பிரிவும் பிளவும்

இஸ்லாம் முஸ்லிம்களை மட்டுமின்றி மற்ற மனிதர்களையும் ஒன்றினைக்கும் வாழ்க்கை நெறி! இறுதி இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வாக்காலும், வாழ்வாலும் நடைமுறைச் சாத்தியமாக்கிக் காட்டிச் சென்றுள்ளார்கள். அல்ஹம்துலில்லாஹ்! இந்த செயற்கரிய சாதனை கடந்த 1000 ஆயிடம் வருடங்களாக மறக்கப்பட்டும், மறைக்கப்பட்டும் உலக முஸ்லிம்கள் பிரிவிலும் பிளவிலும் சிக்கித்தவிக்கிறார்கள்.     முஸ்லிம் நாடுகளிலுள்ள முஸ்லிம்கள் ஒன்றிணையும் சாத்தியக்கூறுகள் மிகுந்திருந்தும் அங்கும் அவர்கள் பிரிந்தே கிடக்கிறார்கள். மார்க்க ரீதியில் மத்ஹபுகள், தரீக்காக்கள் என்றும், இயக்கங்கள், அமைப்புகள் என்றும் அகில உலக அளவில் […]

{ 44 comments }

அபூ அப்தில்லாஹ் குர்ஆன் கூறுகிறது : மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; பின்னர், நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு, உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் எவர் (அல்லாஹ்விடம்) மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக மிக்க கண்ணியமானவர்; நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழ்ந்து) தெரிந்தவன். (49:13) இன்னும், நீங்கள் எல்லோரும் ஜமாஅத்தாக அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; நீங்கள் பிரிந்து […]

{ 0 comments }

இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் உலகிலிருந்து ஒழித்துவிட பல வருடங்களுக்கு முன்பிருந்தே சர்வதேச அளவில் முயற்சிகள் அதிவேகமாக செய்யப்பட்டு வருவதை அறியாதவர்கள் இருக்க முடியாது. வருவதை அறியாதவர்கள் இருக்க முடியாது. பத்திரிக்கை, வானொலி, தொலைக்காட்சி போன்ற புரட்சிக்கு தலைமை தாங்கும் சாதனங்கள் அனைத்தும் இஸ்லாத்திற்கு எதிர்த்திசையில் செயல்படுகின்றன. இம்முயற்சிகளை முறியடிக்க அவ்வப்போது பல இயக்கங்கள் உலக அளவில் தோன்றின. இந்தியா சுதந்திரம் அடைந்தது முதல் இங்கு முஸ்லிம்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக ஆக்கப்பட்டதை தொடர்ந்து, முஸ்லிம்களின் பாதுகாப்பிற்காக இங்கும் பல இயக்கங்கள் […]

{ 18 comments }

18 ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தின் கீழ் பல நாடுகள் அடிமைப்பட்டன. முஸ்லிம்களின் கிலாபத்தான துருக்கியோ மிகவும் பலஹீனமான நிலையில் இருந்தது.  ஏகத்துவம் மலர்ந்த அரேபியாவிலோ, அனாச்சாரமும்,  ஜாஹிலியாவும் இஸ்லாம் பெயரில் அனுசரிக்கப்பட்டது.  ஷிர்க் ஏகத்துவமாகவும்,  பித்அத் சுன்னத்தாகவும் நடைமுறைப்படுத்தப்பட்டது. புனித மரங்கள், நல்லோர் கபுருகள், புனித கற்கள் எல்லாம் வணக்க வழிபாடு செய்யும் தலங்களாக மாறின. நஜ்து அரேபியர்கள் தங்களுக்குள் செய்யவேண்டிய எல்லா காரியங்களையும் குறிகாரர்கள், ஜோதிடர்களை கேட்டே செய்தனர்.  புகழ்பெற்ற பேரிச்சை மரமான “அல் […]

{ 27 comments }

மஸ்ஜிதுகள் அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தம் என நெற்றிப் பொட்டில் அடிப்பது போல் எச்சரிப்பதைக் கண்டு கொள்ளாமல் தங்கள் தங்கள் சுய பெயர்களில் பதிவு செய்து ஆதிக்கம் செய்கின்றனர். அல்லாஹ்வின் தெளிவான இந்தக் கட்டளையைப் புறக்கணித்து ஒவ்வொரு பிரிவாரும் அல்லாஹ்வின் பள்ளிகளைக் கூறுபோட்டுள்ளனர். மற்றவர்களின் சொத்துக்களைப் போலிப் பத்திரங்கள் தயாரித்து தங்களுக்குச் சொந்தமாக்கிக் கொண்டவர்கள் படுகிறபாடுகளை இப்போது ஊடகங்களில் பார்த்து வருகிறோம் அல்லவா? இங்கு கூட தங்களின் பண பலம் அரசியல் செல்வாக்குக் கொண்டு தண்டனையிலிருந்து சிலர் தப்பி […]

