யா அல்லாஹ்! உன்னுடைய ஹலாலைக்
கொண்டு உன்னுடைய ஹராமை விட்டும் என்னை போதுமாக்கச் செய்வாயாக! உன்னுடைய பேரருளைச்
கொண்டு உன்னல்லாதவரை விட்டும் என்னை தெவையற்றவனாக ஆக்குவாயாக! நூல்கள்:
திர்மிதி5/560 ஸஹீஹ் திர்மிதி 3/180
யா அல்லாஹ்! தூக்கம், கவலை,
இயலாமை, சோம்பல், கருமித்தனம், கோழைத்தனம், கடன் மிகைத்து விடுதல் ஆடவர்கள்
மிகைத்து விடுதல் ஆகியவற்றிலிருந்து உன்னைக்கொண்டு நான் காவல் தேடுகிறேன். நூல்:
புகாரி 7/158
காரியம் சிரமமானால்
யா அல்லாஹ்! நீ எதை இலகுவாக
ஆக்குகின்றாயோ அதைத்தவிர இலகுவென்பது இல்லை; நீயோ கவலையை (கஷ்டத்தை)க் கூட நீ
நாடினால் இலகுவாக ஆக்கிடுவாய். நூல்்: இப்னுஹிப்பான்