|
எது
உண்மையான மார்க்கம் ஏழைகளாக
இருப்பதைவிட குடிசையில் வாழ்வதைவிட கூழை குடித்து கந்தையைக் கட்டுவதைவிட மிகப்பெரும் இழிவு
இறைவன் கொடுத்த மார்க்கத்தை விட்டு மனிதன் படைத்த மதங்களைப் பின்பற்றுவது இழிவு மாதிரமல்ல,
மறுமையில் மாபெறும் நஷ்டத்தையும் துன்பத்தையும் தரக்கூடியது.
மனித நேய விரோதிகள்
முஸ்லிம்கள் இன்று இக்கட்டான ஓர் அபாய நிலையை
சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். பெரும்பான்மையான முஸ்லிம்கள் அல்லாஹ்வின் கட்டளைக்கு முரணாக
நடப்பது இன்று சர்வ சாதாரணமாகி விட்டது.
மனித அபிப்பிராயம்
ஒரு கூட்டம் ஒரு
அறிஞரின் மனித அபிப்பிராயத்தைச் சரி கண்டு செயல்படுகிறது. இன்னொரு கூட்டம் இன்னொரு அறிஞரின்
மனித அபிப்பிராயத்தைச் சரி கண்டு செயல்படுகிறது. இப்படி அல்லாஹ் கொடுத்த நேரான வழிவிட்டு
தடம்புரண்டு பல கோணல் வழிகளில் சென்று தன்னை மாய்த்துக் கொண்டிருக்கிறது இந்த சமுதாயம்.
இஸ்லாமிய சமுதாயம் படிப்பினை பெறுமா?
அரசு புள்ளிவிவரப்படி இன்று உள்ள
முஸ்லிம்களில் 46% வறுமைக் கோட்டில் உள்ளார்கள் எனக் கூறுகிறதே! முஸ்லிம்களில் எத்தனை பெரிய
பணக்காரர்கள் தன் சொத்தை கணக்கிட்டு ஏழைகளுக்கு ஜகாத் கொடுக்கிறார்கள்?
நடுநிலைச் சமுதாயத்தின் இன்றைய நிலை!
அன்றைய, இன்றைய
யூத கிறிஸ்தவ சமுதாயங்கள் எப்படி புரோகித குருமார்களை சுய சிந்தனையற்று, குறுட்டுத்தனமாக நம்பி மோசம்
போனதோ, இப்போதும்
போய்க் கொண்டிருக்கின்றனவோ, அதே வழியில் நாமூம் மோசம் போய் கொண்டிருக்கிறோம்.
அல்குர்ஆன் யாருக்குச் சொந்தம்?
அல்குர்ஆன் அது எங்களுக்கே சொந்தம் என்று நெஞ்சில் அடித்துப் பேசும் முஸ்லிம்கள், அதனுள்ளே உள்ள வசனங்கள்
பற்றி வரும்போது
இது
யூதர்களுக்கு;
இது கிறிஸ்தவர்களுக்கு; இது காபிர்களுக்கு என்று பெரும்பாலான
வசனனங்களை முஸ்லிம் அல்லாதவர்களுக்காக ஆக்கிவிடுகிறார்கள்.
அனாச்சார
சடங்குகள்
இஸ்லாம்
அனுமதிக்காத பல அனாச்சாரங்களை இஸ்லாத்தின் பேரிலேயே நடைமுறைப் படுத்தி வருவதால், வகுப்பு கலவரங்கள்
ஏற்பட முஸ்லிம்களும் துணை போகிறார்கள் என்ற உண்மையை நாம் மறுக்க முடியாது.
கோஷ்டி மனப்பான்மை இறை
மார்க்கத்தின் அடிப்படையில் அஹ்ல ஹதீஸ், ஹனபி, ஷாபி, தேவ்பந்தீ, பரேலவி, ஷியா, ஸன்னி எனும்
வகையில் தனிதனிக் குழுக்கள் உருவாக முடியாது. இந்தக்
குழுக்கள் எல்லாம் அறியாமையினால் தோற்றுவிக்கப்பட்டவை. இறைவன்
தனது உம்மத்தாக இஸ்லாமிய சமுதாயம்' என ஒரே ஒரு
சமுதாயத்தைதான் அமைத்திருக்கிறான்.
அழைப்புப் பணியில் தவறான சிந்தனை
நாம் நேர்வழியில் இருக்கிறோம் என்பதற்கு சரியான அளவுகோல் குர்ஆனும்
ஹதீஸும் ஆகும். அவை எடுத்துச் சொல்லுபவை சிறிய விஷயங்களாக இருந்தாலும், பெரிய விஷயங்களாக
இருந்தாலும், மக்கள் முன் எடுத்து வைப்பதே பிரசாரகனின்
கடைமையாகும்.
மத வியாபாரம்!
ஜோதிடத்திற்கு எதிரான குர்ஆன் ஆயத்துகளும், ஹதீதுகளும் மாற்று மதத்தாரிடம் ஜோதிடம்
கேட்பதைத்தான் தடுக்கின்றன; நம்ம ஆலிம்களிடம் ஜோதிடம் பார்ப்பதை அல்ல என்றே முஸ்லிம்கள்
நம்புகிறார்கள். அதாவது, நம்ம கையைக் கொண்டே நம் கண்ணைத் தோண்டினால் வலிக்காது என்ற மூட நம்பிக்கை.
