<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title></title>
	<atom:link href="http://www.readislam.net/portal/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>http://www.readislam.net/portal</link>
	<description>இஸ்லாமிய இணையத்தளம்</description>
	<lastBuildDate>Wed, 22 Feb 2012 11:13:08 +0000</lastBuildDate>
	<language>en</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	<generator>http://wordpress.org/?v=3.3.1</generator>
		<item>
		<title>கலாச்சார சீரழிவு!</title>
		<link>http://www.readislam.net/portal/archives/4336</link>
		<comments>http://www.readislam.net/portal/archives/4336#comments</comments>
		<pubDate>Wed, 22 Feb 2012 02:03:46 +0000</pubDate>
		<dc:creator>ReadIslam.net</dc:creator>
				<category><![CDATA[சமூகம்]]></category>

		<guid isPermaLink="false">http://www.readislam.net/portal/?p=4336</guid>
		<description><![CDATA[காதலில் கள்ளக் காதல் என்ன? நல்ல காதல் என்ன? எல்லாக் கண்றாவியும் ஒன்றுதான். காதல் மயக்கத்தில் விழுந்த ஆணோ பெண்ணோ யாராக இருந்தாலும், அந்தப் போதை தெளியும்வரை நிஜத்தை நிமிர்ந்து பார்ப்பதே இல்லை. தன்னை மறந்து, தன்னைப் பெற்றவர்களை மறந்து, உற்றாரையும் உறவினரையும் மறந்து, சமுதாயத்தை மறந்து, சமயத்தை மறந்து&#8230; இப்படி எதார்த்தங்கள் அனைத்தையும் மறந்துவிட்டு, அந்தச்&#8230; சுகம் ஒன்றே இலட்சியம் என்று கிறுக்குப் பிடித்து அலையும் காதல் மோகம் தேவைதானா? அல்லது கையிலிருக்கும் காசையும் கழுத்திலிருக்கும் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><a class="post_image_link" href="http://www.readislam.net/portal/archives/4336" title="Permanent link to கலாச்சார சீரழிவு!"><img class="post_image alignright remove_bottom_margin" src="" width="260" height="194" alt="Post image for கலாச்சார சீரழிவு!" /></a>
</p><p style="text-align: justify;">காதலில் கள்ளக் காதல் என்ன? நல்ல காதல் என்ன? எல்லாக் கண்றாவியும் ஒன்றுதான். காதல் மயக்கத்தில் விழுந்த ஆணோ பெண்ணோ யாராக இருந்தாலும், அந்தப் போதை தெளியும்வரை நிஜத்தை நிமிர்ந்து பார்ப்பதே இல்லை. தன்னை மறந்து, தன்னைப் பெற்றவர்களை மறந்து, உற்றாரையும் உறவினரையும் மறந்து, சமுதாயத்தை மறந்து, சமயத்தை மறந்து&#8230; இப்படி எதார்த்தங்கள் அனைத்தையும் மறந்துவிட்டு, அந்தச்&#8230; சுகம் ஒன்றே இலட்சியம் என்று கிறுக்குப் பிடித்து அலையும் காதல் மோகம் தேவைதானா?</p>
<p style="text-align: justify;">அல்லது கையிலிருக்கும் காசையும் கழுத்திலிருக்கும் நகையையும் பறித்துக்கொண்டு, கற்பையும் சூறையாடிவிட்டு அந்தக் காமுகன் ஓடிப்போகும்வரை சுற்றுச்சூழலையே மறந்துகிடந்தவள் நடுத்தெருவில் நிர்க்கதியாகக் கைவிடப்படுகிறாளே அந்தப் பேதைக்கு இக்கதி தேவைதானா?</p>
<p style="text-align: justify;">அல்லது வங்கி இருப்பெல்லாம் இல்லாமலாகி, கையிலிருந்த கடிகாரமும் அலைபேசியும்கூட மார்வாடி கடைக்குப் போனபின்பும் அந்தக் காமுகியின் கோரப்பசி அடங்காமல், உடுத்திய வேட்டி மட்டுமே அந்த முட்டாள் பையனிடம் எஞ்சியிருக்கும் நிலையில், இனி உன்னை நம்பிப் பயனில்லை என்று கை கழுவிவிட்டு வேறொரு ஏமாளியைத் தேடி அந்த விலைமாது ஓடுகிறாளே, அவனுக்கு இந்த அவலம் தேவைதானா?</p>
<p style="text-align: justify;">அல்லது இருவரும் இணைந்து சில ஆண்டுகள் ஆனந்தமாக வாழ்ந்து, குழந்தைகளையும் பெற்றுக்கொண்டுவிட்டு, பண நெருக்கடியோ மன நெருக்கடியோ ஏற்படும்போது, உன்னை நம்பி நான் வந்தேனே! என்று ஒருவருக்கொருவர் பரஸ்பரம் நொந்துகொண்டு, தற்கொலையில் அல்லது மணமுறிவில் போய் நிற்குமே! இந்தக் காதல் இருவருக்கும் தேவைதானா?</p>
<p style="text-align: justify;">ஆய்வின் முடிவு<br />
இதை நாம் வாதத்திற்காகவோ வருத்தத்திற்காகவோ குறிப்பிடவில்லை. ஆய்வின் முடிவு இதுதான்:</p>
<p style="text-align: justify;">ஹெலன் ஃபிஷர் என்ற மேற்கத்திய ஆராய்ச்சியாளர் ஒருவர், காதலர்களின் மூளையை ஸ்கேன் செய்து பார்த்தாராம்! 1. காமம் 2. உணர்வுபூர்வமான காதல் 3. நீண்டகாலப் பிணைப்பை முன்னிருத்தும் காதல் ஆகிய மூன்று வகையான உணர்வுகள் இருப்பதைக் கண்டறிந்தார்.</p>
<p style="text-align: justify;">இவற்றில் காமம்தான் முதலிடத்தைப் பெற்றது. இரண்டாவது இடம் உணர்வுபூர்வமான காதலுக்கு. மிகமிகக் குறைவாகவே நீண்டகாலப் பிணைப்பை முன்னிருத்தும் காதல் மூளையில் தென்பட்டதாம்!<br />
இப்போது சொல்லுங்கள்! காதல் என்ற பெயரில் காமம்தானே விளையாடுகிறது! இதில் போலி எது? அசல் எது என்பதை அவனோ அவளோ எப்படிப் பகுத்தறிய முடியும்?</p>
<p style="text-align: justify;">அண்ணன் – தங்கையாகத்தான் பழகுகிறோம் என்று சொல்லிக்கொண்டு, இளம்பெண்ணின் தாயார் தன் கரத்தால் அன்போடு சமைத்துப்போட்டதையெல்லாம் பல நாட்கள் ருசித்துவந்த ஐந்து மாணவர்கள், ஒருநாள் அவளுக்குக் குளிர்பானத்தில் மதுவைக் கலந்துகொடுத்து, இரவு முழுக்க அந்த ஐந்து நாய்களும் கடித்துக் குதறிய சம்பவம் சென்னை மட்டுமன்றி, தமிழகத்தையே உலுக்கி எடுத்ததே! அவர்களில் சிவானந்தம் (19) என்பவன் பல ஆண்டுகளாக அவளைக் காதலித்தவனாம்!</p>
<p style="text-align: justify;">இது காதலா? காம வெறியா? அதையும் தாண்டி, மற்றவனுக்குக் கூட்டிக்கொடுக்கும் ஈனத்தனமில்லையா இது?</p>
<p style="text-align: justify;">அது மட்டுல்ல; மணவிலக்கு (டைவர்ஸ்) கோருவோரில் கணிசமான எண்ணிக்கையினர் காதல் திருமணம் செய்துகொண்டவர்களே என்பதும் ஆய்வின் முடிவாகும்.</p>
<p style="text-align: justify;">எதையோ எதிர்பார்த்து கண்ணும் கண்ணும் உரையாடுகின்றன. எதிர்பார்ப்பு பூர்த்தியாகிவிட்ட பிறகு, அல்லது ஏமாற்றம் ஏற்பட்ட பிறகு அதே கண்கள் உரையாடாவிட்டாலும், சாதாரணமாகப் பார்த்துக்கொள்வதுகூட இல்லை. மறுக்க முடியுமா?</p>
<p style="text-align: justify;">கலாச்சார சீரழிவு<br />
கற்பும் காசும் பறிபோவதோடு காதல் போதை தெளிகிறதா என்றால், மார்க்கம் தாண்டிப்போய் ஓர் இறைமறுப்பாளனின் வாரிசை சமுதாயப் பெண்ணொருத்தி சுமக்கின்ற தாங்க முடியாத கொடுமையும் அல்லவா அரங்கேறிக்கொண்டிருக்கிறது! அல்லது ஒரு முஸ்லிமின் வாரிசு இறைமறுப்பாளியின் வயிற்றில் உருவாகி, அவள் மடியில் தவழ்கிறதே! என்ன சொல்ல?</p>
<p style="text-align: justify;">பள்ளிவாசலுக்கு வந்திருப்பானோ வரவில்லையோ! ஓரிறைக் கோட்பாட்டை இதுவரை கைவிட்டிருக்கமாட்டான் அல்லவா? இன்று அவன் சர்ச்சில் அல்லது கோயிலில் காதலியுடன் வழிபாடு செய்கிறான். அல்லது நீ நீயாக இரு; நான் நானாக இருக்கிறேன் என்று சமத்துவம் பேசிக்கொண்டு, குழந்தைகளை நரகத்தில் தள்ளுகின்றான்.</p>
<blockquote>
<p style="text-align: justify;"><strong>திருக்குர்ஆன் என்ன சொல்கிறது தெரியுமா?</strong><br />
<strong> இணைகற்பிக்கும் பெண்கள் (ஏக)இறைநம்பிக்கை கொள்ளாத வரை, அவர்களை நீங்கள் மணக்காதீர்கள். இணைவைப்பவள் உங்களை (எவ்வளவுதான்) கவர்ந்தாலும், அவளைவிட இறைநம்பிக்கை கொண்ட ஓர் அடிமைப் பெண்ணே சிறந்தவள்.</strong></p>
<p style="text-align: justify;"><strong>(அவ்வாறே,) இணைகற்பிக்கும் ஆண்கள் (ஏக)இறைநம்பிக்கை கொள்ளாத வரை, அவர்களுக்கு (உங்கள் பெண்களை) மணமுடித்துக் கொடுக்காதீர்கள். இணைவைப்பாளன் உங்களை (எவ்வளவுதான்) கவர்ந்தாலும், அவனைவிட இறைநம்பிக்கை கொண்ட ஓர் அடிமையே சிறந்தவன். அவர்கள் (உங்களை) நரகத்திற்கு அழைக்கிறார்கள். ஆனால், அல்லாஹ்வோ தனது ஆணையின்பேரில் சொர்க்கத்திற்கும் பாவமன்னிப்பிற்கும் அழைக்கிறான். (2:221)</strong></p>
</blockquote>
<p style="text-align: justify;">இன்று முஸ்லிம் சமுதாயம் சந்தித்துவரும் இழிவு நிலைக்கு எவ்வளவு பொருத்தமான, அழுத்தமான திருவசனம் பார்த்தீர்களா? பெற்றோர்களே! கையில் விளக்கைப் பிடித்துக்கொண்டே, நரகம் என்று தெளிவாகத் தெரிந்துகொண்டே உங்கள் கண்மணிகள் அதில்போய் விழுந்துகொண்டிருக்கிறார்களே! உங்களுக்கு எப்படி தூக்கம் வருகிறது? சோறு இறங்குகிறது? மானம், சூடு, சுரணை என்பதெல்லாம் உங்கள் சமுதாயத்திற்குக் கொஞ்சம்கூட இல்லையா என்று கேட்கும் மாற்றுமத நண்பர்களுக்கு என்ன பதில் சொல்வது?</p>
<p style="text-align: justify;">மதம்விட்டு மதம்மாறி காதல் செய்வதற்கும் திருமணம் செய்வதற்கும் முஸ்லிம் பெற்றோர்களே சம்மதம் தெரிவிக்கும் அடுத்த கட்டத்திற்கு சமுதாயம் போய்விட்டதாகத் தெரிகிறது.</p>
<p style="text-align: justify;">அண்மையில் சில திருமண அழைப்பிதழ்கள் பார்வைக்கு வந்தன. இரண்டிலும் மணமகன் முஸ்லிமல்லாதவன். மணமகள் முஸ்லிம் பெண். அவரவர் தத்தம் பெற்றோர் பெயர்களையும் ‘அவ்வண்ணமே கோரும்’ இடத்தில் முஸ்லிம் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பெயர்களையும் கூச்சமின்றி குறிப்பிட்டிருக்கிறார்கள். பெற்றோர், உற்றார் உறவினர் இசைவின்றி இது நடக்குமா? சமுதாயம் எங்கே போய்க்கொண்டிருக்கிறது?</p>
<blockquote>
<p style="text-align: justify;"><strong>மறுமை நாளின் அடையாளம்</strong><br />
<strong>அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (பயனுள்ள) கல்வி அகற்றப்படுவதும் அறியாமை நிலைப்படுவதும் மது (மலிவாக) அருந்தப்படுவதும் விபசாரம் வெளிப்படையாக நடப்பதும், மறுமை நாளின் அடையாளங்களில் அடங்கும். (ஸஹீஹுல் புகாரீ – 80)</strong></p>
</blockquote>
<p style="text-align: justify;">அண்மையில் ஒரு செய்தி படித்தேன்: காஞ்சிபுரம், திருவள்ளூர், தூத்துக்குடி போன்ற நகரங்களில் தொழில் வளர்ச்சி சிறப்பாக இருந்தாலும் அங்குள்ள மக்களின் வறுமை விகிதம் குறையவில்லை. காவிரி டெல்டா மாவட்டங்களான நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் வறுமையின் அளவு குறைவாக இருக்கிறது. இதற்குக் காரணம் விவசாயம். அங்கு விவசாயத் தொழில் பரவலாகவும் பாரம்பரியமாகவும் நடைபெறுவதால் பொதுமக்கள் பசி பட்டினியின்றி வாழ முடிகிறது.</p>
<p style="text-align: justify;">நாகப்பட்டினம் மாவட்டத்தில் தனிநபர் ஆண்டு வருவாய் ரூ. 2,576 ஆக இருக்கிறது. தனிநபர் வருவாய் குறைவாக இருந்தாலும் அங்கு வறுமையின் விழுக்காடு 10.9 மட்டுமே. திருவாரூர் மாவட்டத்தில் தனிநபர் ஆண்டு வருவாய் ரூ. 2,341; ஆனால், வறுமை 16.6 விழுக்காடு மட்டுமே.</p>
<p style="text-align: justify;">முஸ்லிம்களைப் பொறுத்தவரை பழைய ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் வேளாண்மை நிலங்களை விற்றுவிட்டு, வெளிநாடுகளுக்கு ஆண்கள் படையெடுத்துவிட்டனர். ஒரு சில முஸ்லிம்களிடம் மட்டுமே விவசாய நிலங்கள் உள்ளன. வெளிநாட்டு வாசல் ஒருநாள் அடைக்கப்பட்டால், நமது நிலை என்னவாகும் என்பதைச் சிந்திக்காமல், நிலங்களை விற்றுவிட்டு வெளிநாடுகளுக்குப் போய்விட்டார்கள்.</p>
<p style="text-align: justify;">அயலகங்களில் ஆண்கள் பல மாதங்கள், சில வேளைகளில் பல ஆண்டுகள் தங்கிவிடும்போது உள்ளூரிலே பெண்கள் இயற்கையான உறவுகளுக்கு ஏங்குகிறார்கள். ஆட்டோ ஓட்டுநர், கார் ஓட்டுநர், பால்காரன், கேபிள் டி.வி. ஆபரட்டர், பொருட்கள் விற்க வருபவன், வங்கி ஊழியன், உறவுக்காரன் எனப் பல வகையான ஆண்களுடன் பேசுவதற்கும் பழகுவதற்குமான சந்தர்ப்பங்கள் வாய்க்கின்றன.</p>
<blockquote>
<p style="text-align: justify;"><strong>“ஓர் ஆண் (அந்நியப்) பெண்ணுடன் தனிமையில் இருக்க வேண்டாம்! அங்கு மூன்றாவது ஆளாக ஷைத்தான் இருப்பான்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்துள்ளார்கள். (அபூதாவூத்)</strong></p>
</blockquote>
<p style="text-align: justify;">நபியவர்களின் எச்சரிக்கை பல ஊர்களில் உண்மையாகிவருகிறது. அங்கெல்லாம் ஷைத்தானின் கொடி பறக்கிறது. அக்கொடியின் நிழலில் கற்பு பறிபோகிறது.</p>
<blockquote>
<p style="text-align: justify;"><strong>கண்ணின் விபசாரம் பார்வை; நாவின் விபசாரம் பேச்சு; மனமோ ஆசைப்படுகிறது; இச்சிக்கிறது. உறுப்பு அதை மெய்ப்பிக்கிறது; அல்லது (விலகி) பொய்யாக்கிவிடுகிறது. என்பதும் நபிமொழிதான் (ஸஹீஹுல் புகாரீ – 6243).</strong></p>
</blockquote>
<p style="text-align: justify;">பார்வைக்கும் பேச்சுக்கும் ஏன் கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது என்பது இப்போது தெரிகிறதா?<br />
இதுவெல்லாம் ஒருபுறம் இருக்க, சொகுசு வாழ்க்கைக்குப் பழக்கப்பட்டுவிடும் பெண்கள், தம் வீட்டு ஆண்கள் அனுப்பிவைக்கும் பணம் போதவில்லை என்று சொல்லி, கொடும் பாவத்தை ஒரு தொழிலாகவே செய்யும் துணிச்சல் பெற்றுவிட்டார்கள் என்பதுதான் கொடுமையிலும் கொடுமை.</p>
<p style="text-align: justify;">தாயே மகளை அனுப்பிவைப்பதையும் மாமியாரே மருமகளை வண்டியில் ஏற்றிவிடுவதையும் உங்களால் நம்ப முடிகிறதா? என்னால் நம்ப முடியவில்லை. பிறகு தாய்மைக்குத்தான் என்ன அர்த்தம்? குடும்பத் தலைவி என்பதற்குத்தான் என்ன பொருள்?</p>
<blockquote>
<p style="text-align: justify;"><strong>தீக்குண்டத்தில் நிர்வாணமாக</strong><br />
<strong> நபி (ஸல்) அவர்கள், தாம் நரகத்தில் கண்ட காட்சிகளை விவரித்தார்கள்; அப்போது பின்வருமாறு கூறினார்கள்:</strong><br />
<strong> அடுப்பு போன்ற ஒரு பொந்து. அதன் மேற்பாகம் குறுகலாகவும் அடிப்பாகம் விசாலமானதாகவும் இருந்தது. அதற்குக் கீழ் தீ எரிந்துகொண்டிருந்தது. தீ அதிகமாகும்போது அந்தப் பொந்தின் அடியில் உள்ளவர்கள் வெளியேற முயன்றார்கள். (ஆனால், மேற்பகுதி குறுகலாகயிருந்ததால் வெளியேற முடியவில்லை.)</strong></p>
<p style="text-align: justify;"><strong>தீ அணைந்ததும் பழைய (கீழ்ப்) பகுதிக்கு அவர்கள் வந்துவிட்டார்கள். அதில் ஆண்களும் பெண்களும் நிர்வாணமாகக் கிடந்தார்கள். நான், “இவர்கள் யார்?” என்று கேட்டேன். வானவர்கள், “இவர்கள்தான் விபசாரத்தில் ஈடுபட்டவர்கள்” என்று சொன்னார்கள். (ஸஹீஹுல் புகாரீ – 1386)</strong></p>
</blockquote>
<p style="text-align: justify;">அழகான பெண்கள் வசிக்கும் பகுதியில் வடநாட்டுக் கும்பல் கடைகளைத் திறப்பார்கள். அடகு கடை, நகைக் கடை, துணிக்கடை போன்ற வணிகத் தலங்களைத் திறந்து, மறைமுகமாக விபசாரத் தொழிலையும் மேற்கொள்கிறார்கள். நகை வாங்க வரும் பெண்களுக்கு வலியச்சென்று உதவுவதுபோல் உதவி செய்து வலையில் சிக்கவைத்து, இனி திரும்ப நினைத்தாலும் திரும்ப முடியாத நெருக்கடியில் தள்ளிவிடுவார்கள்.</p>
<p style="text-align: justify;">புதுவகை நகைகள்மீதும் துணிகள்மீதும் பெண்களுக்கு இருக்கிற மோகத்தை நன்கு பயன்படுத்திக்கொள்ளும் இந்த அயோக்கியர்கள். மீளமுடியாத படுகுழியில் தள்ளிவிடுகிறார்கள். வெளியே சொன்னால் குடும்பத்தையே அழித்துவிடுவோம் என்ற மிரட்டல் வேறு.</p>
<p style="text-align: justify;">இவர்களுக்கு வகைவகையான புரோக்கர்கள்; சட்ட சிக்கலில் இருந்து தப்பிக்க காவல்துறை, வழக்கறிஞர்கள், நீதிபதிகள் என எல்லாரும் துணை; கூட்டணி. இந்தப் பாவத்திற்குத் துணைபோகின்றவர்களிலும் முன்னின்று ஏற்பாடு செய்கின்றவர்களிலும் கலிமா சொன்ன முக்கியப் புள்ளிகளும் இருப்பதுதான் வன்கொடுமை.</p>
<p style="text-align: justify;">இது ஒரு பெரிய நெட்வொர்க் என்று சொல்லப்படுகிறது. திருமண வீடியோ, பள்ளி நிகழ்ச்சிகள் வீடியோதான் பெண்களுக்கு வலைவீச இவர்களுக்குச் சரியான வாய்ப்பை ஏற்படுத்தித் தருகின்றன. இவ்வாறு சிக்கும் அழகான இளம்பெண்களை மாநிலம் தாண்டி விபசாரத்திற்கு அனுப்பிவைப்பதுடன், பாலியல் படங்கள் எடுக்கவும் போதைப் பொருள் கடத்தவும் இக்கயவர்கள் பயன்படுத்துகின்றனர்.</p>
<p style="text-align: justify;"><strong>இதற்கு ஒரு முடிவு கட்டியே ஆக வேண்டும்.</strong><br />
பெண்கள் மார்க்கத்திற்கு வெளியே; ஆண்கள் விரக்தியின் விளிம்பில். இதற்கு ஒரு முடிவு கட்டியே ஆக வேண்டும். எப்படி என்பதுதான் தெரியவில்லை. யோசித்து யோசித்து தூக்கம் கெட்டதுதான் மிச்சம்.</p>
<p style="text-align: justify;">இது பரவிக்கொண்டுவரும் பேராபத்து. அங்குதான்; இங்கு இல்லை என்றெல்லாம் பிரித்துப் பார்க்க முடியாது. ஒவ்வொருவரும் கவலையோடும் அச்சத்தோடும் இது குறித்து சிந்திக்க வேண்டும். தனிமையில் அழுது புலம்புவதில் புண்ணியமில்லை. எப்பாடு பட்டேனும் இந்தச் சமூகக் கொடுமையை, பெண்ணினத் தீமையை தடுத்து நிறுத்தியாக வேண்டும்!</p>
<p style="text-align: justify;">பிப்ரவரி 14ஆம் தேதி ‘காதலர் தினம்’ என்றொரு கொடுமை அரங்கேறிக்கொண்டிருக்கிறது. இதற்கு ஏறத்தாழ எல்லா நாடுகளும் சட்ட அனுமதி அளிக்கின்றன. இத்தகைய நரகச் சூழலில்தான் பண்பாடு மிக்க முஸ்லிம்களும் வாழ்ந்தாக வேண்டிய கட்டாயம் உள்ளது. நாம்தான் நம் வீட்டுப் பிள்ளைகளைக் கண்ணும் கருத்துமாக இருந்து பாதுகாத்திட வேண்டும்.</p>
<p style="text-align: justify;">நம் வீட்டு ஆடுகள் வேலியைத் தாண்டும் அளவுக்கு வந்துவிட்ட இன்றையச் சூழலில் வேலியே இல்லாவிட்டால் என்னவாகும் என்பதைப் பெற்றோர்கள் சிந்திக்க வேண்டும்.</p>
<p style="text-align: justify;"><span style="color: #808080; font-size: x-small;">பேராசிரியர், மெளலவி<br />
அ.முஹம்மது கான் பாகவி</span></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.readislam.net/portal/archives/4336/feed</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
		</item>
		<item>
		<title>கள்ளத் தவ்ஹீது கம்பெனிகள்</title>
		<link>http://www.readislam.net/portal/archives/968</link>
		<comments>http://www.readislam.net/portal/archives/968#comments</comments>
		<pubDate>Sun, 19 Feb 2012 02:38:31 +0000</pubDate>
		<dc:creator>ReadIslam.net</dc:creator>
				<category><![CDATA[பிரிவும் பிளவும்]]></category>

		<guid isPermaLink="false">http://www.readislam.net/portal/?p=968</guid>
		<description><![CDATA[18 ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தின் கீழ் பல நாடுகள் அடிமைப்பட்டன. முஸ்லிம்களின் கிலாபத்தான துருக்கியோ மிகவும் பலஹீனமான நிலையில் இருந்தது.  ஏகத்துவம் மலர்ந்த அரேபியாவிலோ, அனாச்சாரமும்,  ஜாஹிலியாவும் இஸ்லாம் பெயரில் அனுசரிக்கப்பட்டது.  ஷிர்க் ஏகத்துவமாகவும்,  பித்அத் சுன்னத்தாகவும் நடைமுறைப்படுத்தப்பட்டது. புனித மரங்கள், நல்லோர் கபுருகள், புனித கற்கள் எல்லாம் வணக்க வழிபாடு செய்யும் தலங்களாக மாறின. நஜ்து அரேபியர்கள் தங்களுக்குள் செய்யவேண்டிய எல்லா காரியங்களையும் குறிகாரர்கள், ஜோதிடர்களை கேட்டே செய்தனர்.  புகழ்பெற்ற பேரிச்சை மரமான “அல் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><a class="post_image_link" href="http://www.readislam.net/portal/archives/968" title="Permanent link to கள்ளத் தவ்ஹீது கம்பெனிகள்"><img class="post_image alignright remove_bottom_margin" src="http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcS1c4L4LrdsVagq-uDTni9fEaTbSIprjF2dUjj3prs7V2Y1K8Lf" width="259" height="194" alt="Post image for கள்ளத் தவ்ஹீது கம்பெனிகள்" /></a>
</p><p style="text-align: justify;">18 ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தின் கீழ் பல நாடுகள் அடிமைப்பட்டன. முஸ்லிம்களின் கிலாபத்தான துருக்கியோ மிகவும் பலஹீனமான நிலையில் இருந்தது.  ஏகத்துவம் மலர்ந்த அரேபியாவிலோ, அனாச்சாரமும்,  ஜாஹிலியாவும் இஸ்லாம் பெயரில் அனுசரிக்கப்பட்டது.  ஷிர்க் ஏகத்துவமாகவும்,  பித்அத் சுன்னத்தாகவும் நடைமுறைப்படுத்தப்பட்டது. புனித மரங்கள், நல்லோர் கபுருகள், புனித கற்கள் எல்லாம் வணக்க வழிபாடு செய்யும் தலங்களாக மாறின.</p>
<p style="text-align: justify;">நஜ்து அரேபியர்கள் தங்களுக்குள் செய்யவேண்டிய எல்லா காரியங்களையும் குறிகாரர்கள், ஜோதிடர்களை கேட்டே செய்தனர்.  புகழ்பெற்ற பேரிச்சை மரமான “அல் பஹ்கள்” நோக்கி ஆண்களும் பெண்களும் தங்கள் நேர்ச்சையை நிறைவேற்ற சென்றனர். ”தர்ஜியா” என்ற மரத்திடம் குழந்தை பாக்கியம் கேட்டு வேண்டுதல் நிறைவேறினால், அம்மரத்தில் தொட்டில் கட்டி வழிபட்டனர்.  அம்மரத்தில் இலைகளையே பார்க்கமுடியாத அளவுக்குக்கு சேலை துணிகள் தொங்கிக்கொன்டிருந்தன.</p>
<p style="text-align: justify;">“தாரியா” என்ற மலைகுகைக்கும் சென்று பெண் அவ்லியாக்களின் அருள் வேண்டினர்.  குபைலா என்ற ஊரிலிருந்த புகழ்பெற்ற ஜைது இப்ன் அல் கத்தாப் கப்ருக்கு மக்கள் கூட்டம் சென்றது. மொத்தத்தில் இன்று எப்படி இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ் நாடுகளில் இஸ்லாமிய பெயர்களில், இருக்கும் தர்கா, தரீக்கா கத்தம் பாத்தியா, கந்தூரி மௌலிது, பால்கிதாப் போன்ற அனைத்து இபாதத்துகளும்? அங்கும் இருந்தன.</p>
<p style="text-align: justify;">இந்தச் சூழலில்தான் <strong>முஹம்மது இப்ன் அப்துல் வஹாப் (ரஹ்)-1703-1792</strong>. அவர்கள் களத்தில் இறங்குகிறார்கள். மதினாவில் கற்ற மார்க்கக்கல்வியுடன் 1740 ல் தமது சொந்த ஊரான “உயைனா” வந்து தூய இஸ்லாத்தை பிரச்சாரம் செய்கிறார்கள். கடும் எதிர்ப்பு ஆயினும் அல்லாஹ்வின் துணையைக்கொண்டு தீவிர பிரச்சாரம் செய்கிறார்கள். அங்குள்ள குறுநில ஆட்சியாளர்களின் உதவியுடன் மக்களின் மனங்களை வெல்கிறார்கள். முதலில் அவர்கள் ஊரிலிருந்த உயைனாவின் புகழ்பெற்ற புனித மரத்தையும், அங்கிருந்த சிலைகளையும் அம்மக்களைக்கொண்டே உடைத்தெரிகிறார்கள்.</p>
<p style="text-align: justify;">இரண்டாவதாக,  “குபைலா” என்ற ஊரிலிருந்த ஜைது இப்ன் அல் கத்தாப் சஹாபி பெயரில் இருந்த புகழ்பெற்ற தர்கா கட்டிடத்தை அம்மக்களைக் கொண்டே தரைமட்டம் ஆக்கினார்கள். அன்றிலிருந்து இன்றுவரை அரபு மண்ணில் ஏகத்துவம் நிலைபெற்று நிற்கிறது.</p>
<p style="text-align: justify;">இந்தியாவிலும், தமிழகத்திலும் தர்காக்களே அபயமளிக்கும் ஆன்மீக பீடமாக விளங்குகின்றன, . இந்நிலையில்தான் இங்கிருந்து மதினா சென்று படித்து திரும்பிய மதனி, குறிப்பாக கமாலுதீன் மதனி,  மற்றும் திருச்சி அபூ அப்துல்லாஹ்,  ஜைனுலாப்தீன் உலவி ஒன்று சேர்ந்து அந்நஜாத் மாத இதழை ஆரம்பித்தனர்.</p>
<p style="text-align: justify;"><strong>கலக்கமடைந்த ஷைத்தான்</strong><br />
அல்லாஹ்வின் கிருபையால் தூய இஸ்லாத்தை அந்நஜாத் மக்கள் மத்தியில் எடுத்துவைத்தது. மிகவும் குறுகிய காலத்தில் தமிழகம் முழுவதும் இளைஞர்கள் மத்தியில் மார்க்க விழிப்புணர்வு எழுந்தது. ஷைத்தான் கலக்கமடைந்தான். இந்நிலை நீடித்தால் தமிழகத்திலிருந்து வெளியேற்றப்படுவோம் என்பதை உணர்ந்து சதி வலையை வீசினான்.</p>
<p style="text-align: justify;">ஆலிம்களை பிடித்தால் ஒரு பெரும் கூட்டத்தையே தன் பிடிக்குள் கொண்டு வரலாம் என்று கணக்குப்போட்டு கமாலுதீன் மதனியை முதலில் பிடித்தான். அன்றைய தாருல் நத்வாவின் தலைவன் மார்க்க அறிஞன் அறிவின் தந்தை என புகழப்பட்ட அபூ ஜஹீலுக்கு சொன்ன டெக்னிக்கையே இங்கும் பயன்படுத்தினான்.</p>
<p style="text-align: justify;">அல்லாஹ்வின் படைப்பில் அனைத்தும் சமம், ஆனால் தான் நெருப்பில் படைக்கப்பட்டதால் உயர்ந்தவன் என்றும் மண்ணில் படைக்கப்பட்ட ஆதம் தாழ்ந்தவர் என்று பிரிவினை செய்து வெளியேறிய இப்லீஸ் மதனியாரிடம் ஆலிம், அவாம் என்ற பிரிவினை விஷ விதையை தூவி, <strong>“நீங்களெல்லாம் ஏழு வருடம் படித்து பட்டம் பெற்ற ஆலிம்கள், நீங்கள் படிக்காத அபூஅப்துல்லாஹ் உடன் சேர்ந்து தாவா செய்தால் அது எடுபடாது. ஆகவே ஆலிம்களாக ஒன்று சேர்ந்து இயக்கம் ஆரம்பியுங்கள். ”</strong> என்ற ஷைத்தானின் வழிகாட்டுதலில் புதிய தாருல் நத்வாவை மதனியார் ஆரம்பித்தார். அதற்க்கு பெயர் <strong>“தவ்ஹீத் ஜமாத்துல் உலமா”.</strong></p>
<p style="text-align: justify;">மதனியும் உலவியும் சேர்ந்து மார்க்கம் சொன்னார்கள், அதன் விளைவு தமிழகம் முழுவதிலும் உள்ள பள்ளிகளில் தகராறு ஆரம்பமாகியது. சத்தியத்தை சொல்லும்பொழுது எதிர்ப்பு, அடிதடி சண்டை சச்சரவு எல்லாம் வரும் நபி(ஸல்) அவர்களுக்கும் வந்தது. முஹம்மது பின் அப்துல் வஹாப் (ரஹ்) அவர்களுக்கும் கடும் எதிர்ப்பு வரத்தான் செய்தது. ஆனாலும் நபி(ஸல்) அவர்கள் வழிகாட்டிய அழகிய பொறுமையை கடைப்பிடித்து,  எதிர்க்கும் மக்கள் ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு மனங்களை மாற்றினார்கள்.  ஆனால் நமது ஆலிம்களால் பொறுமையாக இருக்க முடியவில்லை. ஷைத்தான் கைப்பிடிக்குள் இருப்பவர்களுக்கு பொறுமையாய் இருக்கமுடியாது.</p>
<p style="text-align: justify;"><strong>சமுதாயத்தில் பிரிவினை<br />
</strong>என்ன செய்தார்கள்? இஸ்லாத்தில் முதல் பிரிவினை செய்து கட்சி ஆரம்பித்த கவாரிஜ்கள் வழியைப்பின்பற்றி, இணைவைக்கும் இமாமை பின்பற்றுவது ஹாரம் என காபிர் பத்வா கொடுத்து ஊருக்கு ஊர் தனிப்பள்ளி கட்டி தங்கள் இயக்க,  கூலி ஆலிம்களை குடியேற்றினார்கள். அதை ஷைத்தான் அவர்களுக்கு அழகாக காட்டினான். தவ்ஹீத் பள்ளிவாசல் என்று பெயர்வைத்து, இதுநாள்வரை தொழுத பள்ளிகளை ஷிர்க் பள்ளிகளாக மாற்றிவிட்டார்கள்.  ஆக, குடும்பத்தில் பிரிவினை, பள்ளியில் பிரிவினை ஒன்றுபட்ட மஹல்லா ஜமாத்தில் பிரிவினை.</p>
<p style="text-align: justify;"><strong>முஸ்லிம்களை இரண்டாகப் பிரித்தனர்<br />
</strong>எல்லோரும் முஸ்லிம்கள் என்று ஒன்றுபட்டிருந்த சமுதாயத்தில் பிரிவினையை உண்டாக்கி, தங்களை தவ்ஹீத் முஸ்லிம்கள் என்றும், மற்றவர்கள் இணைவைக்கும் முஸ்லிம்கள் என்றும் இரண்டாகப் பிரித்தனர். பிளந்தனர். தங்களுக்கென்று தனி இயக்கத்தை ஆரம்பித்து அதற்கு ‘ஜாக்ஹ்” என்று பெயரிட்டு, முஸ்லிம்களை இஸ்லாத்தின் பால் அழைக்காமல், தங்கள் இயக்கத்தின் உள்ளே இழுத்து பதவி கொடுத்து பத்திரப்படுத்தினர்.</p>
<p style="text-align: justify;">சத்தியத்தை சொல்லும்பொழுது கடும் எதிர்ப்பு வரத்தான் செய்யும் நபிமார்கள் எதிர்க்கப்பட்டார்கள்,  அடிக்கப்பட்டார்கள்,  ஏன் கொலையும் செய்யப்பட்டார்கள். ஆனால் மதனி ஆலிம் இதற்க்கெல்லாம் அவர் தயாரில்லை. சொகுசாக மார்க்கம் சொல்ல ஆசைப்பட்டதால்,  தனி புரோகித சபை, தனி இயக்கம், தனிப்பள்ளி ஏற்ப்படுத்தி தலைவராகிவிட்டார்.</p>
<p style="text-align: justify;">இயக்க ஆலிம்களின் பிரிவினை செயல்களுக்கு குர் ஆனிலும், ஹதீஸ்களிலும்,  நபிமார்கள் வரலாறுகளிலும், சத்திய சஹாபா பெருமக்கள் வாழ்க்கையிலும்,  ஆலிம் பெருமக்கள் இமாம்கள் வாழ்விலும் ஏதேனும் ஆதாரங்கள் உண்டா என்று தேடிப்பார்த்தாலும் ஒன்றும் கிடைக்கவில்லை. மாறாக, நபி(ஸல்) அவர்களால் சபிக்கப்பட்ட கேடுகெட்ட கவாரிஜ்கள் மற்றும் மனோஇச்சையை பின்பற்றி தங்கள் அறிவு சொல்வதே மார்க்கம் என்ற முத்தஷீலாக்களிடமே ஆதாரம் கிடைக்கிறது.</p>
<p style="text-align: justify;">ஆகவேதான்,  இன்று இயக்க ஆலிம்கள் நடத்துவது <strong>“கள்ளத் தவ்ஹீத் கம்பெனி”</strong> என்று கூறுகின்றோம். முஸ்லிம்களிடம் இயக்க வெறியை ஏற்படுத்தி தங்கள் இயக்கத்தை வளர்ப்பதற்காக பாடுபடுகின்றனர். கூலி ஆலிம்களை சப்ளை செய்ய தனி மதரசாக்கள், இங்கிருந்து வெளியேறும் கூலி ஆலிம்களுக்காக தனி ஜாக்ஹ் TNTJ பள்ளிவாசல்கள்.</p>
<p style="text-align: justify;">பிரிந்து கிடந்த மக்களை நபி (ஸல்) அவர்கள் தவ்ஹீத் மூலம் ஒற்றுமை படுத்தி ஒரே சகோதரர்கள் ஆக்கினார்கள், ஆனால் நமது கள்ளத் தவ்ஹீதுகள் ஒன்றாக இருந்த சமூதாயத்தை தவ்ஹீதை சொல்லி பிரித்துவிட்டார்கள். பிரிவினை செய்வது சாத்தானின் வழி என்று அல்லாஹ் கூறுகின்றான்.</p>
<blockquote>
<p style="text-align: justify;"><strong>“எனக்கும் , என் சகோதரருக்குமிடையில் ஷைத்தான் பிரிவினையை உண்டு பண்ணிய பின்னரும். . . . . . . . ” &#8212;அல் குர்ஆன். 12:100.</strong></p>
</blockquote>
<p style="text-align: justify;"><strong>சமுதாய பிரிவினை கொடிய பாவம்.  கூறுவது அல்குர்ஆன் </strong></p>
<blockquote>
<p style="text-align: justify;"><strong>1.  “ எவர்கள் தங்களிடம் தெளிவான வசனங்கள் வந்த பின்னரும் தங்களுக்குள் (கருத்து) வேறுபட்டு பிரிந்து போனார்களோ அவர்களைப்போல நீங்களும் ஆகி விட வேண்டாம். இத்தகையவர்களுக்கு மகத்தான வேதனை உண்டு. ” &#8211;அல் குர்ஆன். 3:105. </strong></p>
<p style="text-align: justify;"><strong>2.  “ எவர்கள் தங்கள் மார்க்கத்தை பிரித்து (அவர்களும்) பல பிரிவினராக ( JAQH, TNTJ, INTJ etc…) பிரிந்து விட்டனரோ அவர்களுடன் உங்களுக்கு யாதொரு சம்பந்தமுமில்லை. . . . . ” &#8211;அல் குர்ஆன். 6:159. </strong></p>
<p style="text-align: justify;"><strong>3.  “ எனினும் ( யூதர்கள், கிறிஸ்தவர்கள், இயக்க ஆலிம்கள் ) தங்களுடைய வேதத்தை(ப் புரட்டி) பலவாறாகப் பிரித்துக்கொண்டு ஒவ்வொரு வகுப்பாரும் தங்களிடம் உள்ளவற்றைக்கொண்டு சந்தோசம் அடைகின்றனர். நீங்கள் அவர்களை ஒரு காலம் வரையில் அவர்களுடைய மயக்கத்தில் ஆழ்ந்து கிடக்க விட்டு விடுங்கள். ” &#8211;அல் குர்ஆன். 23:52-53. </strong></p>
<p style="text-align: justify;"><strong>4.  “ எவர்கள் தங்கள் மார்க்கத்திற்க்குள் பிரிவினையை உண்டு பண்ணி பல பிரிவுகளாக பிரித்து,  அவர்கள் ஒவ்வொரு வகுப்பாரும் தங்களிடமுள்ள (தவறான) வைகளைக்கொண்டு சந்தோசப்ப்படுகின்றனரோ ( அவர்களுடன் சேர்ந்து விடாதீர்கள்). ” &#8211;அல் குர்ஆன். 30:32. </strong></p>
</blockquote>
<p style="text-align: justify;"><strong>நபிமார்கள் வரலாற்றில் நல்லதொரு படிப்பினை.   </strong></p>
<blockquote>
<p style="text-align: justify;"><strong>“ அறிவுடையவர்களுக்கு (நபிகளாகிய) இவர்களுடைய சரித்திரங்களில் நல்லதோர் படிப்பினை நிச்சயமாக இருக்கிறது.  “ -அல் குர்ஆன். 12:111 </strong></p>
</blockquote>
<p style="text-align: justify;">யூனுஸ்(அலை) அவர்கள் அல்லாஹ் மீது கோபம் கொண்டு தான் சமூகத்தாரை விட்டு பிரிந்த ஓடினார்கள். அதன் விளைவாக மீன் வயிற்றில் வைக்கப்பட்டார்கள் இதற்கு காரணம் அல்லாஹ்வின் கட்டளைக்காக பொறுத்திருக்காமல் தானாக சமூதாயத்தை பிரிந்து சென்றதே. <strong>“நீங்கள் உங்கள் இறைவனுடைய கட்டளைக்காக பொறுத்திருங்கள். (கோபம் தாங்காது)மீன் வயிற்றில் சென்றவரைப்போல் நீங்களும் ஆகிவிடவேண்டாம். ” -அல் குர்ஆன். 68:48. </strong></p>
<p style="text-align: justify;">அல்லாஹ் நாடியவரை தண்டிப்பான், தான் நாடியவரை மன்னிப்பான். இது அவனது நாட்டம். ஆனால் சமூதாயத்தை விட்டு பிரியவோ பிரிக்கவோ கூடாது. நமது கள்ள தவ்ஹீதுகள் இதைத்தான் செய்கிறார்கள்”. சுன்னத் ஜமாஅத் மக்கள் தர்கா சென்று இணைவைக்கிறார்கள்.  ஆகவே அவர்களிடமிருந்து பிரித்துக்காட்டவே &#8220;தவ்ஹீது இயக்கம்” என்று விளக்கம் கொடுக்கிறார்கள்.</p>
<p style="text-align: justify;">யூனுஸ்(அலை) மக்கள்,  மனம்மாறி அல்லாஹ்விடம் தவ்பா செய்து திருந்தியது போல் நமது மக்களும் இன்ஷாஅல்லாஹ் நாளை திருந்தலாம். அதுவரை அவர்களிடம் தொடர்ந்து நேர்வழியை உபதேசம் செய்து வருவதே நமது பணி. கள்ள தவ்ஹீதுகள் செய்ததென்ன? அல் ஜமாத்தை உடைத்து கூறு போட்டு ஓடிப்போய் ஷைத்தான் ஜமாத்தை ஏற்படுத்தியதுதான்.</p>
<p style="text-align: justify;">ஷுஐப் (அலை) அவர்கள் கூறுவதை பாருங்கள். “என் மக்களே! என்னால் இயன்றவரை உங்களைச் சீர்த்திருத்துவதைத் தவிர (வேறொன்றையும்) நான் விரும்பவில்லை. அல்லாஹ்வின் உதவியின்றி நான் (உங்களை சீர்திருத்தும் விசயத்தில்) வெற்றியடைய முடியாது. அவனையே நான் நம்பியிருக்கின்றேன். அவனையே நான் நோக்கியும் இருக்கின்றேன். ” குர்ஆன். 11:88</p>
<p style="text-align: justify;">கள்ளத் தவ்ஹீதுகள் கடைப்பிடிப்பது நபிமார்கள் வழிமுறையையா? அல்லது ஷைத்தானின் வழிமுறையா? கள்ளத் தவ்ஹீது கம்பெனியில் சேர்ந்துவிட்டால் உடனே சொர்கத்திற்கு அல்லாஹ் டிக்கெட் கொடுத்துவிடுவான் என்று நம்ப வைக்கிறார்கள். இது ஷைத்தான் காட்டும் வீண் நம்பிக்கை.</p>
<p style="text-align: justify;"><strong>மூஸா (அலை) அவர்களிடம் அழகிய படிப்பினை.</strong><br />
மூஸா (அலை) தன் சமூகத்தாரிடம் அல்லாஹ் அவர்களுக்கு கொடுத்த அருட்கொடைகளை நினைவூட்டி எதிரிகளிடம் போர் புரியும்படி கட்டளை இடுகிறார்கள். ஆனால் இஸ்ரவேலர்கள் கீழ்ப்படியாமல் மாறு செய்கிறார்கள் இதனால் மூஸா (அலை) அவர்கள் அம்மக்களுக்கு காபிர் பத்வா கொடுத்து அவர்களை பிரிக்கவில்லை.</p>
<p style="text-align: justify;">ஏனெனில் மனிதர்களை தரம் பிரிக்கக்கூடியவன் படைத்த ரப்புல் ஆலமின் மட்டுமே, எனவே அல்லாஹ்விடமே பிரிக்கும் தீர்ப்பை வேண்டுகிறார்கள்.</p>
<blockquote>
<p style="text-align: justify;"><strong>“ என் இறைவனே! நிச்சயமாக என் மீதும், என் சகோதரர் மீதும் தவிர, (மற்ற எவர் மீதும்) எனக்கு அதிகாரமில்லை, ஆகவே பாவிகளாகிய இந்த மக்களிலிருந்து நீ எங்களை பிரித்துவிடுவாயாக! “ என்று பிரார்தித்து கூறினார். ” -அல் குர்ஆன். 5:25. </strong></p>
</blockquote>
<p style="text-align: justify;">பாவியான மக்கள் என்று தெரிந்தும் அந்த மக்களை விட்டு பிரிந்து போகும் முடிவை அவர் எடுக்கவில்லை. அதிகாரமுள்ள அல்லாஹ்விடமே ஒப்படைக்கின்றார்.  நபி(ஸல்) அவர்களும் மக்கத்து இனைவைப்பவர்களின் கொடுமைகளையெல்லாம் தாங்கி தொடர்ந்து அதே காபதுல்லாஹ்விலேயே தமது இபாதத்களை செய்கிறார்கள். அல்லாஹ் அனுமதி கொடுத்தபின்பே மதீனா ஹிஜ்ரத் செய்து அங்குதான் முதல் பள்ளி கட்டுகிறார்கள.</p>
<p style="text-align: justify;">தனிப்பள்ளி கட்டுவதற்கு கள்ளத் தவ்ஹீதுகள் சொன்ன காரணம்,  “சுன்னத்தான முறையில் தொழவதற்கு முடியவில்லை, அடிக்கிறார்கள், உதைக்கிறார்கள், எவ்வளவு நாட்கள் நாங்கள் அடி வாங்குவது. ஆகவே தனிப்பள்ளி. ”</p>
<p style="text-align: justify;">அன்று மூஸா(அலை) மக்களுக்கும் இதேநிலைதான், ”அவர்களும் தங்களை பிர் அவ்ன், அவன் இனத்தவர்கள் துன்புறுத்துவார்களோ என்று பயந்துகொண்டே இருந்தனர். ” -அல் குர்ஆன். 20:94. ஆனாலும் அல்லாஹ் தனிப்பள்ளி கட்டி அவர்களை தொழச்சொல்லவில்லை.</p>
<blockquote>
<p style="text-align: justify;">“ நீங்கள் இருவரும் உங்களுடைய மக்களுக்காக மிஸ்ரில் பல வீடுகளை அமைத்துக்கொண்டு,  உங்களுடைய அவ்வீடுகளையே பள்ளிகளாக்கி (அவற்றில்) தவறாது தொழுது வாருங்கள். ” -அல் குர்ஆன். 10:87.</p>
</blockquote>
<p style="text-align: justify;">நபி(ஸல்) அவர்களும் ஆரம்பத்தில் அர்ஹம் (ரலி) அவர்கள் வீட்டிலேயே தொழுது வந்தனர்.</p>
<p style="text-align: justify;">அல்லாஹ் கூறுகிறான் “நபிமார்கள் சரித்திரங்களில் நல்ல படிப்பினை உளளது. ” . இஸ்ரவேலர்களுக்கு சொன்ன செய்தியை இறுதி உம்மத்தின் அல்குர்ஆனில் இடம்பெறச் செய்ததின் காரணம், நாம் தவறு செய்துவிடக்கூடாது என்பதுதான். கள்ள தவ்ஹீத் கம்பெனிகளுக்கு இதைப்பற்றியெல்லாம் சிந்திக்க நேரமில்லை. கம்பெனி புது Branch பிராஞ்ஜை எந்த ஊரில் தொடங்கலாம் என்பதே சிந்தனை.</p>
<p style="text-align: justify;">மூஸா(அலை) அவர்கள் அல்லாஹ்வை சந்திக்க சென்றபின் சாமிரி என்பவன் முஸ்லிம்களை வழிகெடுத்து காளைக்கன்றை வழிபடச் சொல்கின்றான். திரும்பி வந்த மூஸா(அலை), இவர்கள் நிலையைப்பார்த்து கோபம் கொண்டு தன் சகோதரர் ஹாரூன் (அலை) அவர்களைப்பிடித்து இழுக்கிறார்.</p>
<blockquote>
<p style="text-align: justify;"><strong>“ என் தாயின் மகனே! என் தலையையும் தாடியையும் இழுக்காதீர்! (அச்சமயம் நான் அவர்களை விட்டு விலகி இருந்தால்) “இஸ்ராயீலின் சந்ததிகளுக்கிடையில் நீங்கள் பிரிவினையை ஏற்படுத்திவிட்டீர். எனது வார்த்தைகளை கவனிக்கவில்லை” என்று நீங்கள் கடுகடுப்பீரென்று நிச்சயமாக நான் பயந்தே அவர்களுடன் இருந்தேன்” என்று கூறினார்.  –அல் குர்ஆன். 20:94. </strong></p>
</blockquote>
<p style="text-align: justify;">மற்றொரு வசனத்தில், ”இந்த மக்கள் என்னை பலவீனப்படுத்தி என்னை கொலை செய்து விடவும் முற்பட்டனர். ” -அல் குர்ஆன். 7:150.</p>
<p style="text-align: justify;"><strong>அயோக்கியர்களின் கடைசி புகலிடம்<br />
</strong>இரு நபிமார்களின் உரையாடல்களிலிருந்து நாம் பெறவேண்டிய படிப்பினை, ஒன்றுபட்ட முஸ்லிம் சமூதாயம் ஷைத்தானின் சூழ்ச்சியில் வீழ்ந்து அறியாமையின் காரணமாக இணைவைத்தாலும், தொடர்ந்து அம்மக்களிடம் இனைவைப்பின் தீமையை சொல்லிக் கொண்டிருக்கவேண்டும். அவர்களை ஷைத்தானிடம் கையளித்துவிட்டு ஓடிவிடக்கூடாது.</p>
<p style="text-align: justify;">ஆனால், நமது கள்ள தவ்ஹீதுகள் செய்ததென்ன? ஓடுகாலி ஜமாஅத்,  தனிப்பள்ளி அதிலும் அடிதடி, போலிஸ்,  கோர்ட், வம்பு வழக்கு, வாய்தா, வசூல். இறுதியில் அயோக்கியர்களின் கடைசி புகலிடம் அரசியலிலும் புகுந்து விட்டார்கள்.</p>
<p style="text-align: justify;">நமது அரசியல் கட்சிகள் பல உட் பிரிவு அமைப்புகளை வைத்திருப்பர்,  உதாரணமாக,  மாணவர் அணி, இளைஞர் அணி, மகளிர் அணி, இலக்கிய அணி என்று பலதரப்பு மக்களையும் இணைத்துக்கொள்வர். இதுபோல்,</p>
<p style="text-align: justify;">இப்லீசும் தன் கட்சியை 72 குழுவாக பிரித்து நரகத்திற்கு தயார் செய்துள்ளான்.  தர்கா அணி, தரீக்கா அணி, பித்அத் அணி, பித்னா அணி. . .  இந்த வரிசையில் தவ்ஹீத் பிரிவுக்கு ஆள் பிடிக்கின்ற வேலையை மதனியிடமும், உலவியிடமும் ஒப்படைத்துள்ளான். வேலை வேகமாக நடக்கின்றது.</p>
<p style="text-align: justify;"><strong>கிதாபுத் தவ்ஹீத்-</strong>முஹம்மத் இப்ன் அப்துல் வஹாப் (ரஹ்)<br />
மூச்சிற்கு முன்னூறு தரம் தவ்ஹீத் கோஷம் போடும் மூடர்கள்,  “கிதாபுத் தவ்ஹீத்” நூல் எழுதி மதனி வகையறாக்களுக்கு அலிப் . . பே. . . சொல்லிக்கொடுத்த முஹம்மத் இப்ன் அப்துல் வஹாப் (ரஹ்) அவர்கள்,  தவ்ஹீத் பிரச்சாரத்திற்காக தனி இயக்கம் எதையேனும் ஆரம்பித்தார்களா? அல்லது குறைந்த பட்சம் தொழுவதற்காகவாவது தனி தவ்ஹீத் பள்ளி கட்டி தொழுதார்களா? ஏதேனும் ஆதாரம் உண்டா?</p>
<p style="text-align: justify;">அன்றிருந்த பித்அத் இமாம்களைப்பின்பற்றி அதே பள்ளியில் தான் தொழுதனர். யாருக்கும் காபிர் பத்வா அளித்ததில்லை. ஒன்றுபட்ட முஸ்லிம் ஜமாத்தை பிரிக்கவில்லை. விடாது தொடர்ந்து நல்லுபதேசம் செய்து அம்மக்களை மாற்றினார்கள். தன்னை சாராத மக்களை காபிர் என்று கூறுகின்றார், என்ற குற்றச்சாட்டு அவர் மீது கூறப்பட்டது.</p>
<p style="text-align: justify;">இதற்க்கு ஹிஜ்ரி 1218 முஹர்ரம் 8 ம் தேதி மக்காவில் மன்னர் சவூது பின் அப்துல் அஜீஸ் உடன் இருக்கும்பொழுது அவரது மகன் அப்துல்லாஹ் ஒரு கடிதம் எழுதுகிறார்.</p>
<p style="text-align: justify;">“ எங்கள் மத்ஹப்பின் பெயர் “அஹ்லுல் சுன்னத் வல் ஜமாஅத்” சஹாபா பெருமக்கள் சென்ற வழியில் செல்வதே எங்கள் கொள்கை. எந்த மத்ஹப் இமாமையும் பின்பற்றி செல்வதை நாங்கள் குற்றம் சொல்லமாட்டோம். . ஒரு இமாமைத்தான் பின்பற்றவேண்டும் என்று யாரும் நிர்ணயிக்கவில்லை. எமது இபாதத் வழிமுறைகளில் ஹம்பலி மத்ஹப்பை பின்பற்றுகிறோம்”. எந்த ஒரு முஸ்லிமையும் அவர் காபிர் எனச்சொன்னதில்லை.</p>
<p style="text-align: justify;">இன்று மதனியும் உலவியும் பின்பற்றுவது இமாம் முஹம்மத் இப்ன் அப்துல் வஹாப் (ரஹ்) அவர்கள் கூறிய தவ்ஹீத் அல்ல, மாறாக வழிகெட்ட முத்தசீலாக்களை.  இஸ்லாமிய நெடுஞ்சரித்திரத்தில் தங்களை தவ்ஹீதுகள் “அஹ்லுல் தவ்ஹீத்” என்று முதன்முதலில் அழைத்துக் கொண்டவர்கள். முத்தசீலாக்களே!.  இரண்டாவது நமது கள்ள தவ்ஹீதுகள்.</p>
<p style="text-align: justify;">தவ்ஹீத் என்ற வார்த்தையை இமாம் அவர்கள்,  மக்கள் அமல் செய்வதற்காக அதாவது அல்லாஹ் ஒருவனை மட்டும் வணங்குங்கள், வேறு எவரிடமும் கை ஏந்தாதீர்கள். என்று அமல் செய்யச்சொன்ன வார்த்தை,  இன்று கள்ளக் தவ்ஹீத்களால் ரிஜிஸ்டர் செய்யப்பட்டு, பேனர், பேட்ஜ், பேரணி, விளம்பரம் தலைவர் நிர்வாகிகள், என்று வளர்ந்து மல்டிநேசனல் கம்பெனியாக மாறிவிட்டது. இவர்கள் கள்ளத் தவ்ஹீதைச் சொல்லி கம்பெனி நடத்துவது வளைகுடா காசில்தான்.</p>
<p style="text-align: justify;"><strong>அல்லாஹ்வுக்கு அஞ்சுபவர்களே ஆலிம்கள்!.</strong><br />
ஏராளமான மார்க்க அறிஞர்கள் மக்கா, மதீனா சென்று மார்க்கத்தை கற்று தம் மக்களுக்கு நேர்வழியை காட்டியிருக்கிறார்கள். இமாம் அபூ ஹனிபா, இமாம் அஹமது இப்ன் ஹம்பல், இமாம் ஷாபி, இமாம் புகாரி, முஸ்லிம், ஷேக் அல்பானி (ரஹ்) என்று சொல்லிக்கொண்டே போகலாம்.</p>
<p style="text-align: justify;">மதீனாவில் கல்வி கற்றுச்சென்று தமது சொந்த நாட்டில் எவரேனும் தனி தவ்ஹீது இயக்கம் ஆரம்பித்து தனிப்பள்ளி கட்டியதாக வரலாறு உள்ளதா? இன்று குர்ஆனுக்கு அடுத்ததாக சிறப்பித்துக்கூறப்படும் புகாரி ஹதீஸை தொகுத்த இமாம் புகாரி அவர்கள் சுமார் 16 ஆண்டுகள் மக்கா, மதீனாவில் மார்க்கம் கற்றார்கள்.</p>
<p style="text-align: justify;">ஹிஜ்ரி, 250 ல் தமது சொந்த நாடு (உஸ்பெஸ்கிஸ்தான்) புகாராவிற்கு திரும்புகிறார்கள்.  இமாம் அவர்களை வரவேற்க வரலாறு காணாத மக்கள் வெள்ளம். இவரது செல்வாக்கை கண்டு ஆட்சியாளர்களே அஞ்சும் அளவிற்கு மக்கள் கூட்டம். இதைப்பயன்படுத்தி தவ்ஹீதை சொல்கிறேன் என்று தனி இயக்கம் ஆரம்பித்து, தனிப்பள்ளி கட்டியிருக்கலாம், எதுவும் செய்யவில்லை.</p>
<p style="text-align: justify;">மக்களை பிரிக்கும் மாபாதகத்தை உண்மையான எந்த ஆலிம்களும் செய்யமாட்டார்கள், நமது மதனியார், மதீனாவில் 4, 5 வருடத்தை கழித்துவிட்டதாலே தமிழ் நாட்டில் தனிக்கடையை திறந்துவிட்டார். இவருக்கு போட்டியாக உலவியார் பெரிய கம்பெனியை ஆரம்பித்தார்.</p>
<p style="text-align: justify;">இமாம் புகாரி (ரஹ்) அவர்களுக்கு தெரியாத தவ்ஹீதா வீணாப்போன தீன்களுக்கு தெரிந்துவிட்டது.  புகாரி(ரஹ்) அவர்களும் தன் சொந்த செலவில் ஒன்றைகாட்டினார்கள். தனிப்பள்ளி அல்ல,  பிரயாணிகள் வந்து தங்கிச்செல்ல இலவச விடுதி.  தமது கைகளால் கல் எடுத்துவந்து கட்டினார்கள்.</p>
<p style="text-align: justify;">இதைப்பார்த்த அவரது மாணவர், முஹம்மத் ஹாதிம் வராக் என்பவர், தான் கல் எடுத்து வருகிறேன், இவ்வேலையை என்னிடம் தாருங்கள் என்று கேட்டபொழுது, இமாம் அவர்கள் சொன்ன பதில், ” நாளை மறுமையில் இந்த வேலைக்காக அல்லாஹ்விடம் கூலி பெற ஆசைப்படுகிறேன். ”</p>
<p style="text-align: justify;">நமது கள்ளத்தவ்ஹீதுகள் கட்டிய தனிப் பள்ளிகளுக்கும், அங்கு நடந்த அடிதடி. கோர்ட் கேஸ்களுக்கும் அல்லாஹ் இருமடங்கு கூலியை இன்ஷா அல்லாஹ் மறுமையில் கொடுப்பான். அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக!</p>
<p style="text-align: justify;">நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், ‘பள்ளிகளுக்காக முஸ்லிம்கள் சண்டையிட்டு அடித்துக்கொள்ளும் நாள் வராத வரை மறுமை நாள் வராது. ” அறிவிப்பவர்: அனஸ் இப்ன் மாலிக் (ரலி) ஆதாரம்:அபூதாவூது. . 449.</p>
<p style="text-align: justify;">ஜாக்ஹ். . . முஸ்லிம்கள் ஜாக்கிரதை!<br />
இன்று ஜாக்ஹ் ன் துணை நிறுவனங்களாக 23 கம்பெனிகளின் லிஸ்டைப் போட்டு,  இந்தக்கம்பெனிகள் “தொய்வின்றி தொடர்ந்து நடத்த நிதி தாரீர்!” என்று கமாலுதீன் மதனி கை ஏந்துவது ஏன்? ஏகத்துவத்தை மீண்டும் கட்டியெழுப்பிய முஹம்மத் இப்ன் அப்துல் வஹாப் (ரஹ்) அவர்கள் எந்த இயக்கத்தை ஏற்படுத்தினார்? எந்த ஜாமியாவை நடத்தி தனிப்பள்ளிகட்டி கூலி ஆலிம்களை சப்ளை செய்தார்? ஒன்றுமேயில்லை.</p>
<p style="text-align: justify;">“ நபியே! நமது தூதை தெளிவாக எத்திவைப்பதை தவிர உம்மீது வேறு எந்த கடமையும் இல்லை!” -அல் குர்ஆன். 5:92<br />
தொடர்ந்து தவ்ஹீதைச்சொல்லியே மக்கள் மனங்களை அல்லாஹ்வின் அருளைக்கொண்டு மாற்றினார்கள். தர்காக்கள் இருந்த இடம் தெரியாமல் மறைந்தன. கள்ளத் தவ்ஹீதுகள் செய்த சாதனை என்ன?</p>
<p style="text-align: justify;">இவர்களின் தலைமைபீடமான கோட்டாரில் இன்றும்,  பாவா காசிம் ஒலியுல்லா இவர்களுக்கும் சேர்த்து அருள் வழங்கிக்கொண்டுதான் இருக்கிறார். ஒரே ஊரில் தர்கா வியாபாரம் ஒருபக்கம்,  தவ்ஹீத் வியாபாரம் மறு பக்கம் நடக்கிறது. கூரை ஏறி கோழி பிடிக்காதவர், வானம் ஏறி வான்கோழி பிடிக்கப்போகிறார்? இவர்கள் முஸ்லிம்களின் பொருளை பிடுங்கி இருளை விற்கின்றார்கள்.</p>
<p style="text-align: justify;">Tri-Nitro-Toluene&#8211;ஜமாஅத்தில் ஈமானுக்கு வேட்டு.<br />
Pஜை யின் கள்ள தவ்ஹீது கம்பெனியைப்பற்றி நாம் அதிகம் சொல்ல தேவையில்லை. இவரது முரீதுகளைத்தவிர மற்றவர்கள் அனைவரும் இவரது தவ்ஹீது தரீக்காவை விளங்கிவிட்டனர். முஸ்லிம்களுக்கு ‘குப்ர்’ பத்வா கொடுத்து,  கொடுத்து இறுதியில் இவரும்  குப்புற விழுந்துவிட்டார். இதுதான் பொய்யர்களின் வழிமுறை.  அன்று அரேபியா பொய்யன் முசைலமா “ஸஜ்ஜா” என்ற கிறித்துவ பெண்ணிடம் பங்கு போட்டு பங்கப்பட்டான். இந்தியப்பொய்யன் மிர்சா குலாம் காதியானி,  முஹம்மதி பேகம் என்ற பெண்ணிடம் மையல் கொண்டு மண்ணாப்போனான். இப்பொழுது தமிழ் நாட்டிலும் இம்முறை நடக்கின்றது.  “ஊருக்கே குறி சொன்ன பல்லி. . . கழனிப் பானையில் விழுந்ததாம் துள்ளி”.</p>
<p style="text-align: justify;">பீர் அண்ணன் சொல்வதுதான் இஸ்லாம். ஜகாத் ஒருமுறை கொடுத்தால் போதும் என்று சொன்னாலும் சரி,  பன்றித்தோல் வியாபாரம் கூடும் என்றாலும், சரி அவரது இயக்க முரிதுகள் அப்படியே பின்பற்றுவார்கள். சுருக்கமாகச்சொன்னால்,  “பீரண்ணன் கை பிரேதங்களாக” புரட்டப்படுகிறார்கள்.</p>
<p style="text-align: justify;">முரீதுகளுக்கு இயக்க வெறியூட்டி மந்திரித்து விடுவதால் ஆங்காங்கு பள்ளிகளில் அடிதடி,  கடைசியில் கைத்துப்பாக்கியும் களத்திற்கு வந்து காவு வாங்கிவிட்டது. இதை திருவிடச்சேரி திருவிளையாடல் என்று கூறலாம். ஒரு முஸ்லிமை கொன்றால் நிரந்தர நரகம் என்ற அடிப்படை அறிவில்லாதவர்களை நல்ல தவ்ஹீத் என்று சொல்லாமா? கள்ள தவ்ஹீத் என்றுதான் சொல்லமுடியும்.</p>
<p style="text-align: justify;">ஒரே ஒரு வார்த்தை. . . .  ஓஹோன்னு வாழ்க்கை. !</p>
<p style="text-align: justify;">அந்த வார்த்தை எது தெரியுமா? கலிமா ஷஹாதத். “அஷ்ஹது அன்லாயிலாஹா இல்லல்லாஹ் அஷ்ஹது அன்னமுஹம்மதுர் ரசூலில்லாஹ்”</p>
<p style="text-align: justify;">இந்த கலிமா சொன்ன மனிதர்களை அல்லாஹ்,  முஸ்லிம் என்ற அழகிய பெயரில் அழைக்கின்றான்.  ஆனால் கள்ள தவ்ஹீதுகளுக்கு முஸ்லிம் என்று சொல்வது கசப்பாக உளளது, அசிங்கப்படுகிறார்கள்,  முஸ்லிம் என்று சொல்ல வெட்கப்படுகிறார்கள். அவர்கள் தங்களுக்குத்தாங்களே புதிதாக வைத்துக்கொண்ட,  “ஸலபி”,  “தவ்ஹீத்” பெயரில் அழைக்கவே விரும்புகிறார்கள்.</p>
<p style="text-align: justify;">சவூதி அரேபியாவின் நீதித்துறை அமைச்சர், Dr. முஹம்மத் பின் அப்துல் கரீம் அல் ஈசா அவர்கள்,  ரியாத், இமாம் முஹம்மது பின் சவூத் இஸ்லாமிய பல்கலைகழகத்தில் பேசும்பொழுது,  “சலபியிசத்தை இஸ்லாமாக மொழிபெயர்கக்கூடாது. ஸலபி என்பது எடுத்து நடக்கவேண்டிய ஒன்று. அது ஒரு பெயரல்ல. ” என்று கூறியது கவனிக்கத்தக்கது. ( Salabism should not be interpreted as islam. Salabism is only a descriptive approach, not a name”.  &#8212;Arab News. 13, Feb. 2012. )</p>
<p style="text-align: justify;">இன்று ஸலபியும், தவ்ஹீதும் தனிப்பெயர் இயக்கங்களாகி மக்களை பிரிக்கின்றன.  முஸ்லிமும், தவ்ஹீதும் ஒன்றையொன்று பிரிக்கமுடியாத ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போன்றவை.  நாணயத்தில் கறை படிவதுபோல், ஒரு முஸ்லிமின் சொல்,  செயல்,  எண்ணங்களில்,  ஷிர்க்,  பித்அத், மாஷியத் போன்ற கறைகள் படியக்கூடும்.</p>
<p style="text-align: justify;">ஆயினும் எவர் உள்ளத்தில் கடுகளவு ஈமான் இருந்தாலும் அவர் வெற்றி பெற்றுவிடுவார். உள்ளத்தில் உள்ளதை அல்லாஹ் மட்டுமே அறிந்தவன். ஆகவே முஸ்லிம் என்று அல்லாஹ் வைத்த பெயரிலேயே ஒன்றுபடுவோம். அல்லாஹ்வின் அளப்பெரிய கருணையையும் மன்னிப்பையும் வேண்டியவர்களாக முஸ்லிம்களாகவே மரணிப்போம்.</p>
<p style="text-align: justify;">இயக்க ஆலிம்களின் தவ்ஹீத் எனும் பிரிவினை, செய்வினையில் சிக்கிவிடாமல் அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாக!</p>
<p style="text-align: justify;">“மெய்யாகவே எவர்கள் நம்பிக்கை கொள்கிறார்களோ அவர்களை மறுமையிலும், இம்மையிலும், (“கலிமா தையிப்”) உறுதிமிக்க இவ்வார்த்தையைக்கொண்டு அல்லாஹ் அவர்களை உறுதிப்படுத்துகிறான். . ” -அல் குர்ஆன். 14:27.</p>
<p style="text-align: justify;"><span style="color: #888888;"><span style="font-size: x-small;">S. ஹலரத் அலி, ஜித்தா</span></span></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.readislam.net/portal/archives/968/feed</wfw:commentRss>
		<slash:comments>7</slash:comments>
		</item>
		<item>
		<title>கணவரைத் தேர்ந்தெடுப்பதில் நன்கு ஆழமாகச் சிந்தியுங்கள்!</title>
		<link>http://www.readislam.net/portal/archives/4015</link>
		<comments>http://www.readislam.net/portal/archives/4015#comments</comments>
		<pubDate>Thu, 16 Feb 2012 02:26:22 +0000</pubDate>
		<dc:creator>ReadIslam.net</dc:creator>
				<category><![CDATA[பெண்மணிக்கு]]></category>

