ந்த இழி நிலை மாறுமா?

ன்றைய இந்திய முஸ்லிம்களுக்கு மிக அவசியத் தேவை ஒற்றுமையாகும். அந்த ஒற்றுமைக்கு பங்கமாக இருப்பது முஸ்லிம்களின் தியாக உணர்வற்ற நிலையாகும். முஸ்லிம்களின் அரசியல் தலைவர்கள் தங்களின் அற்ப உலக சுகம் நாடி, பதவிகளுக்கும் பட்டங்களுக்கும் அடிமைபட்டு, தங்களுக்கு வழங்கப்படும் பெட்டிகளைக் குறியாகக்கொண்டு ஈமானை இழந்து விலை போகின்றனர்.

முஸ்லிம்களை சொர்க்கத்திற்கு வழி நடத்திச் செல்ல வேண்டிய மவ்லவிகளோ, மறுமையையும், அல்லாஹ்வையும், மறந்து மார்க்கத்தையே தங்களின் பிழைப்புக்குரிய வழியாக ஆக்கிக் கொண்டனர். அதனால் தங்களின் வயிற்றை நிறைக்க மார்க்கத்தை திரித்து மற்ற மதங்களைப்போல் ஸ்லாத்தையும் வெற்றுச் சடங்குகள், அனாச்சாரங்கள் நிறைந்த ஒரு மதமாக ஆக்கிவிட்டனர். அவர்கள் தங்களின் வயிறுகளில் நரக நெருப்பையே நிரப்பிக்காள்கின்றனர். (அல்குர்ஆன் 2:174) என்ற இறை வசனத்தை மறந்துவிட்டனர்.

முஸ்லிம்களை வழி நடத்திச் செல்லும் அரசியல் தலைவர்களிடமும், இவர்களிடமும் இஸ்லாம் அடிப்படையாகவே போதிக்கும் தியாக உணர்வு இல்லை என்றால், சாதாரண முஸ்லிம்களிடம் தியாக உணர்வு இருக்கவா போகிறது. இதை நாம் எதிர்பார்க்க முடியுமா?

இந்த நிலை மாற வேண்டுமானால் முஸ்லிம்கள் இவர்கள் பின்னால் கண்ணை மூடிக்கொண்டு குருட்டுத் தனமாகச் செல்வதைக் கைவிடவேண்டும். ஒவ்வோரு ஆணும், பெண்ணும் சுய சிந்தனையாளர்களாக மாறவேண்டும். வ்வுலக வாழ்க்கை பிரச்னைகளை இந்த அரசியல்வாதிகளையும், மத புரோகிதரர்களையும் நம்பி விட்டு விட்டு இவர்கள் உறங்கினால் இவர்கள் வயிறு நிறையுமா? இவ்வுலகத் தேவைகள் பூர்த்தியாகுமா? நிச்சயமாக ஆகாது. அற்பமான அழியும் இவ்வுலக வாழ்கையே இந்த அரசியல் வாதிகளைக் கொண்டு, மதப்புரோகிதரர்களைக் கொண்டு கைகூட வழியில்லை என்கின்றபோது மறு உலக வாழ்கையை இவர்களிடம் நம்பி ஒப்படைத்தால் நிறைவேறுமா? எவ்வளவு பெரிய மதியீனம்.

அழியும் வ்வுலகத் வாழ்கைக்கு யாரையும் நம்பாமல் தனது கையே தனக்கு உதவி என்று உறுதி கொண்டு செயல்படும் மனிதன், அழியாத நிந்திய மறு உலக வாழ்கையை மட்டும் இந்த முல்லாக்களை நம்பி ஒப்படைப்பது எவ்வளவு பெரிய மதியீனம். ஷைத்தானுடைய எவ்வளவு பெரிய சூழ்ச்சி? இதைவிட ஒரு ஆபத்தான நிலை இருக்க முடியுமா?

எனவே அன்பார்ந்த முஸ்லிம் சகோதர சகோதரிகளே ந்த சுய நல வாதிகளான அரசியல் தலைவர்களையும் மதப்புரோகிதரர்களையும் நம்பிச் செயல்படுவதைக் கைவிடுங்கள். உங்களது நல்வாழ்வில் உங்களை விட அக்கறையுள்ள யாரும் ருக்க முடியாது. நீங்களே நேரம் ஒதுக்கி முயற்சி செய்யுங்கள். குர்ஆன், ஹதீஸ் தாராளமாகவே விளங்கும். குர்ஆன், ஹதீஸ் விளங்காது என்று கூறி உங்களை ஏமாற்றி வருவது அவர்களின் சுயநலம் கருதியே அவ்வாறு சொல்லுகின்றனர்.

சாதாரண மக்களால் விளங்க முடியாத மார்க்கத்தை அல்லாஹ் மக்களுக்குத் தரவில்லை. எளிதில் புரியும் மார்க்கத்தையே தந்துள்ளான். அதன் ரவும் பகலைப் போன்று வெட்ட வெளிச்சமானது. தேவை உங்கள் முயற்சி மட்டுமே.உள்ளத் துணிச்சலோடு நேரடியாக குர்ஆன், ஹதீஸ் மொழி பெயர்ப்புகளை பாருங்கள். அவை உங்களோடு பேசும். உங்களுக்கு நேரிய வழியைக் காட்டும். இந்த முயற்சி நல்ல பலனைத்தரும். முஸ்லிம்களை சுய சிந்தனையாளர்களாக மாற்றும் என்பதை நீங்கள் அனுபவத்தின் மூலம் அறிந்து ஏக இறைவனுக்கு நன்றி செலுத்துவீர்கள்.

உங்கள் நன்பர்களுக்கு அறிமுகப்படுத்த