரம்
ஏகத்துவம், செப்டம்பர் 2005 இதழை "ஜகாத் சிறப்பிதழ்" என்ற பெயரில்
வெளியிட்டுள்ளனர். அதில் "ஜகாத் ஓர் ஆய்வு" என்ற தலைப்பில் அவர்கள் மனம் போன
போக்கில் ஆய்வு செய்துள்ளனர். அவர்களின் ஆய்வின் லட்சணத்தை அலசுவதற்கு முன்னர்
அவர்களின் புரோகிதத் தந்திரத்தைக் கவனத்தில் கொள்வது இந்த அலசுலுக்குப் பெரிதும்
உதவியாக இருக்கும் என்பதால் அதையே முதலில் எடுத்துக் கொள்வோம்.
இந்த ஜகாத் பற்றிய ஆய்வில் 17, 18.08.05 ஆகிய இரு நாட்கள் சென்னையில் மதப்
புரோகிதர்கள் இரு நாட்கள் சென்னையில் மதப் புரோகிதர்கள் ஏழு பேர் கலந்து கொண்டு
பெரும் கருத்துப் பரிமாற்றங்களுக்குப் பிறகு அனைவரும் ஒத்த கருத்துக்கு வந்தனர்
என்று குறிப்பிட்டுள்ளனர். மேலும் மேற்படி கருத்தரங்கில் பங்கு கொள்ளாத மற்ற
அறிஞர்களுடனும் கலந்துரையாடல் நடத்தி சந்தேகத்திற்கு இடமில்லாத ஒரு முடிவுக்கு வர
வேண்டும் என்று அந்த ஆய்வரங்கில் முடிவு செய்தார்களாம்.
அதன்படி 29.08.05 அன்று கடையநல்லூரில் 13 மவ்லவி மதப்புரோகிதர்கள் கலந்து
கொண்டு ஆய்வு செய்து எடுத்த முடிவை ஏகத்துவத்தில் வெளியிட்டுள்ளார்களாம். இந்தப்
பீடிகை ஏன்? பல மவ்லவிகள் அதிலும் அவர்களின் அமைப்பிலுள்ள அனைத்து மவ்லவி
புரோகிதர்களும் கலந்து கொண்டு ஆய்வு செய்து, ஏகோபித்த ஒரு முடிவுக்கு
வந்துள்ளதாக அவர்களின் ஆதரவாளர்களைக் குருட்டுத்தனமாக நம்ப வைப்பதற்குத்தான்
இந்தப்பீடிகை.
இது அவர்களது வாடிக்கை
இந்தப் புரோகிதத் தந்திரம் இந்த ஆய்வில் மட்டுமல்ல; அவர்கள் மேற்கொண்ட அனைத்து
ஆய்வுகளிலும் இந்தத் தந்திரத்தைக் கையாண்டுள்ளதைக் காண முடியும். உதாரணமாக 1997
நவம்பர் அல்ஜன்னத் இதழ் பக்கம் 3ல், சர்வதேச தலைப்பிறையை ஒப்புக் கொண்டு அதன்படி
செயல்படலாம் என்று ஆய்வு செய்து ஏகோபித்த முடிவுக்கு வந்து அறிவிப்பதாக எழுதி
இருந்தனர். அந்த ஆய்வில் கலந்து கொண்ட மதப்புரோகிதாகள் 11 பேர்களின் பெயர்களும்,
மற்றும் பலர் என்றும் குறிப்பிட்டிருந்தனர்.
அதன்பின்னர் அல்முபீன்,நவ,டிச.1999 இதழில் அந்தர் பல்டி அடித்து சர்வதேச
தலைப்பிறையிலிருந்து, தத்தம் பகுதி தனித்தனித் தலைப்பிறை என தலைகுப்புற கவிழ்ந்து
ஆய்வு செய்து ஏகோபித்த முடிவுக்கு வந்ததாக எழுதியதிலும் மதப் புரோகிதர் 10
பேர்களின் பெயர்கள் மற்றும் பலர், 141 அரபி கிதாபுகள், 11 ஆங்கில நூல்கள் இவற்றை 15
நாட்கள் ஆய்வு செய்து ஏகோபித்த முடிவுக்கு வந்ததாக அறிவித்தனர். ஆதாவாளர்களை
மயக்கினர்.
1997ல், அல் ஜன்னத்தில் எடுத்து எழுதிய ஏகோபித்த முடிவுக்கு மாறாக 1999ல் அந்தர்
பல்டி அடிக்கக் காரணம், வாகனக் கூட்டத்தார் பற்றிய ஹதீஸில் முதலில் நபிதோழர்களுக்கு
நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டதாகக் தவறாக விளங்கி இருந்ததாகவும், பின்னர் அந்தக்
கட்டளை நபிதோழருக்கு அல்ல; வாகனப் கூட்டத்தாருக்கே என சரியாக விளங்கிக்
கொண்டதாகவும், 'ஷஹித' என்ற பதத்திற்கு 'சாட்சி சொன்னார்கள்' என்பதை மறைத்து,
கூறினார்கள் என்று எழுதி சரடு விட்டிருந்தார்கள். அந்தக் கட்டளை வாகனக்
கூட்டதாருக்கென்றால் அதனால் ஏற்படும் இந்தப் பத்து சந்தேகங்களுக்கெல்லாம் அதனால்
ஏற்படும் இந்தப் பத்து சந்தேகங்களுக்கெல்லாம் விளக்கம் தாருங்கள் என்று
கேட்டிருந்தோம். அதனால் ஏற்படும் இந்தப் பத்து சந்தேகங்களுக்கெல்லாம் விளக்கம்
தாருங்கள் என்று கேட்டிருந்தோம். ஆறு ஆண்டுகள் உருண்டோடியும் இன்றும் அந்த பத்து
கேள்விகளுக்குரிய பதில்களை ஆய்வு செய்து கொண்டிருக்கிறார்கள். இதுவரை
வெளியிட்டபாடில்லை. இதுதான் அவர்களின் ஆய்வின் லட்சணம்!
அரபி மொழி தந்திரம்
அதல்லாமல் பக்கத்துக்குப் பக்கம் அரபி மொழியில் ஹதீஸ்களையும், விமர்சனங்களையும்
போட்டு தங்கள் பக்தர்களை அசத்தி இருக்கிறார்கள். அரபி மொழி தெரிந்தவர்கள்தான்
மார்க்கத்தைச் சரியாக விளங்கிச் சொல்ல முடியும் என்ற குருட்டு நம்பிக்கையில்
இருப்பவர்கள்தானே அவர்களது பக்தர்கள்.
மத்ஹபு மவ்லவிகளும் இந்த தந்திரத்தைத்தான் கையாண்டு தங்கள் பிடியிலுள்ளவர்களை
தக்க வைத்துக் கொண்டிருக்கின்றனர். முன் சென்ற இமாம்கள், பெரியார்கள், நாதாக்களின்
இஜ்மா, கியாஸ் என்ற பெயரில் அவர்கள் தங்களின் ஆதரவாளர்களை ஏமாற்றுகின்றனர். ஆனால்
அவர்கள் குர்ஆன், ஹதீஸ் என்று கூறி மக்களை ஏமாற்றவில்லை. ஆனால் இந்த புரோகித -தவ்ஹீத்
மவ்லவிகளோ குர்ஆன், ஹதீஸ் என்று கூறிக்கொண்டே தங்களின் இஜ்மா, கியாஸை நிலைநாட்டி
தங்கள் ஆதரவாளர்களை ஏமாற்றுகின்றனர். ஆனால் இஜ்மா, கியாஸ் என்று அரபியில் கூறாமல்
தமிழில் ஏகோபித்த முடிவு - இஜ்மா ஆய்வு (இஜ்திஹாத் மூலம் பெறும் கியாஸ்) என்று கூறி
ஏமாற்றுகின்றனர். இந்த 'ஜகாத் ஓர் ஆய்வு' என்பதிலும் அதற்குரிய ஒரு குர்ஆன்
வசனத்தையோ, ஹதீஸையோ அவர்கள் தங்களின் ஆதாரமாகத் தரவில்லை. அவர்களின் வாதத் திறமை,
அனுமானம் , யூகம், வார்த்தை ஜாலம் இவற்றையே தங்களின் முடிவுக்கு ஆதாரமாகத்
தந்துள்ளனர்.
தக்லீதே குறிக்கோள்!
மத்ஹபு மவ்லவி புரோகிதர்கள் முன்னோர்களின் இஜ்மா, கியாஸ் என்று கூறி
ஏமாற்றுகின்றனர். தவ்ஹீத் மவ்லவிகள் தங்களின் ஏகோபித்த முடிவு (இஜ்மா) ஆய்வின்
மூலம் பெறப்பட்ட முடிவு(கியாஸ்) என்று கூறி ஏமாற்றுகின்றனர். இதுதான் வித்தியாசம்.
ஆக மத்ஹபு மவ்லவிகளும், தவ்ஹீது மவ்லவிகளும் தங்களின் ஆதரவாளர்களை தங்களை 'தக்லீது'
செய்ய வேண்டும் என்று விரும்புகின்றனரே அல்லாமல், தங்களின் ஆதரவாளர்களை அல்குர்ஆன்
7:3, 39:18 அடிப்படையில் மற்றவர்களது கருத்துக்களையும் கேட்டு, சுயமாகச் சிந்தித்து,
சுதந்திரமாகச் செயல்பட்டு மறுமையில் வெற்றி பெற வேண்டும் என்று விரும்புவதே இல்லை.
இதுதான் உண்மை.
அப்படி தக்லீது செய்வதாக இருந்தால் பின்னவர்களான தவ்ஹீது மவ்லவிககளை தக்லீது
செய்வதை விட முன்னோர்களான இமாம்களை தக்லீது செய்வதே சிறந்தது என்றே சொல்ல முடியும்.
"மக்களில் சிறந்தவர்கள் என் தலைமுறையைச் சேர்ந்தவர்கள், பிறகு (சிறந்தவர்கள்)
அவர்களை அடுத்து வருபவர்கள். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள்" என்று நபி(ஸல்)
அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : இம்ரான் பின் ஹுசைன்(ரழி), நூல் : புகாரி 2651
நபி(ஸல்) அவர்களின் இந்த விளக்கப் படிதான் இமாம் இப்னு தைமிய்யா(ரஹ்) அவர்கள்,
"நீ சுய சிந்தனையற்ற அறிவற்றவனாக இருந்து தக்லீது செய்யும் கட்டாய நிலையில்
இருந்தால் முன்னோர்களாக ஸலஃபுகளை தக்லீது செய்" என எச்சரித்தார் போலும்.