		<guid isPermaLink="false">http://www.readislam.net/portal/?p=4015</guid>
		<description><![CDATA[இஸ்லாம் பெண்ணைக் கண்ணியப் படுத்தியதிலும் சங்கை செய்திருப்பதிலும் முதன்மையாக விளங்குகிறது. ‘ஒரு பெண் தன் கணவரைத் தேர்ந்தெடுக்க முழு உரிமை பெற்றவள்&#8217; என்று கூறியிருப்பதே! தம் மகளை நிர்ப்பந்தம் செய்து அவள் விரும்பாத ஒருவருக்கு அவளை மணமுடித்து வைக்க எந்தப் பெற்றோருக்கும் இஸ்லாம் அனுமதி வழங்கவில்லை. இந்த உரிமையை ஒவ்வொரு நேர்வழி பெற்ற முஸ்லிம் பெண்ணும் நன்கு அறிந்து வைத்திருக்க வேண்டும். அதே நேரம் தம் பெற்றோரிடம் ஆலோசனை செய்து தமது வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதற்கும் ஒரு [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><a class="post_image_link" href="http://www.readislam.net/portal/archives/4015" title="Permanent link to கணவரைத் தேர்ந்தெடுப்பதில் நன்கு ஆழமாகச் சிந்தியுங்கள்!"><img class="post_image alignright remove_bottom_margin" src="http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQHz50gWiNsFkUnsNj5-UMpCyPlMWRQOeCVSmXHph7kdqKubBLkVg" width="275" height="183" alt="Post image for கணவரைத் தேர்ந்தெடுப்பதில் நன்கு ஆழமாகச் சிந்தியுங்கள்!" /></a>
</p><p style="text-align: justify;">இஸ்லாம் பெண்ணைக் கண்ணியப் படுத்தியதிலும் சங்கை செய்திருப்பதிலும் முதன்மையாக விளங்குகிறது.</p>
<p style="text-align: justify;">‘ஒரு பெண் தன் கணவரைத் தேர்ந்தெடுக்க முழு உரிமை பெற்றவள்&#8217; என்று கூறியிருப்பதே! தம் மகளை நிர்ப்பந்தம் செய்து அவள் விரும்பாத ஒருவருக்கு அவளை மணமுடித்து வைக்க எந்தப் பெற்றோருக்கும் இஸ்லாம் அனுமதி வழங்கவில்லை.</p>
<p style="text-align: justify;">இந்த உரிமையை ஒவ்வொரு நேர்வழி பெற்ற முஸ்லிம் பெண்ணும் நன்கு அறிந்து வைத்திருக்க வேண்டும். அதே நேரம் தம் பெற்றோரிடம் ஆலோசனை செய்து தமது வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதற்கும் ஒரு முஸ்லிம் பெண் கூச்சப்பட மாட்டாள் நாணம் கொள்ள மாட்டாள்.</p>
<p style="text-align: justify;">தம்மை மணமுடித்துக் கொள்ள எவராவது விரும்பினால் அது சம்பந்தமாக முதலில் தன் பெற்றோரிடம் கலந்தாலோசனை செய்துவிட்டே முடிவெடுப்பாள்.</p>
<p style="text-align: justify;">வாழ்க்கையின் தரத்தையும் மக்களின் தரத்தையும் தன்னைவிட தன் பெற்றோர்களே தெளிவாக அறிந்து வைத்திருப்பார்கள் என்பதை விளங்கி இருப்பாள். அதே சமயம் தனது தகப்பனின் பிடிவாதத்திற்கோ உலக ஆசைகளுக்கோ தன் உரிமை பறிக்கப்படுவதையும் ஏற்க மாட்டாள்.</p>
<p style="text-align: justify;">சில சமயங்களில் அவளுக்குப் பிடிக்காத ஒருவனை மணமுடித்து வைக்க தகப்பன் நிர்ப்பந்திக்கக் கூடும். அந்த நிலையிலும் பெண்ணாகிய அவளிடம்தான் முடிவெடுக்கிற உரிமை உண்டு என்பதற்கு பலமான மார்க்க ஆதாரம் இருக்கிறது. இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் கன்ஸா பின்த் கிதாம் (ரழி) அவர்கள் மூலமாக அறிவிக்கும் ஓர் அறிவிப்பே அந்த ஆதாரம்.</p>
<p style="text-align: justify;">கன்ஸா பின்த் கிதாம் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்:</p>
<p style="text-align: justify;">‘‘என்னை எனது தந்தை தன் சகோதரன் மகனுக்குத் திருமணம் முடித்து வைத்தார். ஆனால் நான் அந்தத் திருமணத்தை விரும்பவில்லை. எனக்கு அது வெறுப்பாகவே இருந்தது. இதைப்பற்றி நான் நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டேன். அதற்கு அவர்கள் ‘‘உனது தந்தை செய்ததை நீ ஏற்றுக்கொள் பொருந்திக் கொள்!&#8221; என்றார்கள். நானோ ‘எனது தந்தையின் செயல் எனக்குப் பிடிக்கவில்லை&#8217; என்பதாக மறுத்து விட்டேன்.</p>
<p style="text-align: justify;">நபி (ஸல்) அவர்கள்</p>
<p style="text-align: justify;">‘‘அப்படியானால் நீ செல்லலாம் இந்தத் திருமணம் ஆகுமான  திருமணம் அல்ல இது செல்லாது நீ விரும்பியவரை மணம் முடித்துக் கொள்ள உனக்கு உரிமை இருக்கிறது!&#8221; என்று கூறி என் திருமணத்தை ரத்து செய்தார்கள். எனினும் நான்‘‘அல்லாஹ்வின் தூதரே! எனது தந்தை செய்ததை ஏற்றுக் கொண்டேன். இருப்பினும் பெண்கள் விஷயத்தில் அவர்களின் பெற்றோர்களுக்கு (நிர்ப்பந்திக்க) எந்த அதிகாரமும் இல்லை என்பதை வெளிப்படுத்தவே இப்படி விசாரித்தேன். பெண்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு செய்தேன்&#8221; என்று தெரிவித்தேன். (ஸஹீஹுல் புகாரி)</p>
<p style="text-align: justify;">அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த நிகழ்ச்சியில் அந்தப் பெண்ணுக்கு முதலில் என்ன உபதேசம் செய்தார்கள் என்பதைக் கவனிக்க வேண்டும்.</p>
<p style="text-align: justify;">‘‘தந்தையின் செயலை ஏற்றுக்கொள்! பொருந்திக் கொள்!&#8221; என்று உபதேசித்தார்கள். ஆம்! இதுதான் உண்மை. பொதுவாக பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் நல்லபடி வாழ வேண்டும் என்றும் வெற்றிகரமான வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்றே விரும்புவார்கள். ஆனாலும் நபி (ஸல்) அவர்கள் அந்தப் பெண்ணுக்கு அவர் விரும்பாத ஒருவரை அவரது பெற்றோர் மணமுடித்து வைத்துள்ளார்கள் என்பதை உணர்ந்தவுடன் ‘தன் கணவனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் அதிகாரத்தை&#8217; அவருக்கு முழுமையாக வழங்கி விட்டார்கள். அதுமட்டுமின்றி அநியாயக்காரத் தந்தை தன் பெண்ணுக்கு இழைக்கிற அநீதத்தை விட்டும் பாதுகாப்பு வழங்கினார்கள்.</p>
<p style="text-align: justify;">இஸ்லாம் பெண்ணுக்குச் சிரமத்தை அளிக்கவோ தான் விரும்பாத ஒருவரோடு அவள் வாழ்வதையோ விரும்பவில்லை. காரணம் திருமணம் என்பது வெற்றிகரமானதாகவும் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஓர் உறுதியான பொருத்தம் கொண்டதாகவும் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறது. மேலும் தம்பதியர் இருவரும் அவர்களின் ஆசையிலும் இயற்கைப் பண்பாடுகளிலும் தோழமையிலும நோக்கங்களிலும் ஒருவர் மற்றவருக்கு நிகரானவராக மனமொப்பி வாழவேண்டும் எனவும் விரும்புகிறது.</p>
<p style="text-align: justify;">இப்படிப்பட்ட இல்லறக் கோட்டையை நிர்மாணிப்பதில் இடையூறு ஏற்பட்டு விட்டால்&#8230; கணவன் மனைவி இருவரின் வாழ்க்கையும் சுவையாக இல்லை என்றால்&#8230; தன் கணவனிடம் இருந்து அன்பையும் மனத்தூய்மையையும வாக்குறுதியை நிறைவேற்றுகிற நேர்மையையும் ஒரு பெண் பார்க்க முடியவில்லை என்றால்&#8230; கணவனால் இறைமறுப்புக்கு ஆளாகிவிடுவோம் என்று பயந்தால்&#8230; கணவனைக் கொண்டு இறைக் கட்டளைகளை அமல் செய்ய முடியாது என்ற நிலைக்கு வந்துவிட்டால் அப்போது அந்தப் பெண தனது கணவனிடமிருந்து விவாகரத்து கோருவதற்கும் இஸ்லாம் அனுமதிக்கிறது. இதை நபி (ஸல்) அவர்கள் உறுதிப்படுத்தி இருக்கிறார்கள்.</p>
<p style="text-align: justify;">ஸாபித் பின் கைஸ் (ரழி) என்ற நபித்தோழன் மனைவி, நபியவர்களிடம் வந்தார். அவரது பெயர் ‘ஜமீலா&#8217; என்பதாகும். (இவர் அப்துல்லாஹ் இப்னு உபை உடைய சகோதராவார்.) ‘‘அல்லாஹ்வின் தூதரே! என் கணவர் ஸாபித் பின் கைஸின் குணத்தையோ மார்க்கப் பற்றையோ நான் குறை கூறவில்லை. ஆனால நான் இஸ்லாமில் இருந்து கொண்டே நிராகரிப்புக்குரிய செயலைச் செய்து விடுவேனோ என்று பயப்படுகிறேன்&#8221; என்றார்.</p>
<p style="text-align: justify;">அதாவது நல்லவரான தன் கணவருடன் வெளியுலகத்தில் மனைவியாக வாழ்ந்து கொண்டு மனதளவில் அவரை வெறுத்துக் கொண்டு இரட்டை வேடம் போடுவதை தாம் விரும்பவில்லை என்பதைச் சூசகமாகச் சொன்னார். அல்லது  நல்லவரான தம் கணவரை வெறுத்த நிலையிலேயே தொடர்ந்து வாழ்ந்து வந்தால எங்கே தாம் நிராகரிப்பாளர்களின் செயல்களில் சிக்கிவிடுவோமோ என்று அஞ்சுவதாகத் தெரிவித்தார்.</p>
<p style="text-align: justify;">அப்போது நபி (ஸல்) அவர்கள்</p>
<p style="text-align: justify;">‘‘ஸாபித் உனக்கு மஹராக &#8211; மணக்கொடையாக அளித்த தோட்டத்தை நீ அவருக்கே திருப்பித் தந்துவிடுகிறாயா?&#8221; என்று கேட்டார்கள். அதற்கு அவர் ‘‘ஆம் அல்லாஹ்வின் தூதரே! நான் அதைத் திருப்பிக் கொடுத்து விடுகிறேன்&#8221; என்றார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள தமது தூதர் ஒருவரை ஸாபித் பின் கைஸிடம் அனுப்பி ‘‘நீ அவருக்கு (ஜமீலாவுக்கு) கொடுத்த தோட்டத்தை ஏற்றுக் கொண்டு அவரைத் தலாக் சொல்லிவிடு!&#8221; என்று கூறி விட்டார்கள்.</p>
<p style="text-align: justify;">ஸஹீஹுல் புகாரியின் மற்றோர் அறிவிப்பில அந்தப் பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் முறையிடும் போது</p>
<p style="text-align: justify;">‘‘அல்லாஹ்வின் தூதரே! நான் ஸாபித் பின் கைஸ் பின் ஷம்மாஷ் (ரழி) அவர்களுடைய மார்க்கப் பற்றையோ  குணத்தையோ குறை சொல்லவில்லை. எனினும் அவரைச் சகித்துக் கொண்டு என்னால் வாழ முடியவில்லை&#8221; என்று கூறியதாக வந்துள்ளது. (ஸஹீஹூல் புகாரி)</p>
<p style="text-align: justify;">இஸ்லாம் பெண்ணுக்குரிய மனித உரிமையைப் பாதுகாக்கிறது அவளுடைய கண்ணியத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது. ஒரு கணவரைத் தேர்ந்தெடுப்பதில் அவளுக்குரிய உரிமையை மதிக்கிறது. அவளுக்குப் பிடிக்காத ஓர் ஆணுக்கு அவளை மணமுடித்து வைக்க தந்தையோ வேறு நெருங்கிய உறவினர்களோ யார் முயன்றாலும் அதைத் தடை செய்கிறது. இதற்கு பரீரா (ரழி) அவர்களது சம்பவம் இன்னுமோர் ஆதாரமாகும்.</p>
<p style="text-align: justify;">பரீரா (ரழி) அவர்கள் ஓர் ஹபஷி (நீக்ரோ) அடிமைப் பெண்ணாக இருந்தார்கள். அவரை அபூலஹபின் மகன் உத்பா சொந்தமாக்கி இருந்தான். தனக்கு அடிமையாக இருந்த காலத்தில் முஃகீஸ் என்ற ஓர் அடிமைக்கு பரீராவைக் கட்டாயப்படுத்தி மணமுடித்து வைத்துவிட்டான்.</p>
<p style="text-align: justify;">பரீரா (ரழி) அவர்களுக்கோ அந்தத் திருமணத்தில் சிறிதும் விருப்பம் இல்லை. தம் கணவரைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் அவருக்கு இருந்திருந்தால நிச்சயமாக முஃகீஸை ஏற்றுக் கொண்டிருக்க மாட்டார். இந்த நிலையில் ஆயிஷா (ரழி) அவர்கள் பரீராவின் மீது கருணை காட்டி அவரை விலைக்கு வாங்கி உரிமையிட்டு விட்டார்கள் விடுதலை செய்து விட்டார்கள்.</p>
<p style="text-align: justify;">தான் சுதந்தரமாகி விட்டதை உணர்ந்த பரீரா இனி தமது மண வாழ்க்கையின் நிலைமையையும் முடிவையும் தீர்மானிப்பதில தமக்கு மார்க்கம் வழங்கியிருக்கும் முழு உரிமையையும் நன்கு விளங்கிக் கொண்டார். உடனே தம் கணவடமிருந்து விவாகரத்துப் பெறுவதை நாடினார். இதையறிந்த முஃகீஸ்</p>
<p style="text-align: justify;">‘‘பரீராவே! என்னை ஏற்றுக்கொள் ஏற்றுக்கொள்!&#8221; என்றவாறு அவர் பின்னாலேயே சுற்றிக் கொண்டிருந்தார்.</p>
<p style="text-align: justify;">இமாம் புகாரி (ரஹ்) அவர்கள இந்தச் செய்தியை இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் மூலம் அறிவிக்கிறார்கள். அதில் இப்னு அப்பாஸ் (ரழி) கூறுகிறார்கள்:</p>
<p style="text-align: justify;">‘‘பரீராவின் கணவர் அடிமையாக இருந்தார். அவருக்கு முஃகீஸ் என்று (பெயர்) சொல்லப்படும். அவர் (பரீரா தம்மை பிரிந்து விட நினைக்கிறார் என்பதை அறிந்த போது) தமது தாடியில் கண்ணீர் வழியும் அளவிற்கு அழுத வண்ணம் பரீராவிற்குப் பின்னால் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்ததை இப்போதும் நான் பார்ப்பதைப் போன்றுள்ளது. அப்போது நபி (ஸல்) அவர்கள் (எனது தந்தையான) அப்பாஸ் (ரழி) அவர்களிடம ‘‘அப்பாஸ் அவர்களே! முஃகீஸ் பரீராவின் மீது வைத்துள்ள நேசத்தையும பரீரா முஃகீஸின் மீது கொண்டுள்ள வெறுப்பையும் கண்டு நீங்கள் வியப்படையவில்லையா?&#8221; என்று கேட்டார்கள்.</p>
<p style="text-align: justify;">மேலும முஃகீஸ் (ரழி) அவர்களின் நிலைமையைப் பார்த்து</p>
<p style="text-align: justify;">‘‘முஃகீஸை நீ மீண்டும் ஏற்றுக்கொள்ளலாமல்லவா?&#8221; என்று பரீராவிடமும் சொன்னார்கள். அதற்கு பரீரா ‘‘அல்லாஹ்வின் தூதரே! எனக்குத் தாங்கள் கட்டளை இடுகின்றீர்களா?&#8221; எனக் கேட்டார். நபி (ஸல்) அவர்கள் ‘‘இல்லை இல்லை! நான் சிபாரிசு செய்(யவே விரும்பு)கின்றேன்&#8221; என்றார்கள். அப்போது பரீரா ‘‘(அப்படியானால) அவர் எனக்குத் தேவையில்லை!&#8221; என்று கூறிவிட்டார். (ஸஹீஹுல் புகாரி)</p>
<p style="text-align: justify;">இந்த நபிவழிச் செய்தியின் வாயிலாக ஒரு சுதந்தரமான பெண் தனக்குப் பிடிக்காத கணவரை விட்டுப் பிரிந்து விடுவதில மார்க்கம் எந்த அளவிற்கு அனுமதித்துள்ளது என்பதை அறிகிறோம்.</p>
<p style="text-align: justify;">இன்னும் உள்ளத்தை உருக்கக்கூடிய இக்கட்டான நிலையில் நபியவர்கள் சிக்கியிருந்ததையும் உணர முடிகிறது. ஒரு பக்கம தம் மனைவியை ஆழமாக நேசிக்கும் கணவர் மறுபக்கம் கொஞ்சமும் சமரசத்திற்கு இணங்கி வராதபடி தன் கணவரை வெறுக்கும் மனைவி!</p>
<p style="text-align: justify;">இங்கு நபி (ஸல்) அவர்களால் முயன்ற ஒரே விஷயம்</p>
<p style="text-align: justify;">‘‘பரீராவே! முஃகீஸை மீட்டுக்கொள்ள முடியாதா? அவர் உனக்குக் கணவராக உன் குழந்தைக்குத் தந்தையாக இருந்தால்லையா?&#8221; என்று சிபாரிசு செய்தது மட்டுமே!</p>
<p style="text-align: justify;">இந்த இடத்தில் இறையச்சமுள்ள பெண்ணான பரீராவைப் பற்றியும் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். நபி (ஸல்) அவர்கள் கூறுவதைக் கேட்டவுடன்</p>
<p style="text-align: justify;">‘‘அல்லாஹ்வின் தூதரே! இது உங்களது கட்டளையா? அல்லது சிபாரிசா? &#8211; கட்டளை என்றால் இதோ&#8230; உடனே கட்டுப்படுகிறேன்&#8221; என்று தனது கீழ்ப்படிதலை வெளிப்படுத்துகிறார். ஆயினும் நபியவர்கள் தங்களது கருத்தை தெரிவித்தவுடன் பரீரா தன் இறுதி முடிவைச் சொல்லி விடுகிறார்.</p>
<p style="text-align: justify;">தங்களது பெண் பிள்ளைகள் மீது வரம்புமீறி நிர்ப்பந்தம் செய்து அவர்கள் விரும்பாத ஆணுக்கு அநியாயமாக மணமுடித்து வைக்கிற பெற்றோர்கள நபி (ஸல்) அவர்களின் அழகிய நடைமுறையை விளங்கிக் கொள்ள வேண்டும்.</p>
<p style="text-align: justify;">மார்க்கத்தைப் பேணி நடக்க விரும்புகிற நல்ல முஸ்லிமான பெண்களுக்கு ஒரு நிலையான நிரந்தரமான அழகிய அளவுகோல்கள் இருக்கின்றன. அந்த அளவுகோல்களைக் கொண்டே ஒரு முஸ்லிமான பெண் தனது வருங்காலக் கணவரைத் தேர்ந்தெடுக்கின்றாள்.</p>
<p style="text-align: justify;">நம்பிக்கை (ஈமான்) கொண்ட பெண வெறுமனே வெளிரங்க அழகைக் கொண்டோ கவர்ச்சியைக் கொண்டோ உயர்ந்த பதவிகளைப் பார்த்தோ செல்வச் செழிப்பை வைத்தோ மட்டும் அந்தப் பெண் தனது கணவரைத் தேர்ந்தெடுப்பது கிடையாது. மாறாக தான் தேர்ந்தெடுக்கப்படுகிற கணவரிடம் உறுதியான மார்க்கப் பற்றும் நல்ல குணங்களும் இருக்கின்றதா என்று தெளிவாகத் தெரிந்த பின்பே தேர்ந்தெடுப்பாள். இவை இரண்டுதான் வெற்றிகரமான இல்லறத்தின் தூண்களாகவும் கணவரை அலங்கரிக்கக் கூடிய ஆபரணங்களாகவும் இருக்கின்றன. அதனால்தான் நபி (ஸல்) அவர்கள ஆண் பெண் இருவரும் தங்களது துணையைத் தேர்ந்தெடுக்கும் போது உன்னிப்பாக கவனிக்க வேண்டிய இரண்டு தகுதிகளாக மார்க்கப்பற்றையும் நல்ல குணத்தையும் குறிப்பிட்டார்கள்.</p>
<p style="text-align: justify;">‘‘எவருடைய மார்க்கப்பற்றைக் குறித்தும் ஒழுக்கப் பண்பாட்டைக் குறித்தும் உங்களுக்குத் திருப்தியாக உள்ளதோ அவர் திருமணச் சம்பந்தம் வைத்துக் கொள்வதற்குத் தூது அனுப்பினால் அவருக்குத் திருமணம் செய்து கொடுங்கள். நீங்கள் அப்படிச் செய்யவில்லையானால் சமுதாயத்தில் குழப்பமும் சீர்குலைவுமே ஏற்படும்&#8221; என்று எச்சரித்தார்கள். (ஜாமிவுத் திர்மிதி, ஸுனன் இப்னு மாஜா)</p>
<p style="text-align: justify;">எப்படி ஒரு முஸ்லிமான ஆண</p>
<p style="text-align: justify;">‘(வெளி அழகால்) தன்னைக் கவர்கிறாளே&#8217; என்ற ஒரே காரணத்திற்காக குணத்தால் கெட்ட ஒருத்தியை மணக்க மாட்டாரோ அதுபோலவே ஒரு முஸ்லிமான பெண்ணும் வெளி அழகு மட்டுமே கொண்ட மார்க்கப் பற்றில்லாத வாலிபரையும் மணக்க மாட்டாள்.</p>
<p style="text-align: justify;">நல்ல ஒழுக்கமுள்ள  பண்புள்ள கற்பைப் பேணும் நடத்தையுள்ள அழகிய மார்க்கமுள்ள ஒரு வாலிபரே ஓர் உண்மையான முஸ்லிம் பெண்மணியைக் கவர முடியும்.</p>
<p style="text-align: justify;">நம்பிக்கையுள்ள தூய்மையான வாலிபப் பெண்ணுக்கு ஒரு நம்பிக்கையுள்ள தூய்மையான வாலிபரே தகுதியுள்ள கணவராக இருக்க முடியும். இவ்வாறே ஓர் ஒழுக்கமற்ற வழிகெட்ட வாலிபப் பெண்ணுக்கு அவளைப் போலவே ஒழுக்கமற்ற வழிகெட்ட வாலிபனே தகுதியாக முடியும். இதை அல்லாஹ் இப்படிக் கூறுகிறான்:</p>
<p style="text-align: justify;">கெட்ட பெண்கள் கெட்ட ஆண்களுக்கும் கெட்ட ஆண்கள் கெட்ட பெண்களுக்கும் இன்னும்: நல்ல தூய்மையுடைய பெண்கள், நல்ல தூய்மையான ஆண்களுக்கும் நல்ல தூய்மையான ஆண்கள் நல்ல தூய்மையான பெண்களுக்கும் (தகுதியானவர்கள்.) அவர்கள் கூறுவதை விட்டும் இவர்களே தூய்மையானவர்கள். இவர்களுக்கு மன்னிப்பும், கண்ணியமான உணவுமுண்டு.  (அன்னூர் 24:26)</p>
<p style="text-align: justify;">இங்கு ஒன்றை மறந்து விடக்கூடாது. அதாவது தான் தேர்ந்தெடுக்கிற ஆண் சிறிதும் அழகற்றவராக கோரமாக இருந்தாலும் மார்க்கப்பற்றுக்காக அவரைத்தான் மணந்தாக வேண்டும் என்ற நிர்ப்பந்தமும் ஒரு முஸ்லிமான பெண்ணுக்கு இல்லை. அவள் எதிர்பார்க்கும் அழகையும் மனதை நிரப்பும் செழிப்பையும் பெற்ற ஆணை மணக்க அவளுக்கு முழு உரிமையும் உண்டு. அதே சமயம் வெளித்தோற்றத்திற்கு அதிகப்படியான முக்கியத்துவத்தைக் காட்டி  உள்ளரங்கமான நற்குணங்களை அலட்சியப்படுத்தி விடவும் கூடாது.</p>
<p style="text-align: justify;">ஒரு முஸ்லிம் பெண்மணி தனது தனித்தன்மைக்கும் மனதிற்கும் உகந்த ஆணை மணமுடிப்பதுடன தனது கணவர் தன் மீது முழு அதிகாரம் பெற்ற நிர்வாகி என்பதையும் புரிந்து வைத்திருப்பாள்.</p>
<p style="text-align: justify;">அல்லாஹ் கூறுகிறான்:</p>
<p style="text-align: justify;">அல்லாஹ் சிலரை சிலரைவிட மேன்மைப்படுத்தி வைத்திருக்கிறான். (ஆண்கள்) தங்கள் சொத்துகளிலிருந்து (பெண் பாலாருக்காகச்) செலவு செய்து வருவதினாலும், ஆண்கள் பெண்களை நிர்வகிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர். எனவே நல்லொழுக்கமுடைய பெண்கள் (தங்கள் கணவன்மார்களிடம்) விசுவாசமாகவும், பணிந்தும் நடப்பார்கள். (அன்னிஸா 4:34)</p>
<p style="text-align: justify;">எனவே ஒரு முஸ்லிம் பெண்மணி எப்படிப்பட்ட ஆணைத் தனக்குக் கணவராகத் தேர்ந்தெடுக்க விரும்புவாள் என்றால் அவள் தேர்ந்தெடுத்த கணவர் அவளை நிர்வகிப்பதால் அவள் கண்ணியத்தையும் மரியாதையையும் அடைய வேண்டும் அந்தக் கணவருடன் வாழ்வதைக் கொண்டு அவள் மகிழ்ச்சியுற வேண்டும்.</p>
<p style="text-align: justify;">‘இவனைப் போய் மணமுடித்துக் கொண்டோமே!&#8217; என்று நாளை புலம்புகிற நிலைக்கு அவள் ஆகிவிடக்கூடாது.</p>
<p style="text-align: justify;">கரங்களைக் கோர்த்து நம்பிக்கையுடன் தொடங்குகிற இல்லற வாழ்க்கையில் இஸ்லாம் விரும்புவதெல்லாம் அது காட்டிய நெறியின்படி வாழ வேண்டும் என்பதுதான்.</p>
<p style="text-align: justify;">கணவன் மனைவி இருவரும் மனித குலத்துக்கு இஸ்லாம் விடுக்கிற செய்தியை எடுத்துரைக்க வேண்டும் முழுமையான முஸ்லிம் குடும்பத்தை உருவாக்க வேண்டும் தூய்மையான சந்ததியை உருவாக்குவதிலும அதற்கு நல்ல அறிவைப் புகட்டுவதிலும சிறந்த சிந்தனைகளைத் தங்கள் பிள்ளைகளிடம் விதைப்பதிலும் இணைந்து செயல்பட வேண்டும்.</p>
<p style="text-align: justify;">இந்த முயற்சியில் ஒருவருக்கொருவர் அன்புடனும் நெருக்கத்துடனும் இணங்கி செயல்பட வேண்டும். இருவரின் போக்கிலும் முரண்பாடுகளோ குண மாறுதல்களோ ஏற்பட்டுவிடக் கூடாது. இயற்கையிலும் பண்பாட்டிலும் வித்தியாசங்கள் உண்டாகி விடக்கூடாது. மார்க்கப்பற்றில் கோளாறு வந்து விடக்கூடாது.</p>
<p style="text-align: justify;">ஓர் இறை நம்பிக்கையுள்ள ஆணும் பெண்ணும் ஒரு மகா சமுத்திரத்தில அருகருகே இணைந்து சென்று கொண்டிருக்கிற இரண்டு ஓடங்களைப் போன்றவர்கள் ஆவர். எனவே இருவரும் வெவ்வேறு திசைகளில் பயணிக்காமல் ஒன்றிணைந்து செயல்பட்டால்தான் இஸ்லாம் விரும்புகிற இல்லறத்தை நடத்திக் காட்ட முடியும்.</p>
<p style="text-align: justify;">இஸ்லாம் என்பது உலக மக்களுக்கு அல்லாஹ் எடுத்துச் சொல்ல விரும்பும் நேர்வழியின் தூதுத்துவ செய்தியாகும். அதை ஒவ்வோர் ஆண் பெண் மீதும் அமானிதமாகச்&#8221; (&#8220;அமானிதம் &#8211; அடைக்கலம்) சுமத்தியிருக்கிறான். இதையே தனது சங்கைமிகு நூலில் கூறும்போது&#8230;.</p>
<p style="text-align: justify;">நிச்சயமாக முஸ்லிமாகிய ஆண்களும் பெண்களும் நம்பிக்கையாளரான ஆண்களும் பெண்களும் (இறைவனுக்கு) வழிப்படும் ஆண்களும் பெண்களும உண்மையே கூறும் ஆண்களும் பெண்களும பொறுமையுள்ள ஆண்களும் பெண்களும (அல்லாஹ்வுக்குப்) பயந்து நடக்கும் ஆண்களும் பெண்களும தானம் செய்யும் ஆண்களும் பெண்களும நோன்பு நோற்கும் ஆண்களும் பெண்களும கற்புள்ள ஆண்களும் பெண்களும அல்லாஹ்வுடைய பெயரை அதிகமாக நினைவுகூரும் ஆண்களும் பெண்களும் ஆகிய இவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான கூலியையும் தயார்ப்படுத்தி வைத்திருக்கின்றான். (அல்அஹ்ஸாப் 33:35)</p>
<p style="text-align: justify;">ஆகவேää வாழ்க்கைப் பயணத்தை நல்ல முறையில் தொடங்குவதற்கும சரியான இலக்கை நோக்கி நகர்த்துவதற்கும் திருமண உறவு பலமிக்கதாக இருக்க வேண்டும். குடும்பத்தின் தூண்களை உறுதிப்படுத்த வேண்டும். பாதுகாப்பான அஸ்திவாரத்தின் மீது அந்தக் குடும்பம் நிலைபெற வேண்டும். பாதுகாப்பான அஸ்திவாரம் என்பது ஒன்றை அழகிய முறையில் தேர்ந்தெடுப்பதே!</p>
<p style="text-align: justify;">எத்தனையோ நல்ல முஸ்லிம் பெண்மணிகள் இருக்கிறார்கள். அவர்களின் உயர்ந்த நோக்கங்களும் தனித்தன்மைகளும் மிகச் சிறப்பானவை. கணவரைத் தேர்ந்தெடுப்பதில் அவர்கள் காட்டுகிற ஒரு தொலைநோக்குப் பார்வை உண்மையில் பாராட்டுக்குரியது.</p>
<p style="text-align: justify;">இத்தகையோல் ஒருவராகத்தான் உம்மு ஸுலைம் பின்த் மில்ஹான் (ரழி) அவர்களை அறிகிறோம். அன்ஸாப் பெண்களிலேயே மிக விரைந்து இஸ்லாமைத் தழுவிய பெண்களில் இவரும் ஒருவர்.</p>
<p style="text-align: justify;">உம்மு ஸுலைம் (ரழி) அவர்கள் இஸ்லாமைத் தழுவிய காலத்தில்</p>
<p style="text-align: justify;">‘மாலிக் பின் நழ்ர்&#8217; என்பவருக்கு மனைவியாக இருந்தார்கள். (உம்மு ஸுலைமுக்கு மாலிக் பின் நழ்ரு மூலமாக பிறந்தவரே அனஸ் (ரழி).)</p>
<p style="text-align: justify;">உம்மு ஸுலைம் (ரழி) இஸ்லாமை ஏற்றது மாலிக் பின் நழ்ருக்குப் பிடிக்கவில்லை. எனவே உம்மு ஸுலைமை வெறுத்து விலகிவிட்டார்.</p>
<p style="text-align: justify;">தன் கணவர் தன்னை ஆதரவின்றி விட்டுவிட்டாரே என்பதற்காக உம்மு ஸுலைம் (ரழி) இஸ்லாமைத் துறந்து விடவில்லை விட்டுக் கொடுத்து விடவில்லை. மாறாக இஸ்லாமில் உறுதியாக நிலைத்திருந்தார்.</p>
<p style="text-align: justify;">சில காலங்கள் கழிந்தன. மாலிக் இறந்துவிட்ட செய்தி உம்மு ஸுலைம் (ரழி) அவர்களுக்குக் கிடைத்தது. அப்போது நபியவர்களுக்குப் பணிவிடை புரியுமாறு பத்து வயதே நிரம்பியிருந்த தனது மகன் அனஸை நபியவர்களிடம் ஒப்படைத்து விட்டிருந்தார்கள்.</p>
<p style="text-align: justify;">கணவரை இழந்த உம்மு ஸ{லைம் (ரழி) அவர்களுக்கு இளம் வயதுதான். இந்த நிலையில மதீனாவில் மிகப்பெரும் செல்வந்தராகவும் அழகிய தோற்றமிக்கவராகவும் நன்கு பிரசித்தி பெற்றவராகவும் இருந்த ஒருவர் உம்மு ஸுலைமை மணமுடிக்க முன்வந்தார். அவரது பெயர்தான்</p>
<p style="text-align: justify;">‘அபூதல்ஹா&#8217;.</p>
<p style="text-align: justify;">அபூதல்ஹா (ரழி) அவர்கள் அப்போது முஸ்லிமாகவில்லை. எனினும மதீனத்துப் பெண்கள் மத்தியில் அதிகமாகப் பேசப்பட்டு பலரின் உள்ளங்களைக் கவர்ந்தவராக இருந்தார். தான் உம்மு ஸுலைமை மணமுடித்துக் கொள்ள விரும்புவதைத் தெரியப்படுத்தினால் அதை அவர் உடனே விரும்பி சந்தோஷப்பட்டு மனமாற ஏற்றுக்கொள்வார் என்று நினைத்திருந்தார். ஆனால் உம்மு ஸுலைமைச் சந்தித்து அவரது பதிலைக் கேட்ட போதோ அபூதல்ஹாவுக்குப் பெரியதோர் அதிர்ச்சியாக இருந்தது.</p>
<p style="text-align: justify;">உம்மு ஸுலைம் (ரழி) அவர்கள் கேட்டார்கள்:</p>
<p style="text-align: justify;">‘‘ஓ&#8230; அபூதல்ஹாவே! நீ வணங்கக் கூடிய தெய்வம் என்னவென்று பார்த்தீரா? அது பூமியிலிருந்து முளைக்கக் கூடிய ஓர் அற்ப மரம். அதை ஹபஷி அடிமை ஒருவன் சிலையாகச் செதுக்கினான்&#8221;.</p>
<p style="text-align: justify;">இதற்கு அபூதல்ஹா</p>
<p style="text-align: justify;">‘‘ஆம் அப்படித்தான்!&#8221; என்று ஆமோதித்தார். உடனே உம்மு ஸுலைம் (ரழி)‘‘அபூதல்ஹாவே! என்ன உமக்கு வெட்கமாக இல்லையா? பூமியிலிருந்து முளைத்த ஒரு மரத்திற்கு ஹபஷி ஒருவன் உருவம் கொடுத்தான். அதைப்போய் வணங்குகிறீரே? அதற்குச் சிரம் பணிகிறீரே?&#8221; என்று அறிவுரை கூறினார்.</p>
<p style="text-align: justify;">இதைக் கேட்டு அபூதல்ஹா சற்று சுதாரித்துக் கொண்டு உம்மு ஸுலைம் (ரழி) அவர்களுக்கு ஆசைட்டும் விதமாக</p>
<p style="text-align: justify;">‘‘உம்மு ஸுலைமே! உமக்கு ஓர் உயர்ந்த வாழ்க்கையைத் தருகிறேன் பெரும் மஹரையும் கொடுத்து மணமுடித்துக் கொள்கிறேன்&#8221; என்றார். ஆனாலும் உம்மு ஸுலைம் (ரழி) அவர்கள ‘‘இல்லை ஒருக்காலும் நான் உம்மை ஏற்றுக் கொள்ளமாட்டேன்&#8221; என்று உறுதியாக மறுத்து விட்டார்.</p>
<p style="text-align: justify;">மேலும் கூறினார்:</p>
<p style="text-align: justify;">‘‘அப10தல்ஹாவே! உம்மைப் போன்ற ஓர் ஆணை யாரும் திரும்ப அனுப்பமாட்டார் ஏற்றுக் கொள்ள மறுக்க மாட்டார் ஆனால நீரோ ஏக இறைவனை நிராகரிக்கக் கூடிய காஃபிராக &#8211; நிராகரிப்பாளராக இருக்கிறீர் நானோ ஒரு இஸ்லாமியப் பெண்! உம்மை மணமுடித்துக் கொள்ள எனது மார்க்கத்தில் எனக்கு அனுமதியில்லை. நீர் இஸ்லாமை ஏற்றுää நம்பிக்கை கொண்டால அதையே எனக்குரிய மஹராக ஏற்று நான் உம்மை மணமுடித்துக் கொள்கிறேன் அதைத் தவிர வேறு எதுவும் எனக்கு வேண்டாம்&#8221; என்று தெளிவாகத் தெரிவித்து விட்டார்கள். (ஸுனனுன் அந்நஸாம்)</p>
<p style="text-align: justify;">திரும்பிச் சென்ற அபூதல்ஹா மீண்டும் இரண்டாவது முறையாக உம்மு ஸுலைமிடம் வந்து முன்பு கூறியதைவிட அதிகமான மஹரைத் தருவதாகக் கூறினார்.</p>
<p style="text-align: justify;">இப்போதும் உம்மு ஸுலைம் (ரழி) அவர்கள் கண்டிப்பாக மறுத்து விட்டார்கள். அவர்களின் வைராக்கியம் (மனஉறுதி) அபூதல்ஹாவின் உள்ளத்தில் உம்மு ஸுலைமின் மீது நேசத்தையும் அன்பையுமே அதிகப்படுத்தியது. உம்மு ஸுலைம் (ரழி) அவர்கள் மீண்டும் சொன்னார்கள்:</p>
<p style="text-align: justify;">‘‘அபூதல்ஹாவே! ஓர் அற்ப மரத்திலிருந்து அடிமை ஒருவன் செதுக்கியதையே நீர் தெய்வமாக வணங்குகிறீர் அதற்கு தீ மூட்டினால் எரிந்து சாம்பலாகி விடும். இது உமக்குத் தெரியாதா?&#8221;</p>
<p style="text-align: justify;">இந்த ஞானமிக்க பேச்சு அபூதல்ஹாவின் உள்ளத்தில் ஆழமாக இறங்கியது. தன் மனதிற்குள்ளேயே</p>
<p style="text-align: justify;">‘‘என்ன&#8230; கடவுளை எரிக்க முடியுமா? எரிந்து சாம்பலானால் அது கடவுளாகத்தான் இருக்க முடியுமா?&#8221; என்று கேட்டுக் கொண்டார். பின் அதே இடத்தில் தம் நாவை அடக்க முடியாமல ‘‘நான் சாட்சி சொல்கிறேன் வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை! இன்னும சாட்சி சொல்கிறேன் முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதரும் அடியாரும் ஆவார்கள்&#8221; என்று மொழிந்து இஸ்லாமை ஏற்றுக் கொண்டார். உடனே உம்மு ஸுலைம் (ரழி) அவர்களின் உள்ளத்தில் மகிழ்ச்சியும் மலர்ச்சியும் பொங்கின. தம் மகன் அனஸ் (ரழி) அவர்களை நோக்கி ‘‘அனஸே! எழு தயாராகு உனது தாய் உம்மு ஸுலைமை அபூதல்ஹாவுக்கு மணமுடித்து வை!&#8221; என்று கூறினார்கள்.</p>
<p style="text-align: justify;">அனஸ் (ரழி) அவர்கள சாட்சிகளை வரவழைத்து தமது தாயை அபூதல்ஹா (ரழி) அவர்களுக்கு மணமுடித்துக் கொடுத்தார்கள். அந்தத் தருணத்தில் அபூதல்ஹா (ரழி) அவர்கள் அடைந்த ஆனந்தத்தை எப்படித்தான் வருணிக்க!</p>
<p style="text-align: justify;">தமது செல்வம் அனைத்தையும் உம்மு ஸுலைம் (ரழி) அவர்களிடமே கொட்டி விட்டார்கள். இருப்பினும உம்மு ஸ{லைம் (ரழி) அவர்கள்</p>
<p style="text-align: justify;">‘‘அபூதல்ஹாவே! நான் உங்களை அல்லாஹ்விற்காகவே மணமுடிக்கிறேன் அதைத் தவிர வேறு எந்த மஹரும் எனக்குத் தேவையில்லை&#8221; என்பதாகச் சொல்லிவிட்டார்கள்.</p>
<p style="text-align: justify;">அபூதல்ஹா (ரழி) அவர்களை மணமுடித்ததைக் கொண்டு தமக்குப் பொருத்தமான  நிகரான ஒருவரைத் துணையாக்கிக் கொண்டோம் என்று மட்டும் உம்மு ஸுலைம் (ரழி) அவர்கள் நினைக்கவில்லை. மாறாக இந்த உலகச் செல்வங்கள் அனைத்தையும் மிகைத்த ஒரு செல்வத்தை நன்மையை அல்லாஹ்விடம் அடைந்து கொண்டோம் என்றே விளங்கினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறிய ஒரு செய்தி அவர்களுக்குத் தெரியாமலா இருந்திருக்கும்&#8230;?</p>
<p style="text-align: justify;">‘‘உங்கள் மூலமாக அல்லாஹு தஆலா ஒருவருக்கு நேர்வழி காட்டுவது உங்களுக்குச் சிவந்த ஒட்டகைகள் கிடைப்பதை விடச் சிறந்தது&#8221; என்றல்லவா நபியவர்கள் கூறியிருக்கிறார்கள்!? (ஸஹீஹுல் புகாரி)</p>
<p style="text-align: justify;">இன்றைய முஸ்லிம் பெண்மணிகள் உம்மு ஸுலைம் (ரழி) அவர்களைப் போன்ற பெண்களின் வரலாற்றைப் படித்து படிப்பினை பெற்றுக் கொள்ள வேண்டும். இவர்களையே முன்மாதிகளாக பின்பற்றி வாழ வேண்டும். இவர்களிடம் இருக்கும் தனித்தன்மைகளையும் ஈமானின் (நம்பிக்கையின்) தூய்மையையும் கொள்கை உறுதியையும் கணவரைத் தேர்ந்தெடுப்பதில் அழகிய முறையைக் கையாள்வதையும் கற்றுக் கொள்ள வேண்டும்.</p>
<p style="text-align: justify;"><span style="color: #808080; font-size: x-small;">தாருல் ஹுதா</span></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.readislam.net/portal/archives/4015/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>காதல் முக்கியமா? உறவு முக்கியமா?</title>
		<link>http://www.readislam.net/portal/archives/4112</link>
		<comments>http://www.readislam.net/portal/archives/4112#comments</comments>
		<pubDate>Mon, 13 Feb 2012 04:50:26 +0000</pubDate>
		<dc:creator>ReadIslam.net</dc:creator>
				<category><![CDATA[சமூகம்]]></category>

