![]()
2. தக்வாவின் சிறப்பம்சம் என்ன?
4. மாற்று மதத்தவர்கள் நமக்கு ஸலாம் கூறினால் நாம் பதில் ஸலாம் கூறலாமா?
5. நான் நேர்ச்சை செய்து கொண்டேன் அதனை நான் நிறைவேற்றலாமா?
6. அல்லாஹ்வுக்காக ஒரு முஸ்லிமை வெறுத்து ஒதுக்கலாமா?
7. திருஷ்டிக்காக அல்லது கைகால் வலி நீங்குவதற்காக ஓதி முடிச்ச கருப்புக்கயிறை கட்டிக்கொள்ளலாமா?
9. பெண்கள் தங்கள் முகத்தையும் மறைத்தாக வேண்டுமா?
10. காதணிகள் அணியக்கூடாது என்று சிலர் கூறுகிறார்களே சரியா?
|
|
|
|
|
|
|
"தக்வா" என்பது பயபக்தி, இறை உணர்வு, பாவ தடுப்பு சக்தி முதலியவற்றைத் தன்னகத்தே கொண்டுள்ளதோர் சிறப்புத் தன்மையாகும். தக்வாவுடன் செய்யப்படும் அமலுக்குத்தான் அல்லாஹ்விடம் அங்கீகாரம் உள்ளது. அல்லாஹ் (அமல்களை) ஏற்றுக் கொள்வதெல்லாம் "தக்வா" பயபக்தி இறை உணர்வு உள்ளவர்களிடமிருந்து தான் (5:27) என்று குர்ஆன் கூறுகிறது. ஆகவே நாம் செய்யும் ஒவ்வொரு அமலிலும் தக்வா இருந்தாக வேண்டும். இல்லையேல் அதன் பலனை அடையும் வாய்ப்பினை இழக்க நேரிடும். ஓர் அடியான் பாவமில்லாதவற்றையும் அவை பாவமாக இருந்து விடுமோ என்று பயந்து அவற்றை விட்டொழிக்கும் வரை "முத்தக்கீன்" பயபக்தியாளர்- இறை உணர்வுமிக்கவர் என்ற உயர் நிலையை தான் அடைந்து கொள்ள முடியாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அத்திய்யத்துஸ்ஸஃதீ(ரழி) திர்மிதீ, இப்னுமாஜ்ஜா)
"தக்வா" ஒருவருடைய உள்ளத்தில் ஏற்பட்டு விட்டால் அவர் சதா காலமும் தான் அல்லாஹ்வின் முன்னிலையில் இருப்பதான
உணர்வு அவருக்கு உண்டாகி விடுகிறது. அதன் காரணமாக அவர் தாம் செய்யும் ஒவ்வொரு காரியத்தையும் அது பாவமாக
இருந்துவிடக் கூடாது என்று மிகவும் எச்சரிக்கையாக இருந்து கொள்வார். அல்லாஹ்
மிக அறிந்தவன். |
|
|
|
|
|
உங்களில் எவரும் மரணத்தை ஆசிக்க வேண்டாம். நல்லவராயிருப்பினும் அவர் நற்காரியத்தை அதிகம் தேடிக்கொள்ளும் வாய்ப்பிருக்கிறது. தீயவராயிருப்பின் அல்லாஹ்விடம் 'தவ்பா' செய்து அவனது பொருத்தத்தை அடைய ஏதுவிருக்கிறது என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அபூஹுரைரா(ரலி), புகாரி உங்களில் எவரும் தமக்கு ஏற்பட்டுள்ள கஷ்டத்தின் காரணமாக ஆசிக்க வேண்டாம். அவ்வாறு நிர்ப்பந்த நிலை ஏற்ப்பட்டு கேட்க வேண்டுமாயின் பின்வருமாறு கேட்பாராக! யாஅல்லாஹ்! எனக்கு வாழ்க்கை சிறப்புடையதாயிருக்கும் வரை என்னை வாழச் செய்வாயாக! என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அனஸ்(ரலி), புகாரி, முஸ்லிம்)
ஆகவே மேற்காணும்
ஹதீதுகளின் அடிப்படையில் மரணத்தை ஆசிப்பது தவறு என்பதை அறிகிறோம். ஆகையால் மரணம்
வருவதை எதிர்பார்த்துக்கொண்டு அதற்காக முற்கூட்டியே நல்ல அமல்கள் செய்து கொள்வது
வரவேற்புக்குரியதாகும். |
|
|
|
|
நேர்ச்சை செய்வதற்கு மார்க்கத்தில்
அனுமதியுள்ளது. அவை மார்க்கம் அனுமதித்த வகையில் இருக்க
வேண்டும். மார்க்கம் அனுமதிக்காத வழிகளில் நேர்ச்சை செய்திருந்தால் அதை நிறை வேற்றத்
தேவையில்லை. |
|
|
|
|
வேதமுடையோர் உங்களுக்கு சலாம்
கூறினால் 'வ அலைக்கும்' என்று கூறுங்கள். என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அனஸ்(ரலி) அறிவிக்கிறார்கள்.