அசட்டுத் துணிச்சல்!
இந்த 'ஜகாத்' சம்பந்தமாக முன்னோர்களான மத்ஹபு புரோகித முல்லாக்களைவிட, இந்த
இயக்க, புரோகித - தவ்ஹீது முல்லாக்கள், சமுதாயத்தில் பெரும் குழப்பத்தை உண்டாக்கி
இருக்கிறார்கள் என்பதே அப்பட்டமான உண்மையாகும். அன்றிலிருந்து இன்று வரை எந்த மத்ஹபு
புரோகித முல்லாக்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதுவரை யாரும் எந்தப் பிரிவாரும் சொல்லாத
குர்ஆன், ஹதீஸில் இல்லாத ஒரு விஷக் கருத்தை 'ஜகாத்' விஷயமாக இந்த தவ்ஹீத் மவ்லவி
புரோகிதர்கள் கூறி வந்தனர். இந்த தவ்ஹீத் மவ்லவி புரோகிதர்கள் கூறி வந்தனர்.
இப்போது எழுத்திலும் தங்கள் சொத்தை வாதத்தை எடுத்து வைத்துள்ளனர்.
'இஜ்மா' ஒட்டுமொத்த அறிஞர்களின் முடிவு அல்ல!
இந்தப் புரோகித மவ்லவிகள் கையாளும் இஜ்மா, கியாஸ் என்ற அரபி பதங்களும் மக்களை
ஏமாற்றி வழி கெடுத்துத் தங்கள் தங்கள் பிடியில் மக்களைச் சிக்க வைக்கும் முயற்சியே
இல்லாமல் வேறு இல்லை. அந்தந்தப் பிரிவுகளிலுள்ள புரோகித முல்லாக்கள் தாங்கள் கூடி
எடுக்கும் முடிவையே இஜ்மா என்றும் எகோபித்த முடிவு என்றும் கூறுகிறார்களே அல்லாமல்
முஸ்லிம் சமுதாயத்தின் ஒட்டு மொத்த அறிஞர்களின் ஏகோபித்த முடிவு என்று பொருள்
கொள்வது மிகப்பெரிய தவறாகும். அப்படிப்பட்ட ஒரு மாயத் தோற்றத்தை உண்டாக்கி மக்களை
ஏமாற்றி வழி கெடுக்க இந்தப் புரோகிதர்கள் பெரிதும் பாடுபடுகிறார்கள்.
அடிப்படையை மறந்த தவ்ஹீத் புரோகிதர்கள்!
இப்போது அவர்களின் 'ஜகாத் ஒர் ஆய்வை' எடுத்துக் கொள்வோம். இவர்களின் இந்த
ஆய்வில், இவர்கள் தங்களை பெரும் மேதைகளாகக் காட்டிக் கொள்ள முற்பட்டிருக்கிறார்களே
அல்லாமல், இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படையான ஒரு முக்கிய விஷயத்தைக் கவனிக்கத்
தவறி விட்டார்கள்.
மக்களிடையே மார்க்கமாக ஒன்று நடைமுறையில் இருக்கும்போது அதற்கு மாறான கருத்து
அல்குர்ஆனிலோ, ஹதீஸிலோ நேரடியாக இல்லாத நிலையில், தங்களின் யூகம், அனுமானம், சுய
சிந்தனை போன்றவற்றால் பெறப்படும் மாற்றுக்கருத்தை மக்களிடையே புகுத்துவது,
குழப்பத்தை ஏற்படுத்துவது கொலை செய்வதைவிடக் கொடிய குற்றமாகும். (பார்க்க:
அல்குர்ஆன் 2:191)
நபிக்கே இல்லாத துணிச்சல்!
இறைவனால் நபியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இறைத்தூதர்(ஸல்) அவர்களே ஒரு விஷயத்தில்
இறைவனால் தெளிவாக 'வஹீ' மூலம் இப்படித்தான் என்று அறிவிக்கப்படாதவரை, மக்களிடையே
நடைமுறையில் இருக்கும் அந்த விஷயத்தில் தமது யூகம், அனுமானம், சுயசிந்தனை இவற்றைப்
புகுத்தி அதற்கு மாறாகக் கருத்துக்கூறி மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தவில்லை.
ஆனால் 'வஹீ' மூலம் அந்த விஷயத்தை இப்படித்தான் செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு
விட்டால், அதை நிலைநாட்டுவது கொண்டு மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு எதிர்த்தாலும்,
பெரும் குழப்பத்தை ஏற்படுத்தினாலும், இறைக்கட்டளையை நிலை நாட்டுவதில் பின் வாங்கியதே
இல்லை. இங்கு 'அல்லாஹ்வுக்கே மார்க்கம் என்பது உறுதியாகும் வரை போராடியே தீர
வேண்டும்' என்பது இறைக்கட்டளையாகும். (பார்க்க 2:193)
ஓர் உண்மை விசுவாசி ஏகன் இறைவனின் கட்டளைகளை நிலை நாட்டுவதில் உறுதியாக இருக்க
வேண்டுமே அல்லாமல், தனது சுய கருத்துக்களை மக்களிடையே புகுத்தி குழப்பத்தை
ஏற்படுத்துவது கொலையை விட கொடிய குற்றமாகும். உதாரணமாக:
1. முஸ்லிம்கள் காலம் காலமாக 'தாரவீஹ்' என்ற பெயரால் 20 + 3 ரகாஅத் தொழுது
வந்தனர், வருகின்றனர். ஆனால் அதற்கு மாறாக நபி(ஸல்) அவர்கள் ரமழானிலும் -ரமழான்
அல்லாத காலங்களிலும் 8 + 3 ரகாஅத்திற்கு மேல் தொழுவதே இல்லை என்று தெளிவாக
நேரடியாக 14 நூல்களில் காணப்படுவதை ஆதாரமாகக் கொடுத்தே 20 + 3 சகாஅத்தை மறுத்துக்
கூறி வருகிறோம்.
2. முஸ்லிம்கள் காலம் காலமாக ஜமாஅத் தொழுகைக்குப் பின்னால் கடை பிடிக்கும்
சப்தமிட்டு திக்ர், சப்தமிட்டு கூட்டு துஆ இவை முறையே 7:205, 7:55 இறைக்
கட்டளைகளுக்கு நேர்முரணாக இருப்பதாலேயே இந்த வசனங்களைக் காட்டி அவற்றை மறுத்துக்கூறி
வருகிறோம்.
3. முஸ்லிம்கள் காலம் காலமாக இமாம்களை 'தக்லீது' செய்பவர்களாக - முகல்லிதுகளாக
இருந்து வருகின்றனர். அல்குர்ஆனின் 7:3, 33:66,67,68 மற்றும் முன்னோர்கள் -மூதாதையர்களைப்
பின்பற்றக்கூடாது என்று கூறும் 2:170, 5:104,7:28 போன்ற எண்ணற்ற அல்குர்ஆன்
வசனங்களைக் காட்டியே தக்லீதை மறுத்துக் கூறி வருகிறோம்.
4. முஸ்லிம்கள் காலம் காலமாக மத்ஹபுகள், இயக்கங்கள்-பிரிவுகள் என பல அமைப்புகளில்
பிரிந்து சிதறுண்டுக் கிடக்கின்றனர். அல்குர்ஆன் 3:203, 3:205, 6:159, 30:32,
42:13,14 போன்ற எண்ணற்ற வசனங்களைக் காட்டியே பிரிவுகளை மறுத்துக் கூறி வருகிறோம்.
ஒரே உம்மத் -பிரிவுகள் இல்லை!
'உம்மத்தன் வாஹிதா' - ஒரே உம்மத் (21:92, 23:52) அதில் பிரிவுகள் இல்லை என்றே
வலியுறுத்தி வருகிறோம். இப்படி மக்களின் நடைமுறையில் காலம் காலமாக இருந்து வரும்
நடைமுறைகளுக்கு முரணாக குர்ஆன் வசனமோ, நபி நடைமுறையோ இருந்தால் மட்டுமே அவற்றைக்
காட்டி மக்களின் நடைமுறையை மறுத்துக்கூறும் அதிகாரம் பெறுகிறோம். அதனால் பெரும்
குழப்பங்கள் ஏற்பட்டாலும் 2:193 படி அல்லாஹ்வுக்கே மார்க்கம் என்பது உறுதியாகும் வரை
போராடுவதாக இருக்கும். அதற்கு மாறாக குர்ஆனிலோ, ஹதீஸிலோ நேரடியாகச் சொல்லப்படாத
நிலையில் மக்களிடையே நடைமுறையில் இருப்பதற்கு முரணாக கருத்துக் சொல்கிறவர்கள்
மக்களிடையே குழப்பத்தையே குறிக்கோளாகக் கொண்டுள்ளனர். 2:191ன் படி கொலையை விட
கொடிய குற்றத்தைச் செய்ய முற்படுகின்றனர் என்பதே உண்மையாகும்.
1426 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது!
இப்போது இந்த 'ஜகாத்' விஷயத்தை எடுத்துக் கொள்வோம். இன்றைக்கு 1426 ஆண்டுகளாக
நபி காலத்திலிருந்து, நபிதோழர்கள் காலத்திலிருந்து இன்று வரை முஸ்லிம்களிலுள்ள
அனைத்துப் பிரிவினரும் எந்தவித அபிப்பிராய பேதமும் இல்லாமல் ஏகோபித்து 'ஜகாத்'
வருடா வருடம், முன்பே ஜகாத் கொடுத்த பொருளுக்கும் கொடுத்தே வருகின்றனர். எத்தனையோ
விஷயங்களில் எத்தனையோ கருத்து வேறுபாடுகள் இருந்த போதிலும் இந்த ஜகாத் வருடா
வருடம் ஏற்கனவே கொடுத்த பொருளுக்கும் மீண்டும் மீண்டும் கொடுக்க வேண்டும்
என்பதில் வேறுபட்ட கருத்து எந்தப் பிரிவாரிடமும் இல்லை. தினசரி தொழுகை ஐவேளையா?
மூன்று வேளையா? என்பதில் கூட கருத்து வேறுபாடு உண்டு. ஆனால் ஜகாத் வருடா வருடம்
கொடுத்த பொருளுக்கும் மீண்டும் கொடுக்க வேண்டும் என்பதில் எப்பிரிவாரிடமும்
எவ்வித கருத்து வேறுபாடுமில்லை.