		<guid isPermaLink="false">http://www.readislam.net/portal/?p=4112</guid>
		<description><![CDATA[இந்த காதல் நம் இஸ்லாமிய பெண்களையும் விட்டுவைக்கவில்லை, பள்ளிக்கு போய் கல்விக்கு பதிலாக கலவியை தான் கற்றுக்கொண்டு வருகிறார்கள் என்பது சிலரின் கருத்து. காதலர் தினம் என்ற பெயரிலே எவ்வளவு கூத்து கும்மாளம் நடக்கிறது, மேற்கத்திய நாடுகளிருந்து வந்தது தான் இந்த காதலர் தினம் .நம்முடைய இஸ்லாமிய சகோதரிகளிடம் இந்த காதல் நோய் தொற்றிகொண்டது என்பது தான் மிக பெரிய கவலை. பெற்றோர்கள் தன பெண் பிள்ளைகளை நம்பி பள்ளிக்கு அனுப்புகிறார்கள். ஆனால் இவர்கள் காதல் வலையில் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><a class="post_image_link" href="http://www.readislam.net/portal/archives/4112" title="Permanent link to காதல் முக்கியமா? உறவு முக்கியமா?"><img class="post_image alignright remove_bottom_margin" src="http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcS2Dfx7Bla_UcGKagy8QTNS6zaaszR17j3xZ44RtOIYgNrIFvmrPA" width="259" height="195" alt="Post image for காதல் முக்கியமா? உறவு முக்கியமா?" /></a>
</p><p style="text-align: justify;">இந்த காதல் நம் இஸ்லாமிய பெண்களையும் விட்டுவைக்கவில்லை, பள்ளிக்கு போய் கல்விக்கு பதிலாக கலவியை தான் கற்றுக்கொண்டு வருகிறார்கள் என்பது சிலரின் கருத்து.</p>
<p style="text-align: justify;">காதலர் தினம் என்ற பெயரிலே எவ்வளவு கூத்து கும்மாளம் நடக்கிறது, மேற்கத்திய நாடுகளிருந்து வந்தது தான் இந்த காதலர் தினம் .நம்முடைய இஸ்லாமிய சகோதரிகளிடம் இந்த காதல் நோய் தொற்றிகொண்டது என்பது தான் மிக பெரிய கவலை.</p>
<p style="text-align: justify;">பெற்றோர்கள் தன பெண் பிள்ளைகளை நம்பி பள்ளிக்கு அனுப்புகிறார்கள். ஆனால் இவர்கள் காதல் வலையில் சிக்கி, பெற்றோர்களை தலை குனிய வைக்கிறார்கள். இன்றைய சூழ்நிலையில் தவறான வழியில் போவதற்கு நிறைய வழிகள் இருக்கிறது. வயதும் மற்றும் சூழ்நிலையும் தவர் செய்வதற்கு வழி வகுக்கிறது என்பது உண்மை.</p>
<p style="text-align: justify;">ஒரு காலத்தில் பெண் பிள்ளைகளுக்கு பாலியல் பற்றி தெரிய வாய்ப்பு இல்லை அவர்கள் அதிகமாக வீட்டில்தான் இருப்பார்கள். பொழுதுபோக்கு என்பது ரேடியோ மட்டும்தான் இருக்கும். டிவி இருக்கும் வீடு விரலைவிட்டு எண்ணும் அளவுக்கு தான் இருக்கும். இன்றைய காலத்தில் வீட்டில் இருந்தப்படியே எல்லாம் பார்க்கலாம் ,பேசலாம் எதுவேண்டுமானாலும் செய்யலாம். ஒரு பெண்ணை படிக்கவைத்து, படிப்புக்கு பிறகு அவளுக்கு திருமணம் செய்வதற்கு பேசி முடித்து, பெற்றோர்கள் சந்தோஷமாக இருக்கும் நிலையில், அந்த பெண் திடிரென்று யாரோ ஒருவனுடன் ஓடிவிடுகிறாள் இப்படியெல்லாம் நடக்கிறது என்பது உண்மைதானே?</p>
<p style="text-align: justify;">உறவை விட காதல் தான் முக்கியம் என்று கொஞ்சம் கூட சிந்திக்காமல் சில நாட்கள் பழகிய ஒருவனுடன் இப்படி ஓடும் எதனை பெண்கள் ,அந்த குடும்பத்தின் நிலை என்ன? அந்த குடுபத்தில் இன்னுரு பெண் இருந்தால் அவள் நிலை என்ன? சிந்திக்க வேண்டாமா? அன்பு சகோதரிகளே! அல்லாஹ்வை அஞ்சி கொள்ளுங்கள்! பெற்றோரை கண்ணிய படுத்துங்கள்! ஆசை அறுபது நாள் மோகம் நுப்பது நாள் என்று சொல்வார்கள். வேண்டாம் இந்த காதல். விபரிதம் தெரியாமல் இந்த காதலில் சிக்கி விடாதீர்கள்!</p>
<p>உங்கள் குடும்பத்தை தலை குனிய வைத்துவிடாதீர்கள், உறவு தான் முக்கியம் அது தான் கடைசி வரை வரும் என்பதை மறந்து விடாதீர்கள்!</p>
<blockquote>
<p style="text-align: justify;"><strong>அந்த காதல் இந்த காதல் கள்ள காதல் சொல்லாத காதல் சுகமான காதல் ஊரை சுற்றும் காதல் இப்படி பலவகை காதல் இருக்கிறது. உண்மையான காதல் என்பது எது என்று புரிந்து கொள்ளுங்கள். திருமணத்திற்குப்பிறகு உங்கள் துணையுடன் கொள்ளும் காதலே உண்மையானது, நிலையானது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.</strong></p>
</blockquote>
<p style="text-align: justify;">பள்ளிக்கு போனால் படிப்பை மட்டும் கவனியுங்கள். பெறோர்கள் உங்களை நம்ம்பி அனுப்புகிறார்கள் அவர்களுக்கு மோசம் செய்யாதீர்கள்! மாற்று மத பெண்களுடன் ரொம்ப கவனமாக இருங்கள். யாருக்கு உங்கள் செல் போன் நம்பரை கொடுக்காதீர்கள்! அல்லாஹ் எங்களுக்கும் உங்களுக்கும் நற்கிருபை செய்வானாக, ஆமீன்.</p>
<p style="text-align: justify;"><span style="color: #808080; font-size: x-small;">ABDUL RASHEED</span></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.readislam.net/portal/archives/4112/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>நிக்காஹ் (திருமணம்)</title>
		<link>http://www.readislam.net/portal/archives/3992</link>
		<comments>http://www.readislam.net/portal/archives/3992#comments</comments>
		<pubDate>Fri, 10 Feb 2012 01:53:52 +0000</pubDate>
		<dc:creator>ReadIslam.net</dc:creator>
				<category><![CDATA[நபிமொழி]]></category>
		<category><![CDATA[பெண்மணிக்கு]]></category>

		<guid isPermaLink="false">http://www.readislam.net/portal/?p=3992</guid>
		<description><![CDATA[அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் رَضِيَ اللَّهُ عَنْهُ “இளைஞர்களே! உங்களில் திருமணத்தின் பொறுப்பைச் சுமக்கும் சக்தி படைத்தவர் மணம் புரிந்து கொள்ளட்டும். ஏனெனில் திருமணம் பார்வையைத் தாழ்த்துகின்றது. வெட்கத்தலத்தைப் பாதுகாக்கின்றது. (பார்வை இங்கும் அங்கும் அலைபாய்வதை விட்டும் காம இச்சையினால் சுகந்திரமாகத் திரிவதை விட்டும் பாதுகாக்கிறது) திருமணத்தின் பொறுப்பை சுமக்கச் சக்தியற்றவர் இச்சையின் வேகத்தைத் தணித்திட அவ்வப்போது நோன்பு வைத்துக் கொள்ளட்டும்.” (புகாரி, முஸ்லிம்) அறிவிப்பாளர் : அபூஹ¤ரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ நபிகள் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><a class="post_image_link" href="http://www.readislam.net/portal/archives/3992" title="Permanent link to நிக்காஹ் (திருமணம்)"><img class="post_image alignright remove_bottom_margin" src="http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcQQsmIliIb9XUVEDyEq_SB7MbzKobMid-q4oV3BlsHxxKmKJkVg" width="275" height="183" alt="Post image for நிக்காஹ் (திருமணம்)" /></a>
</p><p style="text-align: justify;">அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் رَضِيَ اللَّهُ عَنْهُ</p>
<p style="text-align: justify;">“இளைஞர்களே! உங்களில் திருமணத்தின் பொறுப்பைச் சுமக்கும் சக்தி படைத்தவர் மணம் புரிந்து கொள்ளட்டும். ஏனெனில் திருமணம் பார்வையைத் தாழ்த்துகின்றது. வெட்கத்தலத்தைப் பாதுகாக்கின்றது. (பார்வை இங்கும் அங்கும் அலைபாய்வதை விட்டும் காம இச்சையினால் சுகந்திரமாகத் திரிவதை விட்டும் பாதுகாக்கிறது) திருமணத்தின் பொறுப்பை சுமக்கச் சக்தியற்றவர் இச்சையின் வேகத்தைத் தணித்திட அவ்வப்போது நோன்பு வைத்துக் கொள்ளட்டும்.” (புகாரி, முஸ்லிம்)</p>
<p style="text-align: justify;">அறிவிப்பாளர் : அபூஹ¤ரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ</p>
<p style="text-align: justify;">நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்கள் நவின்றார்கள்:</p>
<p style="text-align: justify;">“நான்கு வி\யங்களுக்காக பெண் மணமுடிக்கப்படுகிறாள், அவளுடைய செல்வத்திற்காக, அவளுடைய குலச் சிறப்புக்காக, அவளுடைய அழகுக்காக, அவளுடைய மார்க்கப்பற்றுக்காக! நீர் மார்க்கப் பற்றுடைய மங்கையையே அடைந்து கொள்ளும், உமக்கு நலம் உண்டாகட்டும்!” (புகாரி, முஸ்லிம்)</p>
<p style="text-align: justify;">விளக்கம் :</p>
<p style="text-align: justify;">இந்த நபிமொழியின் கருத்தாவது: பெண்ணிடம் நான்கு விஷயங்கள் பார்க்கப்படுகின்றன. சிலர் செல்வத்தைப் பார்க்கின்றார்கள், சிலர் குலச் சிறப்பை கவனிக்கின்றார்கள், வேறு சிலர் பெண்ணிண் அழகிற்காக மணம் முடிக்கின்றார்கள், இன்னும் சிலரோ மார்க்கப்பற்றைப் பார்க்கின்றார்கள். ஆனால் நபி صلى الله عليه وسلم அவர்கள் முஸ்லிம்களுக்கு வழங்கியிருக்கும் அறிவுரை “ஒரு பெண்ணிடம் பார்க்க வேண்டிய உண்மையான தகுதி அவளுடைய மார்க்கப்பற்றும், இறையச்சமுமேயாகும். இதனுடன் மற்றச் சிறப்புகளும் தகுதிகளும் ஒன்று சேர்ந்து விட்டால் அதுவும் நன்றே! எனினும் மார்க்கப்பற்றைப் பார்க்காமல் புறக்கணித்து விடுவதும், செல்வத்தையும் அழகையும் மட்டும் பார்த்து மணமுடிப்பதும் ஒரு முஸ்லிமின் செயலன்று.”</p>
<p style="text-align: justify;">அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அம்ர் رَضِيَ اللَّهُ عَنْهُ</p>
<p style="text-align: justify;">நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்கள் நவின்றார்கள்:</p>
<p style="text-align: justify;">“பெண்களை அவர்களின் அழகுக்காக திருமணம் முடிக்காதீர்கள், அவர்களுடைய அழகு அவர்களை அழித்துவிடக் கூடும். பெண்களைச் செல்வந்தர்கள் என்பதற்காக மணம் முடிக்காதீர்கள், அவர்களுடைய செல்வம் வரம்பு மீறுவதிலும் அடங்காப் பிடாரித்தனத்திலும் அவர்களை ஆழ்த்திவிடக் கூடும். மாறாக மார்க்கப்பற்றின் அடிப்படையில் அவர்களை மணமுடித்துக் கொள்ளுங்கள்.</p>
<p style="text-align: justify;">மார்க்கப்பற்று கொண்ட கறுப்புநிற அடிமைப்பெண், அல்லாஹ்வின் பார்வையில் வெண்ணிறமுடைய மார்க்கப்பற்றில்லாக் குடும்பப் பெண்ணைவிடச் சிறந்தவள் ஆவாள்.”(அல்முன்தகா)</p>
<p style="text-align: justify;">அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அம்ர் رَضِيَ اللَّهُ عَنْهُ</p>
<p style="text-align: justify;">அண்ணல் நபி صلى الله عليه وسلم அவர்கள் மொழிந்தார்கள்:</p>
<p style="text-align: justify;">“எவருடைய மார்க்கப் பக்தியையும் நற்குணத்தையும் நீங்கள் விரும்புகின்றீர்களோ அத்தகைய மனிதர் உங்களிடம் திருமணம் கேட்டு வந்தால் அவருக்கு மணமுடித்துக் கொடுத்து விடுங்கள். நீங்கள் இப்படிச் செய்யாவிட்டால் பூமியில் குழப்பமும் தீமையும் விளைந்துவிடும்.” (திர்மிதி)</p>
<p style="text-align: justify;">விளக்கம் :</p>
<p style="text-align: justify;">நபி صلى الله عليه وسلم அவர்களுடைய கருத்து இதுதான்: மண விவகாரத்தில் பார்க்க வேண்டிய தகுதி மார்க்கப்பற்றும் நல்லொழுக்கமுமே ஆகும். இவற்றைப் பார்த்திடாமல் சொத்து சுகங்களையும் குலச்சிறப்பையும் மட்டுமே பார்த்தால் முஸ்லிம் சமூக அமைப்பின் அதனால் பெரும் தீமை விளையும். எவருடைய பார்வையில் மார்க்கம் இவ்வளவு தாழ்ந்து போய் சொத்து சுகம் மட்டுமே கவனிக்கத் தகுந்ததாகவும், மதிப்புக்குரியதாகவும் விளங்குகிறதோ அத்தகைய உலகாதயவாதிகளிடம் மார்க்கம் எனும் தோட்டத்தை &#8211; தியாக நீரைப் பாய்ச்சி செழிக்கச் செய்திட வேண்டும் எனும் உணர்வு எங்கே பிறக்கப்போகிறது? இத்தகைய நிலையைத்தான் நாயகம் صلى الله عليه وسلم அவர்கள் சோதனை</p>
<p style="text-align: justify;">(குழப்பம்) என்றும் தீமை என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.</p>
<p style="text-align: justify;">அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் رَضِيَ اللَّهُ عَنْهُ</p>
<p style="text-align: justify;">எங்களுக்கு நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்கள் தொழுகையில் ஓதும் தஷஹ்ஹுதை ஓதிக் காட்டியபின், “இது திருமணத்தின்போது ஓதக்கூடிய தஷஹ்ஹது” எனச் சொல்லி அதனையும் ஓதிக்காட்டினார்கள். அதன் பொருள்:</p>
<p style="text-align: justify;">நன்றியும் புகழும் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தானவை. நாங்கள் அவனிடமே உதவி தேடுகின்றோம். அவனிடத்திலேயே மன்னிப்புக் கோருகின்றோம். எங்கள் மனத்தின் தீமைகளுக்கெதிராக எங்களை நாங்களே அல்லாஹ்விடம் தஞ்சம் தேடி ஒப்படைத்துவிடுகின்றோம். எவருக்கு அல்லாஹ் நேர்வழி அளிக்கின்றானோ (நேர்வழியைத் தேடி வருபவர்க்கே அல்லாஹ் அதனை அளிக்கின்றான்) அவரை எவரும் வழிகெடுக்க முடியாது. அவன் எவனை வழி தவறச் செய்து விடுகின்றானோ (எவன் வழிதவற விரும்புகின்றானோ அவனையே அல்லாஹ் வழிதவறச் செய்கின்றான்) அவனுக்கு யாரும் நேர்வழி அளிக்க முடியாது. மேலும் அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவர் எவரும் இலர் என நான் சாட்சி கூறுகின்றேன். மேலும் முஹம்மத் صلى الله عليه وسلم அவர்கள் அல்லாஹ்வின் அடியார் என்றும் அவனுடைய திருத்தூதர் என்றும் சான்று பகருகின்றேன்.</p>
<p style="text-align: justify;">பிறகு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் மூன்று இறைவசனங்களை ஓதிக் காண்பித்தார்கள். ஸப்ளான் ஸவ்ரி (ரஹ்) அவர்களின் விளக்கப்படி அந்த மூன்று வசனங்களாவன:</p>
<p style="text-align: justify;">1. இறைநம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள். மேலும் நீங்கள் முஸ்லிம்களாக அன்றி மரணமடைய வேண்டாம். (3:102)</p>
<p style="text-align: justify;">2. மனிதர்களே! உங்களை ஓர் ஆன்மாவிலிருந்து படைத்த உங்கள் இறைவனுக்கு அஞ்சுங்கள். மேலும், அதே ஆன்மாவிலிருந்து அதனுடைய துணையை அவன் உண்டாக்கினான். மேலும் அவை இரண்டின் மூலம் (உலகில்) அதிகமான ஆண்களையும், பெண்களையும் பரவச் செய்தான். மேலும் எந்த அல்லாஹ்வின் பெயரைக் கூறி நீங்கள் ஒருவர் மற்றவரிடம் (உரிமைகளைக்) கோருகின்றீர்களோ அந்த அல்லாஹ்வுக்கே நீங்கள் அஞ்சுங்கள். மேலும் இரத்த பந்த உறவுகளைச் சீர்குலைப்பதிலிருந்து நீங்கள் விலகி வாழுங்கள். திண்ணமாக அறிந்து கொள்ளுங்கள். அல்லாஹ் உங்களைக் கண்காணித்துக் கொண்டிருக்கின்றான்.(4:1)</p>
<p style="text-align: justify;">3. இறைநம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வை அஞ்சிய வண்ணம் இருங்கள். மேலும் சொல்வதைத் தெளிவாக, நேரடியாகச் சொல்லுங்கள். இப்படிக் செய்தால் அல்லாஹ் உங்கள் செயல்களைச் சீர்திருத்துவான். பாவங்களை மன்னித்துவிடுவான். அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் அடிபணிந்து நடப்பவர்கள் பெரும் வெற்றியை அடைவார்கள். (33:70-71)</p>
<p style="text-align: justify;">விளக்கம் :</p>
<p style="text-align: justify;">இது திருமணத்தின் போது ஓதப்படும் ‘குத்பா’ ஆகும். இங்கு அதனைக் கொண்டு வருவதன் நோக்கம் இதுதான் : திருமணம் என்பது வெறும் மகிழ்ச்சியும் குதூகலமும் மட்டுமன்று. மாறாக, இது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே, “நாங்கள் இருவரும் வாழ்க்கை முழுவதும் தோழர்களாகவும், உற்ற துணைவர்களாகவும் விளங்குவோம்” என்று முடிவாகின்ற பொறுப்பு வாய்ந்த ஓர் ஒப்பந்தமாகும். மேலும் இந்த ஒப்பந்தத்தைச் செய்யும் பொழுது படைத்த இறைவனும், படைப்பினங்களான மக்களும் சாட்சிகளாக்கப்படுகின்றனர். திருமண உரையில் பெரும்பாலும் ஓதப்படும் இந்த வசனங்கள் இந்த ஒப்பந்தத்தில் கணவன் அல்லது மனைவியின் தரப்பிலிருந்து கோளாறு ஏதும் உருவாக்கப்பட்டு, அதனை சரிவரச் செப்பனிடாவிட்டால், அந்தக் கோளாறை உருவாக்கியவனின் மீது இறைவனின் சினம் சீறிப்பாய்ந்து அவனை நரகத்திற்குரியவனாக ஆக்கிவிடும் என்பதைத் தெளிவாகச் சுட்டிக் காட்டுகின்றன. திருமறையின் மூன்று இடங்களில் வரும் இந்த வசனங்களில் இறைநம்பிக்கையாளர்களை நோக்கி &#8211; இறைவனின் கோபத்திலிருந்து தப்பித்துக் கொள்ளும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.readislam.net/portal/archives/3992/feed</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
		</item>
		<item>
		<title>பொய்யும் மெய்யும்</title>
		<link>http://www.readislam.net/portal/archives/4192</link>
		<comments>http://www.readislam.net/portal/archives/4192#comments</comments>
		<pubDate>Tue, 07 Feb 2012 00:37:04 +0000</pubDate>
		<dc:creator>ReadIslam.net</dc:creator>
				<category><![CDATA[பொதுவானவை]]></category>

		<guid isPermaLink="false">http://www.readislam.net/portal/?p=4192</guid>
		<description><![CDATA[ பொய் சொல்வது தான் சுலபம் என்கிற மாயக்கருத்து நமக்குள் வியாபித்து இருக்கக்கூடும். ஆனால் அது உண்மையா என்றால் பொய் என்பதே பதிலாகக் கிடைக்கும். ஏனெனில், நமது உள்ளம் பொய் சொல்வதற்காக உருவாக்கப்பட்ட ஒன்று அல்ல! யாரிடத்தில் என்னென்ன பொய்கள் சொல்லி வைத்தோம் என்பதை நாம் நீண்ட பட்டியல் தயாரித்து வைத்திருந்தால் கூட அந்தந்த நபர்களிடம் இருந்து அந்தந்த பொய்யை நீடித்த நாள் வாழ வைப்பது என்பது மிகவும் கடினமான காரியமாகவே இருக்கும். அந்த நபர் அங்கு இல்லை [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><a class="post_image_link" href="http://www.readislam.net/portal/archives/4192" title="Permanent link to பொய்யும் மெய்யும்"><img class="post_image alignright remove_bottom_margin" src="http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcRvtLegGeiQ5PWJ1uHWMwJxwths8r-BT-qejRwz0K5bMAmF30Zk" width="206" height="130" alt="Post image for பொய்யும் மெய்யும்" /></a>
</p><p style="text-align: justify;" dir="ltr"> பொய் சொல்வது தான் சுலபம் என்கிற மாயக்கருத்து நமக்குள் வியாபித்து இருக்கக்கூடும். ஆனால் அது உண்மையா என்றால் பொய் என்பதே பதிலாகக் கிடைக்கும். ஏனெனில், நமது உள்ளம் பொய் சொல்வதற்காக உருவாக்கப்பட்ட ஒன்று அல்ல!</p>
<p style="text-align: justify;" dir="ltr">யாரிடத்தில் என்னென்ன பொய்கள் சொல்லி வைத்தோம் என்பதை நாம் நீண்ட பட்டியல் தயாரித்து வைத்திருந்தால் கூட அந்தந்த நபர்களிடம் இருந்து அந்தந்த பொய்யை நீடித்த நாள் வாழ வைப்பது என்பது மிகவும் கடினமான காரியமாகவே இருக்கும்.</p>
<p style="text-align: justify;" dir="ltr">அந்த நபர் அங்கு இல்லை என்று நினைத்துக் கொண்டு வேறொரு நபரிடம் உண்மையைச் சொல்லிக் கொண்டிருப்போம். அதே நபரிடம் கூட வேறொரு விஷயத்துக்காக உண்மையைச் சொல்வதே ஆதாயம் என்ற நிலைக்குத் தள்ளப்படுவோம்.</p>
<p style="text-align: justify;" dir="ltr">ஒருமுறை பொய் சொல்லி மாட்டிக் கொள்வோமேயானால் அதன்பின் நாம் உண்மை சொன்னால் கூட பொய் சொல்வதாகவே கருதும் இவ்வுலகம்.</p>
<p style="text-align: justify;" dir="ltr">அதுமட்டுமல்ல, நமக்கு பொய்யன் என்ற பட்டத்தையும் சூட்டி மகிழ்ந்து கொண்டிருக்கும்.</p>
<p style="text-align: justify;">உண்மை நம்மை தீமை செய்வதிலிருந்து காப்பாற்றுகிறது என்பதை புரிந்து கொள்ள முடியும். முதலில் சிறு இழப்பைத் தருவது போல் தோன்றினாலும், போகப்போக உண்மை நமக்குப் பெருமையாகவும், இலாபத்தையும் அள்ளித்தருகிறது.]</p>
<p style="text-align: justify;" dir="ltr">மெய்யும் பொய்யும் நம்முடைய வாழ்க்கையோடு கலந்து விட்டனவைகளாகவே இருக்கின்றன. நமக்கு எது ஆதாயம் தருகின்றதோ, அதை தேர்வு செய்ய நாம் தயங்காதவர்களாகவே இருக்கின்றோம். அது பொய்யாக இருந்தாலும் சரி, மெய்யாக இருந்தாலும் சரி.</p>
<p style="text-align: justify;" dir="ltr">ஆனால் உண்மை என்னவென்றால், பொய் சொல்வது என்பது நமக்கு பிடிக்காத ஒன்றாகவே இருக்கிறது என்பதுதான். இந்த உண்மையை எண்ணிப் பார்க்கிறபோது நமக்கு மிகவும் வியப்பாகத் தோன்றும். பிடிக்காத விஷயமாகிய ஒன்றை – அதாவது பொய் சொல்வதை நாம் வாழ்க்கையில் அதிகம் கடைப்பிடிக்கிறோம் என்பதுதான் அது.</p>
<p style="text-align: justify;" dir="ltr">பொய் சொல்வதா? உண்மையைச் சொல்வதா என்பதை நாம் சூழ்நிலையைப் பொறுத்தே முடிவு செய்கிறோம். எதைச் சொல்வதனால் அந்த நேரப் பொறுப்பிலிருந்து, சுமையிலிருந்து விடுதலை கிடைக்கின்றது என்பதுகூட நாம் சொல்ல வேண்டியது பொய்யா? மெய்யா? என்பதை நிர்ணயித்து விடுகின்றது. மேலும் நாம் ஆதாய நோக்கம் உடையவர்களாகவும் இருக்கின்றோம். எனவேதான் அப்படி இப்படிப்பட்ட வேளைகளில் நாம் பொய் சொல்வதற்கு தயங்குவதில்லை.</p>
<p style="text-align: justify;" dir="ltr">ஆனால் பொய், மெய் இரண்டில் எதைச் சொல்வது சுலபம் என்ற கேள்வி எழுமானால் நாம் கூறும் விடை என்னவாக இருக்கும்?</p>
<p style="text-align: justify;" dir="ltr">பொய் சொல்வது தான் சுலபம் என்கிற மாயக்கருத்து நமக்குள் வியாபித்து இருக்கக்கூடும். ஆனால் அது உண்மையா என்றால் பொய் என்பதே பதிலாகக் கிடைக்கும். ஏனெனில், நமது உள்ளம் பொய் சொல்வதற்காக உருவாக்கப்பட்ட ஒன்று அல்ல என்பதே!</p>
<p style="text-align: justify;" dir="ltr">ஆம்! உள்ளத்தில் உண்மைகளே பதிவு செய்து வைக்கப்படுகின்றன. பொய்யை நாம் தான் தூக்கி அதில் ஒரு சுமையை வைக்கின்றோம். அந்த சுமையை உள்ளம் மெல்ல மெல்ல இறக்கி தூர எறிந்து விடக்கூடும். ஆம்! பொய்ச்சுமைக்கு உள்ளத்தில் நீடித்த இடப்பிடம் கிடையாது என்பதை நாம் புரிந்து கொள்ள வெண்டும். எனவே தான் சொல்லி வைத்தாற்போல் பொய்கள் எல்லாம் விரைவில் மறந்து போய் விடுகின்றன.</p>
<p style="text-align: justify;" dir="ltr">யாரிடத்தில் என்னென்ன பொய்கள் சொல்லி வைத்தோம் என்பதை நாம் நீண்ட பட்டியல் தயாரித்து வைத்திருந்தால் கூட அந்தந்த நபர்களிடம் இருந்து அந்தந்த பொய்யை நீடித்த நாள் வாழ வைப்பது என்பது மிகவும் கடினமான காரியமாகவே இருக்கும்.</p>
<p style="text-align: justify;" dir="ltr">அந்த நபர் அங்கு இல்லை என்று நினைத்துக் கொண்டு வேறொரு நபரிடம் உண்மையைச் சொல்லிக் கொண்டிருப்போம். அதே நபரிடம் கூட வேறொரு விஷயத்துக்காக உண்மையைச் சொல்வதே ஆதாயம் என்ற நிலைக்குத் தள்ளப்படுவோம்.</p>
<p style="text-align: justify;" dir="ltr">மேலும், உண்மைக்கு இயற்கையே சாட்சியாக அமைந்து விடுகின்றது. ஆனால், பொய்யை நிரூபிக்க சாட்சியை ஜோடிக்க வேண்டியதாக இருக்கிறது. அந்த சாட்சியும் அந்த நிமிடத்துக்கு மட்டும்தான் மேடையேற உதவும். காட்சி முடிந்தபின் கழன்று கொண்டு போய்விடும். பின்பொரு சூழ்நிலையில் அந்த நாடகத்தைப் போடும் போது முன்பு வந்த பொய்சாட்சியே காட்டிக் கொடுக்கும் சாட்சியாக மாறிப்போய் விடுகிறது.</p>
<p style="text-align: justify;" dir="ltr">எனவே நீர்க்குமிழிகள் போன்றவையே பொய்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதனால் தான் பொய் சொல்வதில் இருந்து நம்மை நாம் தற்காத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கின்றது.</p>
<p style="text-align: justify;" dir="ltr">ஒருமுறை பொய் சொல்லி மாட்டிக் கொள்வோமேயானால் அதன்பின் நாம் உண்மை சொன்னால் கூட பொய் சொல்வதாகவே கருதும் இவ்வுலகம்.</p>
<p style="text-align: justify;" dir="ltr">அதுமட்டுமல்ல, நமக்கு பொய்யன் என்ற பட்டத்தையும் சூட்டி மகிழ்ந்து கொண்டிருக்கும். எனவே நாம் சொல்லும் உண்மைகள் ஏற்கப்படாத நிலைமை வருமேயானால், அது நம்முடைய வளர்ச்சிக்கு மிகுந்த பாதகத்தை ஏற்படுத்தும். இதற்குக் காரணம், நாம் முன்பு ஏதோ ஓர் ஆதாயம் கருதி கூறிய பொய்தான். ஆனால் அப்போது கிடைத்த ஆதாயத்தைவிட இப்போதும், இனிமேலும் கிடைக்கின்ற இழப்பு மிக மிக அதிகமானதாகவே இருக்கின்றது என்பதை உணர்ந்து பார்ப்போமேயானால் வலி தான் மிஞ்சும்.</p>
<p style="text-align: justify;" dir="ltr">எனவே தான் முன்பு ஏதோ ஒரு சூழலில் தவிர்க்க முடியாமல் நாம் ஒரு பொய்யைச் சொல்ல நேர்ந்திருந்தால் அப்போது அப்பொய்யை சொல்லியிருந்தால், அப்பொய்யை பொய்யல்ல என்று கட்டிக் காக்க வேண்டிய பொருப்பு நம்மை வந்து சேர்ந்து விடுகின்றது. அந்த பொய் நன்மையைக் கருதியும் கூறப்பட்டிருக்கலாம் அல்லது தீமையைக் கருதியும் கூறப்பட்டிருக்கலாம். எதைக் கருதி கூறப்பட்டிருந்தாலும் சரி பொய்யன் என்ற பழியிலிருந்து நாம் மீள முடியுமா?</p>
<p style="text-align: justify;" dir="ltr">பொய் அற்ப ஆயுள் கொண்டது. அப்படிப்பட்ட பொய்யை நாம் கட்டிக்காக்க முடியுமா என்ன? பொய் வெளிப்படும்போது அது விளைந்த தீமைக்கேற்ப நமக்கு அழிவைத் தந்துவிடும். எனவே நல்லதொரு சூழ்நிலையில் அப்பொய்யை நாமே நயமாக வெளிப்படுத்துவது என்பதே சாலச் சிறந்ததாக இருக்கும். அப்போது அது தீமையைத் தந்தால்கூட ஏற்க சித்தமாக இருக்க வேண்டும்.</p>
<p style="text-align: justify;" dir="ltr">பொய் சொல்வது என்பதே மிகவும் சிரமமானது. அப்படியெனில் உண்மையைச் சொல்வது மிகவும் சுலபமானதா? என்ற கேள்வியும் எழுகிறது.</p>
<p style="text-align: justify;" dir="ltr">இதற்கும் சிந்தித்தே விடைகாண வேண்டியிருக்கிறது. உண்மையைச் சொல்வதே சுலபம் என்றால் நமக்குப் பொய் கூற வேண்டிய அவசியம் பெரும்பான்மையான சூழ்நிலைகளால் ஏற்படாதே என்பதுதான்.</p>
<p style="text-align: justify;" dir="ltr">ஆனால், நாம் பல நிலைகளில் உண்மையை மறைப்பதில் குறியாக இருக்கின்றோம். உள்ளத்தை உள்ளபடி கூறுகின்ற மனத்திண்மை பல நேரங்களில் நம்மிடம் இல்லாமல் போய் விடுகிறது.</p>
<p style="text-align: justify;" dir="ltr">இதற்கு என்ன காரணம்?</p>
<p style="text-align: justify;" dir="ltr">ஒன்று அதனால் நாம் பெரிய இழப்பை சந்திக்க வேண்டியிருக்கும். மற்றொன்று மிகவும் முக்கியமானது. நாம் அவமானத்துக்கு உள்ளாக நேரிட்டு விடக் கூடும். ஒரு தவறை நாம் செய்து விட்டோம் என்று வைத்துக் கொள்வோம். அந்த தவறை ஒப்புக் கொள்கிற மனநிலை நமக்கு வந்து விடுகிறதா என்ன? அதை உள்ளபடியே கூறிவிட்டால் மிகப்பெரிய கேவலத்தை அடைய வேண்டியதிருக்கும். அதுவரை ஊராரிடம் சேர்த்து வைத்திருந்த மதிப்பு மரியாதை எல்லாம் காலவதியாகப் போய்விடும்.</p>
<p style="text-align: justify;" dir="ltr">நாம் எப்பொழுதும் உண்மையே பேசும் மன உறுதியை கொண்டவராக இருப்போமேயானால் எந்த சூழ்நிலையிலும் தவறான செயலை நமக்கும், பிறருக்கும் தீமை தருகின்றன செயலை செய்ய விழையவே மாட்டோம்.</p>
<p style="text-align: justify;" dir="ltr">இதிலிருந்து உண்மை நம்மை தீமை செய்வதிலிருந்து காப்பாற்றுகிறது என்பதை புரிந்து கொள்ள முடியும். முதலில் சிறு இழப்பைத் தருவது போல் தோன்றினாலும், போகப்போக உண்மை நமக்குப் பெருமையாகவும், இலாபத்தையும் அள்ளித்தருகிறது.</p>
<p style="text-align: justify;" dir="ltr">ஒரு பொய்யை காப்பாற்ற நாம் பல பொய்களை சொல்லிக் கொண்டு போக வேண்டியதாகி விடுகிறது. அதே போல உண்மைகளை தொடர்ந்து சொல்லச் சொல்ல உண்மையைச் சொல்வது என்பது இனிமையாகிப் போகிறது.</p>
<p style="text-align: justify;" dir="ltr">பொய் சொல்வதற்கு நிறைய ஞாபக சக்தி இருக்க வேண்டும். உண்மையை சொல்பவர்களுக்கு நிறைய தைரியம் இருக்க வேண்டும். நாம் தைரியசாலிகளாகவே இருப்போம்.</p>
<p style="text-align: justify;" dir="ltr"><span style="color: #808080; font-size: x-small;">அஷ்ஷரீஅத்துல் இஸ்லாமியா<br />
கா. அலியார்<br />
nidur.info</span></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.readislam.net/portal/archives/4192/feed</wfw:commentRss>
		<slash:comments>2</slash:comments>
		</item>
		<item>
		<title>ரபீஉல் அவ்வல்</title>
		<link>http://www.readislam.net/portal/archives/436</link>
		<comments>http://www.readislam.net/portal/archives/436#comments</comments>
		<pubDate>Sat, 04 Feb 2012 02:38:30 +0000</pubDate>
		<dc:creator>ReadIslam.net</dc:creator>
				<category><![CDATA[பித்அத்]]></category>