{ 10 comments }

பிரிவுப் பெயர்கள் கூடாது என்பதற்கு ஆதாரமாக குர்ஆனிலிருந்து 2:213, 6:159, 21:92,93, 23:53, 42:14, 45:17 ஆகிய வசனங்களை சமர்ப்பிக்கிறீர்கள். இந்த வசனங்களை ஆழ்ந்து நோக்கிய எனக்கு சில சந்தேகங்கள். 2:213வது வசனத்தில் வேதக்கட்டளை பின் வேறுபாடு கொண்டவர்களைக் கண்டிக்கிறான். நேர்வழி நடக்கும் இயக்கத்தார்கள் முகல்லீது மெளலவிகளைப்போல் வேத வசனங்களில் கருத்து வேறுபாடு கொள்ளவில்லையே. இந்நிலையில் அவர்களை எப்படிக் கண்டிக்க முடியும்?  6:159 வசனத்தில் மார்க்கத்தைப் பலவாறாகக் கூறுபோடுபவர்களைக் கண்டிக்கிறான். IAC, JAQH ஆகியோர் மார்க்கத்தின் பிரிவை […]

{ 4 comments }

நபிகால இஸ்லாமிய ஒற்றுமை! 1. (நபியே!) நீர் கூறுவீராக! அல்லாஹ் – அவன் ஒருவனே! அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.; அவன் (எவரையும்) பெறவுமில்லை: (எவராலும்) பெறப்படவுமில்லை. அன்றியும் அவனுக்கு நிகராக எவரும்; (எதுவும்) இல்லை. அல்குர்ஆன் ;112 இஃஹ்லாஸ்-ஏகத்துவம்:1-4) 2. நீங்கள் யாவரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்” நீங்கள் (அதிலிருந்து) பிரிந்து விடவேண்டாம். அல்லாஹ் உங்களுக்கு கொடுத்த அருட்கொடை (நிஃமத்)களை எண்ணிப் பாருங்கள். (ஆலஇம்ரான்: 3:103) 3. இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் […]

{ 0 comments }

ஒரே சமுதாயம்: காலங்கள் தோறும் ஒரே சமுதாயமயமாவதற்கான அனைத்துக் கருத்தியலையும் அல்லாஹ் அருளியிருக்க, ஒரே சமுதாய மயமாவதற்கான சூழல்களை அல்லாஹ் அமைத்துத் தந்திருக்க மக்களே! அதை ஏன் தகர்த்தெறிந்து வருகிறீர்கள்? ஆழ்ந்து சிந்திக்க வேண்டாமா? நிச்சயமாக உங்களின் இந்தச் சமுதாயம் (உம்ம(த்)து(க்)கும்) ஒரே ஒரு (ஒன்றுபட்ட) சமுதாயமே! (உம்மத்தவ் வாஹிதா)! அல்குர்ஆன்: அல்அன்பியா:21:92, அல்முஃமினூன் 23:52 ஒன்றுபட்ட ஒரே சமுதாயம் ஆக வேண்டும் என்பது அல்லாஹ்வின் கட்டளை. ஒன்றுபட்ட ஒரே சமுதாயம் எப்போது, எப்படிச் சாத்தியமாகும்? அதற்குரிய […]

{ 3 comments }

(இறைவனின்) தெளிவான ஆதாரங்கள் தங்களிடம் வந்த பின்னரும், யார் தங்களுக்குள் பிரிவை யுண்டுபண்ணிக் கொண்டு, மாறுபாடாகி விட்டார்களோ, அவர்கள் போன்று நீங்களும் ஆகிவிடாதீர்கள்; அத்தகையோருக்கு கடுமையான வேதனை உண்டு. (அல்குர்ஆன் 3:105)      (ஆரம்பத்தில்) மனிதர்கள் ஒரே கூட்டத்தினராகவே இருந்தனர்; அல்லாஹ் (நல்லோருக்கு) நன்மாரயங் கூறுவோராகவும், (தீயோருக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வோராகவும் நபிமார்களை அனுப்பி வைத்தான்; அத்துடன் மனிதர்களிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளைத் தீர்த்து வைப்பதற்காக அவர்களுடன் உண்மையுடைய வேதத்தையும் இறக்கி வைத்தான்; எனினும் அவ்வேதம் கொடுக்கப்பெற்றவர்கள், […]

{ 2 comments }

எஸ்.ஹலரத் அலி-திருச்சி-7 அல்லாஹ்வின் பேரருளால் கடந்த மாதம் திருச்சி மாநகரில் ஒரு மாபெரும் மாநாடு நடந்து முடிந்த செய்தி தாங்கள் யாவரும் அறிந்ததே! இந்த புரட்சி மாநாட்டிற்காக கடந்த எட்டு மாதங்களாக, தமிழகம் எங்கு பார்த்தாலும் ஒரே விளம்பர களேபரம் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. பட்டி தொட்டி எங்கும் பம்பரமாக சுழன்றனர் வசூல் ராஜாக்கள். இந்த ஷிர்க் ஒழிப்பு மாநாட்டிற்குப் பிறகு தமிழ்நாட்டில் தர்ஹா, தரீக்காக்கள் தடம் புரண்டு உருண்டு விழும் பூகம்பம் நடந்து விடும் என்ற நம்பிக்கை […]

{ 8 comments }