நேரடி ஹதீஸ் ஆதாரம் வேண்டும்!
இப்படிப்பட்ட நிலையில் ஜகாத் ஒரு முறை கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் ஜகாத்
கொடுக்க வேண்டியதில்லை என்பதற்கு இக்கருத்தைச் சொல்லும் இந்த தவ்ஹீத் மவ்லவி
புரோகிதர்களே தெளிவான நேரடியான ஹதீஸ் ஆதாரத்தை எடுத்து வைக்கக்
கடமைபட்டிருக்கிறார்கள். ஜகாத் வருடா வருடம் கொடுத்த பொருளுக்கும் மீண்டும்
மீண்டும் கொடுக்க பொருளுக்கும் மீண்டும் கொடுக்க வேண்டும் என்ற கருத்தில்
வந்துள்ள ஹதீஸ்களில் அவர்கள் எடுத்துக்காட்டி இருப்பது போல் சில குறைபாடுகள்
காண்ப்பட்டாலும் மேலே எடுத்தெழுதியுள்ள மிகப்பெரிய ஆதார அடிப்படையில் அவை அனைத்தும்
ஏற்கத்தக்க 'ஹஸன்' தரத்தில் அல்லாமல் அவற்றில் எதுவும் பலகீன நிலையை அடைய முடியாது.
இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸும் இல்லை!
அதற்கு மாறாக 'ஜகாத் கொடுத்த பொருளுக்கு மீண்டும் ஜகாத் கொடுக்க வேண்டியதில்லை'
என்ற இந்த தவ்ஹீத் புரோகித மவ்லவிகளின் கருத்துக்கு ஆதாரப்பூர்வமான ஹதீஸ் அல்ல,
இட்டுக்கட்டப்பட்ட ஒரு ஹதீஸைக்கூட இவர்களால் காட்ட முடியாது. அதாவது இவர்களின்
ஆபாக்களான புரோகித முன்னோர்கள் கூட கற்பனை செய்யத் துணியாத இக்கருத்தை புரோகிதர்கள் கற்பனை
செய்துள்ளனர். வெளியிட்டு வருகின்றனர் என்பதுதான் மிகுந்த வேதனைக்குரிய விஷயமாகும்.
பக்தர்களை ஏமாற்றும் தந்திரம்
"நாங்கள் ஆய்வு செய்த வகையில் எது சரியெனப்பட்டதோ அதை மக்கள் மன்றத்தில்
வைத்துள்ளோம். இந்த ஆய்வு தவறானது என்பதை நிரூபிக்கும் வகையில் தக்க சான்றுகளை யார்
எடுத்துக் காட்டினாலும் அதைப் பரிசீலித்து எங்கள் முடிவை மாற்றிக் கொள்வதற்குத்
தயங்க மாட்டோம். அவ்வாறு சுட்டிக் காட்டுபவர்களுக்கு நன்றியும் தெரிவித்துக்
கொள்வோம்" என்று எழுதியுள்ளனர். ஏகத்துவம், செப்டம்பர் 2005, பக்கம் 3
|
இது அவர்களின் ஆதரவாளர்களைத் தக்க வைத்துக் கொள்ளும் ஒரு தந்திரமே அல்லாமல்
வேறில்லை. தத்தம் பகுதி தனித்தனித் தலைப்பிறை என்ற மூடத்தனமான கொள்கையை நிலைநாட்ட
ஆய்வு செய்து வெளியிட்ட போதும் இவ்வாறே எழுதி இருந்தனர். அவர்களாலும் செயல்படுத்த
முடியாத தத்தம் பகுதி தனித்தனித் தலைப்பிறைக் கொள்கையிலிருந்து விடுபட்டு எங்கள்
முடிவை மாற்றிக் கொள்கிறோம் என்று அறிவித்தார்களா? இல்லையே!
ஜகாத் ஒரு முறை கொடுத்த பொருளுக்கு வருடா வருடம் கொடுக்கத் தேவை இல்லை
என்பதற்கு ஆதாரமாக ஒரேயொரு ஹதீஸையும் தர யோக்கியதை இல்லாமல்
"ஒரு சொல்லுக்கு இதுதான் பொருள் என்பது திட்டவட்டமாகத் தெரியும் போது இதற்கு
ஆதாரம் கேட்பது அறிவுடைமையாகுமா? இதை இவர்கள் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்" என்று
தெனாவட்டமாக எழுதியுள்ளனர். ஏகத்துவம், செப்டம்பர் 2005, பக்கம் 7
|
ஆனால் கடந்த 1426 ஆண்டுகளாக முஸ்லிம்கள் அனைவரும் ஏகோபித்து ஒப்புக்கொண்டு
செயல்படுத்தி வரும் ஜகாத் என்ற சொல்லுக்கு இதுதான் பொருள் என்பது திட்டமாகத்
தெரியும் போது அதற்கு ஆதாரம் கேட்பது அறிவுடைமையாகுமா? இதை இந்த தவ்ஹீத் புரோகித
முல்லாக்கள் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள் என்று நாம் கேட்க வேண்டியதை அவர்கள்
மாற்றிக் கேட்டுள்ளார்கள்.
1426 ஆண்டுகளாக அறிய முடியாத சட்டமா?
ஜகாத் கொடுத்து வருவது பற்றி அல்குர்ஆனிலும், ஹதீஸிலும் சொல்லி இருப்பது
ஒருமுறை கொடுத்து விட்டால், மீண்டும் கொடுக்க வேண்டியதில்லை என்று இவர்களுக்குத்
திட்டவட்டமாகத் தெரியவில்லை என்பது தானே அவர்கள் எழுதி இருப்பதன் பொருள். இது
தெனாவட்டாக எழுதப்பட்டது என்பதில் சந்தேகம் உண்டா? அதுவும் தங்களின் சொந்த
யூகங்களையும், கற்பனைகளையும், வார்த்தை ஜாலங்களையும் எழுத்தில் வடித்து விட்டு
இப்படி எழுதினால் அதன் பொருள் என்ன?
இப்படி சொந்த விளக்கங்களைக் கொடுத்து விட்டு, புதையல் கிடைத்தால் அல்லது
போர்க்களத்தில் எதிரிகளிடமிருந்து கைப்பற்றும் கொருளில் 20 சதவிகிதத்தை அதாவது
ஐந்தில் ஒரு பங்கை கொடுக்க வேண்டும் என்று கூறும் ஹதீஸ்களை எழுதி இவை ஒரு முறைதானே
கொடுக்கப்படுகிறது. வருடா வருடம் கொடுப்பதில்லையே என்று கூறி தங்கள் அபத்தக்
கூற்றை நியாயப்படுத்தியுள்ளனர். இந்த இடங்களில் ஐந்தில் ஒரு பங்கு உடனடியாக
கொடுத்து விட வேண்டும் என்று விளங்கிய 1426 ஆண்டுகளாக வாழ்ந்து வரும் முஸ்லிம்கள்
தங்கள் செல்வங்களில் வருடா வருடம் நாற்பதில் ஒரு பங்கு மட்டுமே கொடுக்க வேண்டும்
என்று எப்படி விளங்கினார்கள் என்பதையாவது இவர்கள் சிந்திக்க வேண்டாமா?
சிந்தனைக் குருடர்களா?
இந்த இடங்களில் அதிக பட்சமாக 20 சதவிகிதம் ஐந்தில் ஒரு பங்கு கொடுக்கும்
நிலையில் மற்ற பொருள்களுக்கு வெறும் நாற்பதில் ஒரு பங்கு 2.5 சதவிகிதம் மட்டும்
தானே கொடுக்கப்படுகிறது? இது ஏன் என்று சிந்தித்தார்களா?
சிரமப்பட்டு உழைத்துப் பயிரிட்டு அறுவடை செய்யும் உணவு தானியங்களில் விளைந்தவுடன்
நீர் பாய்ச்சி விளைந்தால் 5 சதவிகிதமும், நீர் பாய்ச்சாமல் விளைந்தால் 10
சதவிகிதமும் உடனடியாகக் கொடுக்க வேண்டும். செலவுகள் போக எஞ்சியதில் அல்ல.
விளைச்சலில் கொடுக்க வேண்டும். அதுவும் வருடத்தில் மூன்று போகங்கள் விளைந்தால்
மூன்று போகமும் கொடுக்க வேண்டும் என்றிருக்கிறதே இதையாவது சிந்தித்தார்களா?
உணவு தானியங்கள் மக்களின் அத்தியாவசிய உணவுத் தேவையை நிறைவு செய்வதாகும். உணவு
தானியங்களை நீண்ட காலம் சேமித்து வைக்கவும் முடியாது. அப்படிப்பட்ட நிலையில்
விளைச்சலில் 5 சதவிகிதமும், 10 சதவிகிதம் என அதிகமாகக் கொடுக்க வேண்டும்.
செலவுகளைக் கழிக்க முடியாது. அறுவடையானவுடன் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு
விளைச்சலுக்கும் உடனடியாக கொடுக்க வேண்டும் என்றிருக்கும் போது, மக்களின்
அத்தியாவசிய தேவைக்காக அல்லாமல், பிறருக்கு எந்த வகையிலும் பலன் தராத, ஒரு மனிதன்
தனது சொந்த லாபத்திற்காக, தனது சுயநலம் கருதி, தனது வாரிசுகளுக்காக பல
தலைமுறைகளுக்குரிய சொத்து சுகங்களை சேர்த்து வைக்கும் போது, அதற்காக ஒரேயொரு முறை
2.5 சதவிகிதம் அதாவது நாற்பதில் ஒரு பங்கு கொடுத்து விட்டால் போதும்; அதன் பின்னர்
கொடுக்கவே வேண்டியதில்லை என்று சட்டம் சொல்கிறார்களே. இது மனித நேயத்தை மதித்து
மனிதாபிமானத்துடன் நடக்கும் செயலா? இவர்களா ஏழைகளின் துயர் போக்கும் உத்தமர்கள்?
ஏனிந்த அகம்பாவம்?