இது புகாரியில் இடம்பெற்ற ஹதீஸாகும். இந்த ஹதீஸை வைத்து முஸ்லிமல்லாதர்வர்கள் ஸலாம்
கூறினால் 'அலைக்கும்' என்று மட்டுமே கூறவேண்டும் என்கிறார்கள். |
|
|
|
|
எவர் அல்லாஹ்வுக்காக நேசித்து, அல்லாஹ்வுக்காக வெறுத்து, அல்லாஹ்வுக்காக கொடுத்து, அல்லாஹ்வுக்காக கொடுக்க மறுத்து விடுகிறாரோ அவர் ஈமானை நிறைவு செய்து விட்டார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அபூ உமாமா(ரலி), அபூதாவூத், திர்மிதீ மேற்கானும் ஹதீஸின்படி ஒரு முஸ்லிமை, வெறுப்பதும், அவருக்கு எதுவும் கொடுக்காமல் இருப்பதும் சரி என்பதாக தெரிந்தாலும், தொடர்ந்து இந்த நிலை நீடிப்பதை நபி(ஸல்) அவர்களின் கீழ்காணும் ஹதீஸ் தடை செய்கிறது. ஒருவர் தனது சகோதரரை மூன்று தினங்களுக்கு அதிகமாக வெறுத்திருப்பது முறையாகாது. இருவரும் சந்தித்துக் கொள்ளும்போது இவரை விட்டு அவரும், அவரை விட்டு இவரும் முகம் திருப்பிக் கொள்கின்றனர். இவ்விருவரில் சிறந்தவர் (மற்றவருக்கு) ஸலாம் கூற முந்துபவரேயாவர் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூ அய்யூபுல் அன்ஸாரி (ரலி), புகாரி, முஸ்லிம் அல்லாஹ் மிக அறிந்தவன்.
|
|
|
|
|
திருஷ்டிக்காக அல்லது கைகால் வலி நீங்குவதற்காக ஓது முடிச்ச கருப்புக்கயிற்றை கட்டிக்கொள்ள மார்க்கத்தில் அனுமதியில்லை. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்(ரலி) அவர்களின் துணைவியார் ஜைனபு(ரலி) அவர்கள் கூறுகிறார்கள். ஒரு முறை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்(ரலி) அவர்கள் எனது கழுத்தில் ஓர் கயிற்றை கண்டு இது என்ன? என்றார்கள். இது எனக்காக மந்திரித்த கயிறு என்றேன். உடனே அவர்கள் அதைப்பிடித்து அறுத்துவிட்டு, நீங்கள் அப்துல்லாஹ் (வாகிய என்னுடைய) குடும்பத்தார் ஷிர்க்கை விட்டும் வெகு தூரத்திலுள்ளவர்கள். நிச்சயமாக மந்திரமும், திருஷ்டிக்காக மந்திரித்த கயிறும், சூனியம் செய்தல் ஆகியவை அனைத்தும் ஷிர்க்கு என்று நபி(ஸல்) அவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன் என்றார்கள்....(அபூதாவூத்) மேற்காணும் ஹதீஸிலிருந்து குணத்தை நாடி உடம்பில் கறுப்பு கயிற்றை மந்திரித்து கட்டுவதெல்லாம் இஸ்லாத்திற்கு புறம்பானதாகும். அல்லாஹ் மிக அறிந்தவன். |
|
|
|
|
|
மெளலூது தவறெனில் குர்ஆன் ஓதி ஹதியா செய்வதின் மூலம் அன்பை காட்டலாமா? எனக் கேட்கிறீர்கள். நபி(ஸல்) அவர்கள் மீது அளவு கடந்த அன்பைக் காட்ட அவர்கள் காட்டித் தந்த வழிமுறைதான் நல்லது. தனக்கு குர்ஆன் ஓதி ஹதியா செய்யும்படி அவர்கள் நமக்கு ஏவவில்லை. நபி(ஸல்) அவர்களின் மரணத்திற்குப்பின் எந்த நபித்தோழரும் குர்ஆன் ஓதி அவர்கள் ஹதியா செய்ததாக ஆதாரமும் அறவேயில்லை. ஆனால் நாம் குர்ஆன் ஓதினால் நாம் ஹதியா செய்யாமலே நமக்குறிய நன்மைகள் குறைக்கபடாமல் நபி(ஸல்) அவர்களுக்கும் நன்மை சென்றடைகிறது. நபி(ஸல்) அவர்கள் மூலம் நாம் குர்ஆனைப் பெற்றோம். அவர்கள் மூலம் நேர்வழியான இஸ்லாத்தை பெற்றோம். எனவே எந்த ஒரு நன்மையான செயலை வாழையடி வாழையாக செய்ய வைத்தார்களோ, அவர்களுக்கு அந்த நன்மையின் பங்கு சேர்ந்து கொண்டேயிருக்கும். எனவே நாம் குர்ஆன் ஓதினால் அதை ஹதியா செய்யாமலேயே அவர்களுக்கு நன்மை கிட்டும். நிச்சயமாக அல்லாஹ்வும், அவனது வானவர்களும் நபியின் மீது