		<guid isPermaLink="false">http://www.readislam.net/portal/?p=436</guid>
		<description><![CDATA[    ரபீஉல் அவ்வல் மாதம் முஸ்லிம் சமுதாயம் நாடு முழுவதும் மீலாது விழாக்கள் நடத்துவதையும், வீடுகள் தோறும் மவ்லூது ஓதுவதையும் கொண்டு நபி صلى الله عليه وسلم அவர்கள் மீது தங்களுக்குள்ள அன்பையும், பிரியத்தையும் வெளிப்படுத்துவதாக நம்பிக் கொண்டிருக்கிறது. இந்த சடங்கு, சம்பிரதாயங்கள் எல்லாம் நபி صلى الله عليه وسلم அவர்களின் மறைவிற்கும் 600 ஆண்டுகள் கழித்தே மக்களின் மனோ இச்சைகளுக்கு ஏற்றவாறு தோற்றுவிக்கப்பட்டவையாகும்.     மற்ற மதத்தவர்கள் எப்படி தங்கள் வேதங்களையும் மதச்சிறப்புகளையும் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><a class="post_image_link" href="http://www.readislam.net/portal/archives/436" title="Permanent link to ரபீஉல் அவ்வல்"><img class="post_image alignright remove_bottom_margin" src="http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcR4yI7y-wU3m1evohdAunaH7aMlTV6qaghjNL0ep7--13mtDzKYSQ" width="297" height="169" alt="Post image for ரபீஉல் அவ்வல்" /></a>
</p><p style="text-align: justify;"><span style="font-family: TheneeUniTx;">    </span>ரபீஉல் அவ்வல் மாதம் முஸ்லிம் சமுதாயம் நாடு முழுவதும் மீலாது விழாக்கள் நடத்துவதையும், வீடுகள் தோறும் மவ்லூது ஓதுவதையும் கொண்டு நபி <span style="color: #000000;">صلى الله عليه وسلم</span> அவர்கள் மீது தங்களுக்குள்ள அன்பையும், பிரியத்தையும் வெளிப்படுத்துவதாக நம்பிக் கொண்டிருக்கிறது. இந்த சடங்கு, சம்பிரதாயங்கள் எல்லாம் நபி <span style="color: #000000;">صلى الله عليه وسلم</span> அவர்களின் மறைவிற்கும் 600 ஆண்டுகள் கழித்தே மக்களின் மனோ இச்சைகளுக்கு ஏற்றவாறு தோற்றுவிக்கப்பட்டவையாகும்.</p>
<p style="text-align: justify;">    மற்ற மதத்தவர்கள் எப்படி தங்கள் வேதங்களையும் மதச்சிறப்புகளையும் வேதாந்தமாகவும் வெற்று முழக்கங்களாகவும் ஆக்கி விட்டரனரோ அதே போல் முஸ்லிம்களும் இஸ்லாத்தின் தூய வாழ்க்கை நெறி முறைகளையும் வெற்று முழக்கங்களாகவும், பஜனை பாடுவதாகவும் ஆக்கிவிட்டார்கள் என்பதை இந்த மீலாது விழாக்களும் மவ்லூது சபைகளும் தெள்ளத் தெளிவாகப் பறை சாற்றுகின்றன. மாற்று மதத்தினரை அடி பிசகாமல் அப்படியே பின்பற்றி நடக்க ஆரம்பித்து விட்டனர் முஸ்லிம்களும்.</p>
<p style="text-align: justify;">     நபி <span style="color: #000000;">صلى الله عليه وسلم</span> அவர்கள் இந்த சமுதாயத்தின் வழிகேட்டைப்பற்றி இவ்வாறு கூறுகின்றார்கள்.</p>
<p style="text-align: justify;">&#8220;நீங்கள் உங்கள் முன்னோர்களின் வழிமுறைகளை ஜானுக்கு ஜான் முழத்திற்கு முழம் பின்பற்றுவீர்கள். எதுவரை என்றால் அவர்கள் உடும்பின் பொந்துக்குள் நுழைந்தால் நீங்களும் அதனுள் நுழைவீர்கள்&#8221; என்று.அதற்கு நாங்கள் (நபித்தோழர்கள்) &#8220;அவர்கள் யகூதி, நஸரானிகளா? என்று கேட்டதற்கு, வேறு யார் என்று பதிலளித்தார்கள். அறிவிப்பாளர்: அபூஸயீதுல் குத்ரீ(ரலி) நூல்: முஸ்லிம்-இல்ம், புகாரி-இஃதிஸாம்.</p>
<p style="text-align: justify;">     முஸ்லிம்கள் தாங்கள் நடத்தும் இந்த மீலாது விழாக்களில் மாற்று மதத்தினரையும் அழைத்து அவர்கள் இஸ்லாத்தைப் பற்றியும், நபி <span style="color: #000000;">صلى الله عليه وسلم</span> அவர்களைப் பற்றியும் ஏற்றிப் போற்றிப் பேசுவதை பெருமையாக எண்ணும் துரதிஷ்ட நிலையும் இன்று நாடு முழுதும் பரவிவிட்டது. நாங்கள் போடுவது வெற்றுக் கோஷங்கள்தான் -வீண் முழக்கங்கள்தான் என்பதை இது கொண்டு உறுதிபடுத்துகின்றனர்.</p>
<p style="text-align: justify;">     உள்ளும் புறமும் ஒருங்கே சீராகச் செயல்படும் உண்மையாளர்கள் ஒரு போதும் இவ்வாறு நடக்க முடியாது; பேச முடியாது. மேடைப் பேச்சு, கற்பனைப் பேச்சு, நயவஞ்சகப் பேச்சு என்பதுபோல் பீலாது மேடைகளையும் ஆக்கி வருகிறது இந்த முஸ்லிம் சமுதாயம். இது வேதனைக்குரிய விஷயமா இல்லையா?</p>
<p style="text-align: justify;">     அல்லாஹ்வும் அவனது ரஸூலும் காட்டித்தராது, மனித கற்பனைகளைக் கொண்டும், யூகங்களைக் கொண்டும் நல்லவைகயாகக் கருதப்பட்டு செயல்படுத்தும் காரியங்கள் அனைத்தும் இறுதியில் சமுதாயத்திற்கு கேடு விளைவிப்பவையாக அமையுமே அல்லாமல் சமுதாயத்திற்குப் பலன் தரும் செயல்களாக ஒரு போதும் அமையாது.</p>
<p style="text-align: justify;">     உண்மையில் நபி <span style="color: #000000;">صلى الله عليه وسلم</span> அவர்கள் மீது உறுதியான அன்புள்ளவர்கள், அவர்களை அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட உண்மைத் தூதர் என்று மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டவர்கள் இப்படிப்பட்ட வெற்றுச் சடங்குகளில் ஈடுபடமாட்டார்கள். ரபீஉல் அவ்வல் மாதம் மட்டும் மேடைகளை அமைத்துக் கற்பனைக் கவிதைகளான மவ்லூதுகளை ஓதுபவர்களாகவும் மீலாது மேடைகள் அமைத்து நுனி நாவில்  புகழ் பாடுபவர்களாகவும் இருக்க மாட்டார்கள்.</p>
<p style="text-align: justify;">     நபி <span style="color: #000000;">صلى الله عليه وسلم</span> அவர்களுக்குப் பிறகு மனிதர்களால் உருவாக்கப்பட்டவற்றை மார்க்கமாக ஒரு போதும் எடுத்துச் செயல்படுத்தமாட்டார்கள். மாறாக வருடம் 365 நாட்களும், நபி <span style="color: #000000;">صلى الله عليه وسلم</span> அவர்களைத் தமது வழிகாட்டியாக மனப்பூர்வமாக ஏற்று அவர்களின் அடிச்சுவட்டை அப்படியே பின்பற்றி, குர்ஆனைக் கொண்டும் மட்டும் நிலை நாட்டப்பட்டுள்ள காரியங்களை மட்டும் மார்க்கமாக ஏற்றுச் செயல்படுவார்கள். அப்படிப்பட்ட உண்மை முஸ்லிம்களாக நாம் அனைவரும் வாழ அல்லாஹ்வின் அருள் கிட்டுமாக!</p>
<p style="text-align: justify;"><span style="font-family: TheneeUniTx;"> </span></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.readislam.net/portal/archives/436/feed</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
		</item>
		<item>
		<title>மனிதர்களுக்கு கருணை காட்டாதவர் மீது அல்லாஹ் கருணை காட்டமாட்டான்!</title>
		<link>http://www.readislam.net/portal/archives/3242</link>
		<comments>http://www.readislam.net/portal/archives/3242#comments</comments>
		<pubDate>Wed, 01 Feb 2012 02:17:21 +0000</pubDate>
		<dc:creator>ReadIslam.net</dc:creator>
				<category><![CDATA[.]]></category>
		<category><![CDATA[முன்மாதிரி முஸ்லிம்]]></category>

		<guid isPermaLink="false">http://www.readislam.net/portal/?p=3242</guid>
		<description><![CDATA[இஸ்லாமிய மார்க்கத்தின் சட்டங்களை அறிந்து, அதன் மேலான போதனையை எற்றுச் செயல்படும் உண்மை முஸ்லிம் கருணையாளராக இருப்பார். அவரது இதயத்தில் கருணை பொங்கி வழியும். பூமியில் உள்ளவர்களிடம் கருணை காட்டுவது வானத்திலுள்ளவனின் கருணைக்குக் காரணமாக அமையும் என்பதையும் அறிவார்.     நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: &#8220;பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள், வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான்.&#8221; மேலும் கூறினார்கள்: &#8220;மனிதர்களுக்கு கருணை காட்டாதவர் மீது அல்லாஹ் கருணை காட்டமாட்டான்.&#8221; (முஃஜமுத் தப்ரானி) [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><a class="post_image_link" href="http://www.readislam.net/portal/archives/3242" title="Permanent link to மனிதர்களுக்கு கருணை காட்டாதவர் மீது அல்லாஹ் கருணை காட்டமாட்டான்!"><img class="post_image alignright remove_bottom_margin" src="http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcTcDDCOTYGV6Yd4XUYbLUhB3paHhLpNwUcafrjOBBLutvjpNi0LYw" width="259" height="194" alt="Post image for மனிதர்களுக்கு கருணை காட்டாதவர் மீது அல்லாஹ் கருணை காட்டமாட்டான்!" /></a>
</p><p style="text-align: justify;">இஸ்லாமிய மார்க்கத்தின் சட்டங்களை அறிந்து, அதன் மேலான போதனையை எற்றுச் செயல்படும் உண்மை முஸ்லிம் கருணையாளராக இருப்பார். அவரது இதயத்தில் கருணை பொங்கி வழியும். பூமியில் உள்ளவர்களிடம் கருணை காட்டுவது வானத்திலுள்ளவனின் கருணைக்குக் காரணமாக அமையும் என்பதையும் அறிவார்.</p>
<blockquote>
<p style="text-align: justify;">   <strong> நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: &#8220;பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள், வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான்.&#8221; மேலும் கூறினார்கள்: &#8220;மனிதர்களுக்கு கருணை காட்டாதவர் மீது அல்லாஹ் கருணை காட்டமாட்டான்.&#8221; (முஃஜமுத் தப்ரானி)</strong></p>
</blockquote>
<p style="text-align: justify;">        முஸ்லிமின் இதயத்தில் கருணை விசாலமாக இருக்க வேண்டும். அதை தனது குடும்பம், மனைவி, மக்கள், உறவினர்கள் என்ற வட்டத்துக்குள் சுருக்கிக் கொள்ளாமல் சமூகத்தின் அனைத்து மனிதர்களுக்கும் கருணையை விசாலப்படுத்த வேண்டும். ஏனெனில், நபி (ஸல்) அவர்கள் அனைத்து மக்களிடமும் கருணையுடன் நடந்து கொள்வதை ஈமானின் நிபந்தனைகளில் ஒன்றாகக் கூறினார்கள்.</p>
<p style="text-align: justify;">    அபூ மூஸப் அல் அஷ்அரி (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கிறார்கள்:</p>
<blockquote>
<p style="text-align: justify;">  <strong> &#8220;நீங்கள் ஒருவருக்கொருவர் கருணையுடன் நடந்து கொள்ளாதவரை ஈமான் கொண்டவர்களாக மாட்டீர்கள்&#8221; என நபி (ஸல்) அவர்கள் கூறியதும், தோழர்கள், &#8220;அல்லாஹ்வின் தூதரே!  நாங்கள் அனைவரும் கருணையோடுதான் நடந்து கொள்கிறோம்&#8221; என்றார்கள். நபி (ஸல்) அவர்கள் &#8220;கருணை என்பது நீங்கள் உங்கள் தோழரிடம் மட்டும் கருணையுடன் நடந்து கொள்வதல்ல. எனினும் அது மக்களிடமும் கருணை காட்டுவதாகும். எல்லோருக்கும் பொதுவான கருணையாகும்&#8221; என்று கூறினார்கள். (முஃஜமுத் தப்ரானி)</strong></p>
</blockquote>
<p style="text-align: justify;">    இந்தக் கருணை, முஸ்லிமான தனிமனிதரின் இதயத்தில் பொங்கி எழுந்து உலக மக்கள் அனைவரையும் தழுவிக்கொள்ளும். ஒரு முஸ்லிமுடைய உள்ளத்தில் இஸ்லாம் இந்த நேசத்தை உருவாக்கி, இறுதியில் முஸ்லிம் சமுதாயத்தையே இரக்கமுள்ள சமுதாயமாக மாற்றுகிறது. பின்பு என்றென்றும் இந்த சமுதாயத்தில் தூய்மையான அன்பு, சுயநலமின்றி பிறர்நலம் பேணுதல், அழமான இரக்க சிந்தனை ஆகியவைகளின் அலைகள் ஒயாது அடித்துகொண்டே இருக்கும்.</p>
<p style="text-align: justify;">    நபி (ஸல்) அவர்கள் கருணை காட்டுவதில் அழகிய முன்மாதிரியாகத் திகழ்ந்தார்கள். அவர்களுடன் அது இரண்டறக் கலந்துவிட்டது. அவர்களது மனம் கருணையைப் பொழிந்தது. எந்தளவுக்கென்றால் அவர்கள் தொழுகையில் குழந்தையின் அழுகுரலைக் கேட்டார்கள். &#8220;குழந்தையின் அழுகையால் தாய்க்கு சிரமமேற்படுமே&#8217; என நினைத்த நபி (ஸல்) அவர்களின் இதயத்தில் கருணை சுரந்து, தொழுகையை சுருக்கிக் கொண்டார்கள்.</p>
<p style="text-align: justify;">    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: &#8220;நான் தொழவைக்க ஆரம்பிக்கிறேன், அதை நீளமாக்க விரும்புகிறேன். அப்போது குழந்தையின் அழுகுரலைக் கேட்கிறேன். நான் குழந்தையின்  அழுகையால் அதன் தாய்க்கு எற்படும் சிரமத்தை எண்ணி எனது தொழுகையை சுருக்கிக் கொள்கிறேன்.&#8221; (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)</p>
<blockquote>
<p style="text-align: justify;">    <strong>ஒரு நாள் கிராமவாசி ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் &#8220;நீங்கள் உங்கள் குழந்தைகளை முத்தமிடுகிறீர்களா? நாங்கள் முத்தமிடுவதில்லை&#8221; என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: &#8220;அல்லாஹ் உமது இதயத்திலிருந்து அன்பை நீக்கியிருப்பதற்கு நான் பொறுப்பாளியா?&#8221; (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)</strong></p>
<p style="text-align: justify;"><strong>    நபி (ஸல்) அவர்கள் தமது பேரரான ஹஸன் (ரழி) அவர்களை முத்தமிட்டார்கள். அப்போது அருகிலிருந்த அக்ரஃ இப்னு ஹாபிஸ் (ரழி) &#8220;எனக்கு பத்து பிள்ளைகள் இருக்கிறார்கள்; நான் அவர்களில் எவரையும் முத்தமிட்டதில்லை&#8221; என்றார். அவரை நோக்கி பார்வையை செலுத்திய நபி (ஸல்) அவர்கள் &#8220;எவர் இரக்கம் காட்டவில்லையோ அவர் இரக்கம் காட்டப்படமாட்டார்&#8221; என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)</strong></p>
</blockquote>
<p style="text-align: justify;">    உமர் (ரழி) அவர்கள் ஒரு மனிதரை முஸ்லிம்களுக்குத் தலைவராக்க விரும்பினார்கள். அம்மனிதர் அக்ரஃ இப்னு ஹாபிஸ் (ரழி) அவர்கள் கூறியதுபோல &#8220;குழந்தைகளை முத்தமிடமாட்டேன்&#8217; என்று சொல்வதைக் கேட்டார்கள். அவரைப் பொறுப்பாளராக்குவதை ரத்து செய்தவர்களாகக் கூறினார்கள்: &#8220;உமது மனம் உமது குழந்தைகளிடம் கருணை காட்ட வில்லையானால் எப்படி நீர் மற்ற மனிதர்களிடம் கருணையுடன் நடந்து கொள்வீர்? அல்லாஹ்வின் மீது ஆணையாக! உம்மை ஒருபோதும் தலைவராக்க மாட்டேன்&#8221; என்று கூறிவிட்டு அவரைத் தலைவராக்குவதற்கான அதிகாரப் பத்திரத்தைக் கிழித்தெறிந்தார்கள்.</p>
<p style="text-align: justify;">    இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்&#8221;  முஸ்லிமுக்கு பருவமடையாத மூன்று (குழந்தைகள்) மரணித்துவிட்டால் அவர், அக்குழந்தைகளின் மீது காட்டிய இரக்கத்தின் காரணத்தால் அவரை அல்லாஹ் சொர்க்கத்தில் பிரவேசிக்கச் செய்வான்.&#8221;  அனஸ்(ரலி) ஸஹீஹுல் புகாரி</p>
<p style="text-align: justify;">    ஹாரிஸா இப்னு வஹ்ப் அல் ஃகுஸாஈ(ரலி) அறிவித்தார்  நபி(ஸல்) அவர்கள்  கூறக் கேட்டேன்: சொர்க்கவாசிகள் யார் என்று உங்களுக்கு நான் தெரிவிக்கவா? அவர்கள் (மக்களின் பார்வையில்) பலவீனமானவர்கள்; பணிவானவர்கள் (ஆனால்,) அவர்கள் அல்லாஹ்வின் மேல் ஆணையிட்டு (எதையேனும்) கூறுவார்களானால் அல்லாஹ் அதை (அவ்வாறே) நிறைவேற்றிவைப்பான்.</p>
<p style="text-align: justify;">   (இதைப் போன்றே) நரகவாசிகள் யார் என்று உங்களுக்கு நான் தெரிவிக்கவா? அவர்கள் இரக்கமற்றவர்கள்; (அதிகமாகச் சாப்பிட்டு) உடல் கொழுத்தவர்கள்; பெருமை அடிப்பவர்கள் ஆவர்.</p>
<p style="text-align: justify;">    நபி (ஸல்) அவர்கள் கருணையின் வட்டத்தை மனிதர்களுடன் சுருக்கிக் கொள்ளாமல் அதனுள் விலங்கினங்களையும் இணைத்துக் கொண்டார்கள்.</p>
<p style="text-align: justify;">    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: &#8220;ஒரு மனிதன் பாதையில் நடந்து சென்றபோது கடுமையான தாகம் எற்பட்டது. ஒரு கிணற்றைக் கண்டு அதனுள் இறங்கி தண்ணீர் அருந்திவிட்டு வெளியேறினான். அப்போது அங்கு ஒரு நாய் தாகத்தால் நாக்கைத் தொங்கவிட்டபடி ஈர மண்ணை நக்கிக் கொண்டிருந்தது. அம்மனிதன் &#8220;எனக்கு ஏற்பட்ட தாகத்தைப் போன்றே இந்த நாய்க்கும் ஏற்பட்டுவிட்டது&#8217; என்று நினைத்தவனாக கிணற்றினுள் இறங்கி தோலாலான தனது காலுறையில் நீரை நிரப்பிக் கொண்டு அதை தனது வாயில் கவ்வியபடி மேலே வந்து நாய்க்குத் தண்ணீர் புகட்டினான். அல்லாஹ் அவனின் நற்செயலுக்க பகரமாக அவனை மன்னித்து விட்டான்&#8221; என்று நபி (ஸல்) அவர்கள் கூறியபோது நபித்தோழர்கள் &#8220;விலங்குகளுக்கு உதவும் விஷயத்திலும் எங்களுக்கு நற்கூலி கிடைக்குமா?&#8221; என்று வினவினர். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், &#8220;உயிருள்ள ஒவ்வொரு பிராணியின் விஷயத்திலும் நற்கூலி உண்டு.&#8221; (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)</p>
<blockquote>
<p style="text-align: justify;">    <strong>நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: &#8220;ஒரு பூனையின் விஷயத்தில் ஒரு பெண் வேதனையளிக்கப்பட்டாள். அவள் அதை அடைத்து வைத்துவிட்டாள். அது பசியால் செத்துவிட்டது. அதன் காரணமாக அவள் நரகத்தில் நுழைந்தாள். அப்போது (மலக்குகள்) கூறினார்கள், நீ அதற்கு உணவளிக்காமல், தண்ணீர் புகட்டாமல் அதை அடைத்துவிட்டாய். அதை நீ வெளியே விட்டிருந்தால் பூமியிலுள்ள பூச்சிகளை சாப்பிட்டிருக்கும்.&#8221; (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)</strong></p>
</blockquote>
<p style="text-align: justify;">    நபி (ஸல்) அவர்கள் ஒர் இடத்தில் தங்கியபோது ஒரு பறவை நபி (ஸல்) அவர்களின் தலையின்மேல் பறந்து கொண்டிருந்தது. ஒருவர் தனது முட்டையை எடுத்து அநீதமிழைத்தது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டது போன்று இருந்தது. நபி (ஸல்) அவர்கள் &#8220;உங்களில் இந்தப் பறவையின் முட்டையை எடுத்தவர் யார்?&#8221; என்று கேட்டார்கள். அப்போது ஒரு மனிதர் &#8220;அல்லாஹ்வின் தூதரே! நான் அந்த முட்டையை எடுத்தேன்&#8221; என்றார். நபி (ஸல்) அவர்கள் &#8220;அதன் மீது கருணைகூர்ந்து அதை திருப்பிக் கொடுத்துவிடு&#8221; என்றார்கள். (முஃஜமுத் தப்ரானி)</p>
<p style="text-align: justify;">       இந்த சந்தர்ப்பத்தில் நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களின் இதயங்களில் விசாலமான கருணைச் சிந்தனையை விதைத்துவிட எண்ணினார்கள். அப்போது அவர்கள் விலங்குகள் உட்பட அனைத்து உயிரினங்கள் மீதும் கருணை காட்டுவதை தன் இயல்பாகக் கொள்வார்கள். விலங்கின் மீதே கருணை காட்டும் பண்பைப் பெற்றவர்கள் ஒருபோதும் மனிதனான தனது சகோதரனிடம் கருணையற்று கடுமையாக நடந்து கொள்ள மாட்டார்கள்.</p>
<p style="text-align: justify;">    நபி (ஸல்) அவர்கள் மனிதகுலத்துக்கும் விலங்கினங்களுக்கும் கருணை காட்டவேண்டுமென கட்டளையிட்டார்கள். முஸ்லிம்கள் கருணையுடன் நடந்துகொள்ள வேண்டும் என கற்றுக் கொடுத்தார்கள். அந்தக் கருணை முழு உலக முஸ்லிம்களையும் உள்ளடக்கி சமுதாயங்களையும் தேசங்களையும் சூழ்ந்துகொள்ள வேண்டும். பூமியில் கருணைப் பண்பு பரவலாகிவிடும்போது வானத்திலிருந்து அல்லாஹ்வின் கருணை பொழிகிறது.</p>
<p style="text-align: justify;"><span style="color: #888888;">முன்மாதிரி முஸ்லிம்</span></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.readislam.net/portal/archives/3242/feed</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
		</item>
		<item>
		<title>புகைப்பழக்கம்</title>
		<link>http://www.readislam.net/portal/archives/1363</link>
		<comments>http://www.readislam.net/portal/archives/1363#comments</comments>
		<pubDate>Mon, 30 Jan 2012 00:31:18 +0000</pubDate>
		<dc:creator>ReadIslam.net</dc:creator>
				<category><![CDATA[உடல் நலம்]]></category>

		<guid isPermaLink="false">http://www.readislam.net/portal/?p=1363</guid>
		<description><![CDATA[நெடுங்காலமாக தொடர்ந்து ஆராய்ந்து தெளிந்து புகைப்பிடிப்பதால் உடலுக்கு விளையும் ஊறுகளையும், நோய்களையும் விரிவாகவும் விளக்கமாகவும் மருத்துவ வல்லுனர்கள் எடுத்துச் சொல்லியும் எழுதியும் வருகிறார்கள். புகைப்பிடிப்பவர்கள் மாத்திரமின்றி அவர்களைச் சூழ்ந்திருப்பவர்களும் கூட அப்புகையை சுவாசிக்க நேரிடுவதால் பல்வேறு உடல் கோளாறுகளுக்கும், வியாதிகளுக்கும் ஆளாகிறார்கள்.     சுயமாக புகைப்பிடிக்கும் பழக்கம் இல்லாதவர்களுக்கும் புகைப்பிடிப்பவர்கள் வெளியிடும் புகையை அவர்களின் அருகில் þருந்தமையால் அவர்கள் விடும் புகையை உட்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாகி, அதன் காரணமாக அவர்களுக்கும் நோய் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><a class="post_image_link" href="http://www.readislam.net/portal/archives/1363" title="Permanent link to புகைப்பழக்கம்"><img class="post_image alignright remove_bottom_margin" src="http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcSORBCw_sTMvQ_9Bs-DJ_5i_6MA33JeDB4e-TfZMDoJ383Z3DHs" width="259" height="194" alt="Post image for புகைப்பழக்கம்" /></a>
</p><p style="text-align: justify;">நெடுங்காலமாக தொடர்ந்து ஆராய்ந்து தெளிந்து புகைப்பிடிப்பதால் உடலுக்கு விளையும் ஊறுகளையும், நோய்களையும் விரிவாகவும் விளக்கமாகவும் மருத்துவ வல்லுனர்கள் எடுத்துச் சொல்லியும் எழுதியும் வருகிறார்கள். புகைப்பிடிப்பவர்கள் மாத்திரமின்றி அவர்களைச் சூழ்ந்திருப்பவர்களும் கூட அப்புகையை சுவாசிக்க நேரிடுவதால் பல்வேறு உடல் கோளாறுகளுக்கும், வியாதிகளுக்கும் ஆளாகிறார்கள்.</p>
<p style="text-align: justify;"><span style="font-family: TheneeUniTx;">    சுயமாக புகைப்பிடிக்கும் பழக்கம் இல்லாதவர்களுக்கும் புகைப்பிடிப்பவர்கள் வெளியிடும் புகையை அவர்களின் அருகில் þருந்தமையால் அவர்கள் விடும் புகையை உட்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாகி, அதன் காரணமாக அவர்களுக்கும் நோய் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். உண்மையில் அவர்கள் புகைப்பிடிக்காவிட்டாலும் அருகில் இருந்து சுவாசிப்பதால் அவர்களை செயல் அற்ற புகைப்பிடிப்பவர்கள் (Passive Smokers) என்று மறுத்துவ ரீதியாக வகைப்படுத்தியுள்ளனர். ஆராய்ச்சியாளர்கள் இவ்விதம் பயங்கர கேடுகளை விளைவிக்கும் ஒரு &#8216;சமூக விரோதி&#8217; புகைப்பிடித்தல் ஆகும் என்கின்றனர்.</span></p>
<p style="text-align: justify;"><span style="font-family: TheneeUniTx;">    இறைமறையிலும், நபிமொழிகளிலும் புகைப்பிடித்தல் பற்றிய நேரடியான அறிவிப்புகள் காணப்படவில்லை எனினும், அது உடலுக்கு ஊறுகளையும், உயிருக்கு ஆபத்தையும் விளைவிக்கும் கொடிய பழக்கம் என்ற உண்மையின் அடிப்படையில் புகைப்பிடிப்பது தவிர்க்கப்பட வேண்டும் என்பதை யார் மறுக்கமுடியும்?</span></p>
<p style="text-align: justify;"><span style="font-family: TheneeUniTx;">    இஸ்லாமிய அடிப்படையில் உயிரை துரிதமாகவோ, படிப்படியாகவோ போகவல்ல  நஞ்சு போன்ற பொருட்களையும், உடல் ஆரோக்கியத்தை பாதிக்கவல்ல அல்லது உடல் கோளாறுகளை விளைவிக்க வல்ல பொருட்களையும் உண்ணுவதும் பருகுவதும் தவிர்க்கப்பட வேண்டும் என்பது பொதுவான நியதி.</span></p>
<p style="text-align: justify;"><span style="font-family: TheneeUniTx;">    <strong>நீங்கள் உங்களையே கொலை செய்து கொள்ளாதீர்கள் &#8211; நிச்சயமாக அல்லாஹ் உங்களிடம் மிக்க கருணையுடையவனாக இருக்கின்றான்.</strong> (அல்குர்ஆன் 4:29)</span></p>
<p style="text-align: justify;"><span style="font-family: TheneeUniTx;">    இ<strong>ன்னும் உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு சொல்லாதீர்கள். </strong> (அல்குர்ஆன் 2:195)</span></p>
<p style="text-align: justify;"><span style="font-family: TheneeUniTx;">    <strong>உண்ணுங்கள் பருகுங்கள்; எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள்.</strong> (அல்குர்ஆன் 7:31)</span></p>
<p style="text-align: justify;"><span style="font-family: TheneeUniTx;">    மேலே கண்ட இறைவசனங்கள் மூலம் புகைபிடிப்பது மற்றும் கேடு விளைவிக்கக்கூடிய பழக்க வழக்கங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்பது உறுதியாகவில்லையா? </span></p>
<p style="text-align: justify;"><span style="font-family: TheneeUniTx;">     மார்க்கம், மருத்துவம், ஒழுக்க ரீதியில் தீய பழக்கம் என கருதப்படுவதை முஸ்லிம்கள் தாமும் தவிர்த்து, சமுதாயத்தினரையும் தவிர்க்கத் தூண்டுவதை விடுத்து, தாமே அக்கொடிய பழக்கத்திற்கு அடிமையாக இருப்பது இஸ்லாத்திற்கும் முஸ்லிம் சமுதாயத்திற்கும் கேடாகும்.</span></p>
<p style="text-align: justify;"><span style="font-family: TheneeUniTx;">    புகைப்பிடிப்பவர்களிடம் அதன் தீமைகளை எடுத்துரைத்து அப்பழக்கத்தை விட்டுவிடும்படி வேண்டினால் சாதாரணமாக அவர்கள் கூறுவது &#8220;புகைப்பிடிப்பதால் ஏற்படும் தீமைகள் தெரியாமலில்லை; உடல் பாதிக்கப்படுவது உணராமலுமில்லை; ஆனால் பாழாய்ப்போன வழக்கத்தை விட முடியவில்லையே&#8221; என்பதுதான். புகைப்பிடிக்கும் அறிஞர்களும் கூட இதையே கூறுவது அவர்கள் கற்ற கல்விக்கும் பெற்ற அறிவுக்கும் அழகல்ல.</span></p>
<p style="text-align: justify;"><span style="font-family: TheneeUniTx; font-size: xx-small;">அப்துஸ்ஸமது  சென்னை</span></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.readislam.net/portal/archives/1363/feed</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
		</item>
		<item>
		<title>Al Quran-Word for Word &#8211; English</title>
		<link>http://www.readislam.net/portal/archives/2226</link>
		<comments>http://www.readislam.net/portal/archives/2226#comments</comments>
		<pubDate>Sat, 28 Jan 2012 02:00:40 +0000</pubDate>
		<dc:creator>ReadIslam.net</dc:creator>
				<category><![CDATA['அல்குர்ஆன்]]></category>
		<category><![CDATA[download]]></category>

		<guid isPermaLink="false">http://www.readislam.net/portal/?p=2226</guid>
		<description><![CDATA[The preface contains the contact information of the compiler which can be used to contact them. To read the preface of this book Click here. Volume Version Volume 1 Part A &#8212; Juz 1 to 5    (File Size: 27 MB) Volume 1 Part B &#8212; Juz 6 to 10    (File Size: 24 MB) [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><a class="post_image_link" href="http://www.readislam.net/portal/archives/2226" title="Permanent link to Al Quran-Word for Word &#8211; English"><img class="post_image alignright remove_bottom_margin" src="http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcSGHUIppHhEFW-Bfq9xIuvZjSy01CoU9fyH7GOu28JaXdYyX1kx" width="285" height="177" alt="Post image for Al Quran-Word for Word &#8211; English" /></a>
</p><p>The preface contains the contact information of the compiler which can be used to contact them. To read the preface of this book <a href="http://emuslim.com/quran/Translation/English/Final_Preface_Sept2008.pdf">Click here</a>.</p>
<p>Volume Version</p>
<ul>
<li><a href="http://emuslim.com/wordforword/Volume_1_Part_A_Juz1to5.pdf">Volume 1 Part A &#8212; Juz 1 to 5 </a>   (File Size: 27 MB)</li>
<li><a href="http://emuslim.com/wordforword/Volume_1_Part_B_Juz6to10.pdf">Volume 1 Part B &#8212; Juz 6 to 10 </a>   (File Size: 24 MB)</li>
<li><a href="http://emuslim.com/wordforword/Volume_2_Part_A_Juz11to15.pdf">Volume 2 Part A &#8212; Juz 11 to 15 </a>   (File Size: 28 MB )</li>
<li><a href="http://emuslim.com/wordforword/Volume_2_Part_B_Juz_16to20.pdf">Volume 2 Part B &#8212; Juz 16 to 20 </a>   (File Size: 24 MB)</li>
<li><a href="http://emuslim.com/wordforword/Volume_3_Part_A_Juz_21to25.pdf">Volume 3 Part A &#8212; Juz 21 to 15 </a>   (File Size: 29 MB)</li>
<li><a href="http://emuslim.com/wordforword/Volume_3_Part_B_Juz_25to30.pdf">Volume 3 Part B &#8212; Juz 26 to 30 </a>   (File Size: 28 MB)</li>
</ul>
<p>Juz 1</p>
<ul>
<li><a href="http://emuslim.com/wordforword/Juz__001_01to2.pdf">Page 1 &#8211; Page 2</a>   (File Size: 324 KB)</li>
<li><a href="http://emuslim.com/wordforword/Juz__001_03to9.pdf">Page 3 &#8211; Page 9</a>   (File Size: 1.3 MB)</li>
<li><a href="http://emuslim.com/wordforword/Juz__001_10to18.pdf">Page 10 &#8211; Page 18</a>   (File Size: 1.6 MB )</li>
<li><a href="http://emuslim.com/wordforword/Juz__001_19to27.pdf">Page 19 &#8211; Page 27</a>   (File Size: 1.6 MB)</li>
</ul>
<p>Juz 2</p>
<ul>
<li><a href="http://emuslim.com/wordforword/Juz__002_28to34.pdf">Page 28 &#8211; Page 34</a>   (File Size: 1.3 MB)</li>
<li><a href="http://emuslim.com/wordforword/Juz__002_35to41.pdf">Page 35 &#8211; Page 41</a>   (File Size: 1.3 MB)</li>
<li><a href="http://emuslim.com/wordforword/Juz__002_42to48.pdf">Page 42 &#8211; Page 48</a>   (File Size: 1.3 MB)</li>
<li><a href="http://emuslim.com/wordforword/Juz__002_49to54.pdf">Page 49 &#8211; Page 54</a>  (File Size: 961 KB)</li>
</ul>
<p>Juz 3</p>
<ul>
<li><a href="http://emuslim.com/wordforword/Juz__003_55to61.pdf">Page 55 &#8211; Page 61</a>   (File Size: 1.291 MB)</li>
<li><a href="http://emuslim.com/wordforword/Juz__003_62to68.pdf">Page 62 &#8211; Page 68</a>   (File Size: 1.336 MB)</li>
<li><a href="http://emuslim.com/wordforword/Juz__003_76to81.pdf">Page 69 &#8211; Page 75</a>   (File Size: 1.28 MB)</li>
<li><a href="http://emuslim.com/wordforword/Juz__004_096to102.pdf">Page 76 &#8211; Page 81 </a>  (File Size: 975 KB)</li>
</ul>
<p>Juz 4</p>
<ul>
<li><a href="http://emuslim.com/wordforword/Juz__004_082to88.pdf">Page 82 &#8211; Page 88</a>   (File Size: 1.25 MB)</li>
<li><a href="http://emuslim.com/wordforword/Juz__004_089to95.pdf">Page 89 &#8211; Page 95</a>   (File Size: 1.16 MB)</li>
<li><a href="http://emuslim.com/wordforword/Juz__004_096to102.pdf">Page 96 &#8211; Page 102</a>   (File Size: 1.28 MB)</li>
<li><a href="http://emuslim.com/wordforword/Juz__004_103to109.pdf">Page 103 &#8211; Page 109 </a>  (File Size: 1.22 MB)</li>
</ul>
<p>Juz 5</p>
<ul>
<li><a href="http://emuslim.com/wordforword/Juz__005_110to116.pdf">Page 110 &#8211; Page 116</a>   (File Size: 1.2 MB)</li>
<li><a href="http://emuslim.com/wordforword/Juz__005_117to123.pdf">Page 117 &#8211; Page 123</a>   (File Size: 1.3 MB)</li>
<li><a href="http://emuslim.com/wordforword/Juz__005_124to130.pdf">Page 124 &#8211; Page 130</a>   (File Size: 1.269 MB)</li>
<li><a href="http://emuslim.com/wordforword/Juz__005_131to136.pdf">Page 131 &#8211; Page 136 </a>  (File Size: 963 MB)</li>
</ul>
<p>Juz 6</p>
<ul>
<li><a href="http://emuslim.com/wordforword/Juz__006_137to143.pdf">Page 137 &#8211; Page 143</a>    (File Size:1.212 MB)</li>
<li><a href="http://emuslim.com/wordforword/Juz__006_144to150.pdf">Page 144 &#8211; Page 150</a>   (File Size: 1.256 MB)</li>
<li><a href="http://emuslim.com/wordforword/Juz__006_151to157.pdf">Page 151 &#8211; Page 157</a>   (File Size: 1.291 MB)</li>
<li><a href="http://emuslim.com/wordforword/Juz__006_158to164.pdf">Page 158 &#8211; Page 164</a>    (File Size: 1.142 MB)</li>
</ul>
<p> Juz 7</p>
<ul>
<li><a href="http://emuslim.com/wordforword/Juz__007_165to171.pdf">Page 165 &#8211; Page 171</a><span style="color: #008080;">    (File Size: 1.289 MB) </span></li>
<li><a href="http://emuslim.com/wordforword/Juz__007_172to178.pdf">Page 172 &#8211; Page 178</a><span style="color: #008080;"><span style="color: #008080;">    (File Size: 1.273 MB) </span></span></li>
<li><a href="http://emuslim.com/wordforword/Juz__007_179to185.pdf">Page 179 &#8211; Page 185</a><span style="color: #008080;"><span style="color: #008080;">    (File Size: 1.275 MB) </span></span></li>
<li><a href="http://emuslim.com/wordforword/Juz__007_186to193.pdf">Page 186 &#8211; Page 193</a><span style="color: #008080;"><span style="color: #008080;">    (File Size: 1.306 MB) </span></span></li>
</ul>
<p>Juz 8</p>
<ul>
<li><a href="http://emuslim.com/wordforword/Juz__008_194to200.pdf">Page 194 &#8211; Page 200</a><span style="color: #008080;">   (File Size: 1.229 MB) </span></li>
<li><a href="http://emuslim.com/wordforword/Juz__008_201to207.pdf">Page 201 &#8211; Page 207</a>   (File Size: 1.218 MB)</li>
<li><a href="http://emuslim.com/wordforword/Juz__008_208to214.pdf">Page 208 &#8211; Page 214</a>   (File Size: 1.197 MB)</li>
<li><a href="http://emuslim.com/wordforword/Juz__008_215to221.pdf">Page 215 &#8211; Page 221</a>    (File Size: 1.208 MB)</li>
</ul>
<p>Juz 9</p>
<ul>
<li><a href="http://emuslim.com/wordforword/Juz__009_222to228.pdf">Page 222 &#8211; Page 228</a>   (File Size: 1.268 MB)</li>
<li><a href="http://emuslim.com/wordforword/Juz__009_229to235.pdf">Page 229 &#8211; Page 235</a>   (File Size: 1.272 MB)</li>
<li><a href="http://emuslim.com/wordforword/Juz__009_236to242.pdf">Page 236 &#8211; Page 242</a>    (File Size: 1.279 MB)</li>
<li><a href="http://emuslim.com/wordforword/Juz__009_243to248.pdf">Page 243 &#8211; Page 248</a>    (File Size: 1.049 MB)</li>
</ul>
<p>Juz 10</p>
<ul>
<li><a href="http://emuslim.com/wordforword/Juz__010_249to255.pdf">Page 249 &#8211; Page 255</a>   (File Size: 1.276 MB)</li>
<li><a href="http://emuslim.com/wordforword/Juz__010_256to262.pdf">Page 256 &#8211; Page 262</a>   (File Size: 1.310 MB)</li>
<li><a href="http://emuslim.com/wordforword/Juz__010_263to269.pdf">Page 263 &#8211; Page 269</a>    (File Size: 1.252 MB)</li>
<li><a href="http://emuslim.com/wordforword/Juz__010_270to274.pdf">Page 270 &#8211; Page 274</a>    (File Size: 893 KB)</li>
</ul>
<p>Juz 11</p>
<ul>
<li><a href="http://emuslim.com/wordforword/Juz__011_275to281.pdf">Page 275 &#8211; Page 281</a>   (File Size: 1.243 MB)</li>
<li><a href="http://emuslim.com/wordforword/Juz__011_282to288.pdf">Page 282 &#8211; Page 288</a>   (File Size: 1.201 MB)</li>
<li><a href="http://emuslim.com/wordforword/Juz__011_289to295.pdf">Page 289 &#8211; Page 295</a>    (File Size: 1.187 MB)</li>
<li><a href="http://emuslim.com/wordforword/Juz__011_296to303.pdf">Page 296 &#8211; Page 303</a>    (File Size: 1.339 MB)</li>
</ul>
<p>Juz 12</p>
<ul>
<li><a href="http://emuslim.com/wordforword/Juz__012_304to310.pdf">Page 304 &#8211; Page 310</a>   (File Size: 1.279 MB)</li>
<li><a href="http://emuslim.com/wordforword/Juz__012_311to317.pdf">Page 311 &#8211; Page 317</a>   (File Size: 1.243 MB)</li>
<li><a href="http://emuslim.com/wordforword/Juz__012_318to324.pdf">Page 318 &#8211; Page 324</a>    (File Size: 1.208 MB)</li>
<li><a href="http://emuslim.com/wordforword/Juz__012_325to331.pdf">Page 325 &#8211; Page 331</a>    (File Size: 1.223 MB)</li>
</ul>
<p>Juz 13</p>
<ul>
<li><a href="http://emuslim.com/wordforword/Juz__013_332to338.pdf">Page 332 &#8211; Page 338</a>   (File Size: 1.155 MB)</li>
<li><a href="http://emuslim.com/wordforword/Juz__013_339to345.pdf">Page 339 &#8211; Page 345</a>   (File Size: 1.227 MB)</li>
<li><a href="http://emuslim.com/wordforword/Juz__013_346to352.pdf">Page 346 &#8211; Page 352</a>    (File Size: 1.25 MB)</li>
<li><a href="http://emuslim.com/wordforword/Juz__013_353to360.pdf">Page 353 &#8211; Page 360</a>    (File Size: 1.295 MB)</li>
</ul>
<p>Juz 14</p>
<ul>
<li><a href="http://emuslim.com/wordforword/Juz__014_361to367.pdf">Page 361 &#8211; Page 367</a>   (File Size: 1.102 MB)</li>
<li><a href="http://emuslim.com/wordforword/Juz__014_368to374.pdf">Page 368 &#8211; Page 374</a>   (File Size: 1.175 MB)</li>
<li><a href="http://emuslim.com/wordforword/Juz__014_375to381.pdf">Page 375 &#8211; Page 381</a>    (File Size: 1.207 MB)</li>
<li><a href="http://emuslim.com/wordforword/Juz__014_382to389.pdf">Page 382 &#8211; Page 389</a>    (File Size: 1.257 MB)</li>
</ul>
<p>Juz 15</p>
<ul>
<li><a href="http://emuslim.com/wordforword/Juz__015_390to396.pdf">Page 390 &#8211; Page 396</a>   (File Size: 1.312 MB)</li>
<li><a href="http://emuslim.com/wordforword/Juz__015_397to403.pdf">Page 397 &#8211; Page 403</a>   (File Size: 1.288 MB)</li>
<li><a href="http://emuslim.com/wordforword/Juz__015_404to410.pdf">Page 404 &#8211; Page 410</a>    (File Size: 1.331 MB)</li>
<li><a href="http://emuslim.com/wordforword/Juz__015_411to417.pdf">Page 411 &#8211; Page 417</a>    (File Size: 1.173 MB)</li>
</ul>
<p>Juz 16</p>
<ul>
<li><a href="http://emuslim.com/wordforword/Juz__016_418to424.pdf">Page 418 &#8211; Page 424</a>   (File Size: 1.209 MB)</li>
<li><a href="http://emuslim.com/wordforword/Juz__016_425to431.pdf">Page 425 &#8211; Page 431</a>   (File Size: 1.178 MB)</li>
<li><a href="http://emuslim.com/wordforword/Juz__016_432to438.pdf">Page 432 &#8211; Page 438</a>    (File Size: 1.094 MB)</li>
<li><a href="http://emuslim.com/wordforword/Juz__016_439to448.pdf">Page 439 &#8211; Page 448</a>    (File Size: 1.548 MB)</li>
</ul>
<p>Juz 17</p>
<ul>
<li><a href="http://emuslim.com/wordforword/Juz__017_449to455.pdf">Page 449 &#8211; Page 455</a>   (File Size: 1.172 MB)</li>
<li><a href="http://emuslim.com/wordforword/Juz__017_456to462.pdf">Page 456 &#8211; Page 462</a>   (File Size: 1.187 MB)</li>
<li><a href="http://emuslim.com/wordforword/Juz__017_463to469.pdf">Page 463 &#8211; Page 469</a>   (File Size: 1.169 MB)</li>
<li><a href="http://emuslim.com/wordforword/Juz__017_470to476.pdf">Page 470 &#8211; Page 476</a>   (File Size: 1.177 MB)</li>
</ul>
<p>Juz 18</p>
<ul>
<li><a href="http://emuslim.com/wordforword/Juz__018_477to483.pdf">Page 477 &#8211; Page 483</a>   (File Size: 1.256 MB)</li>
<li><a href="http://emuslim.com/wordforword/Juz__018_484to490.pdf">Page 484 &#8211; Page 490</a>   (File Size: 1.165 MB)</li>
<li><a href="http://emuslim.com/wordforword/Juz__018_491to497.pdf">Page 491 &#8211; Page 497</a>    (File Size: 1.301 MB)</li>
<li><a href="http://emuslim.com/wordforword/Juz__018_498to505.pdf">Page 498 &#8211; Page 505</a>    (File Size: 1.434 MB)</li>
</ul>
<p>Juz 19</p>
<ul>
<li><a href="http://emuslim.com/wordforword/Juz__019_506%20to512.pdf">Page 506 &#8211; Page 512</a>   (File Size: 1.236 MB)</li>
<li><a href="http://emuslim.com/wordforword/Juz__019_513to519.pdf">Page 513 &#8211; Page 519</a>   (File Size: 1.295 MB)</li>
<li><a href="http://emuslim.com/wordforword/Juz__019_520to526.pdf">Page 520 &#8211; Page 526</a>    (File Size: 1.308 MB)</li>
<li><a href="http://emuslim.com/wordforword/Juz__019_527to534.pdf">Page 527 &#8211; Page 534</a>    (File Size: 1.429 MB)</li>
</ul>
<p>Juz 20</p>
<ul>
<li><a href="http://emuslim.com/wordforword/Juz__020_535to541.pdf">Page 535 &#8211; Page 541</a>   (File Size: 1.297 MB)</li>
<li><a href="http://emuslim.com/wordforword/Juz__020_542to548.pdf">Page 542 &#8211; Page 548</a>   (File Size: 1.303 MB)</li>
<li><a href="http://emuslim.com/wordforword/Juz__020_549to555.pdf">Page 549 &#8211; Page 555</a>    (File Size: 1.241 MB)</li>
<li><a href="http://emuslim.com/wordforword/Juz__020_556to560.pdf">Page 556 &#8211; Page 560</a>    (File Size: 830 KB)</li>
</ul>
<p>Juz 21</p>
<ul>
<li><a href="http://emuslim.com/wordforword/Juz__021_561to567.pdf">Page 561 &#8211; Page 567</a>   (File Size: 1.504 MB)</li>
<li><a href="http://emuslim.com/wordforword/Juz__021_568to574.pdf">Page 568 &#8211; Page 574</a>   (File Size: 1.540 MB)</li>
<li><a href="http://emuslim.com/wordforword/Juz__021_575to581.pdf">Page 575 &#8211; Page 581</a>    (File Size: 1.447 MB)</li>
<li><a href="http://emuslim.com/wordforword/Juz__021_582to588.pdf">Page 582 &#8211; Page 588</a>    (File Size: 1.453 MB)</li>
</ul>
<p>Juz 22</p>
<ul>
<li><a href="http://emuslim.com/wordforword/Juz__022_589to595.pdf">Page 589 &#8211; Page 595</a>   (File Size: 1.484 MB)</li>
<li><a href="http://emuslim.com/wordforword/Juz__022_596to602.pdf">Page 596 &#8211; Page 602</a>   (File Size: 1.236 MB)</li>
<li><a href="http://emuslim.com/wordforword/Juz__022_603to609.pdf">Page 603 &#8211; Page 609</a>    (File Size: 1.321 MB)</li>
<li><a href="http://emuslim.com/wordforword/Juz__022_610to616.pdf">Page 610 &#8211; Page 616</a>    (File Size: 1.109 MB)</li>
</ul>
<p>Juz 23</p>
<ul>
<li><a href="http://emuslim.com/wordforword/Juz__023_617to623.pdf">Page 617 &#8211; Page 623</a>   (File Size: 1.248 MB)</li>
<li><a href="http://emuslim.com/wordforword/Juz__023_624to630.pdf">Page 624 &#8211; Page 630</a>   (File Size: 1.205 MB)</li>
<li><a href="http://emuslim.com/wordforword/Juz__023_631to637.pdf">Page 631 &#8211; Page 637</a>    (File Size: 1.229 MB)</li>
<li><a href="http://emuslim.com/wordforword/Juz__023_638to646.pdf">Page 638 &#8211; Page 646</a>    (File Size: 1.566 MB)</li>
</ul>
<p>Juz 24</p>
<ul>
<li><a href="http://emuslim.com/wordforword/Juz__024_647to653.pdf">Page 647 &#8211; Page 653</a>   (File Size: 1.264 MB)</li>
<li><a href="http://emuslim.com/wordforword/Juz__024_654to660.pdf">Page 654 &#8211; Page 660</a>   (File Size: 1.26 MB)</li>
<li><a href="http://emuslim.com/wordforword/Juz__024_661to667.pdf">Page 661 &#8211; Page 667</a>    (File Size: 1.278 MB)</li>
<li><a href="http://emuslim.com/wordforword/Juz__024_668to673.pdf">Page 668 &#8211; Page 673</a>    (File Size: 99 KB)</li>
</ul>
<p>Juz 25</p>
<ul>
<li><a href="http://emuslim.com/wordforword/Juz__025_674to680.pdf">Page 674 &#8211; Page 680</a>   (File Size: 1.224 MB)</li>
<li><a href="http://emuslim.com/wordforword/Juz__025_681to687.pdf">Page 681 &#8211; Page 687</a>   (File Size: 1.205 MB)</li>
<li><a href="http://emuslim.com/wordforword/Juz__025_688to694.pdf">Page 688 &#8211; Page 694</a>    (File Size: 1.208 MB)</li>
<li><a href="http://emuslim.com/wordforword/Juz__025_695to703.pdf">Page 695 &#8211; Page 703</a>    (File Size: 1.543 MB)</li>
</ul>
<p>Juz 26</p>
<ul>
<li><a href="http://emuslim.com/wordforword/Juz__026_704to710.pdf">Page 704 &#8211; Page 710</a>   (File Size: 1.254 MB)</li>
<li><a href="http://emuslim.com/wordforword/Juz__026_711to717.pdf">Page 711 &#8211; Page 717</a>   (File Size: 1.306 MB)</li>
<li><a href="http://emuslim.com/wordforword/Juz__026_718to724.pdf">Page 718 &#8211; Page 724</a>    (File Size: 1.307 MB)</li>
<li><a href="http://emuslim.com/wordforword/Juz__026_725to732.pdf">Page 725 &#8211; Page 732</a>    (File Size: 1.365 MB)</li>
</ul>
<p>Juz 27</p>
<ul>
<li><a href="http://emuslim.com/wordforword/Juz__027_733to739.pdf">Page 733 &#8211; Page 739</a>   (File Size: 1.214 MB)</li>
<li><a href="http://emuslim.com/wordforword/Juz__027_740to746.pdf">Page 740 &#8211; Page 746</a>   (File Size: 1.173 MB)</li>
<li><a href="http://emuslim.com/wordforword/Juz__027_747to753.pdf">Page 747 &#8211; Page 753</a>    (File Size: 1.174 MB)</li>
<li><a href="http://emuslim.com/wordforword/Juz__027_754to764.pdf">Page 754 &#8211; Page 764</a>    (File Size: 1.820 MB)</li>
</ul>
<p>Juz 28</p>
<ul>
<li><a href="http://emuslim.com/wordforword/Juz__028_765to771.pdf">Page 765 &#8211; Page 771</a>   (File Size: 1.306 MB)</li>
<li><a href="http://emuslim.com/wordforword/Juz__028_772to778.pdf">Page 772 &#8211; Page 778</a>   (File Size: 1.319 MB)</li>
<li><a href="http://emuslim.com/wordforword/Juz__028_779to785.pdf">Page 779 &#8211; Page 785</a>    (File Size: 1.328 MB)</li>
<li><a href="http://emuslim.com/wordforword/Juz__028_786to793.pdf">Page 786 &#8211; Page 793</a>    (File Size: 1.471 MB)</li>
</ul>
<p>Juz 29</p>
<ul>
<li><a href="http://emuslim.com/wordforword/Juz__029_794to800.pdf">Page 794 &#8211; Page 800</a>   (File Size: 1.267 MB)</li>
<li><a href="http://emuslim.com/wordforword/Juz__029_801to807.pdf">Page 801 &#8211; Page 807</a>   (File Size: 1.285 MB)</li>
<li><a href="http://emuslim.com/wordforword/Juz__029_808to814.pdf">Page 808 &#8211; Page 814</a>    (File Size: 1.233 MB)</li>
<li><a href="http://emuslim.com/wordforword/Juz__029_815to825.pdf">Page 815 &#8211; Page 825 </a>    (File Size: 1.943 MB)</li>
</ul>
<p>Last Juz 30 </p>
<ul>
<li><span style="color: #800000;"><a href="http://emuslim.com/wordforword/Juz__030_826to832.pdf">Page 826 &#8211; Page 832</a></span>   (File Size: 1.252 MB)</li>
<li><span style="color: #800000;"><a href="http://emuslim.com/wordforword/Juz__030_833to839.pdf">Page 833 &#8211; Page 839</a></span>   (File Size: 1.289 MB)</li>
<li><span style="color: #800000;"><a href="http://emuslim.com/wordforword/Juz__030_840to846.pdf">Page 840 &#8211; Page 846</a></span>    (File Size: 1.278 MB)</li>
<li><span style="color: #800000;"><a href="http://emuslim.com/wordforword/Juz__030_847to859.pdf">Page 847 &#8211; Page 859</a></span>    (File Size: 2.498 MB)</li>
</ul>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.readislam.net/portal/archives/2226/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>நற்குணமுடையோராக இருப்பதன் அவசியம்!</title>
		<link>http://www.readislam.net/portal/archives/3765</link>
		<comments>http://www.readislam.net/portal/archives/3765#comments</comments>
		<pubDate>Wed, 25 Jan 2012 19:02:33 +0000</pubDate>
		<dc:creator>ReadIslam.net</dc:creator>
				<category><![CDATA[நற்குணம்]]></category>