தங்களின் சொந்த சரக்குகளையும் வார்த்தை ஜாலங்களையும் அள்ளி இறைத்து விட்டு,
ஒரேயொரு ஹதீஸ் ஆதாரத்தையும் கொடுக்காமல்,
"இதுதான் நாம் எடுத்து வைக்கும் முக்கியமான சான்றாகும்". "இதை வலுப்படுத்தும்
வகையில் துணை ஆதாரங்களை சிலவற்றையும் நாம் எடுத்துக் காட்டுகிறோம்" என்று
எழுதியுள்ளனர். ஏகத்துவம், செப்.2005, பக்கம் 9.
|
மார்க்கச் சட்டத்தை நிலைநாட்ட குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்கள் இவர்களிடம் இல்லை.
இவர்களது கற்பனைகளையும், யூகங்களும், உதாரணங்களும், வார்த்தை ஜாலங்களும் தான்
இவர்களின் ஆதாரங்கள். மத்ஹபு புரோகித மவ்லவிகளை இவர்கள் நல்லவர்களாக ஆக்கி
விட்டார்கள். அவர்கள் தங்களின் சொந்தச் சரக்கை அள்ளி விடுவதில்லை; முன்னோர்களின்
கற்பனைகளையே அள்ளி விடுவார்கள். இவர்களோ இவர்களின் சொந்தச் சரக்கையும்,
கற்பனைகளையுமே அள்ளி விடுகின்றனர்.
ஒரு முறை ஜகாத் கொடுத்த செல்வத்திற்கு மீண்டம் ஜகாத் கொடுக்க வேண்டியதில்லை
என்று கூறும் இறைவாக்கோ, நபிமொழியோ இல்லாத நிலையில், 1426 ஆண்டு காலமாக
முஸ்லிம்களில் எந்தப் பிரிவினரிடமும் எவ்விதக் கருத்து வேறுபாடும் இல்லாத நிலையில்,
தமது செல்வங்களுக்கு வருடா வருடம் ஜகாத் கொடுத்து வருவதே மிகப்பெரிய ஆதாரமாக
இருக்கும் நிலையில், இதை வலுப்படுத்தும் வகையில் துணை ஆதாரங்களும் ஆதாரப்பூர்வமான
ஹதீஸ்களிலேயே காணக்கிடைக்கின்றன. அவர்களைப் போல் சுய அனுமானங்களை முக்கியமான
சான்றாகவோ துணை ஆதாரங்களையோ நாம் தரவில்லை என்பதை இங்கு கவனத்தில் கொள்ளவும்.
ஹதீஸ் ஆதாரங்களையோ தருகிறோம்.
வருடா வருடம் ஜகாத்! ஹதீஸ் ஆதாரம்!!
புகாரீ 1452 வது ஹதீஸ், அபூ ஸயீத் அல்குத்ரீ(ரழி) அவர்கள் அறிவிக்கும் ஜகாத்
பற்றிய பகுதி:
"…..உம்மிடம் ஒட்டகங்கள் இருக்கின்றனவா? அவற்றிற்கு ஜகாத் கொடுக்கிறீரா? எனக்
கேட்டார்கள். அவர் ஆம்! என்றதும் ………" நூல் : புகாரீ பாகம் 2, பக்கம் 215
இந்த ஹதீஸில் அரபியில்
"துஅத்தீ' கொடுக்கிறீரா? என்றே நிகழ்கால வினையில் நபி(ஸல்)
அவர்கள் கேட்கிறார்கள்.இவர்களின் வாதப்படி அந்த ஒட்டகங்களுக்கு ஜகாத் ஒரு முறையோடு
முற்றுப் பெறுவதாக இருந்தால், நபி(ஸல்) அவர்கள் எப்படிக் கேட்டிருக்க வேண்டும்?
அரபியில் - ஆஃதய்த் - கொடுத்து விட்டீரா? என்றே இறந்த கால வினையில் கேட்டிருக்க
வேண்டும். அதற்கு மாறாக நிகழ்கால வினையில் கேட்டிருப்பதே அந்த குறிப்பிட்ட
ஒட்டகங்களுக்கு ஜகாத் ஒரு முறையோடு முற்றுப் பெறுவதில்லை. தொடர்ந்து கொடுக்கும்
நிலை இருக்கிறது என்பதை சுயநலமில்லாமல் பொது நலத்துடனும், நடுநிலையுடனும்
சிந்திப்பவர்கள் நிச்சயமாக விளங்கிக் கொள்வார்கள்.
நபி(ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி வந்தார்; அவருடன் அவருடைய மகள் இருந்தாள்.
அவளுடைய கையில் இரண்டு தங்க வளையங்கள் இருந்தன. நபி(ஸல்) அவர்கள் அந்தப்
பெண்மணியிடம் "நீ இதற்கு ஜகாத் தருகிறாயா? அரபியில் அதுஃத்தீன் என்று கேட்டார்கள்.
அதற்கு அவர், 'இல்லை' என்றார். "மறுமையில் அல்லாஹ் இதற்குப் பதிலாக நெருப்பினால் ஆன
இரண்டு வளையங்கள் அணிவிப்பதை விரும்புகிறாயா? என்று கேட்டார்கள் (இதைக் கேட்டவுடன்)
அவர் அவற்றைக் கழற்றி கொடுத்து விட்டார். இப்னு ஷுஐபு தன்னுடைய தந்தை மற்றும்
பாட்டனார் வாயிலாக அறிவிக்கிறார்.
நூல்கள் : அபூதாவூத், நஸயீ, திர்மிதீ, ஹாக்கிம்.
இந்த ஹதீஸை ஏகத்துவ இதழில் அவர்களின் ஆய்வில் குறிப்பிடவும் இல்லை; இதிலும்
கோளாறுகள் இருப்பதாக விமர்சிக்கவும் இல்லை. எனவே இதன் கருத்தை ஏற்றிருக்கிறார்கள்.
மேலும் இங்கு ஒருமுறை கொடுப்பதோடு ஜகாத் கடமை முடிவுறுமானால் அதில் நாற்பதில் ஒரு
பங்கு தான் கொடுக்க வேண்டும் . மாறாக அந்தப் பெண்ணோ இரு வளையங்களையுமே கழற்றிக்
கொடுத்து விட்டார். இதிலிருந்து நீண்ட காலமாக ஜகாத் வருடா வருடம் கொடுக்காத
குற்றத்திற்குப் பயந்தே இரு வளையங்களையும் கழற்றிக் கொடுத்ததாக அறிய முடிகிறது.
இந்த ஹதீஸிலும் நிகழ்கால வினையாக அரபியில் - அதுஃத்தீன - தருகிறாயா? என்று
கேட்டிருக்கிறார்களே அல்லாமல் அரபியில் ஆஃதய்த்த - தந்து விட்டாயா? என்று இறந்த கால
வினையில் கேட்கவில்லை. ஜகாத் கொடுத்து முடிந்து போன ஒன்றுக்கு அதற்காக மீண்டும்
ஜகாத் கொடுக்க வேண்டியதில்லை என்றிருக்குமானால், நபி(ஸல்) அவர்கள் கொடுத்து
விட்டாயா? தந்து விட்டாயா? என இறந்த கால வினையில் கேட்டு முற்றுப்புள்ளி
வைத்திருக்கலாம். அதற்கு மாறாக கொடுக்கிறாயா? தருகிறாயா? என்று கேட்டதிலிருந்து
ஜகாத் கொடுப்பது ஒருமுறையோடு முடிவதில்லை. அப்பொருள் நம்கையில் இருக்கும்
காலமெல்லாம் கொடுக்க வேண்டும் என்பது விளங்குகின்றது.
புகாரீ 1456, 1457 ஹதீஸ்கள்
அபூபக்கர்(ரழி) அவர்கள் கூறியதாவது :
"அல்லாஹ்வின் மீது ஆணையாக! நபி(ஸல்)
அவர்களிடத்தில் வழங்கி வந்த (ஜகாத்தில்) ஒரு ஒட்டகக் குட்டியை என்னிடம்
தரமறுத்தாலும், அதற்காக அவர்களுடன் நான் போர் புரிவேன்" நூல் : புகாரீ வா2, பக்.
220
இந்த ஹதீஸில் "நபி(ஸல்) அவர்களிடத்ளதில் வழங்கி வந்த ஒரு ஒட்டகக்குட்டி" என்று
ஏன் குறிப்பிட வேண்டும்? நபி(ஸல்) அவர்களிடம் ஒரு முறை ஜகாத் கொடுத்ததுடன் அது
முடிவு பெற்றிருந்தால், அந்த ஒட்டகக்குட்டியை குறிப்பிட்டுக் கூற வேண்டிய அவசியம்
என்ன? நபி(ஸல்) அவர்களிடம் ஜகாத் கொடுத்த அதே வகைகளுக்கு மீண்டு ஜகாத் கொடுப்பதாக
இருந்தால் மட்டுமே இப்படிக் கூறி இருக்க முடியும். கொடுத்தது முடிந்து போனதாகவும்;
இப்போது கொடுப்பது புதியவற்றுக்காகவும் இருந்தால், அதில் சென்ற வருடத்தின்
ஒட்டகக்குட்டியை குறிப்பிட்ட வேண்டிய அவசியம் என்ன? இதை முறையாக நடுநிலையோடு
சிந்திப்பவர்கள் ஜகாத் மீண்டும் மீண்டும் கொடுக்க வேண்டும் என்பதை விளங்கிக்
கொள்வார்கள்.
புகாரீ 1465வது ஹதீஸில் ஒரு பகுதி
ஒருநாள் நபி(ஸல்) அவர்கள் மிம்பரில் அமர்ந்து உபதேசம் செய்தார்கள்; அதில் ஓரு
பகுதி வருமாறு:
"…… எனவே ஒரு முஸ்லிம்
தன் செல்வத்திலிருந்து ஏழைகளுக்கும், அனாதைகளுக்கும்,
வழிபோக்கர்களுக்கும், கொடுத்துக் கொண்டிருக்கும் வரை அது அவனுக்குச் சிறந்த
தோழனாகும். யார் முறையின்றி அதை எடுத்துக் கொள்கிறானோ அவன் உண்டும் வயிறு
நிரம்பாதவனைப் போன்றவனாவன். மேலும் மறுமை நாளில் அந்தச் செல்வம் அவனுக்கு எதிராகச்
சாட்சி சொல்லும்" எனக் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூ ஸயீத் அல்குத்ரீ(ரழி), நூல்
: புகாரீ 1465 வா 2. பக்க 228
இந்த ஹதீஸின் பகுதியை இறையச்சத்துடன் நடுநிலையோடு சிந்தித்து விளங்குகிறவன்,
இங்கு நபி(ஸல்) அவர்கள் "தன் செல்வத்திலிருந்து" என்று குறிப்பிடுவது அவர் ஏற்கனவே
ஜகாத் கொடுத்த செல்வம், இந்த வருடம் புதிதாக ஈட்டிய செல்வம் அனைத்தையும்
உள்ளடக்கியது தான் என்பதையும், அந்த அனைத்து செல்வங்களுக்கும் தொடர்ந்து ஜகாத்
கொடுத்து வர வேண்டும் என்பதை கொடுத்துக் கொண்டிருக்கும் வரை அது அவனுக்குச்
சிறந்த தோழனாகும் என்ற பாகமும் தெள்ளத் தெளிவாக - குன்றிலிட்ட தீபமாக விளக்குகிறது
என்பதை புரிந்து கொள்ள முடியும்.
