நிச்சயமாக அவர்களுக்கு,
அவர்களுடைய தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளுடன் வந்து
கொண்டுதாமிருந்தனர், ஆனால் அப்போது அவர்களோ, (நம் போன்ற) ஒரு
மனிதரா நமக்கு நேர்வழி காட்டுவார்?" என்று கூறி (அவர்களைப்
பின்பற்றுவதை) நிராகரித்துப் பின் வாங்கிக் கொண்டார்கள்,
64-6
நீங்களும் எங்களைப் போன்ற
மனிதர்களேயன்றி வேறல்லர்; அர்ரஹ்மான் (உங்களுக்கு) எதனையும்
இறக்கி வைக்கவில்லை. நீங்கள் பொய்யே கூறுகிறீர்களேயன்றி
வேறில்லை" என்று கூறினார்கள். 36-15
(நூஹ் (அலை) அவர்களின்)
சமூகத்தாரில் காஃபிர்களாய் இருந்த தலைவர்கள்; "இவர் உங்களைப்
போன்ற மனிதரேயன்றி வேறில்லை இவர் உங்களை விட சிறப்புப் பெற
விரும்புகிறார்; மேலும், அல்லாஹ் நாடியிருந்தால் அவன்
மலக்குகளை(த் தூதர்களாக) அனுப்பியிருப்பான். முன்னிருந்த நம்
மூதாதையரிடம் இ(த்தகைய விஷயத்)தை நாம் கேள்விப்பட்டதேயில்லை"
என்று கூறினார்கள். 23-24
அவருடைய சமூகத்தாரில்
காஃபிர்களாய் இருந்த தலைவர்களும் இன்னும் இறுதி தீர்ப்பு நாளை
சந்திப்பதைப் பொய்ப்படுத்த முற்பட்டார்களே அவர்களும், நாம்
அவர்களுக்கு இவ்வுலக வாழ்க்கையில் விசாலமான (சகானுபவங்களைக்)
கொடுத்திருந்தோமே அவர்களும், (தம் சமூகத்தாரிடம்) "இவர்
உங்களைப் போன்ற ஒரு மனிதரேயன்றி வேறில்லை நீங்கள் உண்பதையே
அவரும் உண்கிறார்; நீங்கள் குடிப்பதையே அவரும் குடிக்கிறார்.
எனவே உங்களைப் போன்ற ஒரு மனிதருக்கு நீங்கள் கட்டுப்பட்டால்
நிச்சயமாக நீங்கள் நஷ்டவாளிகளே! (என்று கூறினார்கள்.)
23-33,34
(ஸாலிஹ் (அலை) சமூகத்தவர்களின்
கூற்று) நீரும் எங்களைப் போன்ற ஒரு மனிதரேயன்றி (வேறு) இல்லை
எனவே, நீர் உண்மை சொல்பவராக இருந்தால் ஓர் அத்தாட்சியைக்
கொண்டு வாரும்" (என்றனர்). 26-153
"நிச்சயமாக அவருக்கு கற்றுக்
கொடுப்பவன் ஒரு மனிதனே, (இறைவனல்லன்)" என்று அவர்கள் கூறுவதை
திடமாக நாம் அறிவோம்; 16-103
என் இறைவன் மிகத் தூயவன், நான்
(இறைவனுடைய) தூதனாகிய ஒரு மனிதனே தவிர வேறெதுவுமாக
இருக்கின்றேனா?" என்று (நபியே! நீர் பதில்) கூறுவீராக. 17-93
(நபியே!) நீர் சொல்வீராக
"நிச்சயமாக நான் உங்களைப் போன்ற ஒரு மனிதனே! நிச்சயமாக
உங்களுடைய நாயன் ஒரே நாயன்தான் என்று எனக்கு வஹீ
அறிவிக்கப்பட்டிருக்கிறது. 18-110
உங்கள் நன்பர்களுக்கு அறிமுகப்படுத்த/font>