		<guid isPermaLink="false">http://www.readislam.net/portal/?p=3765</guid>
		<description><![CDATA[நற்குணம் என்பது நபிமார்களதும், உண்மையாளர்களதும், நல்லடியார்களதும் உயர்ந்த பண்பாகும், இதனாலேயே நல்லொழுக்கமுடைய ஒரு அடியான் சிறந்த அந்தஸ்தையும் சமூகத்தில் உயர்ந்த இடத்தையும் பெற்றுக் கொள்கின்றான். இறைவன் தனது திருக்குர் ஆனில் இறுதி நபி (ஸல்) அவர்களின் நற்குணத்தை பற்றிக் குறிப்பிடும் பொழுது,  “நிச்சயமாக நீர் மகத்தான நற்குணத்தின் மீது    இருக்கின்றீர்” (அல்குர் ஆன் 68:04) என்று கூறுகின்றான்.நபி (ஸல்) அவர்கள் நற்குணத்தின்பால் மக்களுக்கு ஆர்வம் காட்டி இருக்கின்றார்கள். நற்குணத்தையும் இறையச்சத்தையும் இணைத்துக் கூறி அதனை கடைபிடிக்குமாறும் கூறி [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><a class="post_image_link" href="http://www.readislam.net/portal/archives/3765" title="Permanent link to நற்குணமுடையோராக இருப்பதன் அவசியம்!"><img class="post_image alignleft remove_bottom_margin" src="http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcSI4e5U7vhEtKlwT5SFG9PSqTPJcw_1a1VWjRQGlIBOEkuX8rVC" width="259" height="194" alt="Post image for நற்குணமுடையோராக இருப்பதன் அவசியம்!" /></a>
</p><div>நற்குணம் என்பது நபிமார்களதும், உண்மையாளர்களதும், நல்லடியார்களதும் உயர்ந்த பண்பாகும், இதனாலேயே நல்லொழுக்கமுடைய ஒரு அடியான் சிறந்த அந்தஸ்தையும் சமூகத்தில் உயர்ந்த இடத்தையும் பெற்றுக் கொள்கின்றான். இறைவன் தனது திருக்குர் ஆனில் இறுதி நபி (ஸல்) அவர்களின் நற்குணத்தை பற்றிக் குறிப்பிடும் பொழுது, <strong></p>
<p>“நிச்சயமாக நீர் மகத்தான நற்குணத்தின் மீது    இருக்கின்றீர்” (அல்குர் ஆன் 68:04)</p>
<p></strong>என்று கூறுகின்றான்.நபி (ஸல்) அவர்கள் நற்குணத்தின்பால் மக்களுக்கு ஆர்வம் காட்டி இருக்கின்றார்கள். நற்குணத்தையும் இறையச்சத்தையும் இணைத்துக் கூறி அதனை கடைபிடிக்குமாறும் கூறி இருக்கின்றார்கள்.நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:</div>
<div>
<strong>“அதிகமானவர்கள் சுவர்க்கம் நுழைவது இறையச்சத்தினாலும், நற்குணத்தினாலுமேயாகும்” (ஆதாரம்: திர்மிதி, ஹாகிம்)</p>
<p></strong>நபி (ஸல்) அவர்கள் அபூ ஹுரைரா (ரழி) அவர்களுக்கு சிறந்த ஒரு நல்லுபதேசம் செய்கின்றார்கள்:</div>
<div>
<p><strong>“அபூ ஹுரைராவே நீர் நற்குணத்தை கடைபிடிப்பீராக! அதற்கு அபூ ஹுரைரா (ரழி) அவர்கள், ‘அல்லாஹ்வின் தூதரே! நற்குணம் என்றால் என்ன? என்று வினவினார். அதற்கு நபியவர்கள் கூறினார்கள், ‘துண்டித்து நடக்கும் உறவினர்களுடன் சேர்ந்து நடப்பீராக! உமக்கு அநியாயம் செய்தவரை மன்னிபீராக!” (ஆதாரம்: அல்பைஹகீ)</strong></p>
</div>
<div>
<p>பிரமாண்டமான நன்மையையும் உயர்தரமான அந்தஸ்தையும் இந்த நற்குணத்தினால் ஒரு அடியான் எளிதில் பெற்றுக் கொள்கின்றான். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:</p>
<p><strong>“நற்குணம் உள்ள ஒரு அடியான் நின்று வணங்கி நோன்பு நோற்பவனின் அந்தஸ்தை அடைந்து கொள்கின்றான்” (ஆதாரம்:அஹ்மத்)</strong></p>
<p>நபி (ஸல்)அவர்கள் நற்குணத்தை பூரண இறை விசுவாசத்திற்கு  உரிய அடயாளங்களில் ஒன்றாக கணிப்பிட்டுள்ளார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:</p>
<p>“எவரிடத்தில் நற்குணம் என்ற பண்பு இருக்கின்றதோ அவரே பூரண இறை விசுவாசியாவர்”</p>
<p>நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:</p>
<p><strong>“மனிதர்களுக்கு பிரயோஜனம் அளிக்கக் கூடியவற்றை செய்வது அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானதாகும்; ஒரு முஸ்லிமுக்கு சந்தோசமளிக்ககூடிய செயல்களை செய்வது அல்லது கஷ்டத்தை விட்டும் நீக்குகின்ற அல்லது அவனின் கடனை நிறைவேற்றுவது அல்லது பிறரின் பட்டினியை நீக்குவது அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பத்துக்குரிய செயல்களாகும். ஒரு முஸ்லிமின் தேவயை நிறைவேற்றுவதற்காக செல்வதென்பது பள்ளிவாசலில் ஒரு மாத காலம் இஃதிகாப் இருப்பதனை விடவும் என்னிடத்தில் விருப்பதுக்குரிய செயலாகும்” (ஆதாரம்:தபரானி)</strong></p>
<p>ஒரு முஸ்லிம்  நல்ல விஷயங்களை பேசுவதற்கு இஸ்லாம் கட்டளை பிறப்பிக்கின்றது. அவ்வாறு  நல்ல விஷயங்களை பேசுவதற்கும் நன்மையுண்டு. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:</p>
<p><strong>“நல்ல வார்த்தைகளை பேசுவது சதகா(தர்மமாகும்)”  (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)</strong></p>
<p>இதே போன்று மனிதர்களிடம் எந்த ஒன்றையும் எதிர்பார்க்காத புன்முறுவலுக்கும் நன்மையுண்டு! அதுவும் நற்குணத்திலிருந்து உள்ளதுதான் என்று நபி (ஸல்) அவர்கள் தெளிவு படுத்துகின்றார்கள்:</p>
<p><strong>“உமது சகோதரனின் முகத்தை பார்த்து புன்முறுவல் பூர்ப்பதும் சதகாவாகும்.” என்றார்கள். (ஆதாரம்: திர்மிதி)</strong></p>
<p>நற்குணத்தின்பால் தூண்டக்கூடிய நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டல்கள் ஏராளம்! அவர்களது வாழ்வில் தனது மனைவியர்களுடன், அண்டை வீட்டார்களுடன், ஏழ்மையாக இருந்த நபித்தோழர்களுடன், அறிவீனர்களுடன், இவற்றுக்கெல்லாம் அப்பால் இறை நிராகரிப்பாளர்களுடன் அனைவர்களுடனும் சிறந்த நற்குணமுள்ள வர்களாகவும் எடுத்துக்காட்டாகவும் முன்னுதாரணமுள்ளவராகவும் வாழ்ந்து காட்டி சென்றார்கள்.</p>
<p>அல்லாஹ் கூறுகின்றான்:</p>
<p><strong>“அல்லாஹ்வுடைய ரஹ்மத்தின் காரணமாகவே நீர் அவர்களிடம் மென்மையாக (கனிவாக) நடந்து கொள்கிறீர்; (சொல்லில்) நீர் கடுகடுப்பானவராகவும், கடின சித்தமுடையவராகவும் இருந்திருப்பீரானால், அவர்கள் உம் சமூகத்தை விட்டும் ஓடிப்போயிருப்பார்கள்;. எனவே அவர்களின் (பிழைகளை) அலட்சியப்படுத்திவிடுவீராக!” (3:159)</strong></p>
<p>நற்குணத்திற்கான அடயாளங்கள் ஏராளமானவை! அவற்றில் அதிகம் வெட்கமுள்ளவர்களாகவும், பிறரை துன்பப்படுத்துவதனை விட்டும் விலகி நடத்தல், அதிக சீர்திருத்தவாதியாக இருத்தல், உண்மை பேசக் கூடியவராகவும், குறைவான பேச்சு அதிக செயலுடையவராகவும், பொறுமை, நன்றியுணர்வு, தாழ்மை, கருனை, இன்முகமுள்ளவர்களாக இருப்பதோடு பிறரை திட்டாமலும் கோல், புறம், பெருமை போன்ற தீய செயல்களை விட்டும் விலகி, அல்லாஹ்வுக்காக வேண்டி ஒருவரை விரும்பி அவனுக்காகவே ஒருவரை ஒதுக்கி அவனுக்காகவே ஒருவரை பொருந்திக்கொள்ள வேண்டும்.</p>
<p><strong>நற்குணத்தை இல்லாமல் ஆக்கக்கூடியவைகள்:</strong></p>
<p>பெருமை, பொறாமை, கல்நெஞ்சம், நல்லுபதேசத்தை ஏற்க மறுத்தல், தலைமைத்துவம் உயர்ந்த பதவிகளையும் எதிர்பார்த்தல், தான் செய்த செயலுக்கு புகழை எதிர்பார்த்தல் போன்ற அனைத்து விஷயங்களும் நற்குணைத்தை இல்லாமலாக்குகின்ற  காரியங்களாகும். இவைகள் அனைத்துமே தற்பெருமை உள்ளவர்களிடமிருந்தே உருவாகின்றன. தீய விஷயங்கள் அனைத்துமே நற்குணத்தை பாழாக்கக் கூடியவை ஆகும். நல்ல விஷயங்கள் அனைத்துமே நற்குணத்திற்கே உரிய பண்பாகும்!                            .</p>
<p>நற்குணம்  என்பது உயர்ந்த பண்பாகும், அதனது கூலியையும் பண்பையும் எடுத்து நடக்க பழகிக்கொள்ள வேண்டும். அதனை விட்டு தடுக்கக்கூடிய பொறாமை, பிறரை நாவினால் நோவினை செய்தல், நேர்மையின்மை,. கோல், புறம், கஞ்சத்தனம், உறவினர்களை துண்டித்து நடத்தல் போன்றவற்றிலிருந்து தவிர்ந்து ஒதுங்கிக்கொள்ள வேண்டும். அல்லாஹ்வின் கட்டளையை ஏற்றுக் கொண்டிருக்கின்ற ஒரு முஸ்லிம் நாளாந்தம் ஐந்து தடவைகள் தனது மேனியை சுத்தம் செய்கின்றான். உலகத்தில் மக்களுக்கு மத்தியில் ஏற்படுகின்ற பிரச்சினைகளையும், தீய குணங்களை விட்டும் நீக்க வருடத்தில் ஒரு முறையாவது முயற்ச்சிக்காதது ஆச்சரியமான விஷயமாகும்!</p>
<p>கோபத்தை விட்டு விட்டு நம்மை சூழ உள்ள பெற்றோர்கள், மனைவியர்கள், குழந்தைகள், நண்பர்கள், அறிந்தவர்கள் அனைவர்களுடனும் சிறந்த முறையில் வாழ்ந்தவர்கள், இனிமையான பேச்சுக்களையும், முக மலர்ச்சியுடனும் இருக்கின்றவர்கள் இவர்கள் அனைவருமே நற்குணத்தின் மூலம் உயர்ந்த நற்கூலியை பெறத்தகுதியானவர்களே!.</p>
<p>நபி (ஸல்) அவர்கள்  நல்லுபதேசத்தின் போது சுருக்கமாக அழகாக நற்குணத்தைப் பற்றி  குறிப்பிட்டார்கள்:</p>
<p>“எங்கிருந்த போதிலும் இறைவனை அஞ்சிக்கொள்ளுங்கள்! ஒரு தீமையை செய்தால் அதனை தொடர்ந்து நல்ல விஷயங்களை செய்யுங்கள்! இதனால் தீமைகள் அழிந்துவிடும். மக்களுடன் நற்குணத்துடன் நடந்துகொள்ளுங்கள்”</p>
</div>
<div>
<p>நாம் அனைவரும் நபிகளார் கூறிய “மறுமையில் எனக்கு மிகவும் நெருக்கமாக உள்ளவர்கள், நற்குணமுடையவரே!” எனற கூட்டத்தில் இருக்க அல்லாஹ் அருள் புரிவானாக! ஆமீன்.</p>
<p>&nbsp;</p>
</div>
<div><span style="color: #808080; font-size: x-small;">அர்ஷத் ஸாலிஹ் மதனி</span></div>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.readislam.net/portal/archives/3765/feed</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
		</item>
		<item>
		<title>ஒரு கடவுள் &#8211; அளவுகோல் விளங்காத நாத்திகவாதிகள்</title>
		<link>http://www.readislam.net/portal/archives/3658</link>
		<comments>http://www.readislam.net/portal/archives/3658#comments</comments>
		<pubDate>Mon, 23 Jan 2012 02:21:49 +0000</pubDate>
		<dc:creator>ReadIslam.net</dc:creator>
				<category><![CDATA[அறிவியல்]]></category>
		<category><![CDATA[பகுத்தறிவுவாதம்]]></category>

		<guid isPermaLink="false">http://www.readislam.net/portal/?p=3658</guid>
		<description><![CDATA[கடவுள் பற்றிய மதங்களின் அடிப்படை மற்றும் நடுநிலை கொண்ட மனிதர்களின் நியாயமான புரிதல்கள்: இயற்பியல் விதிப்படி (Thermodynamics First Law) இந்த உலகில் யாரும் எந்த ஒரு சக்தியையும் ஆக்கவும் முடியாது அழிக்கவும் முடியாது அப்படியெனில் இவ்வளவு பெரிய ஆற்றலை ஆக்கியது ஒரு ஆற்றல் மிகுந்த சக்தி என்பதை யாராலும் மறுக்க முடியாது. இயற்கை என்ற பெயர் வைத்தாலும் சரி, கடவுள் என்ற பெயர் வைத்தாலும் சரி இப்பிரபஞ்சத்தை உருவாக்கி இயக்கி வருவது ஒரு மாபெரும் சக்தி [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><a class="post_image_link" href="http://www.readislam.net/portal/archives/3658" title="Permanent link to ஒரு கடவுள் &#8211; அளவுகோல் விளங்காத நாத்திகவாதிகள்"><img class="post_image alignleft remove_bottom_margin" src="http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcSqG9yI1pWHMlSlRu7K2FVtreFhTskCQ8lniEjgKDW1-OxKT1Uw" width="276" height="183" alt="Post image for ஒரு கடவுள் &#8211; அளவுகோல் விளங்காத நாத்திகவாதிகள்" /></a>
</p><p style="text-align: justify;">கடவுள் பற்றிய மதங்களின் அடிப்படை மற்றும் நடுநிலை கொண்ட மனிதர்களின் நியாயமான புரிதல்கள்:</p>
<p style="text-align: justify;">இயற்பியல் விதிப்படி (Thermodynamics First Law) இந்த உலகில் யாரும் எந்த ஒரு சக்தியையும் ஆக்கவும் முடியாது அழிக்கவும் முடியாது அப்படியெனில் இவ்வளவு பெரிய ஆற்றலை ஆக்கியது ஒரு ஆற்றல் மிகுந்த சக்தி என்பதை யாராலும் மறுக்க முடியாது. இயற்கை என்ற பெயர் வைத்தாலும் சரி, கடவுள் என்ற பெயர் வைத்தாலும் சரி இப்பிரபஞ்சத்தை உருவாக்கி இயக்கி வருவது ஒரு மாபெரும் சக்தி என்பதை மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ அனைவரும் ஏற்றுக்கொள்கின்றனர். அதற்கு அவர்கள் வைத்த பெயர், அது அவர்களுடைய நம்பிக்கை.</p>
<p style="text-align: justify;">இந்த பிரபஞ்சம் (Universe) இயங்கிகொண்டு இருக்கிறது என்பது மட்டுமே நாம் அறிந்தவை. இது எங்கிருந்து வந்தது, எந்த சக்தியை கொண்டு இயங்குகின்றது என்பன நாம் அறியப்படாத உண்மைகள். ஆற்றல் எங்கிருந்தாவது நமக்கு கிடைத்தால் மட்டும் தானே நம்மால் இயங்க முடியும்.<img id="rg_hi" class="alignright" src="http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQ8MFmV39KGUGAxA2z5qZKbFjoGDucAsiAZqOutkE9AMMNQG41O" alt="" width="276" height="182" data-width="276" data-height="182" /></p>
<p style="text-align: justify;">பெருவெடி கொள்கை (Big Bang theory) என்பது அனைத்து அறிவியலர்களாலும் ஏற்றுகொள்ளகூடிய ஒரு கொள்கையாக உள்ளது. அறிவியலாளர்கள் இப்பிரபஞ்சம் உருவானதை பற்றி பெரு வெடி கொள்கை அடிப்படையில் கூறும் பொழுது இப்பிரபஞ்சம் எப்பொழுதும் இருந்தது அல்ல மாறாக அதற்கு ஆரம்பம் என்பது இருக்கிறது என்றும் ஒரு அணு வெடித்து அதன் மூலமே இந்த ஆற்றலும் ஒளியும் உருவானதாக குறிப்பிடுகின்றனர். எது இந்த பிரபஞ்சத்தை அதன் இயக்கத்தை ஆரம்பிக்க தூண்டியது (Stimulate) என்பது பற்றிய ஒரு தெளிவான விளக்கம் இல்லை.</p>
<p style="text-align: justify;">இந்த பிரபஞ்சம் ஒரு ஒழுங்கு முறையை கடைபிடித்தும் வரைமுறை விதிகளுக்கு கட்டுப்பட்டும் இயங்குவது அறிவியலாளர்களிடையே ஒரு பெரிய வியப்பையே ஏற்படுத்துகிறது. ஒழுங்கு முறையை கடைபிடித்து நடக்கவேண்டிய தேவை என்ன என்பதை விளக்க தவறியவர்களாகவே அறிவியலாளர்கள் உள்ளனர். அறிவியலாளர்களின் விளக்கங்களையும் எடுத்து கொண்டு தங்களுக்கு தேவையான மசாலாக்களையும் கலந்து ஒரு புதுமையான முறையில் விளக்கம் தருவதே நாத்திக கொள்கை. முழுமை இல்லாத அதனை கருத்தில் கொள்ளும் பொழுது பழங்காலங்களிருந்து சொல்ல பட்ட கடவுள் கொள்கைகள் எல்லாம் கற்பனை என்று சாதாரணமாக விட்டு செல்வது அறிவுடைமையாக இருக்காது. அனைத்தையும் மனதில் கொண்டு ஆராய்ந்தால் மட்டுமே கடவுள் கொள்கையில் உள்ள உண்மையை அறிய முடியும்.</p>
<p style="text-align: justify;">ஆதிகாலம் முதல் மக்கள் கடவுளை வணங்கியே வந்திருக்கின்றனர். பழங்காலங்களில் மனிதர்கள் நெருப்பை வணங்குபவர்களாகவும், சூரிய சந்திரனை வணங்குபவர்களாகவும் இருந்துள்ளனர் என்பது பல குறிப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது. அதேபோல ஆதிகாலம் முதல் இன்று வரை ஒரு கடவுள் (One GOD) கொள்கை என்பது இருந்து வந்திருக்கின்றது என்பது குறுப்பிட தக்க விஷயம்.</p>
<p style="text-align: justify;">சூரியன் சந்திரன் பாம்பு பல்லி என அனைத்தையும் கடவுளாக நினைத்த மனிதன் எல்லாவற்றிற்கும் பெரிய கடவுளாக ஒரு கடவுளை வைத்து அதற்கு உருவம் சொல்லாமலும் வணங்கி வந்திருக்கிறான், உயர்ந்த இடத்தில் மனிதன் வைத்த கடவுளுக்கு உருவம் கற்பிக்காததிலுருந்தே அவர் மனிதன் கற்பனைக்கும் நினைவுக்கும் அப்பால் உள்ள உருவத்திலயே மனிதனின் எண்ணத்தில் இருந்திருப்பார் என்று அறிய முடிகிறது.</p>
<p style="text-align: justify;">ஒவ்வொரு மதங்களும் கடவுளை பற்றிய வெவ்வேறு கருத்துக்களை கொண்டிருந்தாலும் உலகின் பெரிய மதங்களின் கடவுள் நம்பிக்கையை பார்த்தல் அவர்கள் பல்வேறு உருவங்களை கடவுளாக சித்தரித்தாலும் பெரிய கடவுளாக வைத்திருப்பது உருவம் இல்லாத ஒரு கடவுளை தான் கடவுள் என்பவர் மனிதனின் உருவம் பற்றிய சிந்தனைக்கும் எண்ணத்திற்கும் அப்பாற்பட்டவராகவும் மனிதர்களிடம் இருக்கின்றார்.</p>
<p style="text-align: justify;">இவ்வுலகில் உள்ள மக்கள் வெவ்வேறு பெயர்களில் கடவுளை வணங்கினாலும் அனைவரும் தன்னையும் அறியாமல் அந்த ஒரு புத்திசாலித்தனமான அந்த சக்தியை தான் மையமாக வைத்து வணங்குகின்றனர்.</p>
<p style="text-align: justify;">கடவுளை மனித உருவத்திலோ அல்லது மற்ற ஏதேனும் தெரிந்த உருவத்திலோ வைத்திருக்கும் நிலையே நாத்திக வாதிகளின் கடவுள் மறுப்பு கொள்கைக்கு அடித்தளமாக அமைந்து விடுகிறது, கடவுளை பூமியில் வைத்து பார்ப்பதாலயே மனிதர் உருவத்தில் கடவுள் இருந்திருப்பர் என்ற எண்ணம் வரும். பூமியை விட்டு வெளியில் போனால் மனித உருவமே இல்லை என்ற நிலையில் கடவுளை மனிதன் உருவத்தில் பார்ப்பது என்பது அறியாமையின் வெளிச்சம் மற்றும் நீளம் அகலம உயரம் போன்ற அளவுகளுக்கும் கண் காது மூக்கு போன்ற புலன்களுக்கு அப்பாற்பட்டே அவர் இருக்க வேண்டும். இந்த வரைமுறையை சரியான முறையில் பொருத்தி பார்த்தல், மனிதன் உருவாக்கிய பல கடவுள்கள் இறந்து போய் விடுவர்.</p>
<p style="text-align: justify;"><img id="rg_hi" class="alignleft" src="http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcROufr18mixxq_b5gdp4M4gQeihbJgIGnlgUr9_KRBtEPjuyNVEdg" alt="" width="237" height="213" data-width="237" data-height="213" />கடவுள் தான் அனைத்தையும் உருவாக்கினார் என்று கூறும்போது அந்த கடவுள் எங்கிருந்து வந்திருப்பர், கடவுளுக்கு முதலில் யார் வந்தது என்பது போன்ற கேள்விகள் நாத்திக வாதிகளால் எழுப்பபடுகின்றன.</p>
<p style="text-align: justify;">முதல் கடைசி என்ற நிலை எப்பொழுது வரும், காலம் நேரம் என்ற சில அளவுகோல்கள் இருக்கும் போது தான் முதல் கடைசி என்ற வாதம் வரும். சற்று விசாலமான பார்வையில் பார்த்தல், மனிதர்களின் அளவு கோள்தான் காலம் நேரம் எல்லாம், இந்த அளவுகோலை தாண்டி இருப்பவர் தான் கடவுள், ஆக கடவுளுக்கு முதல் என்பதும் கிடையாது கடைசி என்பதும் கிடையாது என்பதை உணரலாம். இப்பிரபஞ்சத்தையே உருவாக்கியவர் கடவுள் எனும் போது இந்த அளவுகோளையும் உருவாக்கியவர் அவர் தான். அதை அவருக்கே பொருத்தி பார்ப்பது என்பது எப்படி சரியாகும். கடவுள் என்பவர் உருவானவர் இல்லை, எப்பொழுதும் இருப்பவர் என்பதே சரியான வாதமாக இருக்கும். ஆதி முடிவு என்ற நிலை கொண்டவர் நிச்சயம் கடவுளாக இருக்க வாய்ப்பே இல்லை.</p>
<p style="text-align: justify;">அனைத்து அமைப்பின் கன கச்சிதமான ஒழுங்கு முறையை பார்க்கும் போது அவை ஒரு சக்திக்கு மட்டுமே கட்டுபடுகின்றன என்பதை அறிய முடிகிறது. பல கடவுள் என்ற வாதத்தை வைத்தல் அவர்களுக்குள் போட்டி ஏற்பட்டு அமைப்பு சிதைந்து போவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்பதையும் விளங்க முடியும்.</p>
<p style="text-align: justify;">கடவுள் எப்படி இருப்பார் என்று அனைவருக்கும் ஒரு கேள்வி எழும். எப்படி இருப்பார் என்பது நம்மால் புரிந்து கொள்ளமுடியவில்லை என்றாலும் எப்படி இருக்க மாட்டார் என்று அறிய முடியும். மனித கற்பனை உருவத்தில் நிச்சயம் கடவுள் இருக்க வாய்ப்பு இல்லை. காலத்திற்கும் நேரத்திற்கும் அப்பாற்பட்டவர் எனும் போது (மனித கற்பனை இதற்குள் தான் இருக்கும்) அவரின் உருவமும் அப்பாற்பட்டதாக தான் இருக்கும்.</p>
<p style="text-align: justify;">பழங்கால மனிதர்கள் அறிந்தது சூரியன், சந்திரன், பூமி, நட்சத்திரம் அவ்வளவுதான். ஆனால் அறிவியலில் முன்னேறிய தற்கால மனிதன் கடவுளின் முழு ஆற்றலையும் அமைப்பின் (System in physics) முழுமையையும் பார்ப்பவனாகவே உள்ளான் என்பது கடவுள் நம்பிக்கையில் ஒரு தெளிவை கொடுக்கிறது.</p>
<p style="text-align: justify;">பெரியவர் சொல்லி கொடுத்தது போல் கடவுள் என்ற வார்த்தையை உங்கள் அகராதியில் தவறாக இட்டு வைத்திருப்பின் ஒரு மாபெரும் புத்திசாலி தனமாக சக்தி என்று மாற்றி கொள்ளுங்கள், நம் அனைவரின் எண்ணங்களும் செயல்களும் அவரின் பார்வையில் இருப்பதை உணருங்கள்.</p>
<p style="text-align: justify;">
<p style="text-align: justify;"><span style="color: #808080; font-size: x-small;">கார்பன் கூட்டாளி</span></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.readislam.net/portal/archives/3658/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>காதல் ஓர் இஸ்லாமியக் கண்ணோட்டம்</title>
		<link>http://www.readislam.net/portal/archives/3648</link>
		<comments>http://www.readislam.net/portal/archives/3648#comments</comments>
		<pubDate>Fri, 20 Jan 2012 01:11:05 +0000</pubDate>
		<dc:creator>ReadIslam.net</dc:creator>
				<category><![CDATA[சமூகம்]]></category>

		<guid isPermaLink="false">http://www.readislam.net/portal/?p=3648</guid>
		<description><![CDATA[மேற்கத்திய கலாசாரம் ஈன்றெடுத்த குழந்தைகள்தான் இன்றைய காதலும் காதலர் தினங்களும் சீரழிந்த இந்த மேற்கத்திய கலாசாரத்தின் வெளிப்பாடுகள்தான் இவைகள்.  இன்றைய இளவல்களை கவர்ந்திழுக்கின்ற ஒரு காரணியாக நவீன காதல் அமைந்திருக்கின்றது. தமது திருமண வாழ்வைத் தீர்மானிப்பதில் தம்மை தாலாட்டி சீராட்டி வளர்த்த தமது தாய் தந்தையரின் தலையீடுகள் சிறிதும் இன்றி முழுவதுமாக தமது சுயவிருப்பின் அடிப்படையிலேயே தமது திருமண வாழ்வை அமைத்துக் கொள்ள விரும்புகின்றது இன்றைய இளைஞர் சமுதாயம். தற்போதைய சூழற்காரணிகளும் அதற்கு ஏதுவாக அமைந்திருக்கின்றது. அந்நிய [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><a class="post_image_link" href="http://www.readislam.net/portal/archives/3648" title="Permanent link to காதல் ஓர் இஸ்லாமியக் கண்ணோட்டம்"><img class="post_image alignright remove_bottom_margin" src="http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcSL7QVLL2xSpW6PzEmyCF-7pnP0wlktNv-61yzIZdFg9E77GpB-Fw" width="288" height="175" alt="Post image for காதல் ஓர் இஸ்லாமியக் கண்ணோட்டம்" /></a>
</p><p>மேற்கத்திய கலாசாரம் ஈன்றெடுத்த குழந்தைகள்தான் இன்றைய காதலும் காதலர் தினங்களும் சீரழிந்த இந்த மேற்கத்திய கலாசாரத்தின் வெளிப்பாடுகள்தான் இவைகள்.  இன்றைய இளவல்களை கவர்ந்திழுக்கின்ற ஒரு காரணியாக நவீன காதல் அமைந்திருக்கின்றது.</p>
<p>தமது திருமண வாழ்வைத் தீர்மானிப்பதில் தம்மை தாலாட்டி சீராட்டி வளர்த்த தமது தாய் தந்தையரின் தலையீடுகள் சிறிதும் இன்றி முழுவதுமாக தமது சுயவிருப்பின் அடிப்படையிலேயே தமது திருமண வாழ்வை அமைத்துக் கொள்ள விரும்புகின்றது இன்றைய இளைஞர் சமுதாயம்.</p>
<p>தற்போதைய சூழற்காரணிகளும் அதற்கு ஏதுவாக அமைந்திருக்கின்றது. அந்நிய ஆண்களும் பெண்களும் தனிமையில் சந்தித்துக் கொள்வதற்கான வாய்ப்புக்களும் கலந்து பழகுவதற்கான வாய்ப்புக்களும் தாராளமாகவே காணப்படுகின்றன.</p>
<p>பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள் தனியார் கல்விநிலையங்கள் அலுவலகங்கள் மற்றும் பூங்காக்கள் போன்றவற்றில் அந்நிய ஆண்களும் பெண்களும் எந்தவிதமான தடங்கல்களுமின்றி கலந்து பழகுகின்றனர். பழக்கம் தொடர்ந்து  கடைசியில் தம்மை ஈன்றெடுத்த தாய் தந்தையருக்கு தெரியாமலேயே அல்லது அவர்களது விருப்பத்திற்கு மாற்றமாக திருமணம் நடந்தேறுகிறது.</p>
<p>தற்போதைய தகவற் தொழிநுட்ப யுகத்தில் இன்றைய காதலையும் காதல் திருமணங்களையும் ஊக்குவிப்பதில் இணையங்களும் (internet) சினிமாக்களும் பெரும் பங்கு வகிக்கின்றன.</p>
<p>இந்த காதல் திருமணங்கள் ஆற அமர நிதானமாக சிந்தித்து நடப்பவை அல்ல. மாறாக உணர்வுகளின் உந்துதல்களால் நடைபெறுபவை ஆகும். இவ்வாறு நடந்தேறிய திருமணங்கள் சில மாதங்கள் சில வருடங்கள் சந்தோஷமாக கழிகின்றன‌. பின்னர் கோலங்கள் கலைந்து வாழ்வின் யதார்த்தங்கள் புரிகையில் இவர்களால் அதற்கு முகம் கொடுக்க முடிவதில்லை. பரஸ்பரம் விட்டுக் கொடுத்தல் என்கின்ற தன்மைகள் அஸ்த்தமித்து அற்பப்பிரச்சினைகளும் சுனாமியாய் உருவெடுக்கின்றன.</p>
<p>உறவுகள் சீர்குலைந்து காதல் கசந்து விருப்புக்கள் வெறுப்பாய் மாறி பூகம்பமாய் வெடிக்கின்றது. நிறைகள் அஸ்த்தமனமடைந்து குறைகள் உதயமாகி குறைகளே பூதாகரமாக காட்சியளிக்கத் தொடங்குகின்றன. கடைசியில் இது விவாகரத்தில் சென்று முடிகின்றது.</p>
<p>அண்மைக்கால பத்திரிகைச் செய்திகளும் ஆய்வறிக்கைகளும் உணர்த்தி நிற்கின்ற ஒரு விடயம் விவாகரத்தில் அதிகளவு இடத்தைப் பிடித்திருப்பதும் தற்போதைய திருமணங்களில் மிகக் குறைந்த ஆயுளை கொண்டதுமான திருமணங்கள்  தற்போதைய காதல் திருமணங்களேயாகும்.</p>
<p>மேலும் தமிழ் சினிமாக்களில் சித்தரிக்கப்படுவது போன்று தற்போதைய காதலானது தெய்வீகத் தன்மை வாய்ந்ததாயின் அதில் துளியளவு கூட ஏமாற்றம் தோல்வி துரோகம்  என்பன இருக்கக் கூடாது. எனவே இன்றைய இந்த காதல் திருமணங்கள் தெய்வீகத் தன்மை வாய்ந்தது புனிதமானது என்ற வாதங்கள் போலித்தனமானவையாகும்.</p>
<p>இன்றைய காதலால் அதிகம் பாதிப்புக்குள்ளாவது பெண்கள்தான். தாய் தந்தையரையும் ஏனைய உறவுகளையும் துறந்து ஆரம்பிக்கின்ற இந்த வாழ்வில்  காதலனால் கைவிடப்படுகின்ற சந்தர்ப்பத்தில் ஆதரிப்போரின்றி தவிக்கின்றனர். இதற்கு தீர்வாக பலர் தற்கொலையை கையிலெடுத்து நிரந்தர நரகத்தை நோக்கி பயணிக்கின்றனர். தற்கொலை தொடர்பாக நபிகளாரின் பொன்மொழி பின்வருமாறு எடுத்தியம்புகின்றது.</p>
<p>நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘யார் மலையின் மீதிருந்து கீழே  குதித்து தற்கொலை செய்து கொள்கிறாரோ அவர் நரக நெருப்பில் என்றென்றும் குதித்துக் கொண்டேயிருப்பார். யார் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொள்கிறாரோ அவர் நரகத்திலும் நிரந்தரமாக விஷத்தைக் கையில் வைத்துக் கொண்டு குடித்துக் கொண்டேயிருப்பார். யார் கூறிய ஆயுதத்தால் தற்கொலை செய்து கொள்கிறாரோ அவ்வாயுதம் தமத கையில் இருக்கும் நிலையில் நரகத்தில் தமது வயிற்றில் தாமே என்றென்றும் குத்திக் கொண்டேயிருப்பார்.’</p>
<p>அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி) நூல்: புஹாரி 5778</p>
<p>இன்றைய காதல் சில நேரங்களில் தற்கொலைக்கும் வழிவகுத்து எம்மை நிரந்தர நரகவாதியாகவும் ஆக்கி விடுகிறது. மேலும் அந்நிய ஆண்களும்  பெண்களும் நெருங்கிப் பழகுவதை மார்க்கம் வன்மையாக கண்டிக்கின்றது.</p>
<p>கள்ளக்காதல் கொள்வதையும் இஸ்லாம் தடை செய்கிறது. ஏக நாயன் அருள் மறையாம் திருமறையில் எடுத்தியம்புவதைப் பாருங்கள்.</p>
<p>‘உங்களில் எவருக்குச் சுதந்திரமுள்ள முஃமினான பெண்களை விவாகம் செய்து கொள்ள சக்தியில்லையோ அவர்கள் முஃமினான அடிமைப்பெண்களிலிருந்து உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்ட பெண்களை (மணமுடித்துக் கொள்ளலாம்;)  அல்லாஹ் உங்கள் ஈமானை நன்கு அறிகிறவன். உங்களில் சிலர் சிலரைச் சேர்ந்தவர்கள்; ஆகவே முஃமினான அடிமைப்பெண்களை அவர்களின் எஜமானர்களின் அனுமதி கொண்டு மணமுடித்துக் கொள்ளுங்கள் – அவர்களுக்குரிய (மஹர்) தொகையை முறைப்படிக் கொடுத்து விடுங்கள்; அப்பெண்கள் பரிசுத்தமானவர்களாகவும் விபச்சாரம் செய்யாதவர்களாகவும் கள்ளக் காதல் கொள்ளாதவர்களாகவும் இருக்க வேண்டும். எனவே அப்பெண்கள் முறைப்படி திருமணம் முடிக்கப்பட்டபின் மானக்கேடாக நடந்து கொண்டால் விவாகம் செய்யப்பட்ட சுதந்திரமான பெண்கள் மீது விதிக்கப்படும் தண்டனையில் பாதியே அப்பெண்களுக்கு விதிக்கப்பெறும்;  தவிர உங்களில் எவர் தன்னால் பாவம் ஏற்பட்டுவிடும் என்று (அல்லாஹ்வுக்குப்) பயப்படுகிறாரோ – அவருக்குத்தான் இந்த சட்டம். எனினும் நீங்கள் பொறுமையாக இருப்பது உங்களுக்கு மிகவும் நல்லதாகும்; இன்னும் அல்லாஹ் மன்னிப்போனாகவும்இ மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான் ‘.  (அல்குர்ஆன் 4:25)</p>
<p>மேலுள்ள அருள் மறை வசனம் திருட்டுத் தனமாக காதல் கொள்வதை தடைசெய்கிறது.</p>
<p><strong>திருமணத்திற்கு முன் ஓர் ஆண் பெண்ணைத் திருமணம் செய்ய விரும்புவது அல்லது ஓர் பெண் ஆணைத் திருமணம் செய்ய விரும்புவதுதான் காதல் என்று சொன்னால் அதனை இஸ்லாம் தாராளமாக அனுமதிக்கின்றது. மாறாக இன்றைய காலகட்டத்தில் காதலின் பெயரால் இடம்பெறுகின்ற வரம்பு மீறிய செயற்பாடுகளைத்தான் தடை செய்கின்றது.</strong></p>
<p>மேலும் திருமணம் செய்ய விரும்புகின்ற பெண்ணை நேரில் நன்கு பார்த்து நாம் எதிர்பார்க்கும்  விடயங்கள் பண்புகள் அவளிடம் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறும் இஸ்லாமிய மார்க்கம் வலியுறுத்துகின்றது. இது தொடர்பாக நபிகளாரின் பொன்மொழிகள் பின்வருமாறு எடுத்தியம்புகின்றன.</p>
<p>‘நான் நபி (ஸல்) அவர்களுடன் வீட்டிலிருந்த போது ஒருவர் வந்து தான் அன்சாரி பெண்ணொருத்தியை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக கூறினார். அதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் அப்பெண்ணை நீங்கள் பார்த்தீர்களா?  எனக் கேட்டார்கள். அதற்கு அவர் இல்லை நாயகமே! நான் அவளைப் பார்க்கவில்லை என்றார். அப்படியானால் முதலில் அவளைப் பார்த்துக் கொள்ளுங்கள். மதீனாவாசிகளின் கண்களில் சிறிது கோளாறு இருக்கின்றது என்றார்கள் ‘.</p>
<p>அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி) நூல்: முஸ்லிம்</p>
<p>‘நான் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளத் தூதனுப்பினேன். இதனைக் கேள்வியுற்ற நபி (ஸல்) அவர்கள் நீங்கள் பெண்ணைப் பார்த்தீர்களா? என வினவினார்கள். இல்லை என்றேன். அவ்வாறாயின் அப்பெண்ணை பார்த்துக் கொள்ளுங்கள். இம்முறையைக் கையாள்வதால் உங்களுக்கிடையில் நட்பும் நல்லிணக்கமும் ஏற்பட வழிபிறக்கும் எனக்கூறினார்கள்.</p>
<p>அறிவிப்பவர்: முகீரா பின் ஹுஃபா(ரழி) நூல்: திர்மிதீ நஸயீ</p>
<p>மேற்படி நபிமொழிகளில் இருந்து ஒருவர் திருமணம் செய்வதாக இருந்தால் கட்டாயம் பெண்ணைப் பார்த்துக்கொள்ள வேண்டுமென்பதை அறியலாம். மேலும் திருமணம் செய்து கொடுக்கப்படுவதாக இருந்தால் கட்டாயம் பெண்ணின் விருப்பம் கேட்கப்பட வேண்டும்.</p>
<p>‘பெண்ணின் சம்மதமின்றி செய்யப்பட்ட திருமணத்தை நபி(ஸல்) அவர்கள் இரத்து செய்துவிட்டார்கள் ‘ஆதாரம்: ஸஹீஹுல் புஹாரி 5136/ 6968/ 6970</p>
<p>அதே வேளை பெண்ணைப் பொறுத்த வரையில் விரும்பிய ஆண்மகனை தானாக திருமணம் செய்ய முடியாது. மாறாக பொறுப்பாளரே விரும்பிய ஆண்மகனுக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என இஸ்லாம் பணிக்கின்றது.</p>
<p>இவ்வாறு செய்கின்ற போது பெண்கள் ஆசை வார்த்தை காட்டி ஏமாற்றப்படுவதிலிருந்து பாதுகாக்கப்படுகின்றார்கள். இதனால் பெண்ணுடைய வாழ்வுக்கு உரிய உத்தரவாதம் வழங்கப்படுகிறது.</p>
<p>அதே சமயம் பெண் ஒருவனை விரும்புகின்ற போது அவன் இஸ்லாமிய அடிப்படையில் சீதனமின்றி மஹர் கொடுத்து திருமணம் முடிக்க முன்வருகின்ற போது பெற்றோர் பெண்ணின் உணர்வினை மதித்து அவளது விருப்பப்படி திருமணம் செய்து கொடுக்க முன் வர வேண்டும்</p>
<p>மேலும் திருமணம் செய்து கொள்வதற்காக ஒருவரை ஒருவர் விரும்புகின்ற போது விரும்புபவரும் விரும்பப்படுபவரும் முஸ்லிமாக இருத்தல் வேண்டும். முஸ்லிம்கள்  முஸ்லிமல்லாதோரை திருமணம் செய்வதை இஸ்லாம் தடைசெய்கின்றது. முஸ்லிமும் முஸ்லிமல்லாதோரும் விரும்புகின்றபோது முஸ்லிமல்லாதோர் இஸ்லாத்தை ஏற்றதன் பிற்பாடு திருமணம் செய்து கொள்ள முடியும்.</p>
<p>ஏக நாயன் அருள் மறையாம் திருமறையில் எடுத்தியம்புவதைப் பாருங்கள்.</p>
<p>“(அல்லாஹ்வுக்கு) இணைவைக்கும் பெண்களை -அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை- நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதீர்கள்;  இணை வைக்கும் ஒரு பெண்  உங்களைக் கவரக்கூடியவளாக இருந்தபோதிலும் அவளைவிட முஃமினான ஓர் அடிமைப் பெண் நிச்சயமாக மேலானவள் ஆவாள்;. அவ்வாறே இணைவைக்கும் ஆண்களுக்கு- அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை (முஃமினான பெண்களுடன்) நீங்கள் திருமணம் செய்து வைக்காதீர்கள்;  இணை வைக்கும் ஆண் உங்களுக்குக் கவர்ச்சியூட்டுபவனாக இருந்த போதிலும் ஒரு முஃமினான அடிமை அவனைவிட மேலானவன்; (நிராகரிப்போராகிய) இவர்கள் உங்களை நரக நெருப்பின் பக்கம் அழைக்கிறார்கள்; ஆனால் அல்லாஹ்வோ தன் கிருபையால் சுவர்க்கத்தின் பக்கமும் மன்னிப்பின் பக்கமும் அழைக்கிறான்; மனிதர்கள் படிப்பினை பெறுவதற்காக தன் வசனங்களை அவன் தெளிவாக விளக்குகிறான். (அல்குர்ஆன் 2:221)</p>
<p>அதே சமயம் ஒரு ஆணோ பெண்ணோ விரும்புகின்ற வாழ்க்கை மார்க்கத்திற்கு முரணில்லாத வகையில் காணப்படும் போது அதனைத் தடுப்பது குற்றமாகும்.</p>
<p>எனவே அல்லாஹ்வும் அவனது தூதரும் கற்றுத்தந்த வகையில் எமது வாழ்வை அமைத்து ஈருலகிலும் ஏகநாயனின் திருப்தியையும் மன்னிப்பையும் பெறுவோமாக</p>
<p>&nbsp;</p>
<p><span style="color: #808080; font-size: x-small;">எஸ்.எல்.எம். – காத்தான்குடி</span></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.readislam.net/portal/archives/3648/feed</wfw:commentRss>
		<slash:comments>7</slash:comments>
		</item>
		<item>
		<title>கால்நடைகள் வழங்கும் கதகதப்பு WOOL ஆடை</title>
		<link>http://www.readislam.net/portal/archives/4092</link>
		<comments>http://www.readislam.net/portal/archives/4092#comments</comments>
		<pubDate>Tue, 17 Jan 2012 01:47:41 +0000</pubDate>
		<dc:creator>ReadIslam.net</dc:creator>
				<category><![CDATA[அறிவியல்]]></category>

		<guid isPermaLink="false">http://www.readislam.net/portal/?p=4092</guid>
		<description><![CDATA[அல்குர் ஆனின் வழியில் அறிவியல்&#8230;&#8230;&#8230;&#8230;. அல்லாஹ் மனிதர்களைப்படைத்து, அவர்களுக்கு வேண்டிய எல்லா வாழ்வாதாரங்களையும் ஏற்படுத்தியது மட்டுமல்லாது உலகில் உள்ள அனைத்தும் மனிதர்களுக்கு பயன் தருபவைகளாக அமைத்துள்ளான்.இந்த வகையில் கால்நடைகளைப்பற்றி அல்லாஹ் கூறுகின்றான்.  ‘ (மனிதர்களே!) ஆடு,மாடு, ஒட்டகம் போன்ற கால்நடைகளையும் அவனே உங்களுக்காக படைத்திருக்கின்றான். அவற்றில் உங்களுக்காக (குளிரை தடுத்துக்கொள்ளக்கூடிய) கதகதப்புண்டு. இன்னும் (அநேக) பயன்களுமுண்டு. மேலும் நீங்கள் அவற்றிலிருந்து புசிக்கிறீர்கள். “ அல்குர் ஆன் -16:5 மேலும்  வேறொரு வசனத்தில்,  “(ஆடை போன்ற) பற்பல பொருள்களையும் தயாரிப்பதற்கு, [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><a class="post_image_link" href="http://www.readislam.net/portal/archives/4092" title="Permanent link to கால்நடைகள் வழங்கும் கதகதப்பு WOOL ஆடை"><img class="post_image alignright remove_bottom_margin" src="http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcTVjmpWCUJI_eZPILM7kAmKqAk1TQlaNnvYo6llzhSrYwQf2o0Z" width="259" height="194" alt="Post image for கால்நடைகள் வழங்கும் கதகதப்பு WOOL ஆடை" /></a>
</p><p style="text-align: left;" align="center"><strong>அல்குர் ஆனின் வழியில் அறிவியல்&#8230;&#8230;&#8230;&#8230;.</strong></p>
<p style="text-align: justify;" align="center">அல்லாஹ் மனிதர்களைப்படைத்து, அவர்களுக்கு வேண்டிய எல்லா வாழ்வாதாரங்களையும் ஏற்படுத்தியது மட்டுமல்லாது உலகில் உள்ள அனைத்தும் மனிதர்களுக்கு பயன் தருபவைகளாக அமைத்துள்ளான்.இந்த வகையில் கால்நடைகளைப்பற்றி அல்லாஹ் கூறுகின்றான்.</p>
<p style="text-align: justify;"> <strong><em>‘ (மனிதர்களே!) ஆடு,மாடு, ஒட்டகம் போன்ற கால்நடைகளையும் அவனே உங்களுக்காக படைத்திருக்கின்றான். அவற்றில் உங்களுக்காக (குளிரை தடுத்துக்கொள்ளக்கூடிய) கதகதப்புண்டு. இன்னும் (அநேக) பயன்களுமுண்டு. மேலும் நீங்கள் அவற்றிலிருந்து புசிக்கிறீர்கள்</em>. “ அல்குர் ஆன் -16:5</strong></p>
<p style="text-align: justify;">மேலும்  வேறொரு வசனத்தில்,</p>
<blockquote>
<p style="text-align: justify;"><strong><em> “(ஆடை போன்ற) பற்பல பொருள்களையும் தயாரிப்பதற்கு, அவற்றில் (செம்மறியாட்டின்) கம்பளி, (ஒட்டகத்தின்) உரோமம், </em></strong><strong><em>(வெள்ளாட்டின்) முடி,ஆகியவைகளையும் (அவன் உங்களுக்காக படைத்திருக்கின்றான்.அவற்றாலான பொருள்கள்) ஒரு காலம் வரையில் உங்களுக்கு பயன்படுகின்றன</em>.” –அல்குர்ஆன் -16:80<br />
</strong></p>
</blockquote>
<p style="text-align: justify;"><strong>மனிதனின் வாழ்விற்கு அடிப்படைதேவைகள் மூன்று,உணவு,</strong></p>
<p style="text-align: justify;">உடை, உறைவிடம். இம்மூன்றும் கால்நடைகளிளிருந்து அவன் பெற்றுக்கொண்டதால் ஆடு, மாடுகளுடான தொடர்பு ஆதி மனிதனிலிருந்து தொடங்கிவிட்டது. உதாரணமாக மனிதர்களின் தந்தை ஆதம்(அலை) அவர்களின் மகன்களைப்பற்றி அல்லாஹ் கூறுகின்றான்,</p>
<blockquote>
<p style="text-align: justify;"><strong><em> </em><em>“ஆதமுடைய (ஹாபீல்,காபீல்,எனும்)இரு மகன்களின் உண்மைச்செய்திகளை நீங்கள் அவர்களுக்கு ஓதிக்காண்பியுங்கள். இருவரும் “குர்பானி” (பலி) கொடுத்தபோது அவ்விருவரில் ஒருத்தருடைய (குர்பானி)எற்றுக்கொள்ளப்பட்டது,மற்றொருவருடையது</em> <em>ஏற்கப்படவில்லை</em>.”  &#8211;அல்குர்ஆன் -5:27.</strong></p>
</blockquote>
<p style="text-align: justify;"> இவ்வசனத்திற்கு இப்ன் கதிரீன் விளக்கத்தில்,குர்பானி கொடுக்கப்பட்டது,செம்மறியாடு என்று இப்னு அப்பாஸ்(ரலி)அறிவிப்பில் இப்னு அபிஹாத்தமில் பதிவு செய்யப்பட்டதாக கூறுகிறார்கள்.</p>
<p style="text-align: justify;">எனவே கால்நடைகளின் பயன்பாடு முதல் மனிதர் ஆதம்(அலை) அவர்களின் காலத்திலிருந்தே தொடங்கிவிட்டதை அறியலாம்.இன்னும் சொன்னால்,மனிதனைப்படைப்பதற்கு முன்பே,மனிதர்களுக்கு தேவையான எல்லா வாழ்வாதாரங்களையும் அல்லாஹ் ஏற்படுத்திவிட்டான்.</p>
<p style="text-align: justify;"> <strong>கதகதப்பூட்டும் கம்பளி உரோமம்</strong></p>
<p style="text-align: justify;"> கால்நடைகளான ஆடு,மாடு,ஒட்டகத்தின் உரோமத்திற்கு ஆங்கிலத்தில் <strong>Wool</strong>  என்று அழைக்கப்படுகிறது. தமிழில் கம்பளி என்று அழைக்கின்றோம். பொதுவாக செம்மறியாட்டின் உரோமமே மிக அதிகளவில் உற்பத்தியாகி ஆடைகள் நெய்வதற்கு பரவலாக பயன்படுகிறது. இந்த கம்பளியில் கதகதப்பு இருப்பதாக அல்லாஹ் கூறுகின்றான்.மேலும் அநேக பயன்கள் இருப்பதாகவும் அறிவிக்கின்றான்.</p>
<p style="text-align: justify;"> ஆடைகள் நெய்வதற்கு பருத்தி,பட்டு,லினன்,செயற்கை இழைகள் மற்றும் சணல் போன்றவை பயன்படுகின்றன.இந்த இழைகளில் இல்லாத சிறப்புகள் கால்நடைகளின் கம்பளிக்கு இருப்பதாக அறிவியல் ஆய்வுகள் கூறுகின்றன.</p>
<p style="text-align: justify;"> மனித இன வரலாற்றில் எவ்வளவோ அறிவியல் சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன, புதிய புதிய நவீன கண்டுபிடிப்புகள் வந்துவிட்டன. ஆனால் அல்லாஹ் தன் கரங்களைக்கொண்டு படைத்த கால்நடைகளின் (அல்குர் ஆன் -36:71) ஒரே ஒரு உரோமத்தைப் போன்ற ஒன்றை கண்டுபிடிக்க முடியவில்லை. ஏனென்றால் கம்பளி உரோமத்தின் உள்ளமைப்பு (Complex structure) மிக மிக சிக்கலான ஒன்று.</p>
<p style="text-align: justify;">நபி(ஸல்) அவர்கள் கூறிய ஹதிஸ் இங்கு கவனிக்கத்தக்கது.</p>
<blockquote>
<p style="text-align: justify;"><strong><em>“ குர்பானி பிராணியின் உரோமத்திற்கு நன்மை கொடுக்கப்படும்” என்று நபி(ஸல்)அவர்கள் கூறினர்,அப்பொழுது “ஒவ்வொரு உரோமத்ததிற்கும் நன்மை கொடுக்கப்படுமா?”என்று கேட்டபொழுது,”ஆம்! ஒவ்வொரு உரோமத்திற்கும்.”என்று பதில் கூறினார்கள்.” </em></strong>அறிவிப்பவர்:ஜைது பின் அர்கம்(ரலி)   ஆதாரம்: இப்னு மாஜா.</p>
</blockquote>
<p style="text-align: justify;"><img class="alignnone" src="http://geoffanderson.com/images/underwear/otara/mapp-attributes-2.jpg" alt="" width="575" height="279" /></p>
<p style="text-align: justify;">கம்பளி உரோம இழைகள் (Wool fiber) Cortical செல்களால் ஆனவை. இந்த செல்கள் Cuticle என்ற உறையில் போர்த்தப்பட்டுள்ளது. செதில் போன்ற குயுட்டிகல் ஆனது Epicuticle என்ற மற்றொரு மெல்லிய உறையால் மூடப்பட்டுள்ளது. எபிகுயுட்டிகளானது ஈரத்தை ஓட்ட விடாத தன்மை கொண்டது. ஆனால் அதேசமயம் குயுட்டிகிள் வெளியில் உள்ள ஈரப்பதத்தை உறுஞ்சும் தன்மை கொண்டது.</p>
<p style="text-align: justify;">இப்படி உறுஞ்சப்பட்ட ஈரத்தை (Moisture) நீரை கம்பளி உரோமத்தின் மத்தியில் அனுப்பும் பொழுது கம்பளி மூலக்கூறானது (Wool molecules) நீரில் உள்ள ஹைட்ரஜனை இரசாயன மாற்றத்தின் மூலம் (Chemical reaction) பிரித்து விடுகிறது. இந்நிகழ்வின்போது Exothermic- ( “out side heating”) முறைப்படி வெப்பம்,(140KJ) கதகதப்பு உற்பத்தியாகிறது. குளிர் காலத்திலும் குளிர் பிரதேச மக்களும் கம்பளி ஆடைகள் அணிவதற்கு மூல காரணம் கம்பளி அளிக்கும் கதகதப்புதான். கால்நடைகளின் உரோமம் செய்யும் இரசாயன மாற்றத்தை அல்லாஹ் 1400 ஆண்டுகளுக்குமுன்பே சொல்லிவிட்டான்.</p>
<p style="text-align: justify;">கம்பளி ஆடைக்குள்ள மற்றொரு சிறப்பு, கடும் வெப்பமுள்ள சஹாரா பாலைவனத்தில் வசிக்கும் நாடோடிகள் மெல்லிய கம்பளி ஆடைகளை அனிந்திருப்பர் காரணம் கடும் வெப்பத்தில் உடல் வரண்டுவிடக்கூடாது என்பதற்காக.கம்பளி வெளிவெப்பத்தை உள்ளே விடாது, உள்வெப்பத்தை வெளியே விடாது ஒரே நிலையில் வைத்திருக்கும்.தெர்மக்கோல் (Styrofoam) தக்கை போன்று செயல்படுகிறது.</p>
<p><img class="alignright" src="http://geoffanderson.com/images/underwear/otara/mapp-attributes-3.jpg" alt="" width="403" height="301" />கம்பளி உரோமத்தில் மெல்லிய காற்றுப்பைகள் உள்ளன. உடம்பிலுள்ள வியர்வை ஈரத்தை தன் காற்றுப்பைகளில் இழுத்துக்கொள்ளும்.</p>
<p>இந்தக்காற்றுப்பைகள் தனித்தனி அறைகளாக இருப்பதால் ஈரத்தை உடனடியாக கடத்தாமல் மெதுவாக ஆவியாக்கும். ஆகவே உடல் வெப்பமடைவதை தடுத்து ஒரே நிலையில் வைத்துக் கொள்ளும் (Natural insulator) தன்மையுடையது.</p>
<p>கம்பளி ஆடை மழையில் நனைந்தலோ அல்லது ஈரமாகிவிட்டாலோ உடம்பிற்குள் ஈரத்தை கடத்துவதில்லை. அதன் எடையில் 30% நீரில் நனைந்தாலும் கதகதப்பை தொடர்ந்தளிக்கும் தன்மைகொண்டது. (Hygroscopic insulator)</p>
<p style="text-align: justify;"><strong>கம்பளி உரோமத்தின் மற்ற சிறப்புகள் </strong></p>
<p style="text-align: justify;"><strong> </strong>ஒரு உரோமம் 18-41 மைக்க்ரான் தடிமன் உளளது. மூலக்கூறு கம்பிச்சுருள் போன்று அமைந்துள்ளதால் 50% நீளும் தன்மை உடையது.உரோமம் நன்கு வளையும் (Elasticity) சுமார் 20,000 முறை முன்னும் பின்னும் வளைத்தாலும் முறியாது. ஆனால் பருத்தி நூல் இழைகள் 3000 தடவை மட்டுமே தாக்குப்பிடிக்கும், பட்டு நூல் 2000 தடவைக்குமேல் முறிந்துவிடும். கம்பளி தீப்பிடித்து எரியாது. தீயில் கரிகிக்கொண்டே செல்லும், கம்பளியை தீயில்லிருந்து எடுத்துவிட்டால் உடனே அணைந்துவிடும். காரணம், உரோமங்களிலுள்ள மெல்லிய துளைகளில் ஈரப்பதத்தை வைத்திருப்பதால் தீ அணைந்துவிடும். கம்பளி முற்றிலும் தீயில் எறிவதற்கு 38% ஆக்ஸிஜன் தேவை. ஆனால் காற்றில் இருப்பதோ 22% மட்டுமே. இந்த சிறப்புத்தன்மை காரணமாக, விமானம், கப்பல், ரயில் மற்றும் பாதுகாப்புத்துறை, தீயணைப்புத்துறைகளில் கம்பளி இருக்கைகள், விரிப்புகள் போர்வைகள், ஆடைகள் பெரிதும் பயன்படுத்தபடுகின்றன.</p>
<p style="text-align: justify;">கம்பளி அம்ப்போடேரிக் (Amphoteric) குணமுடையது, அதாவது காரத்தன்மை,அமிலத்தன்மை உள்ள இரண்டு இரசாயன சாயங்களையும் தனது உரோமக்கால்களில் உறுஞ்சிக்கொண்டு நிரந்தர வர்ணத்தை கொடுக்கும்.ஆகவே வண்ண ஆடைகள் நெய்வதற்கு உகந்தது.</p>
<p style="text-align: justify;">தோலில் இருந்து வெளிவரும் வியர்வையானது ஆடையில் படிந்து பாக்டீயாக்களை உற்பத்திசெய்து நாற்றத்தை வெளிவிடும். ஆனால் கம்பளியானது வியர்வை ஈரத்தை தன்னுள் இழுத்துக்கொண்டு சிறிது சிறிதாக காற்றில் ஆவியாக்கி விடுவதால் <em>(Breathability</em>) துர்நாற்றம் அடிப்பதில்லை. மைக்ரோ பாக்டீரியாக்கள் மற்ற செயற்க ைஇழை ஆடைகளை தாக்கும். ஆனால் கம்பளிகளில் அவை தொற்றுவதில்லை,</p>
<p style="text-align: justify;">ஏனெனில் ஒவ்வொரு உரோமமும் மீன் செதில்கள் போல் அமைந்துள்ளதால் தொற்றாது.</p>
<p style="text-align: justify;">சுற்றுசூழலுக்கு உகந்தது, மண்ணில் எளிதில் மக்கி உரமாகும். மற்ற ஆடைகளை விட கம்பளியானது சூரியனின் புற ஊதா (UV rays) கதிர்களை உடலுக்குள் விடாமல் தடுக்ககூடியது மின் அதிர்ச்சியை தடுக்கக்கூடிய தன்மை கம்பளிக்கு உண்டு.</p>
<p style="text-align: justify;">அல்லாஹ் கூறுவதுபோல் “ஒரு காலம் வரையில் உங்களுக்கு பயன்படுகின்றன”.கம்பளி நீடித்து உழைக்கக்கூடியது.</p>
<p style="text-align: justify;">கம்பளிக்கு அரபியில் <span style="font-size: large;">صوف</span> (Soof ) என்று பெயர். எல்லா காலத்ததிற்கும் ஏற்ற கம்பளியை போர்த்திக் கொண்டு காடு, மலை, எங்கும் அலைந்து திரிந்து மெய்ஞானத்தை? தேடியவர்களைத்தான் “சூபியாக்கள்” என்று அழைக்கப்பட்டனர்.</p>
<blockquote>
<p style="text-align: justify;"><strong><em>(கம்பளியில்) “இன்னும் அநேக பயன்களுண்டு”</em> &#8211; அல்குர்ஆன்-16:5</strong></p>
</blockquote>
<p style="text-align: justify;"><em> </em><em> </em>என்று அல்லாஹ் கூறுகின்றான். இந்த வசனம் இறங்கிய பொழுது தெரியாத பயன்கள் இன்று நமக்கு தெரிகின்றது.</p>
<p style="text-align: justify;">பொதுவாக கால்நடைகளிலிருந்து, இறைச்சி,பால், தோல்,கம்பளி கிடைக்கிறது.ஆனால் இன்று இதிலிருந்து ஏராளமான உப பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.</p>
<p style="text-align: justify;"><strong>தோல் மற்றும் உரோமத்திலிருந்து கிடைக்கும் பொருள்கள் </strong></p>
<p style="text-align: justify;">லனோலின், உல்லன் ஆடைகள், தோல் வாத்தியம், நூல், பிரஷ், விளையாட்டு சாதனங்கள், கையுறை, பந்து, ஷூ, கார்பெட், அஸ்பால்ட் பைண்டர்,தைலம், டென்னிஸ் பந்து, தோல் செருப்பு, காரின் உள் அலங்காரம், ஓட்டும் பசை, பெயின்ட், பிளாஸ்டர் பைண்டர்.</p>
<p style="text-align: justify;"><strong>கால்நடைகளின் கொழுப்பிலிருந்து கிடைக்கும் பொருள்கள் </strong></p>
<p style="text-align: justify;"><strong> </strong>ஜெலட்டின் வெடிமருந்து,பெயின்ட் சால்வேன்ட், பபில்கம், மேக்கப் சாதனம், பாலாடைக்கட்டி,தொழில்கூட எண்ணெய், ஸ்டீரிக் அமிலம், செராமிக், மருந்துப்பொருள்கள், ஷூ பாலிஷ், சோப், டயர், பராபின் மெழுகு, கோழித்தீவனம், சலவைத்தூள், கிரையான் சாக்பீஸ்,தரைவிரிப்பு பசை,பதப்படுத்தும் பொருள்கள், ரப்பர் தயாரிப்புகள், இரசாயனங்கள், பூச்சிகொல்லி மருந்துகள், மெழுகு திரிகளைக்கொல்லி, ஷேவிங் கீரீம், ஹேர் கண்டிசன் ஷாம்பு, கீரீம், லோஷன்கள்.</p>
<p style="text-align: justify;"><strong>கால்நடைகளின் கொம்பு, எலும்பு, குளம்பு, தரும் பொருட்கள் </strong></p>
<p style="text-align: justify;"><strong> </strong>மருத்துவ ஊசி,ஜெலட்டின் டெசர்ட்,பியானோ  கீ,பாண்டேஜ் ஸ்ட்ரிப், எலும்புக்கரி, பென்சில், ஜெலட்டின் காப்ஸ்யூல், ஓட்டும் டேப்கள், போனோகிராப், பற்பசை, சீப்பு, சட்டை பட்டன், எமரி பேப்பர்,ஐஸ் கீரீம் ,லேமினேசன், பிளாஸடிக் சர்ஜரி பொருட்கள், வால் பேப்பர், நாய் பிஸ்கட்,ஸ்டீல் பால் பேரிங், உரம், ஓட்டும் பசைகள்,உயர்ரக ஸ்டீல்,பிளைவுட்,ஷாம்பு,கிளிசரின்,போட்டோ பிலிம், நைட்ரஜன் உரங்கள், பொட்டாஷ்,பாஸ்பரஸ் உரங்கள் என்று பட்டியல் போட்டுக்கொண்டே செல்லலாம்.</p>
<p style="text-align: justify;"><em>“நிச்சயமாக ஆடு,மாடு,ஒட்டகம் ஆகியவகைகளில் உங்களுக்கு ஒரு படிப்பினை இருக்கிறது.அவற்றின் மடியில் இருந்து (பாலை)நாம் உங்களுக்கு புகட்டுகிறோம். அன்றி உங்களுக்கு அவைகளில் அநேக பயன்களும் இருக்கின்றன.அவைகளில் சிலவற்றை நீங்கள் புசிக்கிறீர்கள்</em>.” –அல்குர் ஆன்-23:21</p>
<p style="text-align: justify;"><em> </em>இறுதியாக,மனிதர்களைப்பற்றி அல்லாஹ் கூறுகின்றான்.</p>
<blockquote>
<p style="text-align: justify;"><strong><em>“நீங்கள் கேட்டவைகளை எல்லாம் அவன் உங்களுக்கு அளித்தான் ஆகவே அல்லாஹ்வுடைய அருட்கொடைகளை நீங்கள் கணக்கிடும் சமயத்தில் அதனை உங்களால் எண்ண முடியாது (இவ்வாறு எல்லாமிருந்தும்) நிச்சயமாக மனிதன் வரம்பு மீறுகிரவனாகவும் மிக நன்றி கெட்டவனாகவும் இருக்கிறான்.”</em>  -அல்குர்ஆன்-14:34.</strong></p>
<p style="text-align: justify;">
</blockquote>
<p style="text-align: justify;"><span style="color: #888888;"> S.ஹலரத் அலி –ஜித்தா.</span></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.readislam.net/portal/archives/4092/feed</wfw:commentRss>
		<slash:comments>2</slash:comments>
		</item>
		<item>
		<title>மரணத்தைத் தடுக்க மார்க்கம் உண்டா?”</title>
		<link>http://www.readislam.net/portal/archives/3381</link>
		<comments>http://www.readislam.net/portal/archives/3381#comments</comments>
		<pubDate>Fri, 13 Jan 2012 19:02:44 +0000</pubDate>
		<dc:creator>ReadIslam.net</dc:creator>
				<category><![CDATA[.]]></category>
		<category><![CDATA[படிப்பினை]]></category>

		<guid isPermaLink="false">http://www.readislam.net/portal/?p=3381</guid>
		<description><![CDATA[பிறந்தவர் அனைவரும் இறப்பது உறுதி உலகம் தோன்றிய நாளிலிருந்து இவ்வுலகில் பிறந்த அனைவரும் இறந்து போனார்கள். இப்போது வாழ்ந்துக் கொண்டிருக்கும் அனைவரும் இறக்கத்தான் போகிறார்கள். உலகம் அழியும் வரை இனி பிறக்கப் போகிறவர்களும் இறப்பது நிச்சயம். இந்த ஒரு விஷயத்தில் மட்டும் ஒருவருக்கும் ஒருபோதும் சந்தேகமே இல்லை. ஏக இறைவனை ஏற்றுக் கொண்டோரும், ஏராளமான தெய்வங்கள் இருப்பதாக நம்பிக் கொண்டிருப்போரும், இறைவனையே ஏற்க மறுத்தோரும் &#8216;மண்ணில் பிறந்த அனைவருக்கும் மரணம் நிச்சயம்&#8221; என்பதில் மாற்றுக் கருத்தைக் கொண்டிருக்கவில்லை. [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><a class="post_image_link" href="http://www.readislam.net/portal/archives/3381" title="Permanent link to மரணத்தைத் தடுக்க மார்க்கம் உண்டா?”"><img class="post_image alignleft remove_bottom_margin" src="http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcTDQLpCX_78_KkPfjZGXtSFgq-RSXJyQA-61CRLNztpMOQtsycF" width="259" height="194" alt="Post image for மரணத்தைத் தடுக்க மார்க்கம் உண்டா?”" /></a>
</p><p style="text-align: justify;">பிறந்தவர் அனைவரும் இறப்பது உறுதி உலகம் தோன்றிய நாளிலிருந்து இவ்வுலகில் பிறந்த அனைவரும் இறந்து போனார்கள். இப்போது வாழ்ந்துக் கொண்டிருக்கும் அனைவரும் இறக்கத்தான் போகிறார்கள். உலகம் அழியும் வரை இனி பிறக்கப் போகிறவர்களும் இறப்பது நிச்சயம். இந்த ஒரு விஷயத்தில் மட்டும் ஒருவருக்கும் ஒருபோதும் சந்தேகமே இல்லை.</p>
<p>ஏக இறைவனை ஏற்றுக் கொண்டோரும், ஏராளமான தெய்வங்கள் இருப்பதாக நம்பிக் கொண்டிருப்போரும், இறைவனையே ஏற்க மறுத்தோரும் &#8216;மண்ணில் பிறந்த அனைவருக்கும் மரணம் நிச்சயம்&#8221; என்பதில் மாற்றுக் கருத்தைக் கொண்டிருக்கவில்லை. கண் முன்னே காண்பதை நம்புவதற்கு அறிவும் தேவையில்லை, ஆராய்ச்சியும் தேவையில்லை.</p>
<p style="text-align: justify;">&#8216;மரணத்தைத் தடுக்க ஏதேனும் மார்க்கம் உண்டா?&#8221; என்று ஆராய்ச்சி செய்தவர்களும் கூட ஒரு நாள் மரணித்துப் போனார்கள். குறைந்த பட்சம் தங்களுக்கு ஏற்பட்ட மரணத்தைத் தள்ளிப் போடக் கூட அவர்களால் இயலாமற்போனது. நாம் அனைவரும் ஒரு நாள் இறப்பது உறுதி. இதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. ஆனால் எப்போது இறப்போம்? எப்படி இறப்போம்? எந்த இடத்தில் இறப்போம்? அந்த இறைவனுக்கு மட்டுமே தெரிந்த இரகசியம்.</p>
<blockquote>
<p style="text-align: justify;"><strong>&#8230;தான் எந்த பூமியில் இறப்போம் என்பதையும் எவரும் அறிவதில்லை. நிச்சயமாக அல்லாஹ்தான் நன்கறிபவன்; நுட்பம் மிக்கவன். (திருக்குர்ஆன் 31:34)</strong></p>
<p style="text-align: justify;"><strong>நீங்கள் எங்கே இருந்த போதும் மரணம் உங்களை அடையும். உறுதியான கோட்டைகளில் நீங்கள் இருந்தாலும் சரியே! (திருக்குர்ஆன் 4:78)</strong></p>
</blockquote>
<p style="text-align: justify;">மரணம் எங்கும், எப்பொழுதும், எப்படியும் ஏற்படலாம். வீட்டை விட்டு வெளியில் புறப்பட்டால் மறுபடியும் வீடு வந்து சேருவது நிச்சயமல்ல. வெளியூருக்குப் புறப்பட்டுச் சென்றால் சொந்த ஊருக்குத் திரும்பி வருவது நிச்சயமல்ல. எனவே வீட்டை விட்டு வெளியில் புறப்படும்போது பிஸ்மில்லாஹி தவக்கல்து அலல்லாஹி (பொருள்: இறைவனின் பெயரால்&#8230;(புறப்படுகிறேன்) இறைவன் மீதே நம்பிக்கை வைத்தேன்) என்று சொல்லிக் கொண்டு புறப்பட வேண்டும். ஒருபோதும் போயிராத ஒரு இடத்துக்கு ஒருவர் எதிர்பாரா விதமாகப் போக நேரலாம். அந்த இடத்தில் அவர் மரணமடையலாம். &#8216;இறப்பதற்காகவே இவர்; இந்த இடத்துக்கு வந்தாரோ&#8221; என்று கூடச் சிலர் சொல்வதுண்டு.</p>
<blockquote>
<p style="text-align: justify;"><strong>ஒருவர் எந்த இடத்தில் மரணிக்க வேண்டும் என்று அல்லாஹ் தீர்மானித்து விட்டானோ அந்த இடத்துக்கு அவர் போக ஒரு தேவையை ஏற்படுத்துவான்.என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: அபூ அஸ்ஸா (ரலி) ஆதாரம்: திர்மிதி (2237)</strong></p>
<p style="text-align: justify;"><strong>அவனே தனது அடியார்கள் மீது ஆதிக்கம் செலுத்துபவன். உங்களுக்குப் பாதுகாவலர்களை அனுப்புகிறான். எனவே உங்களில் ஒருவருக்கு மரணம் ஏற்படும்போது நமது தூதர்கள் அவரைக் கைப்பற்றுகிறார்கள். அவர்கள் (அப்பணியில்) குறைவைக்க மாட்டார்கள். (திருக்குர்ஆன் 6:61)</strong></p>
<p><strong>(குஃப்ரை விட்டும்) தூயவர்களாக இருக்கும் நிலையில் மலக்குகள் எவருடைய உயிர்களைக் கைப்பற்றுகிறார்களோ அவர்களிடம்: “ஸலாமுன் அலைக்கும்” (“உங்கள் மீது சாந்தி உண்டாவதாக); நீங்கள் செய்து கொண்டிருந்த (நற்) கருமங்களுக்காக சுவனபதியில் நுழையுங்கள்” என்று அம்மலக்குகள் சொல்வார்கள். (திருக்குர்ஆன் 16:32)</strong></p></blockquote>
<p style="text-align: justify;">ஆகிய வசனங்களிலும் இன்னும் பல்வேறு வசனங்களிலும் உயிரைக் கைப்பற்றுபவர்கள் பலர் என்று திருமறை குர்ஆன் கூறுகிறது.</p>
<blockquote>
<p style="text-align: justify;"><strong>உங்களுக்கென நியமிக்கப்பட்ட மரணத்திற்குரிய வானவர் உங்களைக் கைப்பற்றுவார். பின்னர் உங்கள் இறைவனிடம் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்&#8221; என்று கூறுவீராக (திருக்குர்ஆன் 32:11)</strong></p>
</blockquote>
<p style="text-align: justify;">என்னும் வசனம் தெளிவாகவே ஒவ்வொருவருக்கும் உயிரைக் கைப்பற்ற ஒரு வானவர் நியமிக்கப் பட்டிருப்பதைச் சுட்டிக் காட்டுகிறது. உலகில் பிறந்த கோடானுகோடி மக்களுக்கும் தனித்தனி வானவரா? என்று சிலர் கேட்கலாம். இந்தக் கேள்வி அர்த்தமற்றது. அல்லாஹ்வின் வல்லமையை குறைத்து மதிப்பிடுவதாகும். (அல்லாஹ் நம்மைக் காப்பானாக) கோடானு கோடி மக்களுக்கும் கோடானு கோடி வானவரை நியமிப்பது அல்லாஹ்வுக்கு இயலாத காரியமல்லவே!</p>
<blockquote>
<p style="text-align: justify;"><strong>உயிரை எடுக்கும் விதம் நற்செயல்கள் புரிந்து நல்லவராக வாழ்ந்த ஒருவர் மரணிக்கும் போது அவர் மகிழ்ச்சி அடையும் விதத்தில் அவருக்காக நியமிக்கப்பட்ட வானவர் அவரிடம் வருவார். எங்கள் இறைவன் அல்லாஹ்வே என்று கூறி பின்னர் உறுதியாகவும் இருந்தோரிடம் வானவர்கள் இறங்கி &#8216;அஞ்சாதீர்கள்! கவலைப் படாதீர்கள்! உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சொர்க்கம் பற்றிய நற்செய்தியைப் பெற்றுக் கொள்ளுங்கள்.&#8221; எனக் கூறுவார்கள். (திருக்குர்ஆன் 41:30)</strong></p>
</blockquote>
<p>இறைவனை நிராகரித்து தீய செயல்கள் புரிந்து தீயவராக வாழ்ந்த ஒருவர் மரணிக்கும் போது அவரை பயமுறுத்தும் விதத்தில் அவருக்காக நியமிக்கப்பட்ட வானவர் அவரிடம் வருவார்.</p>
<blockquote>
<p style="text-align: justify;"><strong>அநியாயக்காரர்கள் மரண வேதனையில் இருக்கும் போது நீங்கள் அவர்களைப் பார்த்தால், மலக்குகள் தம் கைகளை நீட்டி (இவர்களிடம்) “உங்களுடைய உயிர்களை வெளியேற்றுங்கள்; இன்றைய தினம் நீங்கள் இழிவுதரும் வேதனையைக் கூலியாகக் கொடுக்கப்படுவீர்கள். ஏனெனில், நீங்கள் உண்மையல்லாததை அல்லாஹ்வின் மீது கூறிக் கொண்டிருந்தீர்கள்; இன்னும், அவனுடைய வசனங்களை (நம்பாது நிராகரித்துப்) பெருமையடித்துக் கொண்டிருந்தீர்கள்” (என்று கூறுவதை நீர் காண்பீர்). (திருக் குர்ஆன் 6:93)</strong></p>
</blockquote>
<p style="text-align: justify;">இறைவனுக்கு இணை கற்பித்தவர்கள் மரணிக்கும் போது அந்த இறுதி நேரத்தில் அவர்களுக்கு உண்மை உணர்த்தப்படும்.</p>
<blockquote>
<p style="text-align: justify;"><strong>நமது தூதர்கள் அவர்களைக் கைப்பற்ற அவர்களிடம் வரும்போது &#8216;அல்லாஹ்வை விட்டு நீங்கள் யாரை அழைத்துக் கொண்டிருந்தீர்களோ அவர்கள் எங்கே என்று கேட்பார்கள் &#8216;அவர்கள் எங்களை விட்டும் மறைந்து விட்டனர் என்று கூறுவார்கள். தாம் (ஏக இறைவனை) மறுப்போராக இருந்தோம் எனத் தமக்கு எதிராகச் சாட்சி கூறுவர்கள். (திருக்குர்ஆன் 7:37)  </strong></p>
<p><strong>நீங்கள் எப்படி அல்லாஹ்வை நம்ப மறுக்கிறீர்கள்? உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான்; பின்பு அவன் உங்களை மரிக்கச்செய்வான்; மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான்; இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக்கொண்டுவரப் படுவீர்கள்.  (திருக்குர்ஆன் 2:28)</strong></p></blockquote>
<p style="text-align: justify;">என‌வே ஒவோருவ‌ரும் த‌ன‌க்கும் ம‌ர‌ண‌ம் எந்த‌ வினாடியிலும் ஏற்ப‌டலாம் என்ப‌தை ம‌ன‌தில் நிறுத்தி ப‌டைத்த‌ இறைவ‌னை அஞ்சி வாழ்வ‌தும் அவ‌ன் வ‌ழி காட்ட‌லின் ப‌டியும் ந‌ட‌ப்போமாக‌.</p>
<p style="text-align: justify;"><span style="color: #c0c0c0;">A.அப்துஸ் ஸ‌லாம் ம‌ஸ்தூக்கா</span></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.readislam.net/portal/archives/3381/feed</wfw:commentRss>
		<slash:comments>4</slash:comments>
		</item>
		<item>
		<title>புரோகிதர்களை புறக்கணிப்போம்!</title>
		<link>http://www.readislam.net/portal/archives/4086</link>
		<comments>http://www.readislam.net/portal/archives/4086#comments</comments>
		<pubDate>Wed, 11 Jan 2012 02:55:17 +0000</pubDate>
		<dc:creator>ReadIslam.net</dc:creator>
				<category><![CDATA[பொதுவானவை]]></category>

		<guid isPermaLink="false">http://www.readislam.net/portal/?p=4086</guid>
		<description><![CDATA[புரோகிதர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களானாலும் சரி, எந்த நாட்டைச் சேர்ந்தவர்களானாலும் சரி அவர்களின் ஒரே நோக்கம் உண்மையான மார்க்கத்தை மறைப்பது; அதன் மூலம் உலக ஆதாயம் அடைவது. அதற்காக எவர்மீது வேண்டுமானாலும், ஏன் இறைவன் மீதும் பொய் சொல்ல தயங்கமாட்டார்கள். இறைவேதங்களைத் தங்கள் இஷ்டத்துக்கு மாற்றி இவ்வுலக வாழ்க்கை வசதிகளை தேடிக்கொண்டார்கள் யூத- கிருஸ்துவ புரோகிதர்கள். இஸ்லாத்தில் புகுந்துக் கொண்ட புரோகிதர்களுக்கு இது முடியவில்லை. காரணத்தை இறைவன் கூறுகிறான். “நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலானாகவும் இருக்கின்றோம்” (அல்குர்ஆன் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><a class="post_image_link" href="http://www.readislam.net/portal/archives/4086" title="Permanent link to புரோகிதர்களை புறக்கணிப்போம்!"><img class="post_image alignright remove_bottom_margin" src="http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcRugvoZLYg9GaiiyXA2oV8NXkGNl3rfNqncIRQek7PRE8MQvooK" width="213" height="236" alt="Post image for புரோகிதர்களை புறக்கணிப்போம்!" /></a>
</p><p style="text-align: justify;">புரோகிதர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களானாலும் சரி, எந்த நாட்டைச் சேர்ந்தவர்களானாலும் சரி அவர்களின் ஒரே நோக்கம் உண்மையான மார்க்கத்தை மறைப்பது; அதன் மூலம் உலக ஆதாயம் அடைவது. அதற்காக எவர்மீது வேண்டுமானாலும், ஏன் இறைவன் மீதும் பொய் சொல்ல தயங்கமாட்டார்கள். இறைவேதங்களைத் தங்கள் இஷ்டத்துக்கு மாற்றி இவ்வுலக வாழ்க்கை வசதிகளை தேடிக்கொண்டார்கள் யூத- கிருஸ்துவ புரோகிதர்கள். இஸ்லாத்தில் புகுந்துக் கொண்ட புரோகிதர்களுக்கு இது முடியவில்லை. காரணத்தை இறைவன் கூறுகிறான்.</p>
<p style="text-align: justify;">“நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலானாகவும் இருக்கின்றோம்” (அல்குர்ஆன் 15:9) இறைவனே பாதுகாவலனாக இருப்பதால் எதுவும் செய்ய முடியவில்லை. யோசித்தார்கள்; அணுக விட்டால் தானே அறிந்துக் கொள்வார்கள். நம் வியாபாரத்துக்கு வேட்டு வைத்து விடுவார்கள். ஆபத்தை உணர்ந்தார்கள். அரபி உங்களுக்கு விளங்காது. அதை விளங்க நாங்கள் மட்டுமே விஷேச பயிற்சி பெற்றவர்கள் என்றார்கள். ஒவ்வொரு வசனங்களுக்கும் பல அர்த்தங்கள் உள்ளன என்று பயமுறுத்தினார்கள். நீண்டகாலமாகவே குர்ஆனை மொழிபெயர்க்க முன் வராமல் இருந்தார்கள். இறைத்தூதரின் போதனைகளில் இடைசொருகலானவைகளையே அதிகம் அதிகம் பயன்படுத்திக் கொண்டார்கள்; விளைவு – மார்க்கம் மக்களுக்கு கஷ்டமானது.</p>
<p style="text-align: justify;">நபி(ஸல்) கூறுகிறார்கள்: அல்லாஹ் என்னைக் கற்றுக் கொடுப்பவனாகவும் எளிதாக்குபவனாகவும் அனுப்பியிருக்கிறான். அறிவிப்பவர்: ஜாபிர்(ரழி), நூல்: முஸ்லிம்</p>
<p style="text-align: justify;">இலகுவான மார்க்கத்தைக் கஷ்டமாக்கியதால் வியாபாரம் விறுவிறுப்பானது. போலி நபிமொழிகள் மூலம் புதிய அமல்கள் அறிமுகமாயின. ஐவேளை தொழுகையில்லாமல் அல்லாஹ்விடம் சொர்க்கம் பெற குறுக்கு வழி பார்த்தார்கள் மக்களுக்கு குறுமதி படைத்த புரோகிதர்கள் தர்காவுக்கு வழிகாட்டினார்கள். இதன் மூலம் ஷைத்தானின் சபதம் நிறைவேற சகல வழிகளிலும் உதவிச் செய்கிறார்கள். ஒன்றுபட்ட சமுதாயத்தை பிளவுபடுத்தி வழிகெடுத்து இருக்கிறார்கள். இதையெல்லாம் அறிந்துக் கொண்டே செய்கிறார்கள். ஆதாரம் அல்லாஹ் தருகிறான்.</p>
<p style="text-align: justify;">“”அவர்கள் தம் (சொந்த) மக்களை அறிவதைப்போல் (இந்த உண்மையை)அறிவார்கள்.” (அல்குர்ஆன் 2:146) தானும் வழிகெட்டு, சமுதயாத்தையும் வழிகெடுக்கிறோமே. நாளை அல்லாஹ்விடத்தில் கேவலமான இழிநிலையை அடைய போகிறோமோ என்ற கவலையும் கிடையாது. “”அவர்களுடைய இருதயங்களை இறுகச் செய்தோம் ” (அல்குர்ஆன் 5:13)</p>
<p style="text-align: justify;"> இறுகிப் போன இதயத்தில் ஈரம் எப்படி இருக்கும்? இறைவனைப் பற்றிப் பயம் எப்படி வரும்? இரக்க மில்லா பூசாரிகளிடம் சிக்கிக் கொண்டு தவிக்கும் இந்தச் சமுதயாத்தை விடுவிக்க ஒவ்வொரு முஸ்லிமும் முன்வர வேண்டும்.</p>
<p style="text-align: justify;">ஷைத்தானின் சகோதரர்களாகி விட்ட இந்த புரோகிதப் பூசாரிகளின் பிடியிலிருந்து பிளவுபட்ட சமுதாயத்தை விடுவித்து ஒன்றுபடுத்த ஒவ்வொரு முஸ்லிமும் இப்போதே செயலில் இறங்க வேண்டும். இதற்குச் சுலபமான வழி உண்டு. பள்ளியில் தினசரி சுபுஹு தொழுகைக்குப் பின்னால் சில நிமிடங்கள் நேரம் குர்ஆனை – ஹதீஸ் மொழி பெயர்ப்புகளைப் படிப்பது. அரபி ஓதத் தெரிந்தவர்கள் – தெரியாதவர்களுக்கு ஓதக் கற்றுக் கொடுப்பது. கற்றுக் கொடுக்கவும், கற்றுக் கொள்ளவும் அரபியை போல் ஒரு இலகுவான மொழி வேறு எதுவுமே இல்லை என்பதைக் கவனத்தில் கொள்ளவும். இதை தினசரி கடமையாகச் செய்து வந்தால் மிக குறுகியக் காலத்தில் மகத்தான மார்க்க அறிவை நாம் பெற முடியும்.</p>
<p>“”முஸ்லிம்கள் ஒவ்வொருவருக்கும் நலம் நாட வேண்டும்” (புகாரீ 58)</p>
<p style="text-align: justify;">என்ற அடிப்படையில், வழிதவறி அரசியலிலும், இயக்கங்களிலும் சிக்கிக் கொண்டிருக்கும் நம் சகோதரர்களுக்கு அதன் தீமைகளை எடுத்துச் சொல்லி குர்ஆன் – ஹதீஸுக்கு அழைத்து வர வேண்டும். செயல்படுத்த இலகுவான மார்க்கம் என்பதை நம் செயல்கள் மூலம் காட்ட வேண்டும். இதே போல்</p>
<p style="text-align: justify;">தொலைக்காட்சியில் நேரத்தை தொலைத்துக் கொண்டிருக்கும் நம் சகோதரிகள், மார்க்க கல்வியின் பக்கம் கவனத்தைத் திருப்ப வேண்டும் நபி(ஸல்) எச்சரிக்கையை மனதில் கொண்டு,</p>
<p style="text-align: justify;">“நரகவாசிகளில் பெண்களையே அதிகமாக் கண்டேன்” அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரழி), நூல்: புகாரி, 29, 1052</p>
<p style="text-align: justify;">பெண்களுக்கு நிறைய நேரம் கிடைக்கிறது. அவர்கள் தானும் மார்கக் கல்வி கற்று, தங்கள் பிள்ளைகளுக்கும் கற்றுத் தரலாம். இதனால் அவர்கள் எதிர்காலத்தில் இறைவனுக்கு முற்றிலும் வழிபட்ட முஸ்லிம்களாக வாழலாம். இப்படி நாம் ஒவ்வொருவரும் ஆர்வத்துடன் மார்க்கத்தைக் கற்றுக் கொண்டால்தான் புரோகிதர்களைப் புறக்கணிக்க முடியவும்.</p>
<p style="text-align: justify;"> (புரோகிதத்தை விட்டு வந்து விடுகிறேன் என்று சொல்லும் சகோதரர்களுக்கு நம் நிறுவனங்களில், கடைகளில் அல்லது சுயமாகச் சம்பாதிக்க நம்மால் முடிந்த உதவிகளைச் செய்து, அவர்களும் நேர்வழி பெற உதவலாம்).</p>
<p style="text-align: justify;"> மார்க்கத்தை மறைக்கிறார்கள் – மக்களை வழிக் கெடுக்கிறார்கள் என்று புரோகிதர்கள் மீது குறை மட்டும் சொல்வதில் பிரயோசனமில்லை. புரோகிதர்கள் தப்லீக்கில் இருந்தாலும் சரி, தவ்ஹீத்தில் இருந்தாலும் சரி சமூக ஒற்றுமைக்கும், மனித நேயத்திற்கும் முட்டுகட்டை. இந்த புரோகிதம் ஒழிந்தால் மட்டும் ஒன்றபட்ட சமுதாயம் உயரவும், மனித நேயம் மலரவும் முடியும். நாம் ஒவ்வொருவரும் மார்க்கம் கற்றுக் கொள்வதின் மூலமே புரோகிதர்களைப் புறக்கணிக்க முடியும்.</p>
<p style="text-align: justify;">இறைவா! எனக்கு நீ கற்றுத் தந்தவைகள் மூலம் எனக்குப் பயனளிப்பாயாகா! பயனுள்ளவற்றையே எனக்குக் கற்றுத் தருவாயாக. கல்வியை எனக்கு அதிகமாக்குவாயாக! எல்லா நிலையிலும் அல்லாஹ்வுக்கே புகழனைத்தும் என்று கூறுபவர்களாக இருந்தார்கள் நபி(ஸல்). அறிவிப்பவர்:- அபூஹுரைரா(ரழி), நூல்: இப்னுமாஜ்ஜா(251), திர்மிதி</p>
<p style="text-align: justify;">பயனுள்ள மார்க்க கல்வி கற்றுக் கொள்ள ஒவ்வொரு முஸ்லிமையும் அன்புடன் அழைக்கிறோம்.</p>
<p style="text-align: justify;">“மேலும் எவர்(கள்) நேர்வழியில் செல்கிறார்களோ அவர்களை அல்லாஹ் மேலும் நேர்வழியில் சேலுத்துகிறான்.” (அல்குர்ஆன் 19:76)</p>
<p style="text-align: justify;"><span style="color: #888888; font-size: x-small;">M.S. கமாலுத்தீன்</span></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.readislam.net/portal/archives/4086/feed</wfw:commentRss>
		<slash:comments>5</slash:comments>
		</item>
		<item>
		<title>நெஞ்சு பொறுக்குதில்லையே&#8230;</title>
		<link>http://www.readislam.net/portal/archives/4057</link>
		<comments>http://www.readislam.net/portal/archives/4057#comments</comments>
		<pubDate>Sun, 08 Jan 2012 01:44:16 +0000</pubDate>
		<dc:creator>ReadIslam.net</dc:creator>
				<category><![CDATA[அனாச்சாரங்கள்]]></category>
		<category><![CDATA[இணைவைத்தல்]]></category>