தவ்ஹீது மவ்லவி புரோகிதர்களை நம்பினால்!
இந்த தவ்ஹீத் மவ்லவி புரோகிதர்களின் பேச்சை நம்பி ஜகாத் தொடர்ந்து கொடுக்காமல்
இருப்பவர்கள், 'முறையின்றி அதை எடுத்துக் கொள்கிறவன்' என்றும் "அவன் உண்டும் வயிறு
நிரம்பாதவனைப் போன்றவன்" என்றும் நபி(ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளவர்களின்
பட்டியலில் சேர்ந்து விடுவார்கள் என்பதையும் விளங்கிக் கொள்ள முடிகிறது. பணம்
படைத்த செல்வந்தர்களே இந்த தவ்ஹீத் மவ்லவி புரோகிதர்களின் ஜகாத் 'ஃபத்வா' உங்களுக்கு இப்போது இனிப்பாக இருக்கலாம்; செல்வத்தின் மீதுள்ள பேராசை உங்களை அந்த
அபத்த 'ஃபத்வா'வை வரவேற்கச் சொல்லும். ஆனால் அல்குர்ஆன் அத்தவ்பா 9:34,35 வசனங்களை
படித்து விளங்கி மறுமையையும், அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்.
இனி அவர்களின் அபத்த விளக்கங்களை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்:
ஏகத்துவம் கூறுகிறது:
ஜகாத் கடமையாவதற்கு ஒரு வருடம் முழுமையடையும் வரை தேவையில்லை. ஒருவருக்கு மாதம்
ஒரு இலட்சம் ரூபாய் கிடைத்தால் அதில் அம்மாத செலவு போக மீதமுள்ளவற்றில் இரண்டரை
சதவிகிதம் ஜகாத் கொடுக்க வேண்டும். ஏகத்துவம், செப்டம்பர் 2005, பக்கம் 4.
|
இதற்குரிய ஹதீஸ் ஆதாரம் எங்கே? 1426 வருடங்களாக முஸ்லிம்கள் கடை பிடித்துவரும்
வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டும் என்பதற்கு ஹதீஸ் ஆதாரம் கேட்பவர்கள், தங்களின்
இந்தக் கூற்றுக்கு ஹதீஸ் ஆதாரம் கொடுக்கக் கடமை பட்டிருக்கிறார்களா? இல்லையா?
சேர்ந்த செல்வத்தை செலவழிக்காமல் வருட முழுவதும் தடுத்து வைத்துள்ளதற்கு செலவழித்தது
போக எஞ்சியுள்ளதற்கு ஜகாத் கடமை என்பதில் பொருள் இருக்கிறது. ஆனால் ஒரு முறை
கொடுத்தால் போதும், உடனடியாகக் கொடுக்க வேண்டும் என்கிறார்கள். இதற்கும் ஹதீஸ்
ஆதாரம் தரக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.
ஏகத்துவம் கூறுகிறது:
"தினசரி வருமானம் உள்ளவராக இருந்தால் அன்றைய செலவு போக மீதி உள்ளதற்கு ஜகாத்
கொடுத்து விட வேண்டும்; மாத வருமானம் உள்ளவராக இருந்தால் அந்த மாதத்தின் செலவு
போக மீதமுள்ளதற்கு ஜகாத் கொடுத்து விட வேண்டும். வருட வருமானம் உள்ளவராக இருந்தால்
வருடத்தின் செலவு போக மீதமுள்ளதற்கு ஜகாத் கொடுக்க வேண்டும் என்பது நமது
முடிவாகும்". ஏகத்துவம், செப்படம்பர் 2005, பக்கம்.5
|
இங்கு அவர்கள் தங்களின் சொந்த முடிவைச் சொல்கிறார்களே அல்லாமல் மார்க்கத்தைச்
சொல்லவில்லை. கலீஃபாக்கள், நபித் தோழர்களின் முடிவுகளை மறுக்கிறவர்கள் தங்களின்
முடிவை மார்க்கமாக்குவதுதான் வேடிக்கையாகும். மார்க்கமாக இருந்தால் இவற்றிற்கு ஹதீஸ்
ஆதாரம் தர வேண்டும். இவர்களின் விளக்கங்கள், தத்துவங்கள் எதுவும் மார்க்கமாகாது.
குர்ஆன், ஹதீஸில் இல்லாததை மார்க்கமாக்க இவர்களுக்கு 'வஹீ ' வருவதில்லை.
1426 ஆண்டுகளாக முஸ்லிம்களின் நடைமுறையில் இருக்கும் வருடா வருடம் ஜகாத்
கொடுத்த செல்வத்திற்கும் கொடுக்க வேண்டும் என்பதற்கு ஹதீஸ் ஆதாரம் கேட்பவர்கள்
எந்த முகத்தோடு எந்த ஹதீஸ் ஆதாரமும் இல்லாத நிலையில் தங்களின் சொந்தக் கருத்தை
மார்க்கமாக்க முற்படுகிறார்கள்?
ஏகத்துவம் கூறுகிறது:
"உங்கள் செல்வத்தில் எஞ்சியதைத் தூய்மைப்படுத்துவதற்காகவே தவிர வேறு எதற்கும்
அல்லாஹ் ஜகாத்தைக் கடமையாக்கவில்லை" என்ற ஹதீஸின்பகுதியைக் காட்டி,
எஞ்சிய பொருட்களைத் தூய்மைப்படுத்துவதற்காகவே தவிர அல்லாஹ் ஜகாத்தை
கடமையாக்கவில்லை என்ற நபி(ஸல்) அவர்களின் இந்தக் கூற்று நமது முடிவை வலுப்படுத்தும்
தெளிவான சான்றாக அமைந்துள்ளது என்று கூறி ஒரு பொருளுக்கு ஒரு முறை ஜகாத் தத்துவத்தை
நிலைநாட்ட முற்பட்டுள்ளார்கள். ஏகத்துவம், செப்டம்பர் 2005, பக்கம் 10
|
"(நபியே!) அவர்களுடைய செல்வத்திலிருந்து தர்மத்திற்கானதை எடுத்துக் கொண்டு,
அதனால் அதனால் அவர்களை உள்ளும் புறமும் தூய்மையாக்குவீராக…..? அல்குர்ஆன் 9 : 103
இது இறைவாக்கு; இந்த இறைவாக்குக்கு முரணில்லாத நிலையில் தான் மேற்படி ஹதீஸை
விளங்க வேண்டும்.
ஒருவனது செல்வத்திலிருந்து தர்மத்திற்கான பங்கு நீக்கப்பட்டால் தான்,
எஞ்சியிருப்பதை அவன் நல்ல முறையில் அனுபவிக்க முடியும். இதை புகாரீ 1465ல் உள்ள
ஜகாத்தை தொடர்ந்து கொடுத்துக் கொண்டிராதவன் "உண்டும் வயிறு நிரம்பாதவனைப்
போன்றவன்" என்ற பகுதி உறுதிப்படுத்துகிறது.
ஒரு முறை குளித்தால், பின்னர் குளிக்க வேண்டியதில்லையா?
கருவாடு விற்ற காசு நாறுமா? என்பது போல் செல்வத்தில் எந்த அழுக்கும்
இருப்பதில்லை. அந்தச் செல்வம், மனிதனின் கைப்படுவதால் அவனது செயல்பாடுகளின் மூலம்
உண்டாகும் அழுக்கே அதில் படிகின்றது. அந்த அழுக்கை தர்மத்திற்கானதை தொடர்ந்து
எடுத்துக் கொடுப்பதன் மூலமே நீக்க முடியும். அவர்களின் வாதப்படியே அந்தப் பொருளை
ஒரு முறை சுத்தப்படுத்தினால் அது சுத்தமாகி விடும். பின்னர் அழுக்காகது என்பதை எந்த
அடிப்படையில் கூறுகிறார்கள்? ஒரு முறை குளித்தால் உடல் சுத்தமாகிவிடும். பின்னர்
அசுத்தமாகாது; உடையை ஒரு முறை துவைத்தால் சுத்தமாகிவிடும்; பின்னர் அசுத்தமாகாது.
இப்படி மனிதனின் புழக்கத்தில் இருக்கும் எப்பொருளையும் ஒரு முறை சுத்தப்படுத்தினால்
சுத்தமாகிவிடும்; பின்னர் ஒரு போதும் அசுத்தமாகாது எனக் கூறுகிறார்களா? இது
வடிகட்டின மடமையான வாதமாக இருக்குமே அல்லாமல் வேறு என்னவாக இருக்க முடியும்?
மனிதனின் புழக்கத்தில் இருக்கும் எதுவாக இருந்தாலும் அது தொடர்ந்து
அசுத்தமடைந்து கொண்டு தான் இருக்கும். அதன் மீண்டும் மீண்டு சுத்தப்படுத்திக்
கொண்டு தான் இருக்க வேண்டும் என்பதே இயற்கை நியதி. இதை அடி முட்டாளும் விளங்குவான்.
தவ்ஹீத் மவ்லவி புரோகிதர்கள் விளங்க முடியாதது தான் ஆச்சரியம். இல்லை மனிதனின்
புழக்கத்திலுள்ள ஒரு பொருள் ஒரு முறை சுத்தப்படுத்தப்பட்டால் அது பின்னர் அசுத்தம்
ஆகவே ஆகாது என்பதற்கு குர்ஆனிலிருந்தோ, ஹதீஸிலிருந்தோ ஆதாரம் தரக்
கடமைப்பட்டிருக்கிறார்கள்.
மீண்டும் மீண்டும் அழுக்கடையும்!