ஸலவாத்துச் சொல்கிறார்கள். (எனவே) விசுவாசிகளே! நீங்களும் அவர்மீது ஸலவாத்துச் சொல்லி சலாமும் பகருங்கள். (அல்குர்ஆன் 33:56) இந்த வசனத்தில் விசுவாசிகளை அழைத்து நபியின் மீது ஸலவாத்து சொல்ல ஆணையிடுகிறான். நபியின் மீது அதிகமாக ஸலவாத்து சொல்லுவது அவர்மீதுள்ள அளவு கடந்த அன்பை வெளிப்படுத்தும் செயலாகும். நபி(ஸல்) அவர்கள் காட்டித் தந்தபடிதான் செயல்பட வேண்டும். அவர்கள் விலக்கியதை நாமும் விலக்க வேண்டும். இப்படி இஸ்லாத்தின் ஏவல் விலக்கின்படி நிறைவேற்றுவதுதான் நபி(ஸல்) அவர்கள் மீது நாம் காட்டும் அளவற்ற அன்பு ஆகும்.எவ்வித சடங்குகளுமின்றி ஏழை எளியவருக்கு உணவளிப்பதை இஸ்லாம் வரவேற்கிறது. அல்லாஹ் மிக அறிந்தவன். |
|
|
|
|
|
(நபியே!) மூமினான பெண்களுக்கு நீர் கூறுவீராக! அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். தங்கள் வெட்கத்தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும். தங்கள் அழகையும் (ஆடை ஆபரணம் போன்ற) அலங்காரத்தையும் அதனின்று (சாதரணமாக வெளியில்) தெரியக்கூடியதைத் தவிர வேறு எதையும் வெளிக்காட்டலாகாது. இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்பை மறைத்துக் கொள்ள வேண்டும். (அல்குர்ஆன் 24:31) ஒருமுறை அபூபக்ரு(ரழி) அவர்களின் மகள் அஸ்மா(ரழி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடத்தில் தன்மீது ஓர் மெல்லிய ஆடை அணிந்த நிலையில் வந்தார்கள். அப்போது நபி(ஸல்) தமது முகத்தை திருப்பிக்கொண்டு அஸ்மாவே! ஒரு பெண் பருவம் அடைந்துவிட்டால் இதுவும், இதுவும் நீங்குதலாக என்று தமது முகத்தையும், மணிக்கட்டு வரையுள்ள கையையும் சமிக்கை செய்து காட்டி வேறு பகுதிகளைப் பிறர் பர்ப்பது கூடாது என்று கூறினார்கள் (அஸ்மா(ரழி), அபூதாவூத்) மேற்காணும் வசனத்தையும், ஹதீஸையும் முன்வைத்து ஒரு பெண் தனது முகத்தையும், மணிக்கட்டு வரைத் தனது இரு கைகளையும் தவிர மற்ற பாகங்கள் அனைத்தையும் மறைத்தாக வேண்டும் என்பதை அறிகிறோம். அல்லாஹ் மிக அறிந்தவன். |
|
|
|
ஒரு முறை இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் நபி(ஸல்) ஆவர்களுடன் நீங்கள் பெருநாளில் இருந்துள்ளீர்களா? என்று கேட்கப்பட்டது. அப்போது அவர்கள் 'ஆம்' என்று கூறிவிட்டு நபி(ஸல்) அவர்கள் பெருநாளன்று புறப்பட்டு (பெருநாள் தொழுகையை) தொழுதார்கள். பின்னர் குத்பா - பிரசங்கம் செய்தார்கள். ஆனால் பாங்கு, இகாமத், எதுவும் சொல்லவில்லை. பின்னர் பெண்கள் பகுதிக்கு வந்து அவர்களுக்கு உபதேசம் செய்துவிட்டு அவர்களை ஸதகா தர்மம் செய்யும்படி ஏவினார்கள். அப்போது அப்பெண்கள் தமது காதுகளிலும், கழுத்துகளிலும் உள்ளவற்றைக் குனிந்து கழற்றி பிலால்(ரலி) அவர்களிடம் கொடுத்தார்கள். பிறகு அவர்களும் பிலால்(ரலி) அவர்களும் அவர்களின் வீட்டுக்கு எடுத்துச் சென்று விட்டார்கள். (இப்னு அப்பாஸ்(ரலி) புகாரீ, முஸ்லிம்) புகாரியின் அறிவிப்பில் அப்பெண்கள் தமது காது வாலிகளையும் மோதிரங்களையும் கழற்றி கொடுத்தார்கள் என்பதாக உள்ளது. ஆகவே மேற்காணும் ஸஹீஹான ஹதீஸ்களில் சஹாபா பெண்கள் தமது காதுகளை குத்தி வாலி போட்டிருந்தார்கள் என்பதை அறிகிறோம். இதனை அடிப்படையாகக் கொண்டு காதணிகள் அணிபவர்களை நாம் தடை செய்ய முடியாது என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது. அல்லாஹ் மிக அறிந்தவன். |