		<guid isPermaLink="false">http://www.readislam.net/portal/?p=4057</guid>
		<description><![CDATA[என்ன ஆயிற்று உங்களுக்கு..? என் அடக்கத்தலத்தில் எதற்கு இத்தனைக் கூட்டங்கள்? சமாதி வனக்கத்தைக் குழி தோண்டிப் புதைக்கப் போராடிய எனக்கே சமாதி கட்டி பச்சைப் பட்டு விரித்து பூ சாத்தி,பக்தி மணக்க மயிலிறகு மந்திரங்களும் சக்கரைப் பூ நேர்ச்சையும் உண்டியலும் காணிக்கையும்&#8230;. நெஞ்சு பொறுக்குதில்லையே ஒரே இறைவன்,குர்ஆனும் நபிவழியும் நம் வழிகாட்டுதல் என்று ஒரிறைக் கொள்கை சொன்ன என் பாடங்களை தர்கா விளக்கு திரியில் போட்டு எரிக்கின்றீர்களே&#8230; நான் சொன்னேனா? எனக்கு கந்தூரி வேண்டும்,உரூஸ் வேண்டும்,பூஜை வேண்டும்,நேமிதம் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><a class="post_image_link" href="http://www.readislam.net/portal/archives/4057" title="Permanent link to நெஞ்சு பொறுக்குதில்லையே&#8230;"><img class="post_image alignright remove_bottom_margin" src="http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcSxqld8hsR011C3Tngxdl14h9hbtEpOfZ59ypiQTJd6t5IofVYotw" width="259" height="194" alt="Post image for நெஞ்சு பொறுக்குதில்லையே&#8230;" /></a>
</p><p>என்ன ஆயிற்று உங்களுக்கு..?</p>
<p>என் அடக்கத்தலத்தில் எதற்கு இத்தனைக் கூட்டங்கள்?</p>
<p>சமாதி வனக்கத்தைக் குழி தோண்டிப் புதைக்கப் போராடிய எனக்கே சமாதி கட்டி பச்சைப் பட்டு விரித்து பூ சாத்தி,பக்தி மணக்க மயிலிறகு மந்திரங்களும் சக்கரைப் பூ நேர்ச்சையும் உண்டியலும் காணிக்கையும்&#8230;.</p>
<p>நெஞ்சு பொறுக்குதில்லையே</p>
<p>ஒரே இறைவன்,குர்ஆனும் நபிவழியும் நம் வழிகாட்டுதல் என்று ஒரிறைக் கொள்கை சொன்ன என் பாடங்களை தர்கா விளக்கு திரியில் போட்டு எரிக்கின்றீர்களே&#8230;</p>
<p>நான் சொன்னேனா?</p>
<p>எனக்கு கந்தூரி வேண்டும்,உரூஸ் வேண்டும்,பூஜை வேண்டும்,நேமிதம் வேண்டும் என்று யாரிடம் சொன்னேன்?</p>
<p>என்னை ஏன் இழிவுப்படுத்துகிறீர்கள்?</p>
<p>இறைவனிடம் நேரடியாகப் பிரார்த்தியுங்கள்.அவனுக்கு இடைத்தரகர் தேவையில்லை என்று ஓங்கி ஒலித்த என்னிடமே கையேந்துகிறீர்களே?</p>
<p>மூடர்களே உங்கள் இழி செயலால் நான் குறுகி நொடிந்து போகிறேன்.</p>
<p>ஜோஸ்யங்களும் மாந்திரீகங்களும் மடத்தனத்தின் முகவரி என்று உரத்து சொன்ன என் பெயரில் பொழப்பு நடத்த யாகம் செய்யும் சுயநலமிகளே,</p>
<p>இறைவன் முன்னிலையில் நாம் என்ன பதில் சொல்வோம்?</p>
<p>மரண சிந்தனையின் வாசல் கதவில் நின்று ஆணும் பெண்ணுமாய் கொண்டாடிக் கொள்ளி கொளுத்துகின்றீர்களே&#8230;</p>
<p>இது இணைவைப்பின் கொடூர விதை என்பதை நீங்கள் அறிவதில்லையா?</p>
<p>என் மட மக்களே,</p>
<p>தெரியாமல்தான் கேட்கிறேன்.இந்த யானைக்கும் எனக்கும் என்னதான் தொடர்பு?</p>
<p>என் சமாதியில் கொடிக் கம்பம் நட்டு பச்சை நட்சத்திரங்களுடன் கொடிகளைப் பறக்க விட்டு என் கொள்கையில் சுண்ணாம்பு நீர்க்கச் செய்து கொக்கரிக்கின்றீர்களே&#8230;.</p>
<p>என்ன நியாயம் இது?</p>
<p>நிறுத்துங்கள்</p>
<p>எனக்கும் இவ்வுலகிற்கும் இனி தொடர்பில்லை.நீங்கள் கேட்பதை நானறியேன்.</p>
<p>எடுத்துரைக்கும் என் கடமை முடிந்து போனது.</p>
<p>எனக்கேன் தர்கா? என்னைக் கண்ணியப்படுத்த விரும்பினால் இடித்துத் தள்ளிவிட்டு ஓரிறை நோக்கி போ&#8230;</p>
<p>எனக்காகப் பிரார்த்தனை செய்.</p>
<p>அதைவிட்டு&#8230;</p>
<p>மூடத்தனத்திற்கு என்னை காரணியாக்கும் கொடுமை தொடருமானால் மஹ்ஷர் காத்துக் கிடக்கிறது.</p>
<p>உங்கள் யாவருக்கும் எதிராய் என் விரல் நிளும்.</p>
<p><span style="color: #888888;">தகவல்:Labbai Karaikal</span></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.readislam.net/portal/archives/4057/feed</wfw:commentRss>
		<slash:comments>3</slash:comments>
		</item>
		<item>
		<title>சூதாட்டம்</title>
		<link>http://www.readislam.net/portal/archives/394</link>
		<comments>http://www.readislam.net/portal/archives/394#comments</comments>
		<pubDate>Thu, 05 Jan 2012 03:25:02 +0000</pubDate>
		<dc:creator>ReadIslam.net</dc:creator>
				<category><![CDATA[அழிவுப் பாதை]]></category>

		<guid isPermaLink="false">http://www.readislam.net/portal/?p=394</guid>
		<description><![CDATA[  சூதாட்டம் (Gambling) என்பது, பணம் அல்லது வேறு பெறுமதியான பொருட்களைப் பணயமாக வைத்து ஆடுகின்ற, நிச்சயமற்ற விளைவைக் கொடுக்கக்கூடிய ஒரு விளையாட்டு வகை ஆகும். இதன் அடிப்படை நோக்கம் பணயமாக வைக்கப்பட்ட பணம் அல்லது பொருளிலும் கூடிய பெறுமதியான பணத்தையோ, பொருளையோ அடைவதாகும். பொதுவாக இதன் பெறுபேற்றைக் குறுகிய காலத்துக்குள் அறியக்கூடியதாக இருக்கும். சில நாடுகளில் சூதாட்டம் சட்டத்தால் தடை செய்யப்பட்டுள்ளது. வேறு சில நாடுகள் இதனைக் கட்டுப்பாட்டுடன் அனுமதிக்கின்றன. பல சமூகங்களில் சூது ஒரு தீய [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><a class="post_image_link" href="http://www.readislam.net/portal/archives/394" title="Permanent link to சூதாட்டம்"><img class="post_image alignleft remove_bottom_margin" src="http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcQSKKtfiFEmVORFbQHFYWOUHCvhEzsxXFySvzhG4V2bSOdme9BX" width="259" height="194" alt="Post image for சூதாட்டம்" /></a>
</p><p style="text-align: justify;"><span style="color: #663300; font-family: TSCu_InaiMathi;">  </span>சூதாட்டம் (Gambling) என்பது, பணம் அல்லது வேறு பெறுமதியான பொருட்களைப் பணயமாக வைத்து ஆடுகின்ற, நிச்சயமற்ற விளைவைக் கொடுக்கக்கூடிய ஒரு விளையாட்டு வகை ஆகும். இதன் அடிப்படை நோக்கம் பணயமாக வைக்கப்பட்ட பணம் அல்லது பொருளிலும் கூடிய பெறுமதியான பணத்தையோ, பொருளையோ அடைவதாகும். பொதுவாக இதன் பெறுபேற்றைக் குறுகிய காலத்துக்குள் அறியக்கூடியதாக இருக்கும். சில நாடுகளில் சூதாட்டம் சட்டத்தால் தடை செய்யப்பட்டுள்ளது. வேறு சில நாடுகள் இதனைக் கட்டுப்பாட்டுடன் அனுமதிக்கின்றன.</p>
<p style="text-align: justify;">பல சமூகங்களில் சூது ஒரு தீய பழக்கமாகவும், விலக்கி வைக்கவேண்டிய ஒன்றாகவும் கொள்ளப்படுகின்றது. கத்தோலிக்க, யூத மரபுகளில் சூதாட்டத்துக்காக குறிப்பிட்ட நாட்களை ஒதுக்கும் வழக்கம் இருந்தது. ஆனால் அவர்களுடைய மதங்கள் சூதாட்டத்தை ஏற்றுக்கொள்வதில்லை. சூதாட்டத்தினால் விரும்பத்தகாத பல சமூக விளைவுகள் ஏற்படுகின்றன. இதனாலேயே பல நாடுகள் சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துகின்றன. சில இஸ்லாமிய நாடுகளும், வேறு சில நாடுகளும் சூதாட்டத்துக்கு முற்றாகவே தடை விதித்துள்ளன.</p>
<p style="text-align: justify;">இந்து சமய நூல்களும், தமிழில் தோன்றிய நீதி நூல்கள் பலவும் சூதாட்டத்தில் ஈடுபடாடாதிருக்கும்படி அறிவுறுத்துகின்றன. இந்தியாவின் பழைய நூல்களான மகாபாரதக் கதையும், நளன் கதையும் சூதினால் விளைந்த கேட்டையே அடிப்படையாகக் கொண்டு அமைந்தவை.</p>
<blockquote>
<p style="text-align: justify;"><span style="font-family: TSCu_InaiMathi; color: #663300;"> </span><strong><span style="color: #663300; font-family: TheneeUniTx;">மனிதர்களே! பூமியிலுள்ள பொருட்களில், அனுமதிக்கப் பட்டவற்றையும், பரிசுத்த மானவற்றையும் உண்ணுங்கள்; ஷைத்தானின் அடிச்சுவடுகளை பின்பற்றாதீர்கள் நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவனாவான். </span><span style="font-family: TheneeUniTx;">(அல்குர்ஆன் 2:168)</span></strong></p>
</blockquote>
<p style="text-align: justify;"><span style="font-family: TheneeUniTx;">    கண்ணியமிக்க இஸ்லாமிய சகோதர சகோதரிகளே! நமது ஊர்களில் பலர் லாட்டரி சீட்டுக்கள் விற்பனை செய்வதிலும், அதனை வாங்குவதிலும் அதிக ஆர்வமுடையவர்களாக உள்ளனர் என்பது ஊரறிந்த உண்மை. இதிலும் குறிப்பாக இன்றைய இஸ்லாமிய தோற்றம் என்று நம்வர்களால் சிறப்பித்துச் சொல்லப்படும் ஜுப்பா தலைப்பாகை தொப்பியுடன் லாட்டரி சீட்டுக்கள் விற்பதையும் வாங்குவதையும்  காண்கிறோம். லாட்டரி சீட்டுகள் வாங்குபவர்களும், விற்பவர்களும், அதற்கு துணையாக இருப்பவர்களும் லாட்டரி சீட்டு வேறு, சூதாட்டம் வேறு என்று எண்ணிக் கொண்டார்கள் போலும்.</span></p>
<p style="text-align: justify;"><span style="font-family: TheneeUniTx;">    பரிசுச் சீட்டு என்பது சூதாட்டத்தின் மறுபெயர். மக்களை வழி கெடுப்பதற்காக செய்த ஷைத்தானின் சூழ்ச்சியே இது. இதில் சில நன்மைகள் இருந்தாலும், தீமைகள் அதிகம் உள்ளது என்பதாலேயே வல்ல அல்லாஹ் இதை விட்டும் விலகியிருக்கச் சொல்கிறான். இதில் வேதனைப் பட வேண்டிய விஷயம் என்னவென்றால் அல்லாஹ்வுடைய பள்ளியை ஒட்டி உள்ள பள்ளிக்குச் சொந்தமான கடைகளில் கூட லாட்டரி விற்பனை.</span></p>
<p style="text-align: justify;"><span style="font-family: TheneeUniTx;">    நாம் திருக்குர்ஆனை ஒரு எழுத்துக்கு 10 நன்மை கிடைக்கும் என்பதை அறிந்து ஓதி வருகிறோம். ஆனால் இது இம்மை மறுமைக்கு வழி காட்ட வந்த வேதம் என்பதால் பொருள் உணர்ந்து ஓதினோமா?. பொருள் உணராது ஓதியதால் மதுவும் &#8211; சூதும் ஒன்று என்றும், பெரும் பாவம் என்றும் இறைவன் தனது திருமறையில் தெளிவாகக் கூறியிருந்தும், நம்மிலே பலர் மிகச் சாதரணமாக விற்பனை செய்துகொண்டும், வாங்கி சந்தோஷித்துக் கொண்டும், பரிசு தனக்கே கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் குர்ஆனுக்குள் பரிசு சீட்டை வைத்து இறைவனிடம் துஆச் செய்து கொண்டும் இருக்கிறார்கள். இதனைக் குறித்து சூரா பகராவில் இறைவன் மிகத் தெளிவாகக் கூறுகிறான்.</span></p>
<blockquote>
<p style="text-align: justify;"><strong><span style="font-family: TheneeUniTx;">    <span style="color: #663300;">(நபியே!) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்; நீர் கூறும்; &#8220;அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது; மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு; ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது.</span> (அல்குர்ஆன் 2: 219)</span></strong></p>
<p style="text-align: justify;"><strong><span style="font-family: TheneeUniTx;">    <span style="color: #663300;">மதுவும், சூதாட்டமும் இருமுகம் கொண்ட மத்தளங்களாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.</span> அறிவிப்பவர்: இப்னு அம்ருப்னு ஆஸ் (ரலி) நூல்: அபூதாவூத்</span></strong></p>
</blockquote>
<p style="text-align: justify;"><span style="font-family: TheneeUniTx;">    மேற்கண்ட வசனத்தின் பொருளையும், ஹதீஸின் கருத்தையும் உணர்ந்த முஸ்லிம்கள் குடிகாரனும், லாட்டரி விற்பவனும், அதற்குத் துணை செய்பவனும் ஒரு தரத்தில் உள்ளவர்கள் என்பதை உணர வேண்டாமா? இதில் ஈடுபடுபவர்கள் இப்பெரும் பாவத்தைத் தவிர்த்துக் கொள்ள வேண்டாமா? முஸ்லிம்கள் இறைவனால் ஹராமாக்கப்பட்ட மதுவையையும் பன்றி மாமிசத்தையும் வெறுக்கும் அளவுக்கு லாட்டரி சூதாட்டத்தை வெறுக்கவில்லையே?&#8230;&#8230; இதிலும் அல்லாஹ்வுடைய கருத்துக்கு மாற்றமாக இவர்களுடைய சொந்தக் கருத்துக்களைப் புகுத்தி வித்தியாசம் கற்பித்து விட்டார்களா?&#8230;</span></p>
<p style="text-align: justify;"><span style="font-family: TheneeUniTx;">    இறைவன் மது, சூதாட்டம், சிலை வணக்கம், ஜோதிடம் இந்நான்கையும் இணைத்து கூறி இவைகள் ஈமான் கொண்டவர்களைக் கெடுக்கச் செய்யும் ஷைத்தானின் சூழ்ச்சி என்று தெளிவாக கூறுவதை நாம் உணரவேண்டாமா?</span></p>
<blockquote>
<p style="text-align: justify;"><strong><span style="font-family: TheneeUniTx;">    <span style="color: #663300;">ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களில் உள்ளவையாகும்; ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்து கொள்ளுங்கள் &#8211; அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள்.</span> (அல்குர்ஆன் 5:90)</span></strong></p>
<p style="text-align: justify;"><strong><span style="font-family: TheneeUniTx;">    <span style="color: #663300;">நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம், மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும், உங்களிடையே பகமையையும், வெறுப்பையும் உண்டு பண்ணி அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடத்தான்; எனவே, அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா?</span>  (அல்குர்ஆன் 5:91)</span></strong></p>
<p style="text-align: justify;"><strong><span style="font-family: TheneeUniTx;">   <span style="color: #663300;"> (நபியே!) நிச்சயமாக நாம் மிகத் தெளிவான வசனங்களை உம்மீது இறக்கி வைத்திருக்கிறோம்; பாவிகளைத் தவிர (வேறு எவரும்) அவற்றை நிராகரிக்க மாட்டார்கள். </span>(அல்குர்ஆன் 2:99)</span></strong></p>
<p style="text-align: justify;"><strong><span style="font-family: TheneeUniTx;">    <span style="color: #663300;">மக்களுக்கு ஒரு காலம் வரும் அக்காலத்தவர் தமது சம்பாத்தியம் ஹலாலானதா, ஹராமானதா, முறையானதா, முறையற்றதா என்பவனவற்றைப் பொருட்படுத்தாது</span></span><span style="color: #663300; font-family: TheneeUniTx;"> இ</span><span style="font-family: TheneeUniTx;"><span style="color: #663300;">ருப்பர் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.</span> அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி</span></strong></p>
</blockquote>
<p style="text-align: justify;"><span style="font-family: TheneeUniTx;">    எனவே எனதன்பு நடுநிலைச் சமுதாயத்தவர்களே! அல்லாஹ்வும் அவனது தூதரும் பெரும்பாவம் என எச்சரித்த இந்த தடுக்கப்பட்ட செயலில் ஈடுபட்டுள்ள நமது சகோதரர்களுக்கு இதன் தீமைகள் பற்றி நயமாக எடுத்துக்கூறி அனுமதிக்கப்பட்ட வழிகளில் தொழில் செய்து ஹராம், ஹலாலை பேணி நடக்கும் முஸ்லிம்களாக நாம் வாழ்வோமாக! </span></p>
<p style="text-align: justify;"> <span style="font-family: TheneeUniTx; color: #808080;">அபூஉவைஸ்</span></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.readislam.net/portal/archives/394/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>Zakir Naik vs William Campbell-Quran and Bible  தமிழில்</title>
		<link>http://www.readislam.net/portal/archives/3913</link>
		<comments>http://www.readislam.net/portal/archives/3913#comments</comments>
		<pubDate>Mon, 02 Jan 2012 14:09:23 +0000</pubDate>
		<dc:creator>ReadIslam.net</dc:creator>
				<category><![CDATA[Dr Zakir Naik]]></category>
		<category><![CDATA[வீடியோ]]></category>

		<guid isPermaLink="false">http://www.readislam.net/portal/?p=3913</guid>
		<description><![CDATA[&#160; &#160; &#160; &#160;]]></description>
			<content:encoded><![CDATA[<p></p><p><object style="height: 390px; width: 640px"><param name="movie" value="http://www.youtube.com/v/MfT3ySwxf2w?version=3&#038;feature=player_detailpage"><param name="allowFullScreen" value="true"><param name="allowScriptAccess" value="always"><embed src="http://www.youtube.com/v/MfT3ySwxf2w?version=3&#038;feature=player_detailpage" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" allowScriptAccess="always" width="640" height="360"></object></p>
<p>&nbsp;<object style="height: 390px; width: 640px"><param name="movie" value="http://www.youtube.com/v/2FUKTurf6kc?version=3&#038;feature=player_detailpage"><param name="allowFullScreen" value="true"><param name="allowScriptAccess" value="always"><embed src="http://www.youtube.com/v/2FUKTurf6kc?version=3&#038;feature=player_detailpage" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" allowScriptAccess="always" width="640" height="360"></object></p>
<p>&nbsp;</p>
<p><object style="height: 390px; width: 640px"><param name="movie" value="http://www.youtube.com/v/Ga_I92iBz0Y?version=3&#038;feature=player_detailpage"><param name="allowFullScreen" value="true"><param name="allowScriptAccess" value="always"><embed src="http://www.youtube.com/v/Ga_I92iBz0Y?version=3&#038;feature=player_detailpage" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" allowScriptAccess="always" width="640" height="360"></object></p>
<p>&nbsp;<object style="height: 390px; width: 640px"><param name="movie" value="http://www.youtube.com/v/c6D0ghuY9YY?version=3&#038;feature=player_detailpage"><param name="allowFullScreen" value="true"><param name="allowScriptAccess" value="always"><embed src="http://www.youtube.com/v/c6D0ghuY9YY?version=3&#038;feature=player_detailpage" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" allowScriptAccess="always" width="640" height="360"></object></p>
<p>
<object style="height: 390px; width: 640px"><param name="movie" value="http://www.youtube.com/v/WGRz60Kvio8?version=3&#038;feature=player_detailpage"><param name="allowFullScreen" value="true"><param name="allowScriptAccess" value="always"><embed src="http://www.youtube.com/v/WGRz60Kvio8?version=3&#038;feature=player_detailpage" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" allowScriptAccess="always" width="640" height="360"></object>
</p>
<p><object style="height: 390px; width: 640px"><param name="movie" value="http://www.youtube.com/v/REGHpFdRthk?version=3&#038;feature=player_detailpage"><param name="allowFullScreen" value="true"><param name="allowScriptAccess" value="always"><embed src="http://www.youtube.com/v/REGHpFdRthk?version=3&#038;feature=player_detailpage" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" allowScriptAccess="always" width="640" height="360"></object><br />
<P><object style="height: 390px; width: 640px"><param name="movie" value="http://www.youtube.com/v/VEjmra0OUGs?version=3&#038;feature=player_detailpage"><param name="allowFullScreen" value="true"><param name="allowScriptAccess" value="always"><embed src="http://www.youtube.com/v/VEjmra0OUGs?version=3&#038;feature=player_detailpage" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" allowScriptAccess="always" width="640" height="360"></object><br />
<P><object style="height: 390px; width: 640px"><param name="movie" value="http://www.youtube.com/v/M8F2j06y8Dk?version=3&#038;feature=player_detailpage"><param name="allowFullScreen" value="true"><param name="allowScriptAccess" value="always"><embed src="http://www.youtube.com/v/M8F2j06y8Dk?version=3&#038;feature=player_detailpage" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" allowScriptAccess="always" width="640" height="360"></object><br />
<P><object style="height: 390px; width: 640px"><param name="movie" value="http://www.youtube.com/v/N5EDm8LVZdE?version=3&#038;feature=player_detailpage"><param name="allowFullScreen" value="true"><param name="allowScriptAccess" value="always"><embed src="http://www.youtube.com/v/N5EDm8LVZdE?version=3&#038;feature=player_detailpage" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" allowScriptAccess="always" width="640" height="360"></object><br />
<P><object style="height: 390px; width: 640px"><param name="movie" value="http://www.youtube.com/v/yIGi4K0AEZs?version=3&#038;feature=player_detailpage"><param name="allowFullScreen" value="true"><param name="allowScriptAccess" value="always"><embed src="http://www.youtube.com/v/yIGi4K0AEZs?version=3&#038;feature=player_detailpage" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" allowScriptAccess="always" width="640" height="360"></object><br />
<P><object style="height: 390px; width: 640px"><param name="movie" value="http://www.youtube.com/v/1tsCvm-agBA?version=3&#038;feature=player_detailpage"><param name="allowFullScreen" value="true"><param name="allowScriptAccess" value="always"><embed src="http://www.youtube.com/v/1tsCvm-agBA?version=3&#038;feature=player_detailpage" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" allowScriptAccess="always" width="640" height="360"></object><br />
<P>&nbsp;<P><object style="height: 390px; width: 640px"><param name="movie" value="http://www.youtube.com/v/6NfpCYnCzyk?version=3&#038;feature=player_detailpage"><param name="allowFullScreen" value="true"><param name="allowScriptAccess" value="always"><embed src="http://www.youtube.com/v/6NfpCYnCzyk?version=3&#038;feature=player_detailpage" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" allowScriptAccess="always" width="640" height="360"></object><br />
<P><object style="height: 390px; width: 640px"><param name="movie" value="http://www.youtube.com/v/BKPx45OZjeY?version=3&#038;feature=player_detailpage"><param name="allowFullScreen" value="true"><param name="allowScriptAccess" value="always"><embed src="http://www.youtube.com/v/BKPx45OZjeY?version=3&#038;feature=player_detailpage" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" allowScriptAccess="always" width="640" height="360"></object><br />
<P><object style="height: 390px; width: 640px"><param name="movie" value="http://www.youtube.com/v/FTT4Hb2XqYA?version=3&#038;feature=player_detailpage"><param name="allowFullScreen" value="true"><param name="allowScriptAccess" value="always"><embed src="http://www.youtube.com/v/FTT4Hb2XqYA?version=3&#038;feature=player_detailpage" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" allowScriptAccess="always" width="640" height="360"></object><br />
<P><object style="height: 390px; width: 640px"><param name="movie" value="http://www.youtube.com/v/NEFYjUwkmys?version=3&#038;feature=player_detailpage"><param name="allowFullScreen" value="true"><param name="allowScriptAccess" value="always"><embed src="http://www.youtube.com/v/NEFYjUwkmys?version=3&#038;feature=player_detailpage" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" allowScriptAccess="always" width="640" height="360"></object><br />
<P><object style="height: 390px; width: 640px"><param name="movie" value="http://www.youtube.com/v/cHG8lnaT1S8?version=3&#038;feature=player_detailpage"><param name="allowFullScreen" value="true"><param name="allowScriptAccess" value="always"><embed src="http://www.youtube.com/v/cHG8lnaT1S8?version=3&#038;feature=player_detailpage" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" allowScriptAccess="always" width="640" height="360"></object><br />
<P><object style="height: 390px; width: 640px"><param name="movie" value="http://www.youtube.com/v/fX4GEOXecO8?version=3&#038;feature=player_detailpage"><param name="allowFullScreen" value="true"><param name="allowScriptAccess" value="always"><embed src="http://www.youtube.com/v/fX4GEOXecO8?version=3&#038;feature=player_detailpage" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" allowScriptAccess="always" width="640" height="360"></object><br />
<P><object style="height: 390px; width: 640px"><param name="movie" value="http://www.youtube.com/v/jMryI-zOSwo?version=3&#038;feature=player_detailpage"><param name="allowFullScreen" value="true"><param name="allowScriptAccess" value="always"><embed src="http://www.youtube.com/v/jMryI-zOSwo?version=3&#038;feature=player_detailpage" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" allowScriptAccess="always" width="640" height="360"></object><br />
<P></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.readislam.net/portal/archives/3913/feed</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
		</item>
		<item>
		<title>பேஸ்புக் சகோதரிகளுக்கு எச்சரிக்கை!</title>
		<link>http://www.readislam.net/portal/archives/3841</link>
		<comments>http://www.readislam.net/portal/archives/3841#comments</comments>
		<pubDate>Mon, 02 Jan 2012 03:24:30 +0000</pubDate>
		<dc:creator>ReadIslam.net</dc:creator>
				<category><![CDATA[பொதுவானவை]]></category>

		<guid isPermaLink="false">http://www.readislam.net/portal/?p=3841</guid>
		<description><![CDATA[பேஸ்புக் பாவனையாளர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுக்கக் கூடிய செய்தி இது. பேஸ்புக், டுவிட்டர், போன்ற சமூக இணைப்பு இணையத் தளங்களின் பாவனையாளர்களின் போட்டோக்கள் பயங்கரமாக பாலியல் ரீதியில் துஷ்பிரயோகம் செய்யப்படக் கூடிய அதிகபட்ச ஆபத்து உருவாகியுள்ளது. எனவே சகோதரிகளே பேஸ்புக்கில் உங்கள் புகைப்படங்கள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள். அன்பின், சினிமா தார‌கைக‌ளின் புகைப்ப‌ட‌ங்க‌ளையும் த‌ம‌து சொந்த‌ப் புகைப்ப‌ட‌ங்க‌ளையும் பாவிக்கும் ச‌கோத‌ரிக‌ளுக்கு, ப‌ர‌ந்து விரிந்த‌ இணைய‌த்த‌ள‌த்தில் உங்க‌ளை பிர‌தி நிதித்துவ‌ப்ப‌டுத்துவ‌தே உங்க‌ள் புகைப்ப‌ட‌ங்க‌ள் தான்&#8230; அது ஒரு புற‌ம் இருக்க‌ [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><a class="post_image_link" href="http://www.readislam.net/portal/archives/3841" title="Permanent link to பேஸ்புக் சகோதரிகளுக்கு எச்சரிக்கை!"><img class="post_image alignleft remove_bottom_margin" src="http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcRybcvOYJk7ABeCen4GM7yOa5J39TJ1fbhzwaG39A4LpVt4-IBr" width="278" height="181" alt="Post image for பேஸ்புக் சகோதரிகளுக்கு எச்சரிக்கை!" /></a>
</p><p style="text-align: justify;"><span style="color: #c03f60;"><strong>பேஸ்புக் பாவனையாளர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுக்கக் கூடிய செய்தி இது. பேஸ்புக், டுவிட்டர், போன்ற சமூக இணைப்பு இணையத் தளங்களின் பாவனையாளர்களின் போட்டோக்கள் பயங்கரமாக பாலியல் ரீதியில் துஷ்பிரயோகம் செய்யப்படக் கூடிய அதிகபட்ச ஆபத்து உருவாகியுள்ளது. எனவே சகோதரிகளே பேஸ்புக்கில் உங்கள் புகைப்படங்கள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.</strong></span></p>
<p style="text-align: justify;">அன்பின், சினிமா தார‌கைக‌ளின் புகைப்ப‌ட‌ங்க‌ளையும் த‌ம‌து சொந்த‌ப் புகைப்ப‌ட‌ங்க‌ளையும் பாவிக்கும் ச‌கோத‌ரிக‌ளுக்கு,</p>
<p>ப‌ர‌ந்து விரிந்த‌ இணைய‌த்த‌ள‌த்தில் உங்க‌ளை பிர‌தி நிதித்துவ‌ப்ப‌டுத்துவ‌தே உங்க‌ள் புகைப்ப‌ட‌ங்க‌ள் தான்&#8230;</p>
<p>அது ஒரு புற‌ம் இருக்க‌ ஒரு சில‌ கேள்விக‌ளை கேட்க‌ நினைக்கின்றேன்.!!<br />
&#8230;<br />
முத‌ல் பார்வையிலேயே உங்க‌ளைப்ப‌ற்றி எந்த‌ வ‌கையான‌ சிந்த‌னையை அடுத்த‌வ‌ர் ம‌ன‌தில் ஏற்ப‌டுத்த‌ விரும்புகின்றீர்க‌ள்????</p>
<p>நீங்க‌ள் விய‌ர்வை சிந்தி தூய்மையாய் உழைக்காம‌ல் த‌ம் உட‌லை வைத்து ச‌ம்பாதிக்கும் ஒரு வெட்க‌ம் கெட்ட‌ கூட்ட‌த்தின் ர‌சிகை என்ப‌தை வெளிப்ப‌டுத்திக்கொள்ள‌ விரும்புகின்றீர்க‌ளா??</p>
<p>உங்க‌ளுக்கு என்ன‌ பெருமை அவ‌ர்க‌ளின் புகைப்ப‌ட‌ங்க‌ளை பாவிப்ப‌த‌ன் மூல‌ம் வ‌ருகின்ற‌து???</p>
<p>உங்க‌ளையும் அந்த‌ வெட்க‌ம் கெட்ட‌ கூட்ட‌த்தின் ஒருவ‌ராக‌ பிற‌ர் எண்ணிக்கொள்ள‌ அனும‌திப்பீர்களா??</p>
<p>சொந்த‌ப் புகைப்ப‌ட‌ங்க‌ளை பாவிக்கும் நீங்க‌ள், உங்க‌ளை நீங்க‌ளும் விள‌ம்ப‌ர‌ப்ப‌டுத்திக்கொள்ள‌ முனைகின்றீர்க‌ளா??</p>
<p>நீங்க‌ள் அடுத்தவ‌ரால் விரும்ப‌ப் ப‌ட‌வேண்டும் என்று விரும்புகின்றீர்க‌ளா??</p>
<p>உங்க‌ளைப்ப‌ற்றி மிகையாக‌ எடை போட்டாலும் த‌வ‌றில்லை குறைவாக‌ எடை போட‌க்கூடாது என்று நினைக்கின்றீர்க‌ளா??</p>
<p>உங்க‌ள் குறைக‌ளை சொல்லா விட்டாலும் ப‌ர‌வாயில்லை பிற‌ரால் புக‌ழ‌ப்ப‌ட‌ வேண்டும் என்று எண்ணுகின்றீர்க‌ளா??</p>
<p>அப்ப‌டியும் இல்லை என்றால் இனைய‌த்தின் மூல‌மாக ஆபாச‌மான‌ த‌ள‌ங்க‌ளுக்கு உங்க‌ள் புகைப்ப‌ட‌ங்க‌ளை அனுப்ப‌ நீங்க‌ளே வ‌ழி செய்கின்றீர்களா?</p>
<p>எது எப்ப‌டியோ.. face book மூல‌ம் உங்க‌ள் புகைப்ப‌ட‌ங்க‌ள் வேறு த‌ள‌ங்க‌ளில் உலா வ‌ர‌ வாய்ப்புக்க‌ள் அதிக‌ம் என்ப‌து உண்மையே..</p>
<p>இதோ சில‌ வ‌ழிமுறைக‌ளைச்சொல்கிறேன் முடியுமானால் சிந்தித்துப்பாருங்க‌ள்..</p>
<p>1) உங்க‌ள் புகைப்ப‌ட‌ங்க‌ளை யாருக்கெல்லாம் காட்ட‌ நினைக்கின்றீர்க‌ளோ த‌னியாக‌க் காட்டிக்கொள்ளுங்க‌ள்.. பொது இட‌ங்க‌ளில் பாவித்து பெண்மையின் மென்மையை காய‌ப்ப‌டுத்தாதீர்க‌ள்&#8230;</p>
<p>2)பெண் என்ப‌வ‌ள் காட்சிப்பொருள‌ல்ல‌ என்ப‌தை உண‌ர்ந்து கொள்ள‌ முய‌ற்சி செய்யுங்க‌ள்..<br />
நீங்க‌ள் காட்சிப்ப‌டுத்தும் புகைப்ப‌ட‌ங்க‌ள் உங்க‌ள் எதிர்கால‌த்தையே கேள்விக்குறியாக்க‌லாம் என‌வே சிந்தித்து முடிவெடுங்க‌ள்..</p>
<p>3) நீங்க‌ள் இஸ்லாம் கூறும் வ‌கையில் உடைய‌மைப்பைக் கொண்டிருந்தாலும் அதுவும் தவிர்க்க‌ப்ப‌ட‌ வேண்டிய‌ விட‌ய‌ம் என்ப‌தை நினைவில் வைத்துக்கொள்ளுங்க‌ள்.<br />
ந‌வீன‌ தொழில் நுட்ப‌த்தின் மூல‌ம் எந்த‌ள‌வு ந‌ன்மை விளைகின்ற‌தோ அந்த‌ள‌வு தீமையும் ம‌னித‌ ச‌மூக‌த்திற்கு விளைந்து கொண்டு தான் இருக்கின்ற‌து..<br />
உங்க‌ள் புகைப்ப‌ட‌ங்க‌ள் மூல‌ம் நீங்க‌ள் துஷ்பிர‌யோக‌த்திற்கு உட்ப‌ட‌லாம்&#8230;</p>
<p>4)உங்க‌ளுக்கு உங்க‌ள் அழ‌கைக்காட்ட‌வே வேண்டும் என்றிருந்தால் இருக்க‌வே இருக்கிர‌து ப‌ல‌ வ‌ழிக‌ள் அதில் ஒன்றை தெரிவு செய்து கொள்ளுங்க‌ளேன்..</p>
<p>1 உங்க‌ள் த‌ந்தையிட‌ம் தாயிட‌ம் காட்ட‌லாம்.<br />
2 ச‌கோத‌ர‌ ச‌கோத‌ரிக‌ளிட‌ம் காட்ட‌லாம்<br />
3 உங்க‌ள் க‌ற்பை ம‌ஹ‌ர் மூல‌ம் ஹ‌லால் ஆக்கிக் கொண்ட‌ உங்க‌ள் க‌ன‌வ‌ரிட‌ம் காட்ட‌லாம்<br />
உங்க‌ளுக்கே உங்க‌ளுக்கென்று ஒரு உற‌வு (க‌ணவ‌ன்)இருக்க‌ யாருக்கோவெல்லாம் உங்க‌ள் உட‌லை, உங்க‌ள் அழ‌கைக்காட்டி ஏன் வீணாக்குகின்றீர்க‌ள்.<br />
க‌ணவ‌னுக்காக‌ அழ‌ங்க‌ரித்து அவ‌ரை ம‌கிழ்விப்ப‌த‌ற்கே ந‌ன்மைக‌ள் கிடைக்கும் என்றிருக்க‌ பாவ‌த்தின் பால் ஏன் விரைகின்றீர்க‌ள்??.</p>
<p>நீங்க‌ள் த‌னித்துவ‌மாக‌ இருக்க‌ வேண்டும் என்று விரும்பினால் உங்க‌ள் புகைப்ப‌ட‌ங்க‌ளையும், சினிமா ந‌டிகைக‌ளின் ப‌ட‌ங்க‌ளையும் த‌விர்த்து இன்னும் எத்த‌னையோ வ‌கையான ப‌ட‌ங்க‌ள் உள்ள‌ன‌ அவ‌ற்றில் ஒன்றைப் பா‌வித்துக்கொள்ளுங்க‌ள்.</p>
<p>இல்லையெனில் உங்க‌ள் பெய‌ரை புகைப்ப‌ட‌மாக‌ப் பாவியுங்க‌ள்.</p>
<p>த‌ய‌வு செய்து முஸ்லீம் பெய‌ர்க‌ளுட‌ன் + இறை நிராக‌ரிப்பாள‌ர்க‌ளின் புகைப்ப‌டங்க‌ளை இணைத்து இஸ்லாத்தின் புனிதத்துவ‌த்திற்கு க‌ள‌ங்க‌ம் விளைவிக்காதீர்க‌ள்.</p>
<p>இஸ்லாமிய‌ ஆடைக‌ளைப் ப‌ய‌ன்ப‌டுத்திக்கொண்டு (face book) துஷ்பிர‌யோக‌ம் செய்யாதீர்க‌ள்.</p>
<p>நீங்க‌ள் பாவிக்கும் புகைப்ப‌ட‌த்திற்கு விசுவாச‌மாக‌ ந‌ட‌ந்து கொள்ளுங்க‌ள். உதார‌ண‌மாக‌ ஹிஜாப் அணிந்த‌ பெண்ணை நீங்க‌ள் profile picture ஆக‌ப் பாவிக்கின்றீர்க‌ள்.. ஆனால் நீங்க‌ள் பாவிக்கும் செய்திக‌ளோ சினிமாவும் மார்க்க‌த்திற்கு முற‌னான‌ விட‌ய‌ங்க‌ளும் தான். இது எந்த வ‌கையில் ஒன்றுக்கொன்று ஒன்றிப்போகும்??</p>
<p>உங்க‌ளால் இஸ்லாத்திற்கு எந்த‌க் கெடுத‌லும் ஏற்ப‌ட‌க்கூடாத‌ல்ல‌வா அத‌ற்காத்தான் இந்த‌ ஆலோச‌னைக‌ள்..</p>
<p>&#8220;உங்களால் தான் மாற்ற‌ங்க‌ள் நிக‌ழ்கிற‌து என்ப‌தை ம‌ற‌க்க‌ வேண்டாம்&#8221;&#8230;</p>
<p>இந்த‌ ஆலோச‌னைக‌ள் யார‌து ம‌ன‌தையும் புண்ப‌டுத்துவ‌த‌ற்காக‌ எழுத‌ப்ப‌ட‌வில்லை என்ப‌தை அன்புட‌ன் தெரிவித்துக் கொள்கிறோம்&#8230;</p>
<p>இது ஆண்களுக்கும் பொருந்தும்.</p>
<p><span style="color: #808080; font-size: x-small;">by-பெண்சாட்சி &amp; Nasreen Fathima</span></p>
<p>&nbsp;</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.readislam.net/portal/archives/3841/feed</wfw:commentRss>
		<slash:comments>23</slash:comments>
		</item>
		<item>
		<title>அழைப்புப் பணி</title>
		<link>http://www.readislam.net/portal/archives/4043</link>
		<comments>http://www.readislam.net/portal/archives/4043#comments</comments>
		<pubDate>Fri, 30 Dec 2011 02:02:28 +0000</pubDate>
		<dc:creator>ReadIslam.net</dc:creator>
				<category><![CDATA[முன்மாதிரி முஸ்லிம்]]></category>