எனவே செல்வந்தனின் புழக்கத்தில் இருக்கும் செல்வம் மீண்டும் மீண்டும்
அசுத்தமடையத்தான் செய்யும். அதை மீண்டும் மீண்டும் சுத்தப்படுத்தித்தான் ஆக வேண்டும்
. இதை மறுப்பவர்கள் விஷயதாரிகளாக இருக்க முடியாது. எனவே ஜகாத் கொடுத்த
செல்வத்திற்கும் வருடா வருடம் மீண்டும் ஜகாத் கடமை என்பதே தெளிவான உண்மை.
செல்வத்தைத் தூய்மைப்படுத்துகிறது என்று கூறும் சந்தேகத்திற்குரிய ஹதீஸை தூக்கி
நிறுத்த தனது வார்த்தை ஜாலங்களை அளந்து விட்டிருப்பதும் அல்லாமல், அந்த ஹதீஸுக்கு
9:103 குர்ஆன் கூறும் கருத்துக்கு முரணான கருத்தைக் கூறி தங்களின் சொத்தை வாதத்தை
நிலைநாட்ட முற்பட்டிருப்பதோடு நாஸிருத்தீன் அல்பானி மீதும் பாய்ந்திருக்கிறார்கள்.
இதோ அவர்கள் கூறுகிறார்கள்.
|
ஏகத்துவம் கூறுகிறது:
"நாஸிரூத்தீன் அல்பானி அவர்கள் சரி என்று சொல்லி விட்டால், அதைக் கண்ணை
மூடிக்கொண்டு ஏற்க வேண்டும் என்ற நம்பிக்கை பலரிடம் காணப்படுகிறது. ஆனால் அல்பானி
அவர்கள் ஆதாரப்பூர்வமான ஹதீஸைப் பலவீனமானது என்றும், பலவீனமான ஹதீஸை
ஆதாரப்பூர்வமானது என்றும் ஹதீஸில் இல்லாததை இருக்கிறது என்றும் கூறியதற்கு ஆதாரம்
உள்ளது. அல்பானி அவர்கள் சிறந்த அறிஞர் என்றாலும் மனிதர் என்ற அடிப்படையில்
அவரிடமும் தவறுகள் ஏற்படவே செய்யும். இது போன்ற குறைபாடுகளுக்கு அப்பாற்பட்ட எந்த
ஹதீஸ் கலை அறிஞரும் கிடையாது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்". ஏகத்துவம் ,
செப்டம்பர் 2005, பக்கம் 12.
|
உண்மை தான்! இவை அனைத்தும் அப்படியே திருவாளர் P.J.க்கு பொருந்துமா? இல்லையா!
பொருத்திப் பார்ப்போம்:
பி.ஜே. அவர்கள் சரி என்று சொல்லி விட்டால் அதைக் கண்ணை மூடிக் கொண்டு ஏற்க
வேண்டும் என்ற நம்பிக்கை பலரிடம் காணப்படுகிறது. ஆனால் பி.ஜே. அவர்கள் ஆதாரப்
பூர்வமான ஹதீஸைப் பலவீனமானது என்றும், பலவீனமான ஹதீஸை ஆதாரப் பூர்வமானது என்றும்,
ஹதீஸில் இல்லாததை இருக்கிறது என்றும் கூறியதற்கு ஆதாரம் உள்ளது. பி.ஜே. அவர்கள்
சிறந்த அறிஞர் என்றாலும் மனிதர் என்ற அடிப்படையில் அவரிடமும் தவறுகள் ஏற்படவே
செய்யும். இது போன்ற குறைபாடுகளுக்கு அப்பாற்பட்ட எந்த அறிஞரும் கிடையாது என்பதைக்
கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்தக் கூற்றும் நூற்றுக்கு நூறு உண்மைதானே. உண்மைதான் என்பதற்கு அவரது
'தத்தம் பகுதி தனித்தனிப் தலைப்பிறை ஆய்வும்", 'இந்த ஜகாத் ஓர் ஆய்வும்் போதிய
சான்றுகளாகும். மேலே கூறப்பட்டுள்ள அனைத்துக் குற்றச் சாட்டுக்களையும் இந்த இரண்டு
ஆய்வுகளிலுமே பார்க்க முடியும்.
மூலகர்த்தா யார்?
இதில் முக்கியமான கவனிக்க வேண்டிய ஒரு முக்கிய விஷயம் உண்டு. தன்னைக்
கண்மூடிப்பின்பற்றும் - தக்லீது செய்யும் ஒரு கூட்டத்தை அல்பானி உருவாக்கினாரா?
என்பது சந்தேகமே. அல்பானி சுயமாகக் கடிகாரத் தொழில் செய்து ஹலாலான முறையில் உழைத்து
வாழ்க்கை நடத்தினார். பிரச்சாரப் பணிக்கு கூலி வாங்கவே இல்லை என அல்லாஹ்மீது
ஆணையிட்டே பொய்ச் சத்தியம் செய்து கொண்டு ஐந்தாயிரம், பத்தாயிரம் என அவர் கூலி
வாங்கவில்லை. ரமழான் ஒரு மாத பிரச்சாரப் பணிக்கு ரூபாய் 50,000 கூலி அல்பானி வாங்கவே
இல்லை. எனவே தன்னைக் கண்மூடிப் பின்பற்றும் ஒரு கூட்டத்தை அல்பானி உருவாக்கும்
அவசியம் ஏற்படவில்லை. ஆனால் தன்னைக் கண்மூடிப் பின்பற்றும் -தக்லீது செய்யும் ஒரு
கூட்டத்தை சாட்சாத் பி.ஜே. உருவாக்கியுள்ளார் என்பதற்கு எண்ணற்ற ஆதாரங்களைப்
பார்க்கலாம்.
"எங்களுக்கென்று ஒரு தனி பேனர் உண்டு. அந்த பேனரில் மட்டுமே மேடை ஏறி பேசுவோம்.
வேறு யாருடைய மேடையிலும் நாங்கள் ஏறவும் மாட்டோம். வேறு யாரையும் எங்கள் மேடையில்
ஏற்றவும் மாட்டோம். மாற்றுக் கருத்து உடையவர்களுடன் ஒரே மேடையில் பேசினால்
மாறுபட்டக் கருத்தைக் கேட்டுக் எங்கள் ஆதரவாளர்கள் குழம்பி விடுவார்கள்" என்று
அல்பானி கூறியதாக ஆதாரமில்லை.ஆனால் பி.ஜே. அப்படிச் சொல்லி வருகிறார். எழுதி
வருகிறார். மாற்றுக் கருத்துடையவர்களின் பேச்சைக் கேட்பதிலிருந்தும், அவர்களின்
இதழ்களைப் படிப்பதிலிருந்தும் தனது ஆதரவாளர்களைத் தடுப்பதில் குறியாக இருக்கிறார்.
இதை இந்த இதழிலேயே நீங்கள் பரீட்சித்துப் பார்த்து உண்மை நிலையை கண்டறிய முடியும்.
"ஏகத்துவம் இதழில் வெளிவந்த 'ஜகாத்' ஓர் ஆய்வு" ஆக்கத்திற்கு மறுப்பு
அந்நஜாத்தில் வெளிவந்துள்ளது. இரண்டு மாறுபட்டக் கருத்துக்களையும் நடுநிலையோடு
படித்துப் உண்மையைக் கண்டறியுங்கள்" என்று அவரது ஆதரவாளர்களிடம் கூறி அந்நஜாத்தை
நீட்டிப்பாருங்கள். அதைத் தொடுவதற்கு கூட அஞ்சுவார்கள். அந்த அளவு மூளைச் சலவைக்
செய்யப்பட்டுள்ளனர். பின்னர் எப்படி மூளைச் சலவைச் செய்யப்பட்டுள்ளனர். பின்னர்
எப்படி முகல்லிது நிலையிலிருந்து சுய சிந்தனை நிலைக்கு மாறுவார்கள்? அதனால் தான்
"தத்தம் பகுதித் தனித்தனித் தலைப்பிறை" என்ற மூடக்கொள்கையையும், ஒரு பொருளுக்கு
ஒரு முறை ஜகாத் கொடுத்து விட்டால் பின்னர் கொடுக்க வேண்டியதில்லை,
சுத்தப்படுத்தப்பட்டது மீண்டும் அழுக்காகாது, சுத்தமாகவே இருக்கும் என்ற
மூடக்கொள்கையையும் கண்மூடி ஏற்கும் நிலையில் இருக்கிறார்கள். ஆனால் நாமோ அந்நஜாத்
படிக்கும் வாசகர்கள் அனைவரையும் ஏகத்துவம் மாத இதழ், உணர்வு வார இதழ் அது
அபகரிக்கப்பட்டிருந்தாலும் படிக்கத் தூண்டுகிறோம். அவர்களது பேச்சைக் கேட்கத்
தூண்டுகிறோம். முஸ்லிம்கள் குறிப்பாக வாலிபர்கள் சுய சிந்தனையாளர்களாக மாற வேண்டும்
என்பதே எமது விருப்பம்.
அனாதைகளின் சொத்து!
ஏகத்துவம் கூறுகிறது:
அனாதைகளின் சொத்துக்களுக்குப் பொறுப்பேற்றவர் அதை வியாபாரத்தில் முடக்க
வேண்டும். இல்லாவிட்டால் ஜகாத் கொடுத்தே அந்தச் சொத்து கரைந்து விடும் என்று
நபி(ஸல்) அவர்கள் கூறியதாக வரும் எந்தவொரு அறிவிப்பும் ஆதாரப்பூர்வமானது அல்ல. எனவே
இதன் அடிப்படையில் எந்தச் சட்டத்தையும் வகுக்க முடியாது.
இது தவிர உமர்(ரழி) அவர்களின் சொந்தக் கூற்றாக மேற்கண்ட கருத்து தாரகுத்னீ
2|110, பைஹகீ 4\107 மற்றும் 6\25, முஸ்னத் ஷாஃபி 1\204, முஅத்தா 1\251, முஸன்னப்
அப்துல்ரஸாக் 4\69 ஆகிய நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் குர்ஆனையும்,
நபி(ஸல்) அவர்கள் சொல், செயல், அங்கீகாரத்தையும் மட்டுமெ பின்பற்றவேண்டும். மற்ற
எவருக்கும் வஹீ வராது என்பதால் அதை வைத்து எந்தச் சட்டத்தையும் வகுக்க முடியாது
என்று எழுதியுள்ளனர். ஏகத்துவம் , செப்டம்பர் 2005, பக்கம் 24.
|
விவஸ்தைக் கெட்டவர்கள்!