பலவீனமான இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள்
எப்படி மக்களிடையே வேரூன்றின? பலவீனமான,
இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள் 1000 வருடங்களுக்கு முன்பே தெளிவாக அடையாளம் காட்டப்பட்டிருந்தும், இன்றளவும்
அவை மக்களால் நிராகரிக்கப்படாமல் போனதற்கு காரணம் என்ன?
இகாமதுத்தீன்"
இறையாட்சி
"இகாமதுத்தீன்" (இறையாட்சி) என்றால் நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றுவது தான் என்று
இவர்களுக்கு தவறாக போதிக்கப்பட்டு விட்டது. இந்த தவறான போதனை காரணமாக இவர்களது
சிந்தனை யெல்லாம் உலகிலுள்ள நாடுகளின் ஆட்சிகளைப் பிடிப்பதிலேயே சுழன்று வருகிறது.
பிரிவினை
இஸ்லாமிய
குழுக்களிடையே காணப்படும் பிரிவினை வாதத்தால் முஸ்லிம் உம்மாவை கூறுபோடும் அவல நிலைதான் அது.
இஸ்லாத்தின் வளர்ச்சிக்காக பாடுபடும் பல குழுக்களின் முயற்சிகளால் நன்மைகள் சில ஏற்பட்டிருப்பினும்,
இக்குழுக்களால் முஸ்லிம்களிடையே ஒற்றுமையின்மைக்கான விதை தூவப்பட்டுள்ளது.
தர்ஹா மாயை?
இஸ்லாமிய மாதங்களை
நபி (ஸல்) கற்றுத் தந்த முறைப்படி நமது பெண்கள் சொல்லுவதில்லை. மாறாக ரசூலுல்லாஹி மெªலூது பிறை,
அப்துல் காதிர் ஜீலானி மெலலூது பிறை, நாகூரார் மெªலூது பிறை என்று சரளமாக கூறும் அளவிற்கு முஸ்லிம்
பெண்களிடம் தர்கா மோகம் மலிந்து காணப்படுகிறது.
இந்த இழி நிலை மாறுமா?
அழியும் இவ்வுலகத் வாழ்கைக்கு யாரையும் நம்பாமல் தனது கையே
தனக்கு உதவி என்று உறுதி கொண்டு செயல்படும் மனிதன், அழியாத நிந்திய மறு உலக வாழ்கையை மட்டும் இந்த முல்லாக்களை நம்பி ஒப்படைப்பது எவ்வளவு பெரிய
மதியீனம். ஷைத்தானுடைய எவ்வளவு பெரிய சூழ்ச்சி?
இதைவிட
ஒரு ஆபத்தான நிலை
இருக்க முடியுமா?
கண்மூடி பின்பற்றாதீர்கள்
முஸ்லிம்களில் பெருங்கூட்டம் மார்க்கம் என்ற பெயரில்
யாராவது எதையாவது சொன்னால் கண்மூடிப் பின்பற்றுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.
நாம் தடுமாறினால்
மாற்று மதத்தாரை,
அரசியல்வாதிகளைத் தூற்றுவதால், பழிப்பதால், கரித்துக் கொட்டுவதால் லாபம் நமக்கில்லை என்பதை முஸ்லிம்கள்
உணர வேண்டும். அதன் மூலம் முஸ்லிம் சமுதாயம்தான் துன்பத்திற்குள்ளாக நேரிடும். அவர்களின் அநியாய அக்கிரமங்களைப்
பக்கம் பக்கமாக எழுதுவதை விட்டும், பேசித்ிதிரிவதை விட்டும்,
விடுபடவேண்டும்.
குர்ஆன், ஹதீஸ் பயிற்சி முஸ்லிம்களாகிய நம்மை
அகில உலகிற்கும் முன்மாதிரிச் சமுதாயமாக அமைத்திருப்பதாகவும் குர்ஆனிலே அல்லாஹ் கூறுகிறான். நபி(ஸல்)
அவர்கள் விட்டுச் சென்றுள்ள பணிகளை ஒவ்வொரு முஸ்லிமான ஆணும்,பெண்ணும் செய்வது கடமை என்பதையும் ஹதீஸ்களின்
மூலம் நாம் அறிகிறோம்.
முஸ்லிம் என்றால்
முஸ்லிம் என்றால் இனத்தின் பெயரா? சற்று சிந்தனை செய்யுங்கள்! நீங்கள் முஸ்லிம்
என்று சொல்லுகின்ற வார்த்தையின் கருத்தென்ன? மனிதன் தன் தாய் வயிற்றுலிருந்தே இஸ்லாத்தை தன்னோடு கொண்டு வருகிறானா? முஸ்லிமுடைய மகன்
முஸ்லிமுடைய பேரன் என்னும் அடிப்படையில் ஒரு மனிதன் முஸ்லிமாகிறானா?
பழி சுமத்தும் இழி செயல்!
மனித
சமுதயாத்தினர் சிலர் எதையும் தீர்க்க அறிய முடியாதவர்கள் அரைகுறைத் தகவல்களை வைத்துக் கொண்டு வெகு
விரைவாக எவர் மீதாவது பழி சுமத்தி விடுகின்றனர். பழி சுமத்துவதற்கு பல காரணங்கள்
இருந்தாலும் ஆதிக்க உணர்வும் காரணமாகி விடுகின்றது.
சிலர் சிலர்மீது ஆதிக்கம் செலுத்துகின்றனர்.
இந்த ஆதிக்கம்
பலனளிக்காமல் போனால்
இதுவே பழி சுமத்துவதற்கு
காரணமாகி விடுகின்றது.
|