		<guid isPermaLink="false">http://www.readislam.net/portal/?p=4043</guid>
		<description><![CDATA[ (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். அல்குர்ஆன் 16:125 முஸ்லிம் எல்லாக் காலங்களிலும் தனது அழைப்புப் பணியில் உற்சாகத்துடனும் உறுதியுடனும் செயல்படுவார். நன்மையைச் செய்ய ஏதேனும் தகுந்த சூழ்நிலை ஏற்படுமா என எதிர்பார்க்காமல் மனிதர்களை சத்தியத்தின்பால் அழைப்பதற்கு விரைந்து செல்வார். மனத்தூய்மையுடன் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><a class="post_image_link" href="http://www.readislam.net/portal/archives/4043" title="Permanent link to அழைப்புப் பணி"><img class="post_image alignright remove_bottom_margin" src="http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcTgLBph9xOqwMMeuHPiLhjviNBAP1JJ0E1eWKjDLxaSdpRFTQ9xBQ" width="217" height="204" alt="Post image for அழைப்புப் பணி" /></a>
</p><blockquote><p><strong></strong></p>
<p><strong> (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். அல்குர்ஆன் 16:125</strong></p></blockquote>
<p style="text-align: justify;">முஸ்லிம் எல்லாக் காலங்களிலும் தனது அழைப்புப் பணியில் உற்சாகத்துடனும் உறுதியுடனும் செயல்படுவார். நன்மையைச் செய்ய ஏதேனும் தகுந்த சூழ்நிலை ஏற்படுமா என எதிர்பார்க்காமல் மனிதர்களை சத்தியத்தின்பால் அழைப்பதற்கு விரைந்து செல்வார். மனத்தூய்மையுடன் அழைப்புப் பணிபுரிபவர்களுக்கு அல்லாஹ் சித்தப்படுத்தி வைத்துள்ள அருட்கொடைகளை பெரிதும் விரும்புவார்.</p>
<p align="justify"><span style="font-family: TheneeUniTx;">    அலீ (ரழி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: &#8221;அல்லாஹ்வின் மீது ஆணையாக! ஒரு மனிதருக்கு உம்மூலமாக அல்லாஹ் நேர்வழி கிடைக்கச் செய்வது உமக்கு உயர்ரக செந்நிற ஒட்டகைகளைவிட மேலானதாகும்.&#8221; (ஸஹீஹுல் புகாரி)</span></p>
<p align="justify"><span style="font-family: TheneeUniTx;">    வழிதவறி திகைத்து நிற்கும் ஒரு மனிதனின் செவியில் சத்திய அழைப்பாளர் ஒரு நல்ல வார்த்தையை போடுவதன் மூலம் அவரது இதயத்தில் நேர்வழியின் விளக்கேற்றுகிறார். அப்போது அவர் அரபுகளின் செல்வங்களில் மிக உயரியதாக கருதப்பட்ட செந்நிற ஒட்டகைகள் அவருக்கு கிடைப்பதைவிட பன்மடங்கு அதிகமான நன்மைகளை அடைந்து கொள்கிறார். இவர் மூலமாக நேர்வழி பெற்றவரின் நன்மைகளைப் போன்று இவருக்கும் கிடைக்கிறது.</span></p>
<p align="justify"><span style="font-family: TheneeUniTx;">    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: &#8221;ஒருவர் நேர்வழியின்பால் அழைத்தால் அவருக்கு அவரைப் பின்பற்றியவர்களின் நற்கூலியைப் போன்று வழங்கப்படும். பின்பற்றியவர்களின் நற்கூலியில் எவ்விதக் குறைவும் ஏற்படாது.&#8221; (ஸஹீஹ் முஸ்லிம்)</span></p>
<p align="justify"><span style="font-family: TheneeUniTx;">    நேர்வழியிலிருந்து விலகியிருப்பவர்களை ஏகத்துவத்தின்பால் அழைப்பதில் தங்களது செல்வங்களையும் நேரங்களையும் செலவிட்டு அறிவீனர்களிடமிருந்து வரும் தீமைகளை இன்முகத்துடன் சகித்துக் கொள்ளும் அழைப்பாளர் மீது பொறாமை ஏற்படுவதில் ஆச்சரியம் ஏதுமில்லை.</span></p>
<p align="justify"><span style="font-family: TheneeUniTx;">    விரும்பத் தகுந்த இப்பொறாமை குறித்து நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: &#8221;இரண்டு விஷயத்திலே தவிர பொறாமை (கொள்ள அனுமதி) கிடையாது. ஒரு மனிதருக்கு அல்லாஹ் செல்வத்தைக் கொடுத்தான். சத்தியத்திற்காக அதை அவர் செலவு செய்கிறார். மற்றொருவருக்கு அல்லாஹ் கல்வி ஞானங்களைக் கொடுத்தான். அவர் அதன்படி மக்களுக்குத் தீர்ப்பளித்து மற்றவருக்கும் கற்றுக் கொடுக்கிறார்.&#8221; (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)</span></p>
<p align="justify"><span style="font-family: TheneeUniTx;">    அல்லாஹ்வின்பால் அழைப்புப் பணிபுரியும் முஸ்லிம் தன்னிடமுள்ள ஞானத்தை அற்பமாக நினைக்காமல் சத்திய வார்த்தைகளில் தனக்கு எது தெரியுமோ அது அல்லாஹ்வுடைய வேதத்தின் ஒரே ஒரு வசனமாயிருப்பினும் எவ்விதத் தயக்கமுமின்றி அதை பிறருக்கு எடுத்துரைக்க வேண்டும்.</span></p>
<p align="justify"><span style="font-family: TheneeUniTx;">    நபி (ஸல்) அவர்கள் தமது தோழர்களிடம் கூறினார்கள்: &#8221;&#8230;என்னிடமிருந்து (நீங்கள் அறிந்து கொண்டது) ஒரே ஒரு வசனமாயிருப்பினும் அதை எத்திவைத்து விடுங்கள்&#8230;&#8221; (ஸஹீஹுல் புகாரி)</span></p>
<p align="justify"><span style="font-family: TheneeUniTx;">    ஏனெனில், ஒரு வசனம் கூட மனித இதயத்தினுள் ஊடுருவி அவன் நேர்வழிபெற போதுமானதாகி விடலாம். அல்லாஹ்வின் நாட்டமிருந்தால் அவனது இதயத்தில் ஈமான் இடம்பெற ஒரு வசனம் போதும். அந்த ஒரு வசனம் அவனது ஆன்மாவில் ஒளியேற்றி, வாழ்வில் பெரியதொரு மாற்றத்தை உண்டு பண்ணி அவனை புதியதொரு மனிதனாக மாற்றிவிட முடியும்.</span></p>
<p align="justify"><span style="font-family: TheneeUniTx;">    நபிமொழி கூறுவதுபோல உண்மை முஸ்லிம் தனக்கு விரும்புவதையே தமது சகோதரருக்கும் விரும்புவார். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும், முஸ்லிம்களின் தலைவருக்கும், அனைத்து முஸ்லிம்களுக்கும் நன்மையே நாடுவார். அதனால் பிரகாசமான நேர்வழி தன்னிலும், தன்னைச் சுற்றியிருப்பவர்களிலும் குறுகிப் போய்விடாமல் உலகம் முழுவதும் பரவவேண்டுமென விரும்புவார். தனக்கும் தனது குடும்பத்தினருக்கு மட்டுமின்றி உலக மக்கள் அனைவருக்கும் சுவனத்தை விரும்புவார். அதனால் நரகத்தை தூரமாக்கி சுவனத்தில் சேர்ப்பிக்கும் நேர்வழியின்பால் எல்லாக் காலங்களிலும் எல்லோரையும் அழைத்துக் கொண்டேயிருப்பார். இது அழைப்பாளர்களின் பண்பாகும். இப்பண்பைக் கடைபிடிப்பதால் அல்லாஹ்வின் தூதரின் வாழ்த்தையும் துஆவையும் பெற்றுக் கொள்கிறார்.</span></p>
<p align="justify"><span style="font-family: TheneeUniTx;">    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: &#8221;நம்மிடமிருந்து ஒரு விஷயத்தைக் கேட்டு அதைக் கேட்டவாறே பிறருக்கு எடுத்துரைக்கும் மனிதரை அல்லாஹ் செழிப்பாக்குவானாக! எத்தி வைக்கப்பட்ட எத்தனையோ மனிதர்கள் அதைக் கேட்டவரைவிட நன்கு புரிந்து கொள்கிறார்கள்.&#8221; (ஸுனனுத் திர்மிதி)</span></p>
<p align="justify"><span style="font-family: TheneeUniTx;">    இஸ்லாமிய சமூகம், பொறுப்புகளை சுமந்து நிற்கும் சமூகமாகும். இஸ்லாம் அந்த பொறுப்புகளை தனது உறுப்பினர் ஒவ்வொருவரின் மனதிலும் ஆழப்பதித்துள்ளது. ஒவ்வொரு முஸ்லிமும் அல்லாஹ்விற்கு முன் தங்களது பொறுப்புகளை நன்கறிந்து அழைப்புப் பணியை திறம்பட செய்திருந்தால் இன்று இஸ்லாமிய சமுதாயம் பின்தங்கி பலவீனப் பட்டிருப்பதை நிச்சயமாக தவிர்த்திருக்க முடியும். </span></p>
<p align="justify"><span style="font-family: TheneeUniTx;">    ஏகத்துவ அழைப்புப் பணிக்கான வசதி வாய்ப்புகளைப் பெற்றிருந்தும் அதில் குறை செய்து, கல்வி ஞானமிருந்தும் அதை மறைத்து, பதவியையும் பொருளையும் அடைந்துகொள்ள கல்வியைப் பயன்படுத்திக் கொள்பவர்களை நபி (ஸல்) அவர்கள் வன்மையாகக் கண்டித்துள்ளார்கள்.</span></p>
<p align="justify"><span style="font-family: TheneeUniTx;">    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: &#8221;ஒருவர், அல்லாஹ்வின் திருப்தியைப் பெற்றுத் தரும் கல்வியை உலகாதாயத்தை பெறுவதற்காக மட்டுமே கற்றுக் கொள்வாரேயானால் அவர் மறுமை நாளில் சுவனத்தின் வாடையைக்கூட நுகர மாட்டார்.&#8221; (ஸுனன் அபூதாவூத்)</span></p>
<p align="justify"><span style="font-family: TheneeUniTx;">    மேலும் கூறினார்கள்: &#8221;தான் அறிந்த ஒரு விஷயத்தைப் பற்றி கேட்கும்போது அதை மறைப்பவர் மறுமைநாளில் நரக நெருப்பினாலான கடிவாளம் அணிவிக்கப்படுவார்.&#8221; (ஸுனன் அபூதாவூத், ஸுனனுத் திர்மிதி)</span></p>
<p align="justify"><span style="font-family: TheneeUniTx;">    <strong>நன்மையை ஏவி தீமையைத் தடுப்பார்</strong>     அல்லாஹ்வின்பால் அழைப்பதன் அவசியப் பணிகளில் நன்மையை ஏவி தீமையைத் தடுப்பதும் ஒன்றாகும். அழைப்பாளர் அறிவுடனும், நிதானத்துடனும் அழகிய முறையில் நன்மையை ஏவி தீமையைத் தடுப்பார். கரத்தால் தடுப்பதில் கடுமையான குழப்பங்கள் எதுவும் ஏற்படாது என்றால் அத்தீமையை தனது கரத்தால் மாற்றுவார். அது இயலவில்லையென்றால் தனது நாவின்மூலம் சத்தியத்தை எடுத்துரைத்து தீமையை நன்மையாக மாற்றப் போராடுவார்.</span></p>
<p align="justify"><span style="font-family: TheneeUniTx;"><br />
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: &#8221;உங்களில் ஒருவர் வெறுக்கத் தகுந்ததைக் கண்டால் அதை தனது கரத்தால் மாற்றட்டும். அதற்கு சக்தி பெறவில்லையெனில் தனது நாவால் மாற்றட்டும். அதற்கும் சக்தி பெறவில்லையெனில் தனது மனதால் வெறுத்து விடட்டும். இது ஈமானின் பலவீனமான நிலையாகும்.&#8221; (ஸஹீஹ் முஸ்லிம்)</span></p>
<p align="justify"><span style="font-family: TheneeUniTx;">    ஒரு முஸ்லிம் பிற முஸ்லிம்களின் நலம் நாடி நல்லதை ஏவி, தீமையைத் தடுப்பார். ஏனெனில், மார்க்கம் என்பது பிறர் நலம் நாடுவதுதான். இதை உண்மைப்படுத்த வேண்டுமெனில் அவர் நன்மையை ஏவி தீமையைத் தடுத்தேயாக வேண்டும்.</span></p>
<p align="justify"><span style="font-family: TheneeUniTx;">    நபி (ஸல்) அவர்கள், &#8221;மார்க்கம் என்பது பிறர் நலம் பேணுவது&#8221; என்று கூறியபோது நாங்கள் கேட்டோம் &#8221;யாருக்கு?&#8221; நபி (ஸல்) அவர்கள், &#8221;அல்லாஹ்வுக்கும், அவனது வேதத்துக்கும், அவனது தூதருக்கும், முஸ்லிம்களின் தலைவர்களுக்கும், பொது மக்கள் அனைவருக்கும்&#8221; என பதிலளித்தார்கள். (ஸஹீஹ முஸ்லிம்)</span></p>
<p align="justify"><span style="font-family: TheneeUniTx;">    பிறர் நலம் நாடுவதும், நன்மையை ஏவி தீமையைத் தடுப்பதும் அநீதியிழைப்பவனின் முகத்துக்கு நேராக சத்தியத்தை உரக்கச் சொல்வதற்கான துணிவை முஸ்லிமுக்கு ஏற்படுத்தித் தரும். சுதந்திரமாகவும், கண்ணியமாகவும், கெªரவத்துடனும் இச்சமூகம் நிலைபெறுவதென்பது அநியாயக்காரனுக்கு முன் &#8216;நீ அநியாயக்காரன்&#8217; என்று அச்சமின்றி சொல்லும் ஆற்றல் பெற்ற வீரர்களால் மட்டுமே சாத்தியமாகும். இச்சமூகத்தில் எப்போது அச்சமின்றி சத்தியத்தை எடுத்துரைக்கும் ஒரு கூட்டம் இல்லையோ அப்போது ஒட்டுமொத்த சமுதாயமும் வீழ்ச்சியை சந்திக்கும்.</span></p>
<p align="justify"><span style="font-family: TheneeUniTx;">    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: &#8221;அநியாயக்காரனிடம் &#8216;நீ அநியாயக்காரன்&#8217; என்று சொல்ல அஞ்சுபவர்களாக எனது உம்மத்தினரைக் கண்டால் நீர் அவர்களிடமிருந்து விலகிக்கொள்.&#8221; (முஸ்னத் அஹமத்)</span></p>
<p align="justify"><span style="font-family: TheneeUniTx;">    அசத்தியத்தை எதிர்ப்பதில் வீரத்தை கடைபிடிக்க வேண்டும், அநியாயக்காரனை எதிர்ப்பது உணவையோ வாழ்வையோ குறைத்துவிட முடியாது என்று அறிவுறுத்தும் அதிகமான நபிமொழிகள் காணக் கிடைக்கின்றன.</span></p>
<p align="justify"><span style="font-family: TheneeUniTx;">    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: &#8221;மனிதரைப் பற்றிய அச்சம் நீங்கள் சத்தியத்தைக் கூறுவதிலிருந்தோ, மகத்தானதை (அல்லாஹ், மறுமை நாளை) நினைவுபடுத்துவதிலிருந்தோ உங்களைத் தடுத்துவிட வேண்டாம். ஏனெனில் அவ்வாறு செய்வது நிச்சயமாக உங்களது ஆயுளைக் குறைத்துவிடவோ, உணவை தூரமாக்கிவிடவோ முடியாது.&#8221; (ஸுனனுத் திர்மிதி)</span></p>
<p align="justify"><span style="font-family: TheneeUniTx;">    நபி (ஸல்) அவர்கள் மிம்பரில் இருந்தபோது ஒரு மனிதர் எழுந்து வினவினார்: &#8221;அல்லாஹ்வின் தூதரே! மனிதர்களில் சிறந்தவர் யார்?&#8221; நபி (ஸல்) அவர்கள், &#8221;மனிதர்களில் சிறந்தவர் அவர்களில் நன்கு குர்ஆன் ஓதுபவர், மிகுந்த இறையச்சமுடையவர், அவர்களில் மிக அதிகம் நன்மையை ஏவி தீமையை தடுப்பவர், அவர்களில் மிக அதிகமாக இரத்த பந்துக்களோடு இணைந்திருப்பவர்&#8221; என்று கூறினார்கள்  (முஸ்னத் அஹமத்)</span></p>
<p align="justify"><span style="font-family: TheneeUniTx;">    இஸ்லாமிய சமூகத்தில் நன்மையை ஏவி தீமையைத் தடுப்பது முஸ்லிம்களின் வீரத்தையும், துணிச்சலையும் அடிப்படையாகக் கொண்ட தாகும். தீமைகளை எதிர்கொள்வதிலும், அநீதி இழைக்கப்பட்டோருக்கு உதவி புரிவதிலும், வீரத்தை வெளிப்படுத்த வேண்டும்.</span></p>
<p align="justify"><span style="font-family: TheneeUniTx;">    சத்தியத்தை பாதுகாக்கும் வீரர்களுக்கு அல்லாஹ்வின் உதவி உள்ளதென்றும், சத்தியத்தை எடுத்துரைக்காமல் வாய் மூடியிருக்கும் கோழைகளுக்கு இழிவு உள்ளதென்றும் விவரிக்கும் ஏராளமான நபிமொழிகள் காணக் கிடைக்கின்றன.</span></p>
<p align="justify"><span style="font-family: TheneeUniTx;">    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: &#8221;ஒரு முஸ்லிமை கேவலப் படுத்துகிறார்கள்; அவனுடைய கண்ணியத்தைத் தாக்குகிறார்கள்; அந்த இடத்தில் ஒருவன் அந்த முஸ்லிமைக் காப்பாற்றவில்லையென்றால் அல்லாஹ்வுடைய உதவி அவனுக்குத் தேவைப்படும் ஒரு இக்கட்டான தருணத்தில் அல்லாஹ் அவனை கைவிட்டு விடுவான். ஒரு முஸ்லிம் கேவலப்படுத்தப்படும்போது, அவனுடைய கண்ணியம் தாக்கப்படும் போது யாராவது அவனுக்கு உதவி செய்தால் அவன் &#8216;அல்லாஹ்வுடைய உதவி கிடைக்காதா&#8217; என்று ஏங்கும் தருணத்தில் அல்லாஹ் அவனுக்கு உதவி செய்வான்.&#8221; (ஸுனன் அபூதாவூத்)</span></p>
<p align="justify"><span style="font-family: TheneeUniTx;">    முஸ்லிம் அசத்தியத்தை சகித்துக்கொள்ள மாட்டார். சத்தியத்திற்கு உதவி செய்வதில் சோர்வடைய மாட்டார். தனது சமூகத்தில் அநீதம் பரவுவதையும், சபைகளில் தீமைகள் பரவுவதையும் ஒருபோதும் விரும்பமாட்டார். எப்போதும் தீமைகளை தடுத்துக் கொண்டேயிருப்பார். ஏனெனில் தீமையைத் தடுக்காதிருந்தால் அல்லாஹ்வின் வேதனை வாய்மூடி கோழையாக இருப்பவர்களையும் சூழ்ந்து கொள்ளும்.</span></p>
<p align="justify"><span style="font-family: TheneeUniTx;">    அபூபக்கர் ஸித்தீக் (ரழி) அவர்கள் கலீஃபாவாக பொறுப்பேற்ற போது மிம்பரில் ஏறி அல்லாஹ்வைப் புகழ்ந்த பின் கூறினார்கள்: மனிதர்களே நீங்கள் அல்லாஹ்வின் திருவசனமான, &#8221;விசுவாசிகளே! நீங்கள் (தவறான வழியில் செல்லாது) உங்களை இரட்சித்துக் கொள்ளுங்கள். நீங்கள் நேரான வழியில் சென்றால் வழிதவறிய எவனுடைய தீங்கும் உங்களை பாதிக்காது&#8230;&#8221; (அல்குர்ஆன் 5:105) என்ற திருவசனத்தை ஓதுகிறீர்கள். நீங்கள் அந்த திருவசனத்திற்கான பொருளை உரிய வகையில் விளங்கிக்கொள்வதில்லை. நிச்சயமாக நான் நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன் &#8221;மனிதர்கள் தீமைகளைக் காணும்போது அதை தடுக்காமல் இருந்தால் வெகுவிரைவில் அல்லாஹ்வின் வேதனை அவர்கள் அனைவரையும் சூழ்ந்துகொள்ளும்.&#8221; (ஸுனன் அபூதாவூத்)</span></p>
<p align="justify"><span style="font-family: TheneeUniTx;"><br />
ஒரு முஸ்லிமின் மார்க்கப் பற்று உண்மையாக இருந்து, அவரது ஈமான் உயிரோட்டமுடையதாக இருந்தால் நன்மையை ஏவுவதில் தீவிரமாகவும், தீமையை எதிர்கொள்வதில் வீரத்துடனும் இருப்பார். தீமைகளை அகற்ற முடிந்தளவு போராடுவார். ஏனெனில் மார்க்கத்தின் எல்லா அம்சங்களும் முக்கியமானவைதான். அதன் எந்தப் பகுதியிலும் அலட்சியம் கூடாது. அதன் கொள்கைகள் அனைத்தும் உறுதியானவை; சந்தேகமற்றவை. தங்களது மார்க்க விஷயங்களில் யூதர்கள் அலட்சியம் செய்து அல்லாஹ்வின் கோபத்திற்கு இலக்கானதுபோல, முஸ்லிம்களும் பலியாகிவிடக் கூடாது என நபி (ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்துள்ளார்கள்.</span></p>
<p align="justify"><span style="font-family: TheneeUniTx;">    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: &#8221;உங்களுக்கு முன் வாழ்ந்த சமூகமான பனூ இஸ்ராயீல்களில் ஒருவர் தவறு செய்தால் அதைத் தடுத்து கண்டிக்க வேண்டியவர் தடுப்பார். அதற்கு அடுத்த நாள் அந்த நபருடன் அமர்ந்து சாப்பிடவும், குடிக்கவும் செய்வார். அவர் நேற்று எந்த தவறுமே செய்யாதது போன்று நடந்துகொள்வார். இதை அல்லாஹ் அவர்களிடையே கண்டபோது அவர்கள் மாறுசெய்து, வரம்பு மீறியதன் காரணமாக தாவூது (அலை), ஈஸா (அலை) அவர்களின் நாவினால் சபித்து அம்மனிதர்கள் சிலரின் உள்ளங்களை வேறு சிலரின் உள்ளங்களோடு கலந்துவிட்டான். எவனது கைவசம் எனது ஆன்மா இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! நீங்கள் நன்மையை ஏவுங்கள், தீமையைத் தடுத்துக் கொள்ளுங்கள். தவறிழைப்பவனின் கரங்களைப் பிடித்து அவனை சத்தியத்தின்பால் திருப்பிவிடுங்கள். அவ்வாறு செய்யவில்லையானால் அல்லாஹ் உங்களது இதயங்களை ஒன்றோடொன்று இணைத்து விடுவான். (தீமைகளோடு ஒத்துப் போய் விடுவீர்கள்) அந்த இஸ்ரவேலர்களை சபித்ததுபோல உங்களையும் சபித்து விடுவான்.&#8221; (முஃஜமுத் தப்ரானி)</span></p>
<p align="justify"><span style="font-family: TheneeUniTx;"><strong>    அழைப்புப் பணியில் மிருதுவாகவும், விவேகமாகவும் நடந்து கொள்வார்</strong>     முஸ்லிம் அழைப்பாளர் தனது ஏகத்துவ அழைப்புப் பணியில் விவேகத்துடன் நடந்துகொள்ள வேண்டும்.</span></p>
<p align="justify"><span style="font-family: TheneeUniTx;">    (நபியே!) நீர் (மனிதர்களை) நளினமாகவும் அழகான நல்லுபதேசத்தைக் கொண்டுமே உம் இறைவனின் வழியின்பால் அழைப்பீராக!&#8230;&#8230;(அல்குர்ஆன் 16:125)    </span></p>
<p align="justify"><span style="font-family: TheneeUniTx;">    அல்லாஹ்வின்பால் அழைப்பவர் இதயங்களை ஊடுருவும் ஆற்றல் பெற்று, அதில் ஈமான் மீதான நேசத்தைப் பதிய வைத்து, மார்க்கத்தின் பால் மக்கள் விரைந்துவரும் ஆர்வத்தைத் தூண்டுபவராக இருக்கவேண்டும். அவர்களுக்கு சிரமத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்தி விடக்கூடாது. எனவே அவர் மனிதர்களிடம் தன்னிடமுள்ள கல்வி, ஞானங்களை ஒரே நேரத்தில் கொட்டிவிடாமல் கொஞ்சம் கொஞ்சமாக முன் வைத்து அவர்களது உணர்வுகளையும் இதயங்களையும் அவ்வப்போது தொடவேண்டும். அந்தச் சந்தர்ப்பங்களில் சிரமப்படுத்தும் நீண்ட உபதேசங்களை தவிர்த்திட வேண்டும். இதுதான் நபி (ஸல்) அவர்கள் மனிதர்களிடையே நடந்து கொண்ட முறையாகும்.</span></p>
<p align="justify"><span style="font-family: TheneeUniTx;">    அப்துல்லாஹ் இப்னு மஸ்வூது (ரழி) அவர்கள் ஒவ்வொரு வியாழனன்றும் மக்களுக்கு உபதேசம் செய்வதை வழமையாகக் கொண்டிருந்தார்கள். அவர்களிடம் ஒருவர் &#8221;அபூ அப்துர் ரஹ்மானே! நீங்கள் தினந்தோறும் எங்களுக்கு உபதேசம் செய்ய வேண்டுமென விரும்புகிறோம்&#8221; என்றார்.</span></p>
<p align="justify"><span style="font-family: TheneeUniTx;">    இப்னு மஸ்வூது (ரழி) அவர்கள் &#8221;உங்களுக்கு சடைவு ஏற்பட்டு விடுமோ என்ற அச்சமே தினந்தோறும் உபதேசிப்பதிலிருந்து என்னைத் தடுக்கிறது. எங்களுக்கு சடைவு ஏற்படக் கூடாது என்பதற்காக நபி (ஸல்) அவர்கள் எப்படி நாட்களை நிர்ணயித்தார்களோ அவ்வாறே நானும் உங்களுக்கு உபதேசம் செய்ய நாட்களை நிர்ணயித்துள்ளேன்&#8221; என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)</span></p>
<p align="justify"><span style="font-family: TheneeUniTx;">    அழைப்புப் பணியில் நீண்ட பிரசங்கத்தை தவிர்த்துக் கொள்வது விவேகமான அணுகுமுறையாகும். அதிலும் மிகப்பெரிய கூட்டங்களில் உரையாற்றும்போது அதில் வயோதிகர்கள், பலவீனர்கள், நோயாளிகள் இருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு சுருக்கமாக உரையாற்றுவது பிரசங்கம் செய்பவர் அழைப்புப்பணியை நன்கறிந்தவர் என்பதையும் மக்களின் மனநிலையை விளங்கியவர் என்பதையும் வெளிப்படுத்துவதாகும்.</span></p>
<p align="justify"><span style="font-family: TheneeUniTx;">    அம்மார் இப்னு யாஸிர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: &#8221;நிச்சயமாக ஒரு மனிதரின் நீண்ட தொழுகையும், சுருக்கமான குத்பாவும் அவர் அறிவாளி என்பதற்கான அடையாளமாகும். தொழுகையை நீளமாக்குங்கள், குத்பாவை சுருக்கிக் கொள்ளுங்கள்&#8221; என நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன். (ஸஹீஹ் முஸ்லிம்)</span></p>
<p align="justify"><span style="font-family: TheneeUniTx;">    அறிவும், விவேகமும் கொண்ட அழைப்பாளர் பிறரை சத்தியத்தின்பால் மென்மையாக அழைப்பார். மக்களின் அறியாமையையும், அவர்களுக்கு விளங்குவதில் ஏற்படும் தாமதத்தையும், அவரை சோர்வடையச் செய்யும் மிக அதிகமான கேள்விகளையும், தவறுகளையும், பொறுமையுடன் சகித்துக் கொள்ளவேண்டும். இது விஷயத்தில் கேள்வி கேட்பவர்களுக்கு தனது இதயத்தை விரிவாக்கி அவர்களுக்கு பதிலளிப்பதிலும், போதனை செய்வதிலும் விவேகத்தைக் கடைபிடித்த நபி (ஸல்) அவர்களை முன்மாதிரியாகக் கொள்ளவேண்டும்.</span></p>
<p align="justify"><span style="font-family: TheneeUniTx;"><br />
முஆவியா இப்னு ஹகம் அஸ்ஸலமி (ரழி) அவர்கள் கூறினார்கள்: நான் நபி (ஸல்) அவர்களுடன் தொழுது கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் ஒரு மனிதர் தும்மினார். நான் &#8216;யர்ஹமுக்கல்லா?&#8217; என்று கூறினேன். உடனே மக்கள் என்னைப் பார்வையால் துளைத்தார்கள். நான் &#8221;உங்களது தாய் உங்களை இழக்கட்டும்! என்னை இவ்வாறு பார்க்கின்றீர்களே. உங்களுக்கு என்னவாயிற்று?&#8221; என்று கேட்டேன். அம்மக்கள் கரங்களால் தங்களது தொடைகளைத் தட்ட ஆரம்பித்தனர். அவர்கள் என்னை மெªனமாக இருக்கச் சொல்கிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டு நான் மெளனம் காத்தேன். </span></p>
<p align="justify"><span style="font-family: TheneeUniTx;">    நபி (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்தபோது, எனது தாயும் தந்தையும் அவர்களுக்கு அர்ப்பணமாகட்டும். அதற்கு முன்னாலும் அதற்குப் பிறகும் அவர்களைப் போன்ற ஓர் அழகிய போதனையாளரை நான் கண்டதில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! என்னை கடுகடுப் போடு பார்க்கவில்லை; திட்டவுமில்லை; அடிக்கவுமில்லை. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் &#8221;இது தொழுகை. இதில் உலகப் பேச்சு பேசுவது முறையாகாது, தொழுகை என்பது தஸ்பீஹும், தக்பீரும், குர்ஆனை ஓதுவதும்தான்&#8221; என்றோ அல்லது இதைப் போன்ற வார்த்தைகளையோ கூறினார்கள். </span></p>
<p align="justify"><span style="font-family: TheneeUniTx;">    நான் கேட்டேன்: &#8221;அல்லாஹ்வின் தூதரே! நான் அறியாமைக் காலத்துக்கு சமீபமானவன் (நான் சமீபத்தில்தான் இஸ்லாமை ஏற்றேன்). இப்போது அல்லாஹ்வே இஸ்லாமைத் தந்தான். எங்களில் சிலமனிதர்கள் சோதிடக்காரனிடம் செல்கிறார்கள்!&#8221; நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், &#8221;நீர் அவர்களிடம் செல்லாதீர்.&#8221; நான், &#8221;எங்களில் சிலர் சகுனம் பார்க்கிறார்கள்&#8221; என்றேன். நபி (ஸல்) அவர்கள்,&#8221;அது அவர்களுடைய உள்ளங்களில் ஏற்படும் ஓர் உணர்வாகும். அது அவர்களைத் தடுத்து விடவேண்டாம்&#8221; என்று கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)</span></p>
<p align="justify"><span style="font-family: TheneeUniTx;">(அது அவர்களை தடுத்துவிட வேண்டாம் என்பதின் பொருள்: மனதில் ஏற்படும் தடுமாற்றத்தால் எந்த காரியத்தையும் நிறுத்திட வேண்டாம் என்பதே.)</span></p>
<p align="justify"><span style="font-family: TheneeUniTx;">    நபி (ஸல்) அவர்கள் மனிதர்களை நன்மையின்பால் அழைக்கும் போது தீங்கிழைத்தவரை நேரடியாக கண்டிக்க மாட்டார்கள். அதற்கு காரணம் இவ்வழி முறையால் அவரது உணர்வுகளும் கண்ணியமும் பாதுகாக்கப்படும். மேலும் இவ்வழிமுறை உள்ளங்களில் கருத்துக்களை ஆழமாக பதியவைத்து, தவறுகளைக் களைவதில் வெற்றிகரமான அணுகுமுறையாகும்.</span></p>
<p align="justify"><span style="font-family: TheneeUniTx;">    அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்களுக்கு ஒரு மனிதரைப் பற்றி ஏதேனும் செய்தி கிடைத்தால் &#8216;அம்மனிதர் இப்படிச் சொல்கிறாரே!&#8217; என்று கூறமாட்டார்கள். மாறாக &#8216;சிலர் இப்படி, இப்படிக் கூறுகிறார்களே!&#8217; என்றே கூறுவார்கள். (ஹயாத்துஸ் ஸஹாபா)</span></p>
<p align="justify"><span style="font-family: TheneeUniTx;"><br />
வெற்றிகரமான அழைப்பாளனுக்கு வேண்டிய பண்புகளில் ஒன்று தனது பேச்சை தெளிவாக, விரிவாக எடுத்துரைப்பதாகும். முக்கியமான கருத்துக்களை பலமுறை கூறவேண்டும். அனஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: &#8221;நபி (ஸல்) அவர்கள் பேசினால் மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும் என்பதற்காக வார்த்தைகளை மூன்றுமுறை கூறுவார்கள். ஏதேனும் ஒரு கூட்டத்தாரிடம் வந்து ஸலாம் கூறினால் அவர்களுக்கு மூன்று முறை ஸலாம் கூறுவார்கள்.&#8221; (ஸஹீஹுல் புகாரி)</span></p>
<p align="justify"><span style="font-family: TheneeUniTx;">    அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்: &#8221;நபி (ஸல்) அவர்களின் பேச்சு தெளிவான பேச்சாக அமைந்திருக்கும், அதை கேட்கும் அனைவரும் புரிந்துகொள்வார்கள்.&#8221; (ஸுனன் அபூதாவூத்)</span></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.readislam.net/portal/archives/4043/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>பாவங்களிலெல்லாம் மிகப் பெரிய பாவம்</title>
		<link>http://www.readislam.net/portal/archives/3368</link>
		<comments>http://www.readislam.net/portal/archives/3368#comments</comments>
		<pubDate>Tue, 27 Dec 2011 04:25:28 +0000</pubDate>
		<dc:creator>ReadIslam.net</dc:creator>
				<category><![CDATA[இணைவைத்தல்]]></category>

		<guid isPermaLink="false">http://www.readislam.net/portal/?p=3368</guid>
		<description><![CDATA[அல்லாஹ்வுக்கு இணை வைப்பது பாவங்களிலெல்லாம் மிகப் பெரிய பாவமாகும். அல்லாஹ் கூறுகிறான்: நிச்சயமாக அல்லாஹ், தனக்கு இணைவைக்கப்படுவதை மன்னிக்கவே மாட்டான். இதனைத் தவிர (மற்ற) எதனையும் தான் நாடி யோருக்கு மன்னிப்பான். (4:48,116) அல்லாஹ் கூறுவதாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதமின் மகனே! என்னிடம் ஆதரவு வைத்து என்னை நீ அழைத்தால் நீ செய்த அனைத்துப் பாவங்களையும் மன்னித்து விடுகிறேன், நான் எதையும் பொருட்படுத்த மாட்டேன். ஆதமுடைய மகனே! நீ செய்த பாவங்கள் வானம் நிரம்ப இருந்தாலும் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><a class="post_image_link" href="http://www.readislam.net/portal/archives/3368" title="Permanent link to பாவங்களிலெல்லாம் மிகப் பெரிய பாவம்"><img class="post_image alignright remove_bottom_margin" src="http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcQxEspZXNn-R04jv79GuqsKNPtCf4WQxbzxPisl5BsujldDpGKwOxQpnDY" width="267" height="97" alt="Post image for பாவங்களிலெல்லாம் மிகப் பெரிய பாவம்" /></a>
</p><blockquote>
<p align="justify"><strong>அல்லாஹ்வுக்கு இணை வைப்பது பாவங்களிலெல்லாம் மிகப் பெரிய பாவமாகும்.</strong></p>
<p>அல்லாஹ் கூறுகிறான்:</p>
<p>நிச்சயமாக அல்லாஹ், தனக்கு இணைவைக்கப்படுவதை மன்னிக்கவே மாட்டான். இதனைத் தவிர (மற்ற)<br />
எதனையும் தான் நாடி யோருக்கு மன்னிப்பான். (4:48,116)</p>
<p>அல்லாஹ் கூறுவதாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதமின் மகனே! என்னிடம் ஆதரவு வைத்து<br />
என்னை நீ அழைத்தால் நீ செய்த அனைத்துப் பாவங்களையும் மன்னித்து விடுகிறேன், நான்<br />
எதையும் பொருட்படுத்த மாட்டேன். ஆதமுடைய மகனே! நீ செய்த பாவங்கள் வானம் நிரம்ப<br />
இருந்தாலும் பிறகு என்னிடம் நீ மன்னிப்புக் கோரினால் நான் உன்னை மன்னித்து<br />
விடுகிறேன். நான் எதை யும் பொருட்படுத்த மாட்டேன். நீ இப்பூமி நிரம்ப பாவங்கள்<br />
செய்து எனக்கு எதையும் இணை வைக்காமல் என்னை சந்தித்தால் இப்பூமி நிறைய மன்னிப்பை<br />
உனக்கு வழங் குவேன். அறிவிப்பவர்:அனஸ்(ரழி) நூல்:திர்மிதி</p>
<p>சிலர் அல்லாஹ்வின் அருள் குறித்து நம்பிக்கை இழந்து விடுகின்றனர். காரணம் அதிகம்<br />
பாவம் செய்ததனால் அல்லது ஒரு முறையோ பல முறையோ தவ்பா செய்து விட்ட பிறகு மீண்டும்<br />
பாவம் செய்து விடுவதனால் அல்லாஹ் நம்மை மன்னிக்க மாட்டான் என்று கருதிக் கொண்டு<br />
தொடர்ந்து பாவங்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். தவ்பா செய்து அல்லாஹ்விடமே திரும்பி<br />
விடு வதை விட்டுவிடுகிறார்கள். இது மாபெரும் தவறாகும். ஏனென்றால் அல்லாஹ்வின் அருள்<br />
குறித்து நம்பிக்கை இழப்பவர்கள் காஃபிர்கள் தாம்.</p>
<p>அல்லாஹ் கூறுகிறான்: தங்களுக்குத் தாங் களே அநீதி இழைத்துவிட்ட எனது அடியார் களே!<br />
அல்லாஹ்வின் அருளில், அன்பில் நம் பிக்கை இழைத்து விடாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ்<br />
அனைத்துப் பாவங்களையும் மன்னித்து விடுகின்றான். அவன் பெரிதும் மன்னிப் பவனும்<br />
கருணையாளனுமாவான். (39:53) மேலும் கூறுகிறான்: அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை<br />
இழப்பவர்கள் அவனை நிராகரித்த மக்களே! (12:87)</p>
<p>அல்லாஹ் கூறுகிறான்: நிச்சயமாக அல்லாஹ் வின் கருணை-அருள் நன்னடத்தையுள்ள மக்க ளுக்கு<br />
அருகில் இருக்கிறது. (7:56)</p>
<p><strong>அடக்கத்தலங்களை வணங்குவது “ஷிர்க்&#8221;</strong></p>
<p>இறந்துவிட்ட இறைநேசர்களால் நமது தேவைகளை நிறைவேற்றவோ, சிரமங்களை நீக்கவோ முடியும்<br />
என்று நம்புவது, அவர்களிடம் உதவி கோரி பிரார்த்திப்பது, பாதுகாப்புத் தேடுவது,<br />
அவர்களைப் பரிந்துரைக்கச் சொல்வது, அவர்களின் பொருட்டால் அல்லாஹ்விடம் கேட்பது<br />
போன்ற செயல்கள் அனைத்தும் “ஷிர்க் ஆகும். ஏனென்றால், இவ்வகையான செயல்கள் அனைத்தும்<br />
மார்க்கத்தில் வணக்க வழிபாடுகளாகக் கருதப்படுகின்றன. வணக்க வழிபாடுகளை அல்லாஹ்<br />
தனக்கு மட்டுமே செய்ய வேண்டுமென அல்குர்ஆனின் பல வசனங்களில் தெளிவாகக்<br />
கட்டளையிடுகின்றான். (17:23, 98:5)</p>
<p>அல்லாஹ்வின் தூதர்களையோ, (அவ்லியாக்கள்) இறைநேசர்களையோ சிபாரிசுக்காக அழைப்பதும்<br />
துன்பங்களிலிருந்து விடுதலை பெற அவர்களிடம் பிரார்த்திப்பதும் “ஷிர்க்&#8221; ஆகும்.<br />
(27:62, 39:44, 2:255)</p>
<p>சிலர் உட்காரும்போதும், எழும்போதும் அல்லாஹ் அல்லாதவர்களை அழைத்து முறையிடுவதை<br />
வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.</p>
<p>உதாரணமாக: யா முஹம்மது, யாமுஹ்யித்தீன்  என்றெல்லாம் அழைக்கிறார்கள். இவ்வாறு<br />
அழைப்பது “ஷிர்க் ஆகும். இதைக் கண்டித்து அல்லாஹ் கூறுகிறான். (7:194, 13:14)</p>
<p>அடக்கத்தலத்தை(கப்ரை) வணங்கும் சிலர் அதைச் சுற்றி வலம் வருகிறார்கள். அங்குள்ள<br />
தூண்களையும், சுவர்களையும் தொட்டுத் தடவுகிறார்கள்; முத்தமிடுகிறார்கள்; அதன் மண்ணை<br />
எடுத்துப் பூசிக் கொள்கிறார்கள்; ஸஜ்தா செய்கிறார்கள், அங்குப் பயத்துடனும்<br />
பணிவுடனும் நிற்கிறார்கள். தங்கள் தேவையை முறையிட்டு, அதை நிறைவேற்றும்படிக்<br />
கோருகிறார்கள்.</p>
<p>சிலர் உடல் நலத்தையும் குழந்தைப் பாக்கியத்தையும் கோருகிறார்கள். சிலர்<br />
“”யாஸய்யிதீ! தொலைவான ஊரிலிருந்து உங்களை நாடி வந்துள்ளேன். என்னை நிராசையாக்கி<br />
விடாதீர்கள்’ என்றெல்லாம் கூறுகிறார்கள்.</p>
<p>இவர்களைக் கண்டித்தே அல்லாஹ் கூறுகிறான். (46:5)</p>
<p>சிலர் கப்ருகளுக்குச் சென்று அங்கு அடங்கி இருப்போருக்காக மொட்டை அடிப்பது.</p>
<p>சிலர் நன்மையை நாடி கப்ருகள், தர்க்காக்களுக்குப் பயணிக்கிறார்கள்.</p>
<p>சிலர் இறை நேசர்கள் இவ்வுலகில் ஆதிக்கம் செலுத்தி, உலகின் இயக்கத்தில் பங்கு<br />
கொள்வதாகவும், அவர்களால் நன்மை, தீமை அளிக்க முடியும் என்றும் நம்புகிறார்கள்.</p>
<p>இவர்களைக் கண்டித்து அல்லாஹ் கூறுகிறான். (10:107)</p>
<p><strong>அல்லாஹ் அல்லாதவர்களுக்கு நேர்ச்சை செய்வது “ஷிர்க்&#8221;</strong></p>
<p>நேர்ச்சை என்பது அல்லாஹ்வுக்கு மட்டுமே உரிய வணக்கமாகும். அதை அவனுக்கே செய்ய<br />
வேண்டும்.</p>
<p>சிலர் “கப்ருக்களுக்கு விளக்கேற்றுகிறோம்; பத்தி கொளுத்துகிறோம்; காணிக்கை<br />
செலுத்துகிறோம் என்றெல்லாம் நேர்ச்சை செய்வது “ஷிர்க்</p>
<p>நேர்ச்சையும் வணக்கமே என்பதற்குப் பின் வரும் வசனங்கள் சான்றளிக்கின்றன.</p>
<p>அல்லாஹ் கூறுகின்றான் : (76:7, 2:270)</p>
<p>அல்லாஹ் அல்லாதவர்களுக்கு அறுத்துப் பலியிடுவது “ஷிர்க்</p>
<p>அல்லாஹ் கூறுகின்றான் (108:2)</p>
<p>நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: “”அல்லாஹ் அல்லாதவர்களுக்கு அறுத்துப் பலியிடுபவனை<br />
அல்லாஹ் சபிக்கின்றான்” (முஸ்லிம்)</p>
<p><strong>அல்லாஹ் அல்லாதவர்களுக்கு அறுத்துப் பலியிடுவது குற்றம்.</strong></p>
<p>அல்லாஹ் அல்லாதவர்களின் பெயரைக் கூறுவது குற்றம்.</p>
<p>சிலர் வீட்டையோ நிலத்தையோ வாங்கினால் அல்லது கிணறு தோண்டுவதாக இருந் தால் அங்குள்ள<br />
ஜின்(பேய், பிசாசு)களின் தீங்குகளை விட்டுப் பாதுகாப்புத் தேடுவதற் காகப் பிராணிகளை<br />
அறுத்துப் பலியிடுகிறார் கள். இதுவும் “ஷிர்க்&#8221; ஆகும்.</p>
<p><strong>அல்லாஹ் விலக்கியதை ஆகுமாக்குவது, அல்லாஹ் ஆகுமாக்கியதை விலக்கிக் கொள்வது “ஷிர்க்</strong><br />
; அல்லாஹ் கூறுகின்றான் : 9:31</p>
<p>அதி இப்னு ஹாத்திம்(ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் இவ்வசனத்தை ஓதிக்<br />
காட்டியபோது “கிறித்தவர்கள் தங்கள் பாதிரிகளையும், சன்னியாசிகளையும் வணங்கவில்லையே’<br />
என்று நான் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “ஆம்! எனினும் அல்லாஹ் விலக்கியதை<br />
பாதிரிகள் ஆகுமாக்கி வைக்கும்போது அதை மற்றவர்களும் ஆகுமானதாக எண்ணுகிறார்கள்.<br />
அல்லாஹ் ஆகுமாக்கியதை அப்பாதிரிகள் விலக்கும்போது அதை மக்கள், விலக்கப்பட்டதாக<br />
ஏற்றுக் கொள்கிறார்கள். எனவே, இதுதான் கிறித்தவர்கள் தங்களது பாதிரிகளுக்கும்<br />
துறவிகளுக்கும் செய்த (இபாதத்) வணக்கமாகும்” என்று கூறினார்கள். (ஸுனனுத் திர்மிதி)</p>
<p>இந்த 9:31 இறைக் கட்டளை மற்றும் ஹதீஸ் படி அல்லாமா, ஷேக், ஹஜ்ரத் என்று நம்பி அவர்<br />
கள் கூறும் சுய விளக்கங்களை அப்படியே எடுத்து நடப்பதும் “”ஷிர்க்’ ஆகும்.</p>
<p>மேலும் இம்மதகுருமார்கள் குர்ஆன், ஹதீஸ் ஆதாரமில்லாமல் மனம் போன போக்கில் ஹராம்,<br />
ஹலால் என ஃபத்வா கொடுப்பது 42:21 இறைவாக்குப்படி தங்களையே அல்லாஹ்வாக்கிக் கொள்ளும்<br />
மிகப் பெரும் ஷிர்க் ஆகும்.</p>
<p>“தற்கொலை’ செய்து கொள்வது “ஷிர்க்’ அல்லாஹ் கூறுகிறான். (4:29, 4:30)</p>
<p>நமக்கு உயிர் கொடுப்பவனும் அவனே, உயிரை எடுப்பவனும் அவனே. எனவே ஒருவன் தற்கொலை<br />
செய்து கொள்வது, அல்லாஹ்விற் குரிய அதிகாரத்தை எடுத்துக் கொள்வது போல் ஆகும். எனவே<br />
“தற்கொலை செய்து கொள்வதும் “இணைவைத்தலை’ சேர்ந்ததேயாகும்.</p>
<p><strong>அல்லாஹ் அனுமதிக்காதவற்றில் பலன்களைத் தேடுவது “ஷிர்க்&#8221;</strong></p>
<p>சிலர் தாயத்து, கயிறு, வளையம் போன்றவற்றை ஆபத்து நீக்குவதற்கும் அது வராமல்<br />
தடுத்துக் கொள்வதற்கும் அணிவது “ஷிர்க்்கில்’ உட்பட்டதாகும். அல்லாஹ் கூறுகிறான்.<br />
(12:106, 10:107)</p>
<p>நபி(ஸல்) அவர்கள் ஒருவரை அவர் கையில் பித்தளை வளையம் இருப்பதைக் கண்டு இது என்ன?<br />
என்று வினவினார்கள். அதற்கு அம் மனிதர் வாஹினாவின்(கழுத்தில் கையில் உண்டாகும்<br />
நோயின்) காரணமாக அணிந்துள்ளேன்” என்று பதில் கூறினார். அது சமயம் நபி(ஸல்) அவர்கள்<br />
அவரை நோக்கி “நீர் அதை கழற்றி விடும், இது உமக்கு பலகீனத்தைத் தான் அதிகப்படுத்தும்.<br />
இந் நிலையில் நீர் மரணித்தால் நிச்சயமாக நீர் வெற்றி பெறவே மாட்டீர்” என்று<br />
கூறினார்கள்.</p>
<p>இம்ரான் இப்னு ஹுசைன்(ரழி) நூல் : முஸ்னத், அஹ்மத்</p>
<p>நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் தாவீஸை தொங்கவிட்டா(அணிந்தா)ரோ அவர் “ஷிர்க்’<br />
செய்தவராவார்.” (நூல்: அஹமது)</p>
<p><strong>பகட்டுக்காக வணங்குவது “ஷிர்க்”</strong></p>
<p>நற்செயல்கள் அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாடி மனத்தூய்மையடன் செய்யப்பட வேண்டும்.<br />
அவ்வாறு இல்லாமல் பகட்டுக்காக (பிறர் பார்த்து புகழ வேண்டுமென்பதற் காக) செய்வது<br />
“ஷிர்க்”ஆகும்.</p>
<p>அல்லாஹ் கூறுகிறான் : (4:142)</p>
<p align="justify">நபி(ஸல்) கூறினார்கள்:</p>
<p>பிறர் புகழ்வதற்காக எவன் வணங்குகிறானோ அவனை அல்லாஹ் தண்டிப்பான். பகட்டுக்காக எவன்<br />
வணங்குகிறானோ அவனையும் அல்லாஹ் தண்டிப்பான். (புகாரி, முஸ்லிம்)</p>
<p>ஒருவர் ஒரு நற்செயலை அல்லாஹ்வின் திருப்தியையும் மக்களின் புகழ் மொழிகளையும் நாடிச்<br />
செய்வாரேயானால் அவரின் அந்த நற்செயல் வீணானதே!</p>
<p>அல்லாஹ் கூறுவதாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “”இணை வைப்பவர்களின் இணையை விட்டு<br />
நான் முற்றிலும் தேவையற் றவன். எவன் தனது நற்செயலில் என்னுடன் பிறரை இணைத்துக்<br />
கொண்டானோ அவனை அவனது இணைவைக்கும் செயலுடன் விட்டு விடுகிறேன். (முஸ்லிம்)</p>
<p>ஒருவர் ஒரு நற்செயலை அல்லாஹ்வுக்காகத் தொடங்குகிறார். பிறகு அவரது உள்ளத்தில் பகட்டு<br />
எண்ணம் ஏற்படுகிறது. உடனே அவர்அந்தத் தீய எண்ணத்தை மனதிலிருந்து அகற்றிட முயற்சி<br />
செய்வாரெனில் அவரது நற்செயல் வீணாகிவிடாது.</p>
<p>ஆனால் அந்தத் தவறான எண்ணம் வரும் போது அத