இங்கு உமர்(ரழி) அவர்களது கூற்று ஆதாரப்பூர்வமானது என்பதை ஒப்புக்கொண்டு அதை
ஏற்க மறுக்கிறார்கள். இவர்களது எழுத்து நபிதோழர்களுக்கு வஹீ வரவில்லை. ஆனால்
எங்களுக்கு வஹீ வருகிறது என்று கூறுவது போல் இருக்கிறது. நபித்தோழர்களின்
எப்படிப்பட்ட கருத்துக்களை ஏற்கலாம்? எப்படிப்பட்ட கருத்துக்களை ஏற்கக்கூடாது என்ற
விபரம் தெரியாத விவஸ்தைக் கெட்டவர்களாக இருக்கிறார்கள் இந்த தவ்ஹீது மவ்லவி
புரோகிதர்கள்.
எப்படி அணுக வேண்டும்?
"அனாதைகளின் சொத்துக்களுக்கு பொறுப்பேற்றவர்கள் ஜகாத்தால் அந்தச் சொத்து
கரைந்துவிடும் என்று அஞ்சி வியாபாரத்தில் முடக்காதீர்கள். அதற்கு ஜகாத்தும்
கொடுக்காதீர்கள்" என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளதாக ஓர் ஆதாரப்பூர்வமான ஹதீஸை
எடுத்துக்காட்டி, உமர்(ரழி) அவர்களின் கூற்று அதற்கு முரணாக இருக்கிறது என்று கூறி
அதை மறுத்தால் அதில் நியாயம் இருக்கிறது. உதாரணமாக நபி(ஸல்) அவர்கள் ஒரே நேரத்தில்
கூறப்பட்ட மூன்று தலாக்குகள் ஒரே தலாக்தான். கணவன், மனைவி பிரிய வேண்டியதில்லை என்று
கூறியிருப்பது ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் காணப்படுகிறது. அதற்கு மாறாக உமர்(ரழி)
அவர்கள் ஒரே நேரத்தில் மூன்று தலாக் சொன்னாலும் அது செல்லுபடியாகும்; கணவன் மனைவி
பிரிந்து விட வேண்டும் என்று செயல் படுத்தினார்கள்.
இங்கும் உமர்(ரழி) தவறு செய்து விட்டார்கள் என்று நாம் கூறக்கூடாது. அவர்கள்
யாரையும் தக்லீது செய்யாமல் சொந்த ஆய்வில் அப்படி ஒரு முடிவுக்கு வந்தார்கள்.
அவர்களுக்கு இரண்டு நன்மைகளுக்குப் பதிலாக ஒரு நன்மை நிச்சயமாகக் கிடைத்திருக்கும்.
ஆட்சி அதிகாரத்தில் அவர்கள் இருந்ததால் அதனை அமுல்படுத்தவும் செய்தார்கள். அல்லாஹ்
அவர்களை மன்னிக்கலாம். அவர்களின் சேவை, தியாகம் காரணமாக அதை நன்மையாக மாற்றியும்
கொடுக்கலாம். இது அல்லாஹ்வின் புறத்தில் உள்ளது. ஆனால் அதில் நபி(ஸல்) அவர்களின்
நடைமுறை தெள்ளத்தெளிவாக நமக்குக் கிடைத்திருப்பதால். நாம் நபி(ஸல்) அவர்களையே
பின்பற்ற வேண்டும். இதுதான் நமக்கிடப்பட்ட கட்டளையாகும். இங்கு இதுதான் நேரான
வழியாகும்.
முரணான ஹதீஸ் இல்லை!
ஆனால் இந்த ஜகாத் விஷயத்தில் உமர்(ரழி) அவர்களின் கருத்துக்கு நேர் முரணான
கருத்துடைய ஒரு ஆதாரப்பூாவமான ஹதீஸும் இல்லாத நிலையில் நாம் என்ன முடிவுக்கு வர
வேண்டும்? இந்த விஷயத்தில் நபி(ஸல்) அவர்களோடு நெருங்கிப் பல ஆண்டுகள் பழகி
அவர்களின் நன்மதிப்பைப் பெற்ற உமர்(ரழி) அவர்கள் நபி(ஸல்) அவர்களின் கருத்தையே
பிரதிபலிக்கிறார்கள் என்றே நல்லெண்ணமே கொள்ள வேண்டும். அந்த கருத்து தவறு என்பதற்கு
அதற்கு முரணான கருத்துடைய நபி(ஸல்) அவர்களின் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் இருந்தால்
மட்டுமே, நாம் உமர்(ரழி) அவர்களின் கருத்தை விட்டு நபி(ஸல்) அவர்களின் கருத்தை
எடுத்து நடக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
நபிக்குப் பிறகு வஹீ இல்லை!
தெளிவான ஆணித்தரமான ஆதாரமில்லாமல்,கலீஃபாக்களின் நடைமுறைகளையோ காலம் காலமாக
நடைமுறையிலிருக்கும் செயல்பாடுகளையோ மறுத்துக் கூறும் உரிமை பின்னால் வந்த நமக்கு
இல்லை. எப்படி நபி(ஸல்) அவர்களுக்குப் பிறகு அன்று யாருக்கும் 'வஹீ' வரவில்லையோ,
அதே போல் இன்றும் நம்மில் யாருக்கும் வஹீ வர முடியாது. எனவே எவரது சொந்தக் கருத்து
யூகம், கற்பனை, வார்த்தை ஜாலம் , வாதத் திறமை ஒரு போதும் மார்க்கமாக முடியாது.
வருடா வருடம் ஜகாத் கடமை என்பது 1426 வருடங்களாக முஸ்லிம்களிடையே நடைமுறையில்
இருப்பதால், அதற்கு மாறாக மாதாமாதம், வாரா வாரம், தினசரி, தினசரி ஐந்து வேளை
என்றெல்லாம் இவர்கள் தங்களின் கற்பனையை வளர்த்திருப்பது இவர்களின் அறிவீனமும்,
ஆணவமுமேயன்றி அறிவார்ந்த வாதமல்ல.
அனாதைகளின் பாதுகாவலர்கள், அனாதைகளின் சொத்தை வியாபாரத்தில் ஈடுபடுத்தக் கூடாது,
அநாதைகளுக்கு அநீதி இழைப்பதாகும் என்று அவர்கள் எழுதி இருப்பது சுத்த அபத்தமாகும்.
17:34 அனாதைகளின் சொத்தை அவர்கள் பருவமடைவது வரை அழகிய முறையிலேயே தவிர
நெருங்காதீர்கள்! என்ற எச்சரிக்கை அதை அபகரிக்கும் நோக்கில் செயல்படக் கூடாது என்று
எச்சரிக்கிறதே அல்லாமல், அதை அபிவிருத்தி செய்வதும் கூடாது என்ற கருத்து அந்த
ஆயத்தில் இல்லை. பருவ வயதை அடையாததால் அனாதையினது சம்மதம் பெறும் வாய்ப்பில்லை;
அதனால் வியாபாரத்தில் ஈடுபடுத்தும் உரிமை இல்லை என்பதும் சுத்த பிதற்றலாகும்.
வியாபாரத்தில் ஈடுபடுத்த, அதை விற்று வேறு நல்ல சொத்து வாங்க இப்படி அனைத்து
உரிமைகளும் பொறுப்பாளனுக்கு உண்டு என்பதுதான் நாட்டுச் சட்டமும், மார்க்கச்
சட்டமுமாகும்.
கூலி வேலை செய்த நபர் தனது கூலியை வாங்காமல் விட்டுச் சென்றதை அவரது அனுமதி
இல்லாமல், தொழிலில் ஈடுபடுத்தி அதை அபிவிருத்தி செய்து அதை அப்படியே பின்னர் வந்து
கேட்ட போது ஒப்படைத்த, குகையில் அடைபட்ட தோழர்களில் ஒருவரின் சம்பவம் பற்றிய ஹதீஸ்
இதற்குப் போதிய ஆதாரமாகும். அதனால்தான் அனாதைகளுக்கு நல்லது செய்யும் நோக்கில்
நெருங்குங்கள்; கெட்டது செய்யும் அபகரிக்கும் நோக்கில் நெருங்காதீர்கள்; அது பெரும்
குற்றம் என்று அல்லாஹ் எச்சரிக்கிறான்.
அனாதையின் சொத்தை வியாபாரத்தில் போடாமல் இருந்தால் இவர்களின் வாதப்படி ஜகாத்
கொடுத்தே கரைவதற்குப் பல வருடங்கள் ஆகும். ஆனால் வியாபாரத்தில் போட்டு,
நட்டம் ஏற்பட்டால் ஒரு வியாபாரத்தில் போட்டு, நட்டம் ஏற்பட்டால் ஒரு
மாதத்திலேயே ஏன் ஒரு நாளில் கூட அனாதையின் சொத்து அழிந்து விடும் என்று எழுதி
இருக்கிறார்கள். ஏகத்துவம், செப்டம்பர் 2005, பக்கம் 26.
|
தங்களின் அனுபவத்தைச் சொல்கிறார்கள்!
கேவலம்! தங்களின் சத்தில்லாத சொத்தை வாதத்தை நிலை நாட்ட எப்படிப்பட்ட ஈனத்தனமான
வாதங்களை எல்லாம் எடுத்து வைக்கிறார்கள் பார்த்தீர்களா? புரோகிதத் தொழிலைச்
செய்வதைவிட வேறு எந்த தகுதியும் இல்லாத இவர்கள் அனாதைகளின் சொத்தை ஒரு மாதத்திலே
என்ன? ஒரு நாளில் கூட அழித்து விடலாம். இவர்கள் மளிகைக் கடை வைத்து போட்ட முதல்
அனைத்தையும் இழந்து போண்டியான அனுபவத்தை வைத்து இப்படி எழுதியுள்ளார்களோ? என்னவோ?
அமானித மோசடியில் பேர் போனவர்கள் அனாதைகளின் சொத்தை அபகரிக்க கேட்கவா வேண்டும்?
உள்ளச்சத்தோடு , மறுமையில் கூலியை எதிர்பார்த்து அனாதைகளின் சொத்தை
பராமரிப்பவர்கள் முறைதவறி அதில் சாப்பிடமாட்டார்கள். தங்கள் சொத்தைப் போல்
அக்கறையாகப் பாடுபட்டு அதை அபிவிருத்தி செய்யவே முற்படுவார்கள்; ஈனர்களும், அமானித
மோசடியாளர்களும் அனாதையின் சொத்தை வியாபாரத்தில் ஈடுபடுத்தித்தான் அழிக்க வேண்டும்
என்பதில்லை. அவற்றைப் பாதுகாப்பதாகக் கூறிக்கொண்டே அவற்றைச் சாப்பிட்டே அழித்து
விடுவார்கள். இதுவே நிதர்சன உண்மை.
இரு பாகம் பாரீர்!
இந்த தவ்ஹீத் புரோகித மவ்லவிகளின் இரு முரண்பட்ட முகங்களைப் பாருங்கள்.
ஆரம்பத்தில் ஜகாத் வருடா வருடம் கொடுத்து வந்தால் அந்த சொத்து அழிந்து இல்லாமல்
போய் விடும். அப்படி ஒரு சட்டத்தை அல்லாஹ் கொடுத்திருப்பானா? என்று தங்கள்
ஆதரவாளர்களை உசுப்பேற்றினார்கள். அவர்களின் ஆதரவாளர்களுக்கும், பணம் படைத்த
செல்வந்தர்களுக்கும் இது நியாயமான காரணமாகத் தெரிந்தது. அவர்கள் அனவைரின்
வாயிலிருந்தும் வருடா வருடம் ஜகாத் கொடுத்தால் சொத்து அழிந்து விடுமே என்றே வந்து
கொண்டிருந்தது. கோரஸாகப் பாடித்திரிந்தார்கள். இது அனாதைகள் பற்றிய பேச்சல்ல.
பெரியவர்கள், தொழில் துறைகளில், வியாபாரங்களில் ஈடுபட்டிருப்பவர்கள்: வியாபாரம்,
தொழிலில் ஈடுபடுத்தி தங்கள் சொத்தை பல மடங்கு ஆக்கும் வாய்ப்பை நிறையவே பெற்றவர்கள்.
அப்படியே தொழிலில் ஈடுபடுத்தாமல் ஜகாத் கொடுத்து வந்தாலும் அது நிஸாபைத்
தொட்டதும் ஜகாத் கடமை இல்லை. இந்த நிலையில் ஜகாத் வருடா வருடம் கொடுத்து சொத்து
கரைந்து இல்லாமல் போய் விடும் என ஒப்பாரி வைத்து தங்கள் ஆதரவாளாகளை மயக்கியவர்கள்,
அதற்கு மாறாக இந்த ஹதீஸை மறுக்க என்ன எழுதுகிறார்கள் பாருங்கள்:
ஏகத்துவம் கூறுகிறது:
"ஆனால் இவர்கள் வாதப்படியே ஆண்டுக்கு ஒரு முறை ஜகாத் கொடுப்பதாக வைத்துக்
கொண்டாலும் ஒரு காலத்திலும் முழுமையாகக் கரைவதற்கு வாய்ப்பே இல்லை. ஒரு வயதுடைய
அல்லது அன்று பிறந்த குழந்தை அனாதையாகி விட்ட நிலையில் அதன் சொத்தை ஒருவன்
பராமரிக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது என்று வைத்துக் கொள்வோம். அனாதை பருவ வயது
அடையும் வரை தான் பராமரிக்க வேண்டும். அதாவது அதிகபட்சமாக 15 வருடங்கள் வரை ஒருவன்
அனாதையின் சொத்தைப் பராமரிக்க வேண்டிய நிலை ஏற்படும். சொத்தில் இரண்டரை சதவிகிதம்
ஜகாத் என்ற அடிப்படையில் இதைக் கணக்கிடுவோம். ஒரு இலட்ச ரூபாய் அனாதைச் சொத்தை
ஒருவர் பராமரிக்கிறார். இவர்களின் வாதப்படி ஓர் ஆண்டுக்கு இரண்டரை சதவிகிதம் ஜகாத்
கொடுக்க வேண்டும். அதாவது 2500 ரூபாய் கொடுக்க வேண்டும். அடுத்த வருடம் 2437
ரூபாய் ஐம்பது காசுகள் கொடுக்க வேண்டும். 15 வருடங்கள் இப்படியே கொடுத்தால் கூட
அதிக பட்சமாக 31,598 ரூபாய் தான் ஜகாத் கொடுக்க வேண்டி வரும்; மீதி 68,402 ருபாய்
கண்டிப்பாக மீதம் இருக்கும். அப்படிப் பார்க்கும் போது மேற்கண்ட பலகீனமான
ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது போல் ஜகாத் கொடுத்தே சொத்து கரைந்து விடுவதற்கோ
அல்லது சொத்தை ஜகாத் விழுங்கி விடுவதற்கோ வாய்ப்பில்லை. ஏகத்துவம் , செப்டம்பர்
2005, பக்கம் 26,27
|
தொழில், வியாபாரத்தில் ஈடுபடுத்தப்படாத அனாதைகளின் சொத்தே கரைந்து விடாது என்று
இந்த அளவு புள்ளி விபரங்களுடன் விளக்கி உள்ளவர்கள். பின் எப்படி தொழில்,
வியாபாரங்களில் ஈடுபடுத்தி தங்களின் சொத்தைப் பன்மடங்காக்கும் வாய்ப்புள்ளவர்கள்
வருடா வருடம் ஜகாத் கொடுத்தால் சொத்து கரைந்து விடும் என்று, எந்த முகத்தோடு
வாதிட்டு தங்கள் ஆதரவாளர்களையும், செல்வந்தர்களையும் ஏமாற்றினார்கள். இரட்டை முகம்,
இரட்டை வேடம், நயவஞ்சகம் என்பதெல்லாம் இது தானோ?
ஒரு வருடம் பூர்த்தியாகாதவரை ஜகாத் இல்லை!
அபுதாவூத், பைஹகீ 4\95, 4\137 ஆகிய நாட்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. "ஒரு
வருடம் முழுமையடையும் வரை ஜகாத் இல்லை" என்ற ஹதீஸை விமர்சித்து,
ஏகத்துவம் கூறுகிறது:
இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் நம்பகமானவர்கள் இடம் பெறுவதால் இது
ஆதாரப்பூர்வமானது என நாஸிருத்தீன் அல்பானி கூறுகின்றனர். இதன் அறிவிப்பாளர்கள்
நம்பகமானவர்கள் என்பதைக் கவனித்த அல்பானீ இதிலுள்ள மற்றொரு குறைபாட்டைக் கவனிக்கத்
தவறி விட்டார்.
எனவே இதுபற்றி விரிவாக நாம் விளக்கியாக வேண்டும். இதன் அறிவிப்பாளர் தொடர்
பின்வருமாறு அமைந்துள்ளது.
1. அலீ
2. ஹாரிஸ் அல் அஃவர் - ஆஸிம் பின் ளமுரா
3. அபூ இஸ்ஹாக்
4. ஸுஹைர்
5. அப்துல்லாஹ் பின் முஹம்மது
(திரும்பவும் எழுதியுள்ளனர்) அதாவது அப்துல்லாஹ் பின் முஹம்மது என்பவர் தனக்கு
ஸுஹைர் கூறியதாகத் தெரிவிக்கிறார். ஸுஹைர் என்பவர் தனக்கு அபூ இஸ்ஹாக் கூறியதாகக்
குறிப்பிடுகிறார். அபூ இஸ்ஹாக் என்பவர் தனக்கு ஆஸிம், ஹாரிஸ், ஆகிய இருவர்
கூறியதாகக் கூறுகிறார். ஆஸிம், ஹாரிஸ் ஆகிய இருவரும் தமக்கு அலீ(ரழி) கூறியதாக
குறிப்பிடுகிறார்கள்.
இந்தத் தொடரில் அலீ(ரழி) அவர்களிடம் கேட்ட இருவரில் ஹாரிஸ் என்பவர் பெரும்
பொய்யர் என்றாலும் அவர்களிடம் செவியுற்ற மற்றொரு அறிவிப்பாளர் ஆஸிம் பின் ளமுரா
என்பவர் ஏற்கத் தக்கவராவார். எனவே இந்த அடிப்படையில் இரு சரியான அறிவிப்பாளர்
தொடரைக் கொண்டதாக அமைந்து விடுகின்றது. எனவே இது சரியான அறிவிப்புத்தான் என்று
அல்பானி கூறுகிறார்.
ஆனாலும் அலீ(ரழி) அவர்கள் தமது சொந்தக் கூற்றாக இதைக் கூறினார்களா? அல்லது
நபி(ஸல்) அவர்கள் கூற்றைத் தெரிவிக்கிறார்களா? இது பற்றி மேற்கண்ட ஹதீஸில்
திட்டமாகக் கூறப்படவில்லை.
அலீ(ரழி) அவர்கள் நபி(ஸல்) அவர்களின் கூற்றை எடுத்துக் கூறுவதாகத்தான்
நினைக்கிறேன். என்று ஸுஹைர் என்பவர் யூகத்தின் அடிப்படையில் முடிவு செய்ய முடியாது
. நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என்றால் அதை அலீ(ரழி) அவர்கள் தெளிவாகக் கூறி
இருக்க வேண்டும். ஆனால் ஸுஹைர் என்பவர் யூகமாகக் கூறுவதால் இது நபிமொழியாக ஆகாது.
எனவே இதன் அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்கள் என்றாலும் இக்கூற்று அலீ(ரழி)
அவர்களின் சொந்தக்கூற்றே ஆகும். எனவே இதையும் ஆதாரமாகக் கொண்டு எந்த முடிவும்
எடுக்க முடியாது.
ஏகத்துவம், செப்டம்பர் 2005, பக். 39,40
|
ஆணவத்திற்கும் அளவில்லையா?
இதைவிட தெனாவட்டான அகம்பாவமான, ஆணவமான ஒரு எழுத்து இருக்க முடியுமா? 1426
ஆண்டுகளாக முஸ்லிம்கள் கடைபிடித்து வரும் ஒரு வருடம் முழுமையடைந்த பின்னரே ஜகாத்
கடமையாகும் என்ற உண்மையில் இவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டு விட்டதாம். அதாவது இது
நபி(ஸல்) அவர்களின் கூற்றாக இருக்க முடியாது. அலீ(ரழி) அவர்களின் கூற்று என
அறுதியிட்டுக் கூறுகிறார்கள்.
அலீ(ரழி) அவர்கள் நபியவர்களின் கூற்றறை எடுத்துக் காட்டியதாக நினைக்கிறேன் என்று
அலீ(ரழி) அவர்களைச் சந்தித்தாராத ஸுஹைர் என்பவர் யூகத்தின் அடிப்படையில்
கூறுகின்றார